Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 20

Thread: ஜாதி..!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0

    ஜாதி..!

    நாதியின்றிப் போனால்கூட
    ஜாதிபார்க்கும் சமுதாயம்,
    கபோதிகளின் கூடாரம்...

    வேதியியல் மாற்றங்கள்,
    ஜாதியிலே நிகழவேண்டும்...

    ஜாதியில் சிறுதுமியேனும்,
    மீதியின்றி ஒழியவேண்டும்...

    பாரதியின் கவிவரிகள்,
    ஓதிப்போன பின்னும்கூட,
    பாதியேனும் மறையாத...
    ஜாதி,
    சமுதாயப் பேதியாக,
    நதியாக ஓட,
    நடுவிலே சுகமாய்
    சுதிபாடும் நரகர்களாய்
    நாங்கள்...

    உதிக்கவேண்டும் மதியிலே...
    உறைக்கவேண்டும் மனதிலே..

    மதிக்கும் மனிதம்...
    இனியும்,
    ஜாதியில் மிதிபடலாமா..?

    ஜாதிகள் ஜோதியாக ஒளிரக்கூடாது...
    ஜோதியிலே எரிக்கப்படவேண்டும்...

    சதிராடும் ஜாதியை,
    சாக்காட்டவேண்டும்...
    திதிவைத்து,
    முடிவாக்க வேண்டும்...

    போதித்து மட்டுமே
    போகாமல்,
    விவாதித்து மட்டுமே
    மாளாமல்,
    சாதிக்கவேண்டும்...
    காலத்தின் பதிவாக...
    நம் விழிப்பின் பதிலாக...

    ஜாதியின்றி
    மதிக்கப்படும் மனிதமே
    உலகவாழ்வின் பெருநிதியம்...

    நன்றி:− அமரன் (கவிச்சமர்)
    Last edited by அக்னி; 03-07-2007 at 08:04 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    விதி, மானுட பிறப்பின் சதி என
    மதிகெட்ட மூதிகள் செய்ததி(தீ)து..
    கதி இதுதான் என்று முடங்கியவரை
    மிதி மேலும் என மிருகச்செயல் செய்யவைத்ததிது..
    பொதி போல சமூகக்கழுதை சுமந்துதிரியும்
    நொதியான தலைமுறைகள் அழுக்கிது..


    சாதீக்கு தீ வைத்த அமரனின் அக்னிக்கு என் தழலும்.. பாராட்டுப்பரிசாக!

    வெந்து தணியட்டும் சாதிக்காடு!
    Last edited by இளசு; 03-07-2007 at 08:33 PM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    நன்றி அண்ணா...
    உங்கள் தழலான வரிகளில், பிரகாசிப்பது நாங்களே..

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    ஜோதி போல்
    ஜாதியை ஏற்றி
    அதில் குளிர் காயும்
    சில குள்ளநரிகள்
    அந்த ஜோதியில்
    தாமும் அழிய போகின்றோம்
    என்பதனை எப்பொழுது
    உணர்வார்களோ
    காலம் சொல்லட்டும் பதிலை

    கவி அருமை அக்னி வாழ்த்துக்கள்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    அருமையான வரிகள் அக்னி. என்ன பன்னுவது சாதியை நாங்கள் விட்டுவிட துடிகிறோம், ஆனால் அரசாங்கம் விடவில்லையே, சாதியை வைத்து தானே இட ஒதுக்கீடு. சாதி சான்றிதல் இல்லாமல் இன்று ஒன்னாங் கிளாஸில் கூட அனுமதிப்பதில்லையே
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    சாதி சாதி என்பது போய் ஜாதி ஜாதி என்பதுவாகி நின்று நிலைபெற்று ஆழப் புதைந்து ஊறு காட்டுகிறது... அமரன் ஊற்றிய தண்ணீரில் வளர்ந்த அக்னித் தென்னையின் இளநீரை மகிழ்ச்சி பொங்க அருந்துகிறேன்... ஒவ்வொரு காலத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக ஜாதி அழிந்து வருவதைக் காண்கிறோம்.. முற்றிலும் அழியும்போது நாம் கண்களால் பார்க்கவேண்டும் என்பது ஆசை....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    முற்றிலும் அழியும்போது நாம் கண்களால் பார்க்கவேண்டும் என்பது ஆசை....
    பொதுவாக அழிவு என்பதை பலர் விரும்புவதில்லை. ஆனாலும் சாதி போன்ற சில விடயங்கள் அழியவேண்டும் என ஆசைப்படுகின்றோம். ஆசைப்படாத விடயங்கள் பல நடக்க ஆசைப்படும் விடயங்கள் சிலவாவது நடக்காதா என் ஏங்க வேண்டியதுதான்.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அக்னி!,

    உன்னதமான கரு (எடுத்துக் கொடுத்த அமருக்கு நன்றிகள்!), அதனை வெளிக் கொணர்ந்த அழகான சொல்லாடல்கள், எதுகை மோனை பொருத்தம், வரிகளில் பிசிறின்மை, வார்த்தைகளின் உஸ்ணமென அருமையான ஒரு கவிதை முத்து!!

    மனதாரப் பாராட்டுகிறேன் நண்பா!!

    தாருங்கள் இது போன்ற முத்துக்கள் இன்னும் நிறைய............

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    திருமணத்தில்,
    மரணத்தில்,
    கோயிலில்,
    பள்ளியில்,
    ஏன்
    வளர்க்கும்
    நாயில் கூட*
    ஜாதி பார்கிறார்கள்!
    ஒரு நாள்
    நாதியற்றுப் போகப்
    போவதை மறந்து!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    நாதியற்றுப் போகப் போகும்
    ஜாதியை வளர்த்து நாதியற்றுப்
    போகின்றனர் சில மூடர்கள்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by இனியவள் View Post
    ஜோதி போல்
    ஜாதியை ஏற்றி
    அதில் குளிர் காயும்
    சில குள்ளநரிகள்
    அந்த ஜோதியில்
    தாமும் அழிய போகின்றோம்
    என்பதனை எப்பொழுது
    உணர்வார்களோ
    காலம் சொல்லட்டும் பதிலை

    கவி அருமை அக்னி வாழ்த்துக்கள்
    நன்றி தோழி... உங்கள் பதில் கவிதையும் ஜாதியின் இறப்பிற்காக ஏங்குவது, தெறிப்பு...

    Quote Originally Posted by lolluvathiyar View Post
    அருமையான வரிகள் அக்னி. என்ன பன்னுவது சாதியை நாங்கள் விட்டுவிட துடிகிறோம், ஆனால் அரசாங்கம் விடவில்லையே, சாதியை வைத்து தானே இட ஒதுக்கீடு. சாதி சான்றிதல் இல்லாமல் இன்று ஒன்னாங் கிளாஸில் கூட அனுமதிப்பதில்லையே
    நன்றி வாத்தியாரே...
    இந்த நிலை மாறிப்போகவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்தும், ஜாதி ஊறிப்போவது, கவலையே...
    Quote Originally Posted by ஆதவா View Post
    சாதி சாதி என்பது போய் ஜாதி ஜாதி என்பதுவாகி நின்று நிலைபெற்று ஆழப் புதைந்து ஊறு காட்டுகிறது... அமரன் ஊற்றிய தண்ணீரில் வளர்ந்த அக்னித் தென்னையின் இளநீரை மகிழ்ச்சி பொங்க அருந்துகிறேன்... ஒவ்வொரு காலத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக ஜாதி அழிந்து வருவதைக் காண்கிறோம்.. முற்றிலும் அழியும்போது நாம் கண்களால் பார்க்கவேண்டும் என்பது ஆசை....
    நன்றி ஆதவா! மழைமுகிலாய் ஏதோ ஒன்று ஆதவனை மறைக்கின்றபோதும்,
    இடைவெளியில் கதிர் காட்டியதற்கு மிக்க நன்றி!
    ஜாதி என்பது தவறா, அப்படியாயின் சாதி என்று மாற்றிவிடவா..?

    Quote Originally Posted by அமரன் View Post
    பொதுவாக அழிவு என்பதை பலர் விரும்புவதில்லை. ஆனாலும் சாதி போன்ற சில விடயங்கள் அழியவேண்டும் என ஆசைப்படுகின்றோம். ஆசைப்படாத விடயங்கள் பல நடக்க ஆசைப்படும் விடயங்கள் சிலவாவது நடக்காதா என் ஏங்க வேண்டியதுதான்.
    உண்மைதான் அமரன், உயிரோடிருக்கத் தகாதன எல்லாம், இறக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமுமே...
    Quote Originally Posted by ஓவியன் View Post
    அக்னி!,

    உன்னதமான கரு (எடுத்துக் கொடுத்த அமருக்கு நன்றிகள்!), அதனை வெளிக் கொணர்ந்த அழகான சொல்லாடல்கள், எதுகை மோனை பொருத்தம், வரிகளில் பிசிறின்மை, வார்த்தைகளின் உஸ்ணமென அருமையான ஒரு கவிதை முத்து!!

    மனதாரப் பாராட்டுகிறேன் நண்பா!!

    தாருங்கள் இது போன்ற முத்துக்கள் இன்னும் நிறைய............
    மிக்க நன்றி கவிஓவியர் ஓவியன் அவர்களே...
    கவிச்சமரில் சமராடும்போது, அனுபவங்கள் பெறுகின்றது எழுத்துக்கள்...
    அதே உஸ்ண உந்துதலில் எழுந்த கவிதை இது...
    Last edited by அக்னி; 04-07-2007 at 07:03 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அக்னி கவிதை எழுதிய உடனே படித்தாலும் இப்பொதுதான் பின்னூட்டமிட முடிந்தது. கருத்தைப் பலர் கூறிவிட்டனர் அதனால் சின்னக் கவிதை எழுதி உங்களுடன் இணைகின்றேன்.

    சாதி
    ஆனது
    வாழ்வின்
    சா தீ
    Last edited by அமரன்; 04-07-2007 at 07:09 PM.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •