பகுதி_ஏழு
பத்து நாட்கள் பாட விடுமுறை...
அவள்
உயிரை இவனிடம் விட்டுவிட்டு
உடலுடன் சென்னை சென்றாள்..
இவன் உயிர்
உடலை இங்கே விட்டுவிட்டு
அவளுடன் சென்னை சென்றது!
மனத்தளவில் பிரிவில்லை எனினும்
நான்கு கண்கள் பத்து நாட்கள்
இமைக்க மறந்தன....
காவிரி மணலில் படுத்து
விண்மீன்களிடையே
அவளைத்தேடினான்....
சூன்யம் கண்டு வாடினான்...
கல்லூரிபாடங்கள்
கண்களில் ஏறவில்லை..
காதலி ஏக்கம் அவனை
அனாதைக் குழந்தை ஆக்கியது....
தினசரி அவள் வரவை எண்ணி
கண்கள் பூத்தன...
கண்ணீர்ப்பூக்கள் கோர்த்தன...
அவளது வழக்கமான வழித்தடங்களை
கண்களால் முத்தமிட்டான்...
மனதுக்குள் மட்டும் சத்தமிட்டான்...
பத்து நாட்களில்
பதது வகை நரகங்கள்
பரிச்சயமாயின....
அவளும் சென்னையில்
நடமாடும் பிணமானாள்...
நாயகன் நினைவுடன்
நாட்களை ஓட்டினாள்...
அந்தக் குழந்தை
தனது இந்தக் குழந்தைக்காக
பரிசுகள் வாங்கி வந்தபோது...
இந்தக் குழந்தை
கையில் பரிசுகளுடன்
அந்தக் குழந்தையைத் தாங்கியது!
பத்து நாட்களின் சோகங்களை
பார்வைகளில் கரைத்தனர்...
மீண்டுமொரு வசந்த காலம்
பூத்துவந்தது...
இருவரது உயிர்களையும் காத்துவந்தது..
Bookmarks