மலரென்று உனை எண்ணி
மனதினில் வைத்திருந்தால்
பிரிவென்று வரும்போது
பெருந்தணலாய்ச்சுடுகின்றாய்....!
கூடி இருக்கையிலே
குளிர்நிலவாய்த்தானிருந்தாய....
பக்கம் இல்லாது பகலவனை மிஞ்சுகின்றாய்...!
கோடைகாலங்கள் இன்னல் பல தருகையிலே
வசந்தமாய் உன் நினைவு வந்து வந்து போகின்றது...!
காரிருள் என் மீது கவிழ்ந்து கிடக்கையிலே
விளக்காய் வெளிச்சம் தராமல் வேறெங்கோ நீ...!
மலரோடு மரங்கள் அழகாகத்தானிருக்கும்
வேர்கள் இல்லையெனில்
அது விறகாகிப் போயிருக்கும்....!
உன் நினைவு எப்போதும் எனக்குள்ளே உறைந்திருக்கும்
அது சுத்தமான காற்றாகி
என் சுவாசம் நிறைந்திருக்கும்....!
Bookmarks