Page 1 of 11 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 131

Thread: அனுபவ குறள் - புத்தகம்!!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2

    அனுபவ குறள் - புத்தகம்!!

    ---------------------------------
    குறிப்பு: தொடர்ச்சியாக எழுதப்பட்ட இந்த அனுபவ குறளைத் தொகுத்து புத்தக வடிவமாக்கி கீழேயுள்ள சுட்டியில் அமைத்திருக்கிறேன்.

    தலைப்பு: யாவர்க்கும் திருக்குறள்

    http://www.tamilmantram.com/vb/downl...do=file&id=170

    நன்றி.
    ---------------------------------

    அனுபவ குறள் -

    என் பண்ணிரண்டு வயதில் ஒருநாள் என்னை யாரோ ஒருவர் அறிவுகெட்டவனே- என்று திட்டிவிட்டார். அன்று என் மனமே என்னிடமில்லை.

    அறிவு கெட்டவன், மதி கெட்டவன் என்றால் என்ன என்று ஆராய்ந்தேன். அறிவு என்றால் என்ன என்ற கேள்வி என்னைக் குடைந்து கொண்டிருந்தது.

    அப்போது −
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு


    என்று பள்ளிக்கூடத்தில் படித்த்த ஞாபகம் வரவே... திருக்குறள் புத்தகத்தை எடுத்தேன்.

    ம்... சரி.. யார் என்ன சொல்வதை நாம் கேட்டாலும் அதில் என்ன உண்மை இருக்கிறது.. அதன் உண்மையான பொருளென்ன என்பதை ஆராய்வது அறிவு... என்ன அருமையான சொற்களைய்யா... அறிவில்லாதவன் யார் சொல்வதையும் அப்படியே கேட்டு நம்பி பின்னர் ஏமாந்திடுவான். அறிவுடையவன் ஏமாற மாட்டான்.

    உண்மைதான். அறிவிற்க்கு நல்லதொரு விளக்கம் கிடைத்தது.
    ஆனால் அது மட்டுமா அறிவு??. திருக்குறள் புத்தகத்தை மீண்டும் புரட்டினேன். 43வது அதிகாரமான அறிவுடைமை அதிகாரத்தில் என் கண்கள் நிலைத்தன. நான் படித்த அந்தக் குறள்-

    அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
    அதறி கல்லா தவர்.


    இக்குறளை அன்று நான் படித்திருந்தாலும் என்னால் முழு அளவில் புரிந்து கொள்ள முடியவில்லை. அதே குறள் என் மனதினுல் பல ஆண்டுகள் ஓடிக்கொண்டே இருந்த்த. பின்னர் சில ஆண்டுகள் கழித்து இக்குறளை மீண்டும் மீண்டும் படித்து பொருள் விளங்கினேன். அதில் ஒரு குறிப்பு. இக்குறளில் -ஆவ தறிவார்- என்ற சொல் மிகவும் ஆழம் வாய்ந்தது.

    ஒருவரால் வரப்போவதை எவ்வாறு முன்னமே அறிய முடியும் ?
    நாளை நடக்கப்போவதை... அடுத்த வாரம் நடக்கப்போவதை...
    அடுத்த மாதம் நடக்கப்போவதை... அடுத்த ஆண்டு நடக்கப்போவதை... ஐந்தாண்டு கழித்து நடக்கப்போவதை ! இதெல்லாம் ஒருவரால் அறிந்திருக்க வேண்டுமென்றால் அவையெல்லாம் அவரால் சரியாக திட்டமிடபட்டிருக்கப்பட வேண்டும். வரக்கூடிய இன்னல்களை முன்னமே அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு இன்னல் வருங்கால் அவற்றை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டிருக்க வேண்டும்.

    இதை ஆங்கில முறையில் கூறலாயின்... Planning, Scheduling, Managing, Risk Identifying, Mitigation developing.. என்ற பற்பல விரிவான அத்தனை துறைகளும் இந்த ஒரே சொல்லான -ஆவ தறிவார்- சொல்லில் அடங்கியிருப்பது புரிந்த்த. அதை நினைத்துப்பார்க்கவே பிரம்மிப்பாக இருந்தது.

    இப்போது எனக்கு அறிவு என்ற சொல்லிற்க்கான பொருள் விரிந்து கொண்டே செல்வது போல் தோன்றியது.


    அனுபவக்குறளும் குறளின் போற்றுதலும் தொடரும்.....
    Last edited by மீனாகுமார்; 27-09-2007 at 11:52 AM.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    மீனாகுமார்! திட்டமிட்டுச்செய்தால் ஆவது அறியலாம் என்பதை அழகாக சொல்லியுள்ளார் வள்ளுவர். அதை எமக்குத் தந்த உங்களுக்கு நன்றி. தொடர்ந்து இதே போன்று தாருங்கள்

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    இதை தானே அவ்வையும் அனுவை துளைத்து அதனுள் ஏழு கடலையும் புகுத்தியது போல குறுகத் தறித்த குறள் என்று பாடியுள்ளார்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    சுவாரசியமான திரி தொடங்கியமைக்கு பாராட்டுக்கள்...
    குறள்களை குறிப்பிடும்போது, இரண்டாவது குறளைக் குறிப்பிட்டதைப் போல,
    குறள் வடிவிலேயே தொடர்ந்தும் தாருங்கள்...
    ஆமாம்,
    நீங்கள் ஆசிரியரா?
    ஆசிரியர் அல்லாது போனால், சிறு வருத்தம்.
    ஏனென்றால், உங்கள் விளக்கும் முறை எளிமையாக, விளங்குவதோடு, ஒன்றித்து வாசிக்கவும் விளங்கவும் வைக்கிறது.

    மீண்டும் பாராட்டுக்கள்... தொடருங்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    சபாஷ் மீனாகுமார்...

    உலக பொதுமொழி என்ன பொது நூல்தானே குறள்...
    அதை அனுபவ நீதியாக சொல்லும் போது.. ஆகா ஆகா.. தொடருங்கள்..
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    அறிவு இன்னும் வேறு என்னவெல்லாம் தன்மை கொண்டது என்று ஆராய்ந்து பார்த்த போது அறிவு அற்றங்காக்குங்கருவி என்றாரே வள்ளுவர் பெருமான்....

    அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
    உள்ளழிக்க லாகா அரண்.


    மனிதன் கடந்த காலத்தையே தான் அறிவான். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறியாவண்ணம் அமைந்துள்ள இவ்வுலகில்... அதை எப்படி கையாள்வது என்று ஆராயும் போதுதான்
    அறிவின் துணை நமக்குத் தேவைப்படுகிறது. மிக முக்கியமாக பின்நாளில் வரப்போகும் துன்பத்தை உணர, உணர்ந்துபின் அதைத் தவிப்பதற்கான திட்டமிடல் போன்றவை செய்ய அறிவின் துணை
    அவசியமே. அதனாலே அறிவு அற்றங் காக்கும் கருவி.

    இளமையிலே பார்க்கும் பொருள் எல்லாம் பசுமையாகத் தோன்றும் என்பார்கள். அது இளமைக்கே உரிய அழகு. அந்த இளமையின் வேகம்.. மிக விரைவான வேகம். அதே வேகத்தில் மனதும் சென்று கொண்டுதான் இருக்கும். மனதும் இளமையும் ஒரு வேகத்தில் செல்ல, படிப்படியாக வாழ்வில் பிரச்சனைகளைச் சந்திக்க ஆரம்பித்த பின்னர்.. மனதின் வேகம் மெதுவாக குறையும். சரியாக சொல்ல வேண்டுமாயின்... மனது பக்குவப்படும். பின்னர் எது சரி, எது தவறு என்று எளிதாக விளங்கும். அனுபவத்தினால் பெறும் அறிவின் அளவும் பெருகும். அப்போது மனம் சென்ற இடமெல்லாம் செல்லாமல் சரியான திசையிலே மட்டும் பறந்தோடும். காலப்போக்கில் மனது
    பக்குவப்படும் வேளையில் மனத்தை ஒரு நிலைப்படுத்தி நன்மை தரும் செயல்களில் மட்டுமே செலுத்தும் போது, வாழ்வு இனிக்கும்.

    சென்ற இடத்தில் செலவிடா தீதொரீஇ
    நன்றின்பால் உய்ப்ப தறிவு.


    இன்னும் அறிவு பற்றி சிறு ஆராய்ச்சி முடித்து விட்டு பின்னர் வீரம் விளைஞ்ச மண்ணு நம்ம மண்ணு...
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    மீனாகுமார், திருகுறள் நீங்கள் தந்த விளக்கம் உன்மையானதாக புதுமையானதாக் இருகிறது.
    உங்கள் அவதாரை பார்த்தவாரே குறளை படிக்கும் போது நன்றாக புரிகிறது
    நண்றி, தொடருங்கள்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    Quote Originally Posted by அக்னி View Post
    சுவாரசியமான திரி தொடங்கியமைக்கு பாராட்டுக்கள்...
    குறள்களை குறிப்பிடும்போது, இரண்டாவது குறளைக் குறிப்பிட்டதைப் போல,
    குறள் வடிவிலேயே தொடர்ந்தும் தாருங்கள்...
    ஆமாம்,
    நீங்கள் ஆசிரியரா?
    ஆசிரியர் அல்லாது போனால், சிறு வருத்தம்.
    ஏனென்றால், உங்கள் விளக்கும் முறை எளிமையாக, விளங்குவதோடு, ஒன்றித்து வாசிக்கவும் விளங்கவும் வைக்கிறது.

    மீண்டும் பாராட்டுக்கள்... தொடருங்கள்...
    நன்றி அக்னி. குறளை குறள் வடிவிலேயே தருகிறேன். நான் ஆசிரியர் இல்லை. மென்பொருள் பொறியில் துறையில் பொறியாளராகவும், இயக்குனராகவும் (Director) பணிபுரிகிறேன். தமிழில் Master of Arts (M.A.) படிக்க விரும்புகிறேன் இன்னும் சில ஆண்டுகளில்...
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    இத் தொடரை வாசிப்பவர்களுக்கு ஒன்றை விளக்க கடமைப்பட்டிருக்கிறேன். திருக்குறளுக்கு பலர் விரிவுரை எழுதியுள்ளனர். நான் இங்கு திருக்குறளுக்கு விளக்கமோ, விரிவுரையோ எழுத முயலவில்லை. என் அனுபவத்தில் திருக்குறள் எனக்கு எவ்வாறு துணை நின்றது என்பதையும் நான் திருக்குறளில் புரிந்து கொண்ட சில நுணுக்கங்களையும் மட்டுமே வெளிப்படுத்த முயல்கிறேன்.

    அனைத்து குறளையும் கொடுப்பதென்பது இயலாத காரியம். என்னை முக்கியமாக பாதித்த குறள்களை மட்டுமே சான்றுக்கு எடுத்துக் கொள்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பிழையேதும் இருப்பின் உடனே சுட்டிக்காட்டவும் உங்கள் அனுவங்களையும் பகிர்ந்து கொள்ளவு தயங்க வேண்டாமென்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் எனக்கு நேரம் கிடைப்பதைப் பொறுத்தே இத்தொடரின் வேகமும் இருக்கும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    இன்றைய நவீன இயந்திர உலகில் தகவல் தொடர்புகள் (Communication) பன்மடங்கு பெருகிவிட்டது. இயந்திரங்கள் பேசிக்கொள்வது ஒரு புறம் இருந்தாலும், ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றமும் முன்பில்லாத அளவுக்கு இப்போது பெருகியுள்ளது. அவ்வாறு தகவல் பரிமாறிக் கொள்ளும் வேளையிலே பற்பல தவறுகள் நிகழ வாய்ப்பிருக்கிறது.
    எழுத்துப் பிழைகளை எளிதில் கண்டுபிடித்திடலாம். முக்கியமாக அவை கருத்தையும் பொருளையும் பெரும்பாலும் பாதிப்பதில்லை. ஆனால் முக்கியமாக ஒரு பொருளை சொல்பவரும் அதை பெறுபவரும் ஒரே பொருளைத்தான் கொள்கிறார்களா என்பதில்தான் பற்பல சிக்கல்கள் வருகின்றன.

    ஒரு விசயத்தைச் சொல்பவர் அவர் மனதினுள் ஒரு கருப்பொருளோடு (Context) சுருக்கமாக சொல்வார். அப்போது கூட இருக்கும் சில தகவல்களையும் சேர்த்து சொல்ல மறந்திடுவார். ஆனால் அதைப் பெறுபவர் வேறு விதங்களில் பொருள் கொள்ள வாய்ப்பிருக்கிறது.இங்கு தான் பல சிக்கல்கள் இயற்கையாகவே தோன்றுகின்றன. இது இன்றைய நவீன உலகில் அன்றாடம் நிகழும் நிகழ்வாகும்.

    எண்பொருள் வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
    நுண்பொருள் காண்ப தறிவு.


    நாம் பிறருக்குச் சொல்ல வேண்டியதை தெளிவாகவும் முழுமையாகவும் குறிப்பாகவும் பிறரிடம்
    சொல்லி நாம் பிறர் கூறுவதைக் கேட்கும் போது கவனமாக் கேட்டு கூறியவரின் கருத்தை அவர் வழியிலேயே புரிந்து கொண்டிருக்கின்றோமா என்பதையும் சரிபார்த்துக் கொள்வது
    அறிவுடையவரின் செயல்.

    இந்த தகவல் பரிமாற்றத்தில் சொல்வன்மை என்ற அதிகாரமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதை பின்னர் பார்க்கலாம்.

    மேலும் உலகத்தோடு ஒட்ட வாழ்வது அறிவு. அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவது அறிவுடையார் செயல் என்பது வள்ளுவர் வாக்கு.

    எவ்வ துறைவ துலக முலகத்தோ
    டவ்வ துறைவ தறிவு.

    அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
    தஞ்சல் அறிவார் தொழில்.


    அறிவு பற்றி எனக்கு நல்ல கருத்து பிறந்து ஆழப் பதிந்தும் விட்டது.

    அடுத்து வீரம் பற்றி சில அனுபவம்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் alaguraj's Avatar
    Join Date
    09 May 2007
    Location
    குவைத்
    Posts
    311
    Post Thanks / Like
    iCash Credits
    37,433
    Downloads
    49
    Uploads
    1
    நல்ல புதுமையான முயற்சி, தொடர்ந்து கொடுங்கள், விகடன் போன்ற நிறுவனங்கள் பார்த்தால் புத்தகமாகவும் வரலாம்.
    ++அழகு++
    ______________________
    வாழ்க தமிழ் அன்னை.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    புதுமையான முயற்சி
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

Page 1 of 11 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •