Page 8 of 11 FirstFirst ... 4 5 6 7 8 9 10 11 LastLast
Results 85 to 96 of 131

Thread: அனுபவ குறள் - புத்தகம்!!

                  
   
   
  1. #85
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    ஒழுக்கம் தவறுதலால் எப்போதும் தீமையே வரும் என்பதையறிந்த மனவலிமையுடையவர் அந்த ஒழுக்கத்திலிருந்து எப்போதும் தவற மாட்டார்.

    ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
    ஏதம் பாடுபாக் கறிந்து.


    அதே போல், ஒழுக்கமுடையவர் தவறிககூட தீய சொற்களைக் கூற மாட்டார்.

    ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
    வழுக்கியும் வாயாற் சொலல்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  2. #86
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    நிரைய வேலை இருக்கும் போது நேரம் கிடைக்கும் போது ஆக்கபூர்வமாக அருமையான படைப்பாக இதை தொரர்ந்து எழுதி வருகிறீர்கள். மிக்க நன்றி மீனா குமார்.
    இதை பத்திரமாக எடுத்து வைத்திருகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிகடி படித்து கொண்டிருகிறேன்
    நன்றி
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  3. #87
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    அடுத்து தெரிந்து தெளிதல் என்ற 51வது அதிகாரத்தைக் காண்போம்.

    நம்பிக்கையின் அடிப்படையில் தான் இவ்வுலகமே இயங்குகிறது. உங்கள் வாழ்விலோ அல்லது அலுவலகத்திலோ புதியதாக வரும் ஒருவரை எப்படி நம்புவது ? அறம் பொருள், இன்பம், உயிருக்கு அச்சம் இந்த நான்கையும் நன்கு ஆராய்ந்த பின்னரே ஒருவரை நம்ப வேண்டும்.

    அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
    திறந்தெரிந்து தேறப் படும்.


    ஒருவரைப் பற்றி நன்றாக அறிய வேண்டுமென்றால் முதலில் அவருடைய அடிப்படைக்குணங்களை அறிதல் வேண்டும். மேலும் அவருடைய குற்றங்கள் எவை என்று அறிதல் வேண்டும். இந்த அறிதலை அடிப்படையாகக் கொண்டே இன்றைய நேர்முகத்தேர்வுகள், மற்றும் பிற எழுத்து தேர்வுகள் இயங்குகின்றன. நேர்முகத்தேர்வில் ஆய்வாளர் கேட்பார்- உங்களுடைய சிறந்த வலிமைகள் எவை எவை... முன்னேற வேண்டியவைகள் எவை என்று (strong and weak points). உங்களைப் பற்றி அறிந்து ஆழம் பார்ப்பதற்கேற்ற கேள்விகளை முன்நிற்கும். இந்த நல்ல குணத்தையும் குற்றங்களையும் ஆராய்ந்து அவற்றுள் எது மிக்கது என்று தெரிந்து அதற்கேற்றார் போல் அவரைக் கொள்ளுதல் வேண்டும்.

    குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  4. #88
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    உங்கள் கருமமாகிய செயல்களே உங்களின் பெருமைக்கும் சிறுமைக்கும் காரணமாகையால்... பெருமை தரும் செயல்களையே செய்வீர்.

    பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
    கருமமே கட்டளைக் கல்
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  5. #89
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    எதிலுமே பற்றில்லாதவர் எப்படி இருப்பார் ? அவர் எதையுமே மதிக்க மாட்டார். அஞ்சுவதற்கு அஞ்ச மாட்டார். பழிச்சொல்லுக்கும் அஞ்ச மாட்டார். அப்படி பழிச்சொல்லுக்கு அஞ்சாதவரை நம்பக்கூடாது.

    அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
    பற்றிலர் நாணார் பழி.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  6. #90
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    நிரைய வேலை இருக்கும் போது நேரம் கிடைக்கும் போது ஆக்கபூர்வமாக அருமையான படைப்பாக இதை தொரர்ந்து எழுதி வருகிறீர்கள். மிக்க நன்றி மீனா குமார்.
    இதை பத்திரமாக எடுத்து வைத்திருகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிகடி படித்து கொண்டிருகிறேன்
    நன்றி
    இந்த நீண்ட கட்டுரை 133 குறள்களை ஆய்ந்தபின் முற்றுப் பெற உள்ளது. இதற்கு இன்னும் 4-5 முக்கிய அதிகாரங்களை ஆராய உள்ளேன். உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  7. #91
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஒழுக்கத்தின் மேன்மை.. தெரிந்து தெளிந்து மிகைநாடி மிக்க கொளல் என
    உங்கள் அருமையான விளக்கங்களால் அதிகம் அறிகிறேன்..

    நன்றி மீனாகுமார்..

    உங்கள் தொடர் முழுமை அடைய என் வாழ்த்துகள்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  8. #92
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2005
    Location
    TAMILNADU
    Posts
    402
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    1
    Uploads
    0
    மிக அருமையான கட்டுரை மீனாகுமார் அவர்களே. அய்யனின் திருக்குறளை எத்தனை விதமாய் படித்தாலும் இன்னும் இன்னும் அர்த்தங்கள் வரும். உங்கள் கட்டுரைகளால் அதை உணர்கிறேன் அய்யா. தொடரவும்.மிக்க நன்றி.

  9. #93
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    ஒரு செயலுக்கோ அல்லது திட்டத்துக்கோ தேவையான மூலப்பொருட்களைப் பற்றித் தெரியாதவரை அதற்கு பயன்படுத்துவோமேயானால், அவரால் நாம் அனைத்து துன்பங்களையும் பெறுவோம். இதை மிக எளிய உதாரணம் கொண்டு உணரலாம். SAP பற்றி எள்ளளவும் தெரியாத ஒருவர் அது மிகத் தேவையான வேலையில் புகுந்து அத்திட்டங்களை செயல்படுத்த முயல்வாராயின், அவர் தரும் தொல்லைகளை அவருடைய மேலாளர் அறிவார். இல்லை, உங்களுக்குத் தெரிந்தவர் எவராயினும் அவ்வாறு முன் அனுபவமில்லாத துறையில் அனுபவம் இருக்கிறது என்று கூறி வேலையில் சேர்ந்திருந்தால், அவர் பட்ட இன்னல்களை நீங்கள் அறிவீர்கள்.

    காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
    பேதைமே யெல்லாம் தரும்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  10. #94
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    நீங்கள் காதலிக்காமல் இந்திய முறைப்படி திருமணம் செய்திருப்பீர்களேயானால் கட்டாயம் இந்த சூழலுக்கு வந்திருப்பீர்கள். அதாவது முன்பின் தெரியாத ஒருவரோடு எப்படி வாழ்நாள் முழுதும் குடும்பம் நடத்தப்போகிறோமென்ற கேள்வி உங்கள் முன் அமர்ந்திருக்கும்.

    வேலைக்கு ஆள் தெரிவுசெய்பவர்களே ஒரு மணியோ, இல்லை இரு மணியோ, இல்லை ஒரு நாளிலோ நேர்முகத்தேர்வு வைத்து தெரிவு செய்துவிடுகிறார்கள். ஆனால் அவர் அலுவல் சரியில்லையென்றால் எப்போது வேண்டுமாயினும் நீக்கிவிடலாமென்ற தைரியமும் இருக்கும். ஆனால் இது உங்கள் வாழ்க்கையல்லவா.. முக்கியமாக திருமண வாக்கு கொடுக்கப் போகின்றீர்கள் அல்லவா. அதுவும் உங்கள் வாக்கை மீறினால் அது நன்றாக இருக்காது, மேலும் பழியும் வந்து சேரும்.

    எனக்கு இதே கேள்வி என் முன் அமர்ந்திருந்த போது நான் சிந்தித்தேன். நமக்கு திருமணத்திற்கு பெண் பார்க்கும் முன்னர் பெண்ணிடம் சில நிமிடங்களோ மணிகளோ தான் பேசுவதற்கு அனுமதிப்பார்கள். அதற்குள் அப்பெண் நம் வாழ்விற்கு ஏற்றவளா என்று எப்படி கண்டுபிடிப்பது என்று. அப்போது நான் திருக்குறளை புரட்டவில்லை. ஆனால், சிந்தித்தேன். வாழ்க்கை மகிழ்வாக இருக்கும் வரை யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது. ஆனால் வாழ்வில் பிரச்சனை என்று வரும் போது அப்பெண் எப்படி நடந்து கொள்வாள் என்பது தான் முக்கிய எதிர்பார்பாக இருந்தது. பிரச்சனை வருங்காலத்தில் நமக்கும் நம் குடும்பத்திற்கும் துணையாக இருப்பாளா ? நம்மை ஆதரிப்பாளா. இல்லை நம்மைத் தூர எரிந்து விட்டு சென்றுவிடுவாளா... இதை எப்படி அறிந்து கொள்வது என்று என் சிந்தனை ஓடியது. அப்போது இந்த யோசனை தோன்றியது. ஒரு பெண் தெய்வத்துக்கு பயப்படுபவளாக இருந்தால் கண்டிப்பாக அவள் பிறரையும் மதித்திடுவாள். தவறுகள் செய்யப் பயப்படுவாள். அவளிடம் கண்டிப்பாக குணங்களின் இலட்சுமி குடியிருப்பாள். இவளை நாம் எளிதே அடையாளம் கண்டு கொள்ளலாம். இந்த பேச்சு வார்த்தையும் கிட்டதிட்ட நேர்முக தேர்வு போல்தான். யதார்த்தமாக பேசி, அப்பெண்ணைப் பற்றி அறிவது திறமையே.

    அதே பெண் பயப்பட வேண்டியவைகளுக்கு பயப்படாமல் இருந்தால் பின்னாளில் நமக்கு பிரச்சனை காலத்தில் எப்படி நடந்து கொள்வாள் என்பதை கணிப்பது கடினமே.

    குடிபிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பிரியும்
    நாணுடையான் கட்டே தெளிவு.


    நல்ல குடியிலே தோன்றி, குற்றங்கள் இல்லாமல், பழிச்சொல்லுக்கு அஞ்சுபவரை அடையாளம் கண்டு அவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது இதன் பொருள்.

    நான் திருமணத்தின் போது இக்குறளை அறிந்திருக்காவிடினும், இக்குறளில் கூறப்பட்டது போன்ற முறைகளே எனக்கு உதவியிருந்தது என்று எண்ணும் போது மிகவும் மகிழ்வாயிருந்தது.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  11. #95
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    தீர ஆராயாமல் ஒருவரின் மீது நம்பிக்கை கொண்டு அவரைத் துணையாகக் கொண்டால், அவராலும் அவர் வழிமுறையினராலும் தீமையே வரும் என்பதை உணர்த்துகிறது இக்குறள் -

    தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
    தீரா இடும்பை தரும்.


    எனவே, தீர ஆராயாமல் யாரையும் துணையாகக் கொள்ளாதே. அதே போல் தீர ஆராய்ந்து ஒருவரை தன் துணையாகக் கொண்டபின் அவரை முழுமையாக நம்ப வேண்டும். அவரின் மீது சந்தேகம் கொள்ளுதல் கூடாது.

    தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
    தேறுக தேறும் பொருள்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  12. #96
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
    தீரா இடும்பைத் தரும்.


    இக்குறளும் அதே கருத்துக்களையே வலியுறுத்துகின்றது.

    இன்றைய நவீன தேர்வு முறைகள் இந்த தெரிந்து தெளிதலின் ஓர் அங்கமே.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

Page 8 of 11 FirstFirst ... 4 5 6 7 8 9 10 11 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •