பகுதி_எட்டு
இவர்களது காதல் வளர்ச்சியை
பலர் விமரிசனம் செய்தனர்.
சிலர் கரிசனம் காட்டினர்..
அவளது தோழிகள் அவளை
வார்ததைகளால் அறைந்தனர்..
காதலைத் தொல்காப்பியம் மட்டுமே
தத்து எடுத்துள்ளதா?
அகநானூறு மட்டுமே காட்டும்
சித்து விளையாட்டா அது?
காப்பியங்கள் மட்டும் காதல் உரிமை
காப்பிரைட் எடுத்துள்ளதா?
தாஜ்மகாலை வியக்கும் மனித உள்ளம்
ஷாஜஹானையும் மும்தாஜையும்
மறந்து போனதேன்?
உண்மைக் காதலைச்
சுற்றி நினறு தூற்றுவதேன்??
அவசர அவசரமாய் அதற்கு
சவப்பெட்டி தயாரிப்பதேன்?
நாட்டு மக்களிடமிருந்து காதல்
நாடு கடத்த வேண்டிய ஒன்றா?
படித்தவராக வேடமிடும் பாமரர்கள்
சுற்றி நின்று அக்காதலரைச்
சுட்டெரித்தனர்..
ஆனாலும் அந்த
ஆனந்தக் குயிலகளுக்கு
ஆதரவுச் சாமரம் வீசிய
நட்பு வள்ளல்களும் இருந்தன!
இணைப்பறவைகளின்
இணைப்பைப் புரிந்து கொண்டு
எதையும் செய்யத் துடித்தது ஓர் இதயம்...
அந்தக் காதல் இதயங்களைக்
கனிவுடன் வருடியது...
Bookmarks