Results 1 to 10 of 10

Thread: மஞ்சளும் குங்குமமும் பூத்துக் குலுங்கும

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0

    மஞ்சளும் குங்குமமும் பூத்துக் குலுங்கும

    பாலைவனங்களில் கூட பனி பொழிகிறது!
    எரிமலைகளில் கூட ஈரம் கசிகிறது!
    என் வாழ்க்கையில் மட்டும் இப்படி ஒரு வறட்சியா?
    எனக்கு மட்டும் திருமணம் என்பதே புரட்சியா?

    இன்னும் எத்தனை காலம் தான் இந்த வாழ்க்கை,
    பாதையே தெரியாமல் பயணம் செய்யும்?

    நான் பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் எப்படி
    சோக ஊருக்கு சொல்லாமலேயே செல்கின்றன?

    எனக்கு கட்டிய மாலையில் மட்டும் ஏன்
    முல்லை வைக்காமல் முள்ளை வைத்தான் அந்த முப்பெரும் தேவன்?

    மேளச்சத்தமும் மெட்டி ஒலியும்
    என்னை தீண்டத்தகாதவள் என்று நினைத்ததா?

    பந்தி வைத்து பரிமாறக் காத்திருந்தும்
    என் வீட்டிற்கு திருமண விருந்தாளி வராமலேயே போவதேன்?
    புத்தாடை கட்டி பட்டாசு வெடித்தும்
    என் வீட்டிற்கு திருமண தீபாவளி திரும்பாமலேயே போவதேன்?

    திருமணம் காணாமலேயே இந்த ஒருமணம்
    துருமணம் ஆகிவிடுமோ?

    வீட்டிற்கு வரும் அழைப்பிதழ்களில் எல்லாம்
    எத்தனை நாள் தான் என் பெயரை எழுதிப் பார்ப்பது?
    எப்போது தான் என் பெயரையும் மணப் பெண்ணாய் அச்சிட்டுப் பார்ப்பது?

    கல்யாண ஆசை கழுத்து வரை நிற்க
    காதல் ஆசை கழுத்தைப் பிடித்து நெறிக்க
    என் வாழ்க்கையே விழிகளில் பிதுங்கி வழிகிறதே!

    என் விதை வந்து விளையாட வேண்டிய மடியில்
    இப்படி விதி வந்து விளையாடுகிறதே!

    கல்யாணக் கடவுளே!
    என்னையும் கொஞ்சம் கட்டிப் பிடி!
    என் வீட்டுத் தோட்டத்திலும்
    மஞ்சளும் குங்குமமும் பூத்துக் குலுங்கட்டும்!
    என் கழுத்தில் தாலியும் என் இடுப்பில் குழந்தையும்
    காய்த்துத் தொங்கட்டும்!!!
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    லெனின். கல்யாணமாகாது வயதுகளுடன் வசந்தமும் கடந்து செல்லும் ஒரு நங்கையின் உள்ளச் சிதறலை அழகாக கவிதையில் வடித்துள்ளீர்கள். வரிகளில் உணர்வுகள் பூத்துக்குலுங்குகின்றது. பாரட்டுகள்

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    ஆழமான கருத்துக்கள்.நல்ல கவிதை.வாழ்த்துக்கள்
    இணையத்தில் ஒரு தோழன்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    கல்யாணப் பருவம் தாண்டியவர்களின் ஏக்கம் நிறைவாகவே தொனிக்கிறது கவியில்...
    கவலைப்படாத பெற்றோர், சீதனப் பிரச்சினை, கடமைகள், சமுதாயத்தின் தவறான பாதை, ஜோதிட நம்பிக்கை, காதற்தோல்வி
    இவ்வாறாக பலதும் ஆண், பெண் இரு பாலாரதும் வாழ்வில்,
    திருமண நிகழ்வைத் தொலைக்க வைத்துவிடுகின்றது.
    இந்த நிலை மாறவேண்டும்.

    பாராட்டுக்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    நல்ல கருத்துக்கள் உள்ள கவிதை.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by lenram80 View Post
    பாலைவனங்களில் கூட பனி பொழிகிறது!
    எரிமலைகளில் கூட ஈரம் கசிகிறது!
    என் வாழ்க்கையில் மட்டும் இப்படி ஒரு வறட்சியா?
    எனக்கு மட்டும் திருமணம் என்பதே புரட்சியா?

    இன்னும் எத்தனை காலம் தான் இந்த வாழ்க்கை,
    பாதையே தெரியாமல் பயணம் செய்யும்?

    நான் பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் எப்படி
    சோக ஊருக்கு சொல்லாமலேயே செல்கின்றன?

    எனக்கு கட்டிய மாலையில் மட்டும் ஏன்
    முல்லை வைக்காமல் முள்ளை வைத்தான் அந்த முப்பெரும் தேவன்?

    மேளச்சத்தமும் மெட்டி ஒலியும்
    என்னை தீண்டத்தகாதவள் என்று நினைத்ததா?

    பந்தி வைத்து பரிமாறக் காத்திருந்தும்
    என் வீட்டிற்கு திருமண விருந்தாளி வராமலேயே போவதேன்?
    புத்தாடை கட்டி பட்டாசு வெடித்தும்
    என் வீட்டிற்கு திருமண தீபாவளி திரும்பாமலேயே போவதேன்?

    திருமணம் காணாமலேயே இந்த ஒருமணம்
    துருமணம் ஆகிவிடுமோ?

    வீட்டிற்கு வரும் அழைப்பிதழ்களில் எல்லாம்
    எத்தனை நாள் தான் என் பெயரை எழுதிப் பார்ப்பது?
    எப்போது தான் என் பெயரையும் மணப் பெண்ணாய் அச்சிட்டுப் பார்ப்பது?

    கல்யாண ஆசை கழுத்து வரை நிற்க
    காதல் ஆசை கழுத்தைப் பிடித்து நெறிக்க
    என் வாழ்க்கையே விழிகளில் பிதுங்கி வழிகிறதே!

    என் விதை வந்து விளையாட வேண்டிய மடியில்
    இப்படி விதி வந்து விளையாடுகிறதே!

    கல்யாணக் கடவுளே!
    என்னையும் கொஞ்சம் கட்டிப் பிடி!
    என் வீட்டுத் தோட்டத்திலும்
    மஞ்சளும் குங்குமமும் பூத்துக் குலுங்கட்டும்!
    என் கழுத்தில் தாலியும் என் இடுப்பில் குழந்தையும்
    காய்த்துத் தொங்கட்டும்!!!
    சோக ஊருக்கு பயணிக்கும் போருந்து
    ஒரு நாள் சொர்க்க வாசலை சென்றடையும்

    முள் மாலை கூட
    ரோஜா மாலையாக மாறும்

    மேளங்கள் முழங்க
    அம்மி மிதித்து
    அருந்தது பார்த்து
    மெட்டி அணியும் நாள் வரும்

    காலம் தாழ்த்துவது
    நன்மைக்கென்றே நினைத்துகொள்

    உன்னை அன்பில் தாலட்டி
    அரவணைத்து துயில வைக்க
    உன்னவன் வந்து கொண்டிருப்பான்
    உன் கனவுகள் நனவாக வாழ்த்துகள்

    கவி அருமை வாழ்த்துக்கள் லெனின்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஏங்க இனியவள் கவிதைகளில் பின்னுகின்றீர்கள். அடுத்த கவிதைப்போட்டியில் கலக்கிடுங்க. பாராட்டுகள் கவிதைக்கு.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    ஏங்க இனியவள் கவிதைகளில் பின்னுகின்றீர்கள். அடுத்த கவிதைப்போட்டியில் கலக்கிடுங்க. பாராட்டுகள் கவிதைக்கு.
    நன்றி அமரன்
    கவிதைப் போட்டியில் கலந்து கொள்கின்ற அளவுக்கு திறமை இன்னும் எனக்கு வரவில்லை என்று நினைக்கின்றேன் அந்த தகுதி வந்ததும் நிச்சயம் கலந்து கல்க்குவேன்
    Last edited by இனியவள்; 30-06-2007 at 10:32 AM.
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by இனியவள் View Post
    நன்றி அமரன்
    கவிதைப் போட்டியில் கலந்து கொள்கின்ற அளவுக்கு திறமை இன்னும் எனக்கு வரவில்லை என்று நினைக்கின்றேன் அந்த தகுது வந்ததும் நிச்சயம் கலந்து கல்க்குவேன்
    இதுதான் தன்னட்டக்கம் என்பதோ...

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    லெனின் உங்களைக் நீண்ட நாட்களாகக் காணவில்லையே என்று நினைத்தேன், மீளவும் வந்துவிட்டீர்கள் உங்கள் அழகு வரிகளுடன்!

    உண்மைகளை உரைத்து
    நெஞ்சத்தைக் கனமாக்கிய*
    உங்கள் வரிகளுக்கு என் வாழ்த்துக்கள்!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •