உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
அனைவருக்கும் என் மரியாதையான பாராட்டுகள்..
மன்றத்தில் என் முதல் கவிதையே இதைப்பற்றித்தான்..
நுரையீரல் புற்று வந்து மருத்துவமனையில் இருக்கும்
அண்ணன் தம்பிக்குச் சொல்வதாய் எழுதினேன் −
தலைப்பு − அண்ணனின் வ(வி)சனக் கவிதை!
அதைப்படித்து நம் நண்பர்கள் தந்த பாராட்டைவிட
சில நண்பர்கள் புகைப்பதை விட்டுவிட்டதாய்ச் சொன்னதில்தான்
மிகப் பயனுள்ளவனாய் உணர்ந்தேன்..
இங்கே நம் நண்பர்கள் சொல்லி அடிக்கும் கவிச்சமரில் பூரித்திருக்கும்போதே..
அக்னி சொன்ன சுய அக்னி தினசரிப்பிரவேசம் கண்டு வருந்தினேன்..
தவணைக் கொள்ளி
சுவாசக் கொல்லி
மரங்களின் எதிரி
முத்தத்தின் தணிக்கை
இந்தச் சாத்தனை எத்தனை சாடினாலும் சலிக்காது எனக்கு..
( எல்லாம் கரடியாய் முன்னர் எனை அவன் பிடித்திருந்த காலங்களின் வெறுப்புதான்..)
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
அண்ணா! உங்களின் சாடல்கள் என்னை தொட்டு உலுப்புகின்றது...
என்று கவிச்சமரில் நானே, சாடத் தொடங்கினேனோ,
அன்றே குறைக்கத் தொடங்கிவிட்டேன்...
உங்களின் சாடல்களும், மற்றும் அனைவரின் சாடல்களும்,
புத்தியில் உறைக்கிறது...
மனதிலும் பிரதிபலிக்குமா..?
தெரியவில்லையே...
Last edited by அக்னி; 04-07-2007 at 10:34 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
இரவில் தலையணை பக்கத்தில் அது இல்லாமல் தூக்கம் வராது எனக்கு −
முதுநிலைக் கல்லூரிக் காலங்களில்.. விடிந்ததும் வேணுமே!!!!!
இரவு 2 மணிக்கு கடைக்குப்போன காலங்கள் அது..
பல தோற்ற முயற்சிகளுக்குப் பிறகு, வென்றேன்..
விட்டுவிடும் முயற்சியை மட்டும் விட்டுவிடக்கூடாது அக்னி!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
அண்ணா சொன்னமாதிரி
விட்டுவிடும்
எண்ணத்தை விட்டு
விடாமல்
விட்டு விடுவார்
அக்னி!!
நாம்பிக்கையுடன் ஓவியன்.......
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
நானும்தான் இளசு...
8 வருட பழக்கம்....
காலையில் விழிக்கும் போது சிகரெட் இல்லையெனில் பொழுது விடியாதது போல் உணர்வு இருக்கும்...
அம்மா நிறுத்த சொல்லி கெஞ்சுவார்...
விட* ம*ன*மில்லாத*தாலோ என்ன*வோ 1 நாள் நிறுத்துவ*து கூட* க*டின*மாக* தெரிந்த*து...
5 வருடங்களுக்கு முன் திடீரெனெ எடுத்த முடிவு, இன்றுவரை திரும்பவும் அதை தொட்டதில்லை... இனிமேல் சிகரெட் குடிக்க ஆசையுமில்லை.
தண்ணியடிக்கிறதையும் இதே மாதிரிதான் விடனும்ன்னு தோனுச்சு விட்டுடேன்...
தண்னியடிக்கிரது, தம் அடிக்கிரது எல்லாம் விட முடியலைன்னு யாரும் சொன்னால் இதனால் என்னவோ ஏற்ருகொள்ளமுடிவதில்லை....
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
அக்கினி. அண்ணண்கள் சொல்லி விட்டார்கள். இனியும் தொடர மாட்டீர்கள். என்பது எனக்குத் தெரியும். நிறுத்தியதற்கு வாழ்த்துகள்.
சிவப்பு ஒளிர்ந்தும்
நிறுத்த முடிவதில்லை.
சிகரெட்
என்பதை மாற்றியமைத்தற்கு நன்றி.
Last edited by அமரன்; 05-07-2007 at 07:50 AM.
சிகரெட்டுக்கும் கொள்ளி
வைத்து தனக்கும் கொள்ளி
வைக்கின்றான்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
இழுக்க இழுக்க இன்பம்
அது இறுதிவரை இன்பமாம்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks