அரங்கேற வேண்டும்!
துள்ளித் துள்ளி ஓடும் நதியே
துளி பட்டு வாடுது என் விழியே
காரணத்தை நீ அறிவாயோ
காற்றை நீ தூது சொல்வாயோ
வீசும் காற்றின் மோகம் கொண்டு
விண்ணையும் நான் மண்ணில் கொண்டு
காதல் தூது சொல்லி விட்டேன்
என் ஆசையைக் கூறி விட்டேன்
மாலையிடும் மன்னன் யாறோ...?
காற்றுக் கூட அறியாதே
அவனைத் தாங்கும் பூமி நானே
என்னைக் காத்திடும் வானம் அவனே
என் நினைவுகள் நிஜமாக வேண்டும்
என் காதல் அறங்கேற வேண்டும்.....!!!!
அன்புடன்,
லதுஜா
Bookmarks