நிலம் பார்த்து வந்த நீ
முகம் பார்த்த கணத்தில்
மின்சாரம் பாய்ந்ததடி
கண்களில் ஊடுருவி
நரம்பெல்லாம் வேரோடி
எத்தனை அதிர்வுகள்
நெஞ்சாக்கூட்டினுள்.
காதல் பொங்கியது
என்னையே அழித்தது
முகம்பார்த்த அக்கணத்தில்
நிலம் பார்க்க மறந்ததால்
எத்தனை அதிர்வுகள்
நிலக் கூட்டினுள்
கண்ணீர் பொங்கியது
உலகையே அழித்தது
மீண்டும் ஒருமுறை
நிலம் பார்க்க மறக்காதே
இன்னொரு சுனாமியை
தாங்க முடியாது..
Bookmarks