தென்றலது தவழ்ந்து வரும்.. அதிகாலை பொழுது....!
மலர்கள் மலர நேரம் பார்த்து காத்திருந்த வைகறைப்பொழுது...!
நிலவு காதலன் இரவு காதலியை விட்டு
விலகி செல்லும் விடியல் பொழுது... !
நதியின் கரையில் நிலவின் மடியில்..
சோலையின் தாலாட்டில் அவள் முகம்
நான் பார்த்திருக்க...!
புன்னகையை தாங்கி இருந்த அவள் முகம்
நிலம் பார்த்திருக்க...!
காதல் என்ற
இளமையின்,, வரம் எங்களை சூழ்ந்திருக்க.. !
உலகின் மிக விளிம்பில் நாங்கள் இருப்பதை
உணர்ததொரு சுகந்த அனுபவத்தில்
நாங்கள் திளைத்திருந்த நேரம்...!
அந்த நேரங்கள்... அந்த நிமிடங்கள்....!
என்கனவுகளில் என்றும் வருகிறது.....!
Bookmarks