கண்கள் உன்னைக்
கண்ட நொடி உலகமே
என் காலடியில்
விழுந்து கிடப்பதாய்
எனக்குள்ளே ஒரு பிரமிப்பு
உன் இதயம் என்னும்
மாளிகையை ஆக்கிரமித்து
குடி கொண்டிருக்கும்
ராணி நான்
என் இதயம் என்னும்
மாளிக்கையை ஆக்கிரமித்து
குடி கொண்டிருக்கும் என்
தேவ தூதன் நீ
என் கண்களை உன்
கண்கள் நோக்கும் அந்த
நொடிப் பொழுது இந்த
ஓரு நொடிக்காகத் தான்
ஒரு யுகம் காத்திருந்ததைப்
போன்ற ஒரு பிரமிப்பு
இனி என் வாழ்வு உன்னுடனே
உன் வாழ்வு என்னுடனே
இதயங்களை பரிமாறிக் கொண்டோம்
சோகங்களை இதழ் மாற்றிக் கொண்டோம்
இன்பங்களை பரிமாறிக் கொண்டோம்
என் கனவுகள் உன் நினைவாகவே
உன்னோடு நான் வாழ்ந்த அந்தக்
காலம் என் நினைவு என்னும்
பெட்டகத்தில் உயிரினால் பூட்டப்பட்டு
காவல் காக்கப்படுகின்றது...
Bookmarks