உன் பிரிவால்
சுகமானதை எல்லாம் சோகமாக்கினாய்...!
சுவையானதை எல்லாம் கசப்பாக்கினாய்..!
அழகானதை எல்லாம் தூரமாக்கினாய்...!
சோலைகளை எல்லாம் சருகாக்கினாய்..!
பூக்களை எல்லாம் நெருப்பாக்கினாய்...!
தூக்கத்தை எல்லாம் வெறுப்பாக்கினாய்...!
துடிக்கவிட்டு தூரவிளகினாய்......!
உடல் இருக்க உயிரைப்பறித்தாய்...!
மொத்தத்தில் உன் பிரிவால் என்னை
உணர்ச்சியற்ற பொம்மை யாக்கினாய்...!!!
அன்புடன்,
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா
நெருப்பாக நீயும் மாறினால் அதில் சாம்பல் ஆகும் வரம் கேட்பேன்...
Bookmarks