அகலக்கால் வைக்காதே என்று கூறுவர்.
விரலுக்கேத்த வீக்கம் என்றும் கூறுவர்.
ஆழம் தெரியாமல் காலை விடாதே என்றும் கூறுவதுண்டு.
சரி ஆழம் தெரியாது காலை விடக்கூடாது என்று மேலோட்டமாக பார்த்தால் புரிகிறது. ஆனால் அந்த ஆழத்தை எப்படி அறிவது என்று நாம் எப்போதாவது நம்மைக் கேட்டிருக்கிறோமா. ஒவ்வொரு பொருளையும் அளந்து அதன் தரமும் அளவும் தன்மையும் தெரிந்திருக்க வேண்டும். ஆழத்தை அறிய பல்வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம். முன்னே அறிந்திருந்த அனுவங்களையும் பயன்படுத்தலாம். கடலின் ஆழத்தை எப்படி அதனுக்குள் செல்லாமல் சோனோகிராபி மூலம் அறிகிறார்கள். எழும்பு உடைந்துள்ளதா என்பதை எக்ஸ்-ரே மூலம். தூரத்தை ஒலி ஒளியின் மூலம் என அளக்க முடியும்.
எதை அளக்க முடியுமோ அதைத்தான் நன்கு தெரிந்து கொள்ள முடியும். அதாவது ஒவ்வொரு நாளும் எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்று. எதை நன்கு அறிய முடியுமோ அதைத்தான் கட்டுப்படுத்த முடியும்.
சரி. நம் திறனளவு தெரிந்த பின், அதை அடைய நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
அதே செயலே கண்ணும் கருத்துமாய் நின்று விடாமுயற்சி செய்பவர்களுக்கு முடியாத செயல் எதுவுமில்லை.
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
இதன் மூலம் ஒரு செயலை எதுவரை செய்ய இயலும், எப்படி அளப்பது, அதை காலப்போக்கில் எவ்வளவு செய்து கொண்டிருக்கிறோம், இன்னும் தரமாகவோ வேகமாகவோ செய்ய யாது செய்ய வேண்டும், எதெல்லாம் செய்யத் தேவையில்லை என்பதை அறிகிறோம்.
Bookmarks