Results 1 to 4 of 4

Thread: யார் நீ?...

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    யார் நீ?...

    அன்பே!...
    தென்றலாய் வந்து
    இதமாய் கடந்து சென்றாய்.
    புயலின் தாக்கத்தை
    விட்டுச்செல்கின்றாய்.

    வெளிச்சப்புள்ளியாய் தோன்றி
    மெழுகாய்
    ஒளி தந்து கடந்தாய்.
    ஒரு மின்னலின்
    அதிர்வை பதிந்து செல்கின்றாய்.

    ஒற்றை
    மலராகவே வந்தாய்
    அழகிய
    பூந்தோட்டமாய்
    நறுமணம் கமழ்கின்றாய்.

    எப்படி
    என்னுள் நுழைந்தாய்?!...
    நானே அறியாத
    ஒரு கணத்தில்...

    பகல் வானம் போல்
    வெருமையாய் இருந்த என்னில்
    இரவு வான்
    நட்சத்திரங்களாய்
    உன் நினைவை
    விதைத்து விட்டாய்.

    உன்
    ஞாபக அலைகள்
    சிறு தூறலாக துளிர்த்து
    அருவியாய்
    ஆர்ப்பரிக்கின்றது.

    யார் நீ?...
    உன்னைச் சொல்லாமலேயே
    என்னைக் கொல்கின்றாய் !...
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    சொல்லாமல் வருவதும்
    தென்றலாய் வருவதும்
    புயலாய் வருவதும்
    ஒன்றே ஒன்றுதான்.

    பாராட்டுக்கள் இனியவளே.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    அருமையான வரிகள்
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நல்ல கவிதை இனியவள். காதலின் தாக்கத்தை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். தென்றலாய் கடந்து புயலாக நிலைத்து...இப்படி ரசிக்கக்கூடிய வரிகள். ஆனாலும்

    வெளிச்சப்புள்ளியாய் தோன்றி
    மெழுகாய்
    ஒளி தந்து கடந்தாய்.
    ஒரு மின்னலின்
    அதிர்வை பதிந்து செல்கின்றாய்.


    என்கிற வரிகளில் மெழுகாய் என்பது வருடுகின்றது. அந்த இடத்தில் விளக்காய் என எழுதியிருந்தால் பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கின்றேன். மெழுகுதிரியை தியாகி மாதிரி கற்பனை செய்வதே அனைவரதும் வழக்கம். அப்படிப் பழகிவிட்டது. புதுமையாக எழுத நினைத்த உங்களுக்கு பாராட்டுகள்.
    Last edited by அமரன்; 27-06-2007 at 03:37 PM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •