கனவுகளில் இரண்டறக் கலந்து
நினைவுகளில் நிரம்பி வழிந்து
நிஜத்தில் நீங்கி விடுகிறாய்!
என் உணர்வுகளை எழுப்பி
என்னுள் உற்சாகம் ஊட்டி
என்னை உறங்க செய்கிறாய்!
என்மனக் கடலில் அலையெழுப்பி
என்னை அலைக் கழித்து
கவிழ்த்து விடப் பார்க்கிறாய்!
என்றாலும் என் இனியவளே!
உன்மீது எனக்கு சிறிதும்
வருத்தமில்லை!!!
என் போராட்டத்தை நீ
புரிந்து கொள்ளாத வரை
கண்ணிருந்தும் குருடியாய் நீ!
என் உணர்வுகளை நான்
உன்னிடம் உணர்த்தாத வரை
வாயிருந்தும் ஊமையாய் நான்!
தொடரும்.....
நமது மௌனயுத்தம்.
Bookmarks