Page 4 of 11 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast
Results 37 to 48 of 131

Thread: அனுபவ குறள் - புத்தகம்!!

                  
   
   
  1. #37
    புதியவர்
    Join Date
    27 Jun 2007
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0
    குறள் பற்றி குரல் கொடுக்க பலர் இருக்க, அனுபவ ரீதியாக, புரியக்கூடிய முறையில் குரல் கொடுக்கும் மீனாகுமாருக்கு வாழ்த்துகள் பல.

  2. #38
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    மீனாக்குமார்.. கலக்குறீங்க...

    தனி உரையே வெளியிடலாம் போல...

    இது மாதிரி சம்பவங்களை இணைத்து திருக்குறள் உரைகளை சேர்த்து வையுங்கள்.. பிற்காலத்தில் உதவும்.

  3. #39
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    நன்றி பெருந்தகைகளே...

    இன்னும் சில முக்கிய குறள்களைக் காண தொடர்வோம்....
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  4. #40
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    பெரியாரைத் துணைகோடல் அதிகாரத்தில் பெரியவர்களின் துணையின் தன்மை எப்படிப்பட்டது, அது எவ்வளவு வலிமை வாய்ந்தது, அதை எப்படி பேணி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் வள்ளுவர் பெருமான்.

    அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
    பேணித் தமராக் கொளல்.


    பெரியவர்களின் நட்பைப் பெறுதல் அரிய வாய்ப்பாகும். அதை எவ்வாறாயினும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
    வன்மையுள் எல்லாம் தலை.


    பெரியவர்களை தம்மோடு பெற்றுக் கொள்ளுதல் நமக்குரிய வலிமையில் எல்லாம் தலை.

    பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
    நல்லார் தொடர்கை விடல்.


    நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுதல் பலரோடு செய்யும் பகைமையை விடக் கொடியதாகும்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  5. #41
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    குறளை இவ்வளவு எளிதாக விளக்கம் நான் எங்கும் பெற்றதில்லை, மீனாகுமார் அவர்களே, இன்றைய வாஜ்பாய் வரை எடுத்துகாட்டு தந்து விளக்கம் தந்திருகிறீர்கள்
    நண்றி, தொடருங்கள்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  6. #42
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பெரியாரைத் துணைக்கோடல்.

    இன்று 'மென்ட்டர்ஷிப்' எல்லாத்துறைகளும் எத்துணை அவசியம் என உணரப்பட்டு கடைப்பிடிக்கச் சொல்லி வருகிறார்கள்..

    மீனாகுமாரின் சமகால வாழ்வியல் ஒட்டிய அனுபவக்குறள் −
    மன்றத்தின் மிக முக்கிய தொடர்..

    பாராட்டும் நன்றியும் மீனாகுமார் அவர்களே..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #43
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அழகான தெளிவான விளக்கம் மீனாகுமார் அவர்களே. பல புரியாத விஷயங்கள் இப்பொழுது எனக்கு கொஞ்சம் புரிவதுபோல் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  8. #44
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    பெரியவர்களின் துணை எவ்வளவு சிறப்பானது, அதை எப்போது எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்த்தோம். இனி ஒரு செயலைச் செய்யும் முன்னர் யாது செய்ய வேண்டும் என்பதைக் காண்போம்.

    நம் உள்ளத்தில் பல குறிக்கோள்கள் இருக்கலாம். பல கனவுகள் இருக்கலாம். அவையெல்லாம் செயல்களாக செய்யும் போது முதலில் அதற்க்குரிய திறன், வலிமை, கால அளவு தேவையான பொருட்கள் இருக்கின்றனவா என்று அச்செயலைத் தொடங்குவதற்க்கு முன் தீர ஆராய வேண்டும். ஒரு செயலைச் செய்யும் முன் அதில் என்னவெல்லாம் செய்ய இயலும் எதுவெல்லாம் இயலாது என்பதை அறிய வேண்டும். பின்னர் அதைச் செய்வதற்க்கு தேவையான திறமை நம்மிடம் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். தேவையான ஆட்கள், பொருட்கள், எவ்வளவு காலம் தேவை போன்றவைகளையும் ஆராய வேண்டும். நவீன உலகில் Project Management துறையில் ஒரு ப்ராஜக்ட்க்குத் தேவையானவையென அளவு (Scope) காலம் (Time) செலவு (Cost) என்று Triple Constraint என கூறுவார்கள். இவ்வளவையும் ஆராய்ந்து பின்னர் எதை எதை எப்போது செய்ய வேண்டும் என்று திட்டமிடல் வேண்டும். அப்படித் திட்டமிடும் போதே அந்த செயலைச் செய்து விட முடியுமா வேறு என்னவெல்லாம் பிரச்சனைகள் வரலாம் என்று பல கேள்விகள் எழும். அதற்க்கு விடையும் கண்டு பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு நன்கு பிரித்து ஆராய்ந்த பின்னே தான் ஒரு செயலைச் செய்ய முயல வேண்டும். இவ்வாறு ஆராயாமல் தம் ஊக்கத்தின் மிகுதியினாலும் ஆசையின் பிடியினாலும் செய்யத் தொடங்கிவிட்ட செயல் பெரும்பாலும் இடையிலேயே முறிந்து விடும்.

    உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
    இடைக்கண் முறிந்தார் பலர்.


    ஒரு செயலைச் செய்ய வேண்டிய வலிமை தமக்கு இருக்கிறதா என்று ஆராயாமல் ஊக்கத்தின் மிகுதியால் செய்ய முயற்சித்து பாதியிலேயே அச் செயலை முடிக்காமல் முறிந்தவர் பலர்.

    இது ஒரு முக்கியமான குறள்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  9. #45
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    வலிமை என்பதை போர்களத்தில் வீரமாகவும் கற்றோர் நிறைந்திருக்கும் அவையில் அறிவின் வலிமையாகும் மேலும் விளையாட்டில் வீரர்கள் மற்றும் அணியின் வலிமையாகவும் பொருள் கொள்ளலாம். வணிகத்தில் தம் கொள்ளளவு (Capacity) யாக கருதலாம். இப்படி இடத்திற்க்கேற்ப வலிமை என்ற அருமையான சொல்லின் பொருள் மாறும். இவ்வாறு பல் வேறு சூழ்நிலைகளுக்கு ஒரே தத்துவமாக பொருந்துவது குறளின் தனிச்சிறப்பு.

    கீழே உள்ள குறளைப் படியுங்கள். நான் கூறுவது விளங்கும்.

    வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
    துணைவலியும் தூக்கிச் செயல்.


    வினைவலி - செய்யக்கூடிய செயலின் வலி. இது எந்த செயலாகவும் இருக்கலாம். போர், விளையாட்டு, வணிகம், பேச்சுப்போட்டி என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். செயலின் வலிமை, தன்னுடைய வலிமை, மாற்றான், எதிரி போன்றவர்களின் வலிமை, தனக்கும் எதிரிக்கும் துணை நிற்பவர்களின் (சகஊழியர்கள்) வலிமை, ஆகிய யாவற்றையும் ஆராய்ந்த பின்பே அச் செயலை செய்ய விளைய வேண்டும்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  10. #46
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பாதியில் முடிக்காமல் விட்ட சாதனைகள் எத்தனை எத்தனை இவ்வுலகில்..

    அவற்றின் கூட்டு − சாதிக்கப்பட்ட முழுமைகளைவிட பல மடங்காகும்..

    சக்தி விரயமாகமல் முன் திட்டமிடச் சொல்லும் அனுபவக்குறள் விளக்கம் அருமை!

    நன்றி மீனாகுமார் அவர்களே..


    (அமரனின் பரிந்துரைக்கு நன்றி − இம்முக்கியத் திரியை ஒட்டிவைக்கலாம்)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  11. #47
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    சிறப்பான முயற்சி மீனா குமார். மனமார்ந்த பாராட்டுக்கள்.
    ஒட்டி வைக்கலாம் என்ற அண்ணனின் பரிந்துரை மிகவும் சரியானது.

  12. #48
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    தன் வலிமையின் திறனை அறிந்து அதன் படி நடந்து கொள்வது நாம் நம் வேலை பார்க்கும் இடத்திலோ இல்லை நம்முடைய மிகப் பெரிய செயல்களில் மட்டுமோ பொருந்தும் என்பதில்லை. நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அது பொருந்தும்.

    உதாரணமாக தொலைக்காட்சிப் பெட்டியும், கணினி மானிட்டரையும் அளவுக்கு மேல் தினமும் பார்த்து வந்தால் அது நமது கண்ணின் திறனைக் காட்டிலும் அதிகமாக பயன்படுத்துவதாகும். அப்போது கண் தன் பயன்பாடு தாங்காமல் கோளாறு ஏற்படலாம். மனிதனாக வாழ்ந்தால் கண்டிப்பாக மூன்று வேளை நேரா நேரத்துக்கு சாப்பாடு சாப்பிட வேண்டும். அல்லாது போனால் உங்கள் வயிறு உங்களைக் கோபித்துக் கொண்டு அல்சர் போன்ற வியாதிகளை ஆரம்பிக்கும். ஒரே நாளில் 100 மைல் ஒட முடியாது. முயன்றால் என்ன ஆகுமென்பதை அறிவீர்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை அறிவீர்கள்.

    மென்மையானது மயிலிறகு என்றாலும் அதை ஏற்றும் வண்டியின் திறனறிந்து அதன் அளவு தான் ஏற்ற வேண்டும். அதற்க்கு மேல் ஏற்றினால் வண்டியின் அச்சே முறிந்து விடும்.

    பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
    சால மிகுத்துப் பெயின்.


    அதே போல் மரத்தின் நுனிக்கொம்பிற்க்கு ஏறிய பின்னும் மேலும் ஏற நினைத்தால் அது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

    நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
    உயிர்க்கிறுதி யாகி விடும்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

Page 4 of 11 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •