வாழ்க்கைச் சதுரங்கத்தில்
நான் மாட்டி முளிக்கையில்
ஒளிக்கீற்றாய் வந்த
என் சதுரங்க ராணியே!
இன்று நீயின்றி
நான் நாடுகடத்தப்பட்ட
முன்னாள் ராஜாவாக!
உன்
ஞாபகங்களை மட்டும்
அனிச்சையாகச் சுமந்து,
என் கவிதைகளுக்கு
உன்னைக் கருவாக்கி,
உன் நினைவுகளுக்குள்
வலிகளையும் பூட்டி
ஒற்றையடிப்
பாதையில் ஒற்றையாக
மண்மூடினாலும்
கண்மூடா விதையாக
என் காதலைச்
சுமந்துகொண்டு
மீண்டும் ஒரு
வசந்தத்திற்காகக்
காத்திருக்கிறேன்
நீ கொண்டு சென்ற
வர்ணங்களுடன் மீள
வருவாயென்று.
Bookmarks