வணக்கம் நண்பர்களே!!
சிறு வேலை விஷயமாக வீட்டிற்குச் சென்றபோதுதான் மூலைமுடுக்குகளில் நான் எழுதி வைத்திருந்த காகிதங்கள் கைக்குக் கிடைத்தன,. அதிலொன்று தலைப்பிடாமல் ஒரு பெருங்கவிதையாக எழுதிவைத்த சில கண்ணுக்குக் கிட்டியது., எல்லாமே காதல் கவிதைகள் அந்தந்த சமயங்களில் எழுதியிருப்பேன். எனது 4999 வது பதிவாக இதைப் பதிகிறேன்.... க*ருத்து சொல்லுங்க*ள்...
எங்கிருந்துதான் வாங்கிவந்தாயோ?
முடிகோதும் கிளிப்புகளும்
நெற்றியில் வளைந்தாடும்
பாம்பு வடிவபொட்டுகளும்
என் உருவம் இல்லாமல்
இரவில் முத்தம் பெறுகிறாயா?
பொட்டுகளின் வேலைகள்
என் குரலின்றி
சப்தம் கேட்கிறாயா?
கிளிப்புகளின் நடனம்
பொட்டுக்களை எங்கும்
ஒட்டி வைக்காதே
கிளிப்புகளைக் கழற்றி
வீசியெறியாதே!
திறந்திருந்த சன்னலின் ஓட்டைமேல்
கதிர் விழ, நீ எழும்போது
பத்திரப்படுத்தி வை
கிளிப்புகளையும் பொட்டுக்களையும்
உடன் களித்த கனவுகளையும்..
Bookmarks