Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: பொட்டுகளும் கிளிப்புகளும்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    பொட்டுகளும் கிளிப்புகளும்

    வணக்கம் நண்பர்களே!!

    சிறு வேலை விஷயமாக வீட்டிற்குச் சென்றபோதுதான் மூலைமுடுக்குகளில் நான் எழுதி வைத்திருந்த காகிதங்கள் கைக்குக் கிடைத்தன,. அதிலொன்று தலைப்பிடாமல் ஒரு பெருங்கவிதையாக எழுதிவைத்த சில கண்ணுக்குக் கிட்டியது., எல்லாமே காதல் கவிதைகள் அந்தந்த சமயங்களில் எழுதியிருப்பேன். எனது 4999 வது பதிவாக இதைப் பதிகிறேன்.... க*ருத்து சொல்லுங்க*ள்...


    எங்கிருந்துதான் வாங்கிவந்தாயோ?
    முடிகோதும் கிளிப்புகளும்
    நெற்றியில் வளைந்தாடும்
    பாம்பு வடிவபொட்டுகளும்

    என் உருவம் இல்லாமல்
    இரவில் முத்தம் பெறுகிறாயா?
    பொட்டுகளின் வேலைகள்

    என் குரலின்றி
    சப்தம் கேட்கிறாயா?
    கிளிப்புகளின் நடனம்

    பொட்டுக்களை எங்கும்
    ஒட்டி வைக்காதே
    கிளிப்புகளைக் கழற்றி
    வீசியெறியாதே!

    திறந்திருந்த சன்னலின் ஓட்டைமேல்
    கதிர் விழ, நீ எழும்போது
    பத்திரப்படுத்தி வை
    கிளிப்புகளையும் பொட்டுக்களையும்
    உடன் களித்த கனவுகளையும்..
    Last edited by ஆதவா; 27-06-2007 at 09:11 AM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    ஒரு காதலன் காதலியுடன் நெருக்கமாய் உறவாடும்,
    அலங்காரப்பொருட்களை மனதில் நெருடும் பொறாமையுடன் பார்க்கின்றான்.
    ஆனாலும்,
    அவள் மேனி தொட்ட சிறுபொருளை காற்றும் தொடுவதை விரும்பவில்லை.
    அதுதானோ பத்திரப்ப்படுத்தச் சொல்கின்றான்.., அவள் பசுமைக் கனவுகளைப்போன்றே...

    மனதைக் கவர்கிறது... கருத்து...
    Last edited by அக்னி; 27-06-2007 at 09:43 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நன்றாகவே உள்ளது ஆதவா.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஆதவா கவிதைகள் கூட சில வினாடிகலில் எழுதிவிடலாம். ஆனால் சிலர் எழுதும் கவிதைகளை படிக்கவே பல நாட்கள் வேண்டும். ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு அர்த்தம் பொதித்து எழுதியிருப்பார்கள். அப்படியான சிலருள் நீங்களும் ஒருவர். படித்தால் காதல் கவிதைபோலவே இருக்கின்றது. ஆனாலும் பாம்பு வடிவ பொட்டு,கவ்விப்பிடிக்கும் கிளிப், ஓட்டை யன்னல் இவற்றில் ஏதாவது உள்ளர்த்தம் வைத்து எழுதியிருப்பீரோ என்ற சந்தேகம். அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.
    Last edited by அமரன்; 27-06-2007 at 03:02 PM.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    ஆதவா கவிதை நன்றாக இருக்கிறது,தலைப்பு எங்கே ?
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    அப்பவே இப்படி எல்லாம் எழுதியிருக்கியா ஆதவா...

    இந்த கவிதை எளிமையாக இருக்கிறது.. ஆனால் எனக்கு அங்கங்கே சந்தேகங்கள் இருக்கிறது... தெளிவடைந்து விமர்சனம் இடுகிறேன்...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    அப்பவே இப்படி எல்லாம் எழுதியிருக்கியா ஆதவா...

    இந்த கவிதை எளிமையாக இருக்கிறது.. ஆனால் எனக்கு அங்கங்கே சந்தேகங்கள் இருக்கிறது... தெளிவடைந்து விமர்சனம் இடுகிறேன்...
    உங்களுக்குமா?

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    உங்களுக்குமா?
    ஆமாம் அமரன்...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    ஒரு காதலன் காதலியுடன் நெருக்கமாய் உறவாடும்,
    அலங்காரப்பொருட்களை மனதில் நெருடும் பொறாமையுடன் பார்க்கின்றான்.
    ஆனாலும்,
    அவள் மேனி தொட்ட சிறுபொருளை காற்றும் தொடுவதை விரும்பவில்லை.
    அதுதானோ பத்திரப்ப்படுத்தச் சொல்கின்றான்.., அவள் பசுமைக் கனவுகளைப்போன்றே...

    மனதைக் கவர்கிறது... கருத்து...
    மிகவும் நன்றி அக்னி. உங்கள் கருத்து மனதைக் கவர்கிறது..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    நன்றாகவே உள்ளது ஆதவா.
    மிகவும் நன்றி அன்பு....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    ஆதவா கவிதைகள் கூட சில வினாடிகலில் எழுதிவிடலாம். ஆனால் சிலர் எழுதும் கவிதைகளை படிக்கவே பல நாட்கள் வேண்டும். ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு அர்த்தம் பொதித்து எழுதியிருப்பார்கள். அப்படியான சிலருள் நீங்களும் ஒருவர். படித்தால் காதல் கவிதைபோலவே இருக்கின்றது. ஆனாலும் பாம்பு வடிவ பொட்டு,கவ்விப்பிடிக்கும் கிளிப், ஓட்டை யன்னல் இவற்றில் ஏதாவது உள்ளர்த்தம் வைத்து எழுதியிருப்பீரோ என்ற சந்தேகம். அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.
    அமரரே! உங்கள் பாராட்டு எனது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது., இது என்றோ எழுதி வைக்கப்பட்டது,,. அப்போதெல்லாம் அர்த்தம் பொதிய எழுத மாட்டேன்... அதோடு காதல் கவிதைகள் சில காணக் கிடைத்தன... அதில் ஒன்று ஆப்பிள் கவிதைகள்... இங்குள்ளவர்களின் கவிதைகளைப் பார்வையிட்டுவிட்டு பிறகு ஆப்பிள் கவிதைகளை வெளியிடுகிறேன்.. எல்லாமே பழைய கவிதைகள்.... எளீமையாக இருக்கும் என்று நம்புகிறேன்...

    ந*ன்றி த*ல*.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by சூரியன் View Post
    ஆதவா கவிதை நன்றாக இருக்கிறது,தலைப்பு எங்கே ?
    ந*ன்றிங்க* சூரிய*ன், த*லைப்ப்பு இட்டுருக்கிறேனே பார்க்க*வில்லையா?

    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    அப்பவே இப்படி எல்லாம் எழுதியிருக்கியா ஆதவா...

    இந்த கவிதை எளிமையாக இருக்கிறது.. ஆனால் எனக்கு அங்கங்கே சந்தேகங்கள் இருக்கிறது... தெளிவடைந்து விமர்சனம் இடுகிறேன்...
    இந்த கொடுமையைக் கேளுங்கள் ஷீ! இந்த கவிதை எப்போது எழுதியது என்றே தெரியவில்லை... பழைய குப்பைகளைக் கிளறும்போது கிடைத்தது. இதோடு இணைத்து எழுதி வைத்த நோட்டு புத்தகத்தைக் காணவில்லை. அதிலே ஏகப்பட்ட கவிதைகள் இருந்தன. எல்லாமே தொட*ர் க*விதைக*ள் தான்... அதில் ஒன்று போர்க்க*ள*த்தில் காத*ல்... ஒரு பிள்ளையின் பிற*ப்பு.. படி தாண்டும் பத்தினிகள், அப்பறம் இன்னும் இருக்கும்... ஒரு நோட்டு முழுக்க எழுதி யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தேன்.... போயே போயிந்தி.. . (மிள*காய்ப்ப*ழ*ச் சாமி என்று ஒரு க*விதை எழுதினேன்... அதுவும் காணாம*ல் போயிற்று,,, த*லைப்பு உப*யம் : சுப்பிர*ம*ணிய* பார*தி.)

    உங்கள் சந்தேகம் என்னவோ??? விமர்சனம் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •