Page 5 of 11 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 ... LastLast
Results 49 to 60 of 131

Thread: அனுபவ குறள் - புத்தகம்!!

                  
   
   
  1. #49
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    அகலக்கால் வைக்காதே என்று கூறுவர்.
    விரலுக்கேத்த வீக்கம் என்றும் கூறுவர்.
    ஆழம் தெரியாமல் காலை விடாதே என்றும் கூறுவதுண்டு.

    சரி ஆழம் தெரியாது காலை விடக்கூடாது என்று மேலோட்டமாக பார்த்தால் புரிகிறது. ஆனால் அந்த ஆழத்தை எப்படி அறிவது என்று நாம் எப்போதாவது நம்மைக் கேட்டிருக்கிறோமா. ஒவ்வொரு பொருளையும் அளந்து அதன் தரமும் அளவும் தன்மையும் தெரிந்திருக்க வேண்டும். ஆழத்தை அறிய பல்வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம். முன்னே அறிந்திருந்த அனுவங்களையும் பயன்படுத்தலாம். கடலின் ஆழத்தை எப்படி அதனுக்குள் செல்லாமல் சோனோகிராபி மூலம் அறிகிறார்கள். எழும்பு உடைந்துள்ளதா என்பதை எக்ஸ்-ரே மூலம். தூரத்தை ஒலி ஒளியின் மூலம் என அளக்க முடியும்.

    எதை அளக்க முடியுமோ அதைத்தான் நன்கு தெரிந்து கொள்ள முடியும். அதாவது ஒவ்வொரு நாளும் எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்று. எதை நன்கு அறிய முடியுமோ அதைத்தான் கட்டுப்படுத்த முடியும்.

    சரி. நம் திறனளவு தெரிந்த பின், அதை அடைய நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
    அதே செயலே கண்ணும் கருத்துமாய் நின்று விடாமுயற்சி செய்பவர்களுக்கு முடியாத செயல் எதுவுமில்லை.

    ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
    செல்வார்க்குச் செல்லாதது இல்.

    இதன் மூலம் ஒரு செயலை எதுவரை செய்ய இயலும், எப்படி அளப்பது, அதை காலப்போக்கில் எவ்வளவு செய்து கொண்டிருக்கிறோம், இன்னும் தரமாகவோ வேகமாகவோ செய்ய யாது செய்ய வேண்டும், எதெல்லாம் செய்யத் தேவையில்லை என்பதை அறிகிறோம்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  2. #50
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    பிறருக்கு ஈவதாயினும் தன்னுடைய பொருளும் செல்வமும் அளவறிந்து அதற்கேற்றார் போல் பிறருக்கு கொடுத்திடுக என்கிறார் வள்ளுவர். அது தான் பொருளைப் போற்றி வழங்கும் நெறியாகும்.

    ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
    போற்றி வழங்கும் நெறி.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  3. #51
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    ஒருவன் தம்முடைய செல்வத்தை எப்படி நிர்வாகிப்பது ?? தற்போது இருக்கும் செல்வத்தின் அளவு, வருமானத்தின் அளவு, செலவின் அளவு. இவைகளைப் பொறுத்தது.

    இந்த மூன்றையும் அளந்து அதற்க்கேற்றார் போல் ஒருவன் வாழவில்லையென்றால் அவன் வாழ்வு கெட்டு விடும்.

    அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
    இல்லாகித் தோன்றாக் கெடும்.


    அதே போல் வருமானம் வருகின்ற வழி சிறியதாக இருப்பினும் அது போகும் வழி அதைவிட அகலமாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பார்த்துக் கொண்டால் நமக்குத் துன்பம் வராது. இல்லாவிட்டால் எல்லாவிதமான துன்பங்களும் வரும். கடனட்டை (கிரிடிட் கார்டு) வாங்கிக் கொண்டு கடனைக் கட்டமுடியாமல் தவிப்பவர் எத்தனை பேர் உள்ளனர். அவர் யாவும் அளவறிந்து செலவிடாதவர். அவர்களை அக்கடனிலிருந்து மீட்க பலர் ஸ்தாபனங்கள் தொடங்கியுள்ளனர்.

    ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
    போகாறு அகலாக் கடை.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  4. #52
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    மீண்டும் ஒரு தடவை வாசிக்க வேண்டும்...
    மிகவும் தூண்டுகின்றது உங்கள் எழுத்து நடை...
    வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்... தொடர்ந்தும் தாருங்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #53
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    சிறப்பான எளிமையான விளக்கம்..... இன்னும் முழுமையாக படிக்கவில்லை.... ஆனால் இதை பிரிண்ட் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ள சொல்கிறது மனம்...

    வாழ்த்துக்கள்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #54
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    வலியறிதலைத் தொடர்ந்து ஒரு மாற்றத்திற்க்கு, அடுத்து ஒரு முக்கிய அதிகாரத்தைக் காண்போம்.

    இவ்வுலகம் எப்போதுமே சமநிலையற்றதாகவே உள்ளது. ஒரு கிலோ அரிசியின் விலை என்ன ? ஒரு ஆப்பிள்-ஐ.பாடின் விலை என்ன ? உலகிலுள்ள முதல் நூறு செல்வந்தர்கள் கூடியிருக்கும் ஒர் கூட்டத்தில் ஒரு கிலோ அரிசி எடுத்துச் சென்று அவர்கள் அதற்க்கு எவ்வளவு விலை கொடுப்பார்கள் என்று கேட்போம். பின்னர், அவர்களை ஒரு அறையில் அடைத்து வைத்து ஆளுக்கு நூறு ஆப்பிள்-ஐ.பாடைக் கொடுத்து விடுவோம். பின்னர் பதினைந்து நாட்கள் கழித்து ஒரு கிலோ அரிசியோடு அவர்களைக் காணச் செல்வோம். இப்போது அவர்கள் இந்த அரிசிக்கு எவ்வளவு விலை கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்று கேட்போம்.

    இதே போல் நூறு உழவர்கள் இருக்கும் கூட்டத்தில் ஒரு ஆப்பிள்-ஐ.பாடை எடுத்துச் சென்று என்ன விலை தருவார்கள் என்றும் கேட்போம்.

    இன்றைய உலகில் ஒருவர் மற்றவரைச் சார்ந்திருந்தாலும், உழவுத் தொழிலைச் சார்ந்தே மற்ற எல்லா தொழில்களும் உள்ளன. உழவுத் தொழிலை ஒரு மாதம் இவ்வுலகில் நிறுத்தி விடுவோம். அப்படிச் செய்யின் இவ்வுலகமே தன் இயக்கத்தை நிறுத்தி விடும்.

    எனவே தொழில்களுக்கெல்லாம் தலையாய தொழில் இந்த உழவுத் தொழில்.

    சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
    உழந்தும் உழவே தலை.


    உழவுத் தொழில் புரிபவர் மிகவும் மேன்மையானவர். அவர் உருவாக்கி பண்டங்களை பிறர் உண்டு வாழ்வர். பண்டைய காலத்தில் உழவர்கள்தான் மிகவும் மேன்மக்களாக கருதப்பட்டனர்.

    இது ஒரு முக்கியமான குறள். அனைவரும் மனதில் பதிக்க வேண்டிய குறள்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  7. #55
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    உழவுத் தொழில் செய்பவரே உலகத்துக்கே அச்சாணி போன்றவர் என்கிறார் நம் பெருமான்.

    உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது
    எழுவாரை எல்லாம் பொறுத்து.


    உழுதுண்டு வாழ்பவர் பிறரைச் சார்ந்திருந்தாலும், ஒரு சமயம் அச் சார்பு இல்லாவிடினும் அவரால் வாழ முடியும். உழவரைச் சார்ந்திருக்கும் ஒவ்வொருவரும் அவர் இல்லாவிட்டால் இவ்வுலகில் வாழ முடியாது. அவரெல்லாம் உழவர் உருவாக்கிய பொருளை உண்டு அவரைத் தொழுது பின்னே செல்பவர். எவ்வளவு உண்மையான கருத்து.

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
    தொழுதுண்டு பின்செல் பவர்.


    உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றாரே எம்பெருமான் பாரதியார்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  8. #56
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    பல நாடுகளை ஆளும் வேந்தர்களும் உழவுத் தொழில் செய்பவர்களை மதித்து மேன்மையாகக் கருதினர். வேந்தர்களையே தம் குடையின் கீழ் இழுக்க வல்லமை பெற்றது இந்த உழவுத்தொழில் என்றால் அது மிகையாகாது.

    பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
    அலகுடை நீழ லவர்
    .
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  9. #57
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    உழவுத் தொழிலைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமானால் முதலில் வளமான பூமி வேண்டும். மண்ணின் தரத்தை, திறத்தை அறிந்து அது உழவுக்கு ஏற்றதா என்று ஆராய வேண்டும். ஏரினால் உழும் போது சற்றே கீழிருக்கும் மண் மேலே வரும். மேலும் கடினமாக இருக்கும் மண் லேசானதாய் மாறிடும். இவ்வாறு செய்தல் பயிருக்கு மிகவும் நல்லது. (உழுதலினால் வேறு ஏதேனும் பயன் இருப்பின் தெரிந்தவர்கள் கூறவும்). உழுதலை விட அதிக வளமை சேர்ப்பது எருவிடுதலினால். இது மண்ணுக்கு உரம். பயிரின் வளர்ச்சிக்கு உரம். அடுத்து களை எடுத்தல் முக்கியம். இல்லையென்றால் பயிர் சாப்பிட வேண்டிய வளத்தையெல்லாம் தேவையில்லாத களைச் செடிகள் சாப்பிட்டு விடும். அடுத்து நீரிடுதல் மிக முக்கியம். அதுவும் தேவையான பருவத்தில் தேவையான அளவு நீர் விடுவது மிக அவசியம். அதனினும் முக்கியம் பயிர்களைக் காப்பது. நெடுநாட்களாக பாடுபட்டு வளர்த்த பயிற்றை அறுவடை செய்யும் போது கயவர்கள் கவர்ந்து சென்றால் நம் மனம் பாடாய் பாடுபடும். எனவே பாதுகாத்தல் மிக அவசியம்.

    ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
    நீரினும் நன்றதன் காப்பு.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  10. #58
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    மேலே உள்ள குறள் உழவுத் தொழிலை ஒட்டி கூறியிருப்பினும் பிற எந்தத் தொழிலுக்கும் பொருந்தும் வண்ணம் இருப்பதை நான் காண்கின்றேன். எந்தத் தொழில் செய்தாலும், செய்யப்படும் தொழிலுக்கு என்னென்ன உபகரணங்கள் தேவைப்படுகிறது, நம்மிடம் என்ன உள்ளது, அவற்றைப் பெறுவதற்க்கு என்ன செய்ய வேண்டும், அவற்றை எப்படிப் பராமரிக்க வேண்டும், அவற்றை எப்படி வளர்க்க வேண்டும், அவ்வாறு வளர்வதை பிற கயவர்களிடமிருந்து எப்படிக் காக்க வேண்டும் என்பதெல்லாம் அப்படியே பொருந்தும்.

    ஒரு நாட்டை நாசமாக்க வேண்டுமென்றால் அங்கு விளையும் விளைச்சலைத் தடுக்க வேண்டும். அப்படித் தடுக்க பல வழிமுறைகள் உள்ளது. அப்படி ஒரு வழிமுறை தான் வளம்மிக்க மண்ணில் கருவேல மரத்தை தூவி காடாக்கி பயிரிடுவது. இந்தக் கருவேல மரம் நிலத்தில் உள்ள சத்துக்களையெல்லாம் உறிஞ்சி களையாக வளர்ந்து பயனில்லா முட்களைத் தந்திடும். கருவேல மரம் பற்றிய என் குமுறலை இங்கே காண்பீர்-

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8859
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  11. #59
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    உழவு அதிகாரத்தில் மற்ற குறள்களில், சோம்பல் இல்லாமல் நிலத்தை பயிரிட்டு பயன்படுத்த வேண்டும், பயிருக்குத் தேவையான செயல்களை சரியான நேரங்களில் செய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கிறது குறள்.

    செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
    இல்லாளின் ஊடி விடும்.

    இலமென் றசையி இருப்பாரைக் காணின்
    நிலமென்னும் நல்லாள் நகும்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  12. #60
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    உழவு தொழிலை பற்றி வள்ளுரும் மிக சிறப்பாக சொல்லி சென்று விட்டார், அதை அழகாக விளக்கி இருகிறீர்கள் மீனா அருமை.
    ஆனால் இன்று வள்ளுவருக்கு வெறும் சிலை மட்டும் வைத்து விட்டு,
    எங்கோ தொலைவில் இருக்கும் சில் தொழில் நகரங்களை இனைக்க பெரிய சாலைகள் அமைக்க வழியோர கிராமங்களில் எல்லாம் விளை நிலங்களை பிடுங்குகிறார்கள்.
    சிறப்பு பொருளாதர மன்டலம் என்ற பெயரில் வருங்காலத்தில் பல்லாயிர ஏக்கர் விளை நிலங்களை கான்கிரீட் காடுகளாக்குவார்கள்.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

Page 5 of 11 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •