Page 2 of 11 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast
Results 13 to 24 of 131

Thread: அனுபவ குறள் - புத்தகம்!!

                  
   
   
  1. #13
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    நம் நாடுகளில் போர் என்றால் அக்காலத்தில் சில சட்டதிட்டங்களும் நியாய தர்மங்களும் இருந்தன. சில சமயங்களில் சிலர் அதை மீறியிருந்தாலும் பெரும்பாலும் அவை கடைப்பிடிக்கப்பட்டன. எதிரி என்றாலும் நேருக்கு நேர் மோதுவதையே வீரம் என்று
    கருதினர். உன் வித்தையெல்லாம் வீரத்தையெல்லாம் முகத்தின் முன்னே காட்டுவதே வீரமாக இருந்தது. மறைந்திருந்து தாக்குவது, தூங்கும் போது போர் புரிவதோ, இல்லை எதிரி தூங்கும் போது கல்லைப் போட்டு கொல்வதோ வீரமாக கருதப்படவில்லை.

    அதே போல் இரவில் போர் புரிவது, அதாவது ஆதவன் மறைந்தபின் போர் புரிவது வீரமாக கருதப்படவில்லை. வீரப்புண் என்பது முன்னால் நெஞ்சிலே வாங்கியிருக்க வேண்டும். குருதி வழிந்தாலும் முன் மார்பிலிருந்து வழிய வேண்டும். புறமுதுகு காட்டுவது கேவலமாக கருதப்பட்டது. நெஞ்சில் துணிவிருந்தால் அது நேருக்கு நேராய் வரட்டும் என்றிருந்தது.

    ஆனால் அதே கால கட்டங்களில் புவியின் பிற பகுதிகளில் போர் வேறு முறையில் புரியப்பட்டது. எந்த முறை கையாள்கிறோம் என்பதில் அவர்களிடம் ஒரு வரைமுறையில்லை. ஆனால் வெற்றி தோல்வி மட்டுமே குறியாக இருந்தது. அதனால் போர் என்றால் இரவு 2 மணிக்கு எல்லோரும் தூங்கிய பின்னரே ஆரம்பிப்பார்கள். இருளில்
    எதிரியின் கண்ணில் படாது சென்று தாக்குவது ஒரு முறையாக இருந்தது. நம் மண்ணில் அவையெல்லாம் கோழைத்தனமாக கருதப்பட்டது.

    வேறு வழியின்றி நாமும் இன்று அம்முறைக்கு மாற வேண்டியதாகி விட்டது. சீனாவை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஓர் மன்னன் ஒரே நாடாக இணைத்து விட்டான். முக்கியமாக பின்னால் வந்த மன்னர்களும் அதே ராஜ்ஜியத்தை பின்பற்றி ஆண்டார்கள். ஆனால் இந்தியாவில் அவ்வாறு இல்லாததால் பற்பல குறுநில
    மன்னர்கள் ஆண்டார்கள். அவர்களிடம் ஒற்றுமையும் இல்லை. ஆனால் அப்படி ஒரு ஒற்றுமைக்கான தேவையும் இல்லாதிருந்தது. ஏனெனில் இந்தியாவே ஒரு தனி உலகம் போல் இயங்கிக் கொண்டிருந்தது. பின்னர் பற்பல தாக்குதல்கள் நிகழ்ந்ததெல்லாம் வரலாறு.

    சரி. நம் காட்சிக்கு வருவோம். அந்த கடுமையான போர்க்களத்தில் ஆண் யானையானது எதிரிகளால் தன் உடல் முழுக்க அம்புகளால் துளைக்கப்பட்டிருந்தும், மிகுந்த மன வலிமையோடும் ஊக்கத்தோடும் தன் இறுதி மூச்சு வரை பகைவர்களை எதிர்த்து போராடும். அதன் வலிமைக்கும் ஊக்கத்திற்க்கும் ஈடு இணையே இல்லை.

    சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
    பட்டுப்பா டூன்றும் களிறு.


    இது வீரம் வலிமை ஊக்கம் ஆகிய மூன்றும் இணைந்த உச்சத்தின் மாபெரும் சான்று.

    இக்குறள் என் மனதைக் கொள்ளை கொண்டு பசுமரத்தாணி போல் பதிந்த குறள்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  2. #14
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    பொருட்செல்வம் அழியும் தன்மையுடையது. பணம் இன்று வரும்
    நாளை போகும் என்பார்கள். ஒருவனுடைய வாழ்வில் எது நிலையாக
    நிற்கிறது ? அவன் கற்ற பாடங்களும் அந்த பாடத்தினால் அவன்
    உள்ளம் பெரும் வலிமையும்.

    உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
    நில்லாது நீங்கி விடும்.


    ஒருவன் தன் குழந்தைகட்கு பொருள் சேர்க்கின்றானா இல்லையா
    என்பது முக்கியமில்லை. ஆனால் அவன் வாழ்வு முழுதும் நிலைத்து நிற்கும் வலிமையான உள்ளத்தைப் பெறுவது எப்படி என்று அவன் குழந்தைகட்கு கற்றுக்கொடுப்பதுதான் மிக முக்கியம். அது அவன் கொடுக்கப்போகும் பொருட்களின் மதிப்பை விட பன்மடங்கு அதிகமாகும்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  3. #15
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    ஊக்கம் இல்லாத உடல் பிணம். ஊக்கமில்லாதவனால் எந்த ஒரு பிரயோஜனமுமில்லை. ஒருவன் எது வைத்திருந்தாலும் அவன் அது வைத்திருப்பதாக கருதப்பட மாட்டாது. ஒருவனிடம் ஊக்கமிருந்தால் அவனிடம் எது இருந்தாலும் இல்லையென்றாலும் அவன் அனைத்தும் கொண்டதாகவே கருதப்படுவான்.

    உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
    உடையது உடையரோ மற்று.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  4. #16
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    ஊக்கமுடைமை பற்றிய அத்தனை குறள்களும் அற்புதம். எல்லா குறள்களுமே ஊக்கத்தின் முக்கியத்துவத்தையும் அதன் சிறப்பையும் அழகாக எடுத்துரைக்கின்றன.

    இந்த குறளைப்பாருங்கள் -

    பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
    வெரூஉம் புலிதாக் குறின்
    .

    உருவத்தில் பெரியதாக இருந்தாலும் ஊக்கம் கொண்ட புலி தாக்கினால் யானை பயந்து மிகக் கவனமாக கையாளும். ஊக்கமுடையவர்களிடம் வெகு ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும்.

    அதே போல் உருவம் எப்படி இருக்கிறது என்பது முக்கியமில்லை. ஊக்கம் இருந்தால் எந்த உலகையும் ஆளலாம்.

    ஊக்கமுடையவரிடம் மட்டும் ஆக்கம் நிறைந்து இருக்கும். ஒருவர் வாழ்வின் உயர்வும் அவர் கொண்ட ஊக்கத்தின் அளவைப் பொறுத்தே இருக்கும்.

    ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
    ஊக்க முடையா னுழை.

    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.



    அறிவும் பெற்று ஊக்கமும் பெற்றாகி விட்டது. நம் பயணத்தைத் தொடர்வோம்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  5. #17
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    நீங்கள் முதன்முதலில் பங்குபெற்ற கூட்டம் (Meeting/Conference) உங்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்கும். அது அலுவலக கூட்டமாக இருக்கலாம் இல்லை வேறு எந்த கூட்டமாக இருந்தாலும் நீங்கள் பெரும்பாலும் அமைதியாக பிறர் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்திருப்பீர்கள். ஒவ்வொருவர் பேசுவதையும் கவனமாகவும் வியப்பாகவும் கூட பார்த்திருக்கலாம். நாம் முதன்முதலில் சிலர்முன்போ பலர்முன்போ பேசும் போது சிறிது பயமும் அதிக கவனமும் இருக்கும். தவறுகள் கண்டிப்பாக வந்திருக்கும். பிறகு நாமே திருத்திக்கொண்டு நமக்கென்று ஒரு ஸ்டைலையும் உருவாக்கியிருக்கலாம். போரில் கூட எளிதில் பங்குபெற்றிடலாம். ஆனால் கற்றவர் உள்ள அவையில் ஒரு சொல்லை சொல்லிப்பாருங்களேன். அவ்வளவு ஏன் ? இந்த தமிழ்மன்றத்திலேயே தவறான ஒரு செய்தியைச் சொல்லிப்பாருங்களேன். அதன் விளைவு எப்படியிருக்குமென்று.

    அதனாலே ஆராயாமலும் நன்றாக யோசிக்காமலும் தான் சொல்லப்போகும் சொல்லினால் விளையப் போகும் விளைவுகளையும் சிந்திக்காமல் ஒருவர் பேச முற்படுவாராயின் அவர் படும் துன்பம் நாம் பலமுறை பார்த்திருப்போம். எனவே நாம் சொல்லப்போகும் சொல்லை கவனமாக கூற வேண்டும். நமக்கு வரும் துன்பமும் இன்பமும் நாம் சொல்லும் சொல்லினாலேயே அமைகிறது.

    ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
    காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.



    யோசிப்பதற்க்கு எவ்வளவு நேரம் கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சொல்வதை சுருக்கமாக தெளிவாக செயலூட்டம் (effective) மிக்கதாக கூற வேண்டும். நாம் சொல்லும் சொல் எவ்வாறு எத்தகைய தன்மை பெற்றிருக் வேண்டும் ?

    சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.



    நாம் ஒரு சொல்லைச் சொன்னால், அதைச் சொன்ன பின்பு யாரும் பேசக்கூடாது. அதை எதிர்த்து ஒரு குரலும் வரக்கூடாது. அவ்வண்ணம் யோசித்து சரியான சொல்லைத் தேர்வு செய்து சொல்ல வேண்டும்.

    இந்தக் குறள் என் சொல்வன்மையை மிக வெகுவாக உருமாற்றிக் கொடுத்தது. இது என் மனதைக் கொள்ளை கொண்ட மற்றுமொரு குறள். சிந்தித்து பேசுபவன் மனிதன். பேசிவிட்டு சிந்திப்பவன் முட்டாள் என்றும் கூற கேட்டிருக்கிறேன்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    மிக மிக மிக பாராட்டுக்குரிய திரி..

    நன்றியும் வாழ்த்துகளும் − மீனாகுமார்..


    மேலாண்மை, தகவல் தொடர்பு, சொல்லாற்றல் பற்றி இக்காலச் சூழல்களில்
    நம் குறள்களைப் பொருத்தி, சுயமேம்பாடு, ரசனையைச் சொல்லி
    மிக சுவாரசியமாய்க் கொண்டுபோகிறீர்கள்..

    அருமையான இப்பணிக்கு என் ஊக்கமும் பாராட்டும்... தொடருங்கள்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #19
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    அனுபவக்குறள்கள் அசத்தல்...
    வித்தியாசமாக ஒன்றிக்கின்றது மனதில்...
    பாராட்டுக்கள்...
    உங்கள் நேரம் கிடைக்கையில், தவறாமல் தாருங்கள்...

    பி.கு:− தாங்கள் விரும்பியபடியே M.A. படித்து முடிக்க வாழ்த்துகின்றேன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  8. #20
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    நன்றி, பெருந்தகைகளே....
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  9. #21
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    சில காலங்களுக்கு முன்னர் நாட்டை ஆளும் பொறுப்பும் சக்தியும் மன்னனிடமும் மற்றும் சிலரிடமும்மட்டுமே இருந்தது. சாராண குடிமகன் தன் வேலைகளை செவ்வனே செய்து விட்டு சந்தோசமாக வாழ்வு நடத்தி வந்தான். இன்றோ எந்த ஒரு வேலை செய்ய வேண்டுமாயினும் பலரின் உதவி தேவைப்படுகிறதே. நம் வீட்டிலிருக்கும் எந்த ஒரு பொருளையும் நாமே செய்ததில்லையே. யாரோ எங்கோ செய்த பொருட்கள் - நாம் காசு கொடுத்து வாங்கி வந்து அனுபவிக்கிறோம். தொலைபேசி வசதி, மின்சார வசதி, வாகனங்கள், மின்சார சாதனங்கள் என்று.... நாம் நம் வாழ்வில் பலரைச் சார்ந்துள்ளோம். நாம் உருப்படியாக எதையும் படைத்தோமா என்று தெரியாது. ஆனால் காசு மட்டும் இருந்தால் எதை வேண்டுமானாலும் வாங்கி அனுபவிக்கலாம். இல்லையா பின்னே.

    இப்படி ஒவ்வொரு விசயத்திற்க்கும் பிறரைச் சார்ந்து வாழும் தன்மை மிக மிக அதிகரித்துவிட்டது. இதெல்லாம் இல்லாமல் ஒரு வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்குப் போய்விட்டோம். இவ்வாறு சார்ந்திருப்பதினால் ஒருவரோடு ஒருவர் பேசுவது அதிகரித்துள்ளது. எந்த ஒரு செயலும் அனுபவம் பெற்ற பலரிடம் கேட்டு செய்தோமாயின் மிக சிறப்பாக அமைகிறது. அங்ஙனம் பலரிடம் பேசும் போது விவாதம் வருகிறது. அப்போது அனுபவமும் அறிவும் பெற்றவன் சும்மா உட்கார்ந்திருந்தால் அவனால் பயன் விளையாது. அவன் கண்டவற்றை பிறரிடம் அவர் புரிந்து கொள்ளும் அளவுக்கு தெளிவாகவும் இனிமையாகவும் உரைக்கின், அவர் கூறிய சொல்லை பிறர் எளிதில் ஏற்பர்.

    அவ்வாறு அழகாக எடுத்துரைப்பதே ஒரு கலை என்பார்கள். அது எல்லார்க்கும் எளிதாக அமைந்து விடாது. இயற்கையாகவே பெற்றிருப்பின் அது இறைவன் தந்த வரம். இல்லை பலரைப்பார்த்தும் கற்றுக்கொள்ளலாம். பழக பழக வந்து விடும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது பழமொழி. அவ்வாறு சரியாக பேசும் திறமையும் பெற்று நல்ல அறிவுத்திறனோடு கூடியவரிடம் பிறர் பேசி வெற்றி பெறுதல் என்பது மிக மிக கடினமே.

    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிது.


    சொல்வன்மை பெற்று, எதற்க்கும் சோர்ந்திடாது எவர்க்கும், எச்சபைக்கும் அஞ்சாதவனை வெல்வது யார்க்கும் அரியதாகும்.

    அங்ஙனம் சொல் திறம் பெற்று, எந்த ஒரு விசயத்தையும் விரைந்து அறிந்து, முடிவெடுத்து இனிமையாக்கக் கூறுபவனின் ஏவலுக்கு இந்த உலகம் பணியும். அவன் சொல்வதைக் கேட்கும்.

    விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
    சொல்லுதல் வல்லார்ப் பெறின்.



    இத்தன்மை எந்த ஒரு துறைக்கும் பொருந்துவது வியப்பான இயல்பு. இன்றைய தொழில்உலகில் இத்தன்மை பெற்றிருப்பவன் தொழிலில் கொடிகட்டிப் பறப்பான். அரசியலில் இருப்பவனை உலகம் பின்தொடரும்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  10. #22
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    யாரிடம் பேசுகிறோம். எதற்காக பேசுகிறோம். என்ன பேசப்போகிறோம் என்பதனை நம் பார்வையில் உணர்கிறோம். அதே போல் கேட்பவர் நம்மிடம் என்ன கேட்கப்போகிறார், அவருக்கு என்னவெல்லாம் தெரியும், அவர் நம்மிடம் எதை எதிர் பார்க்கிறார் என்பதையும் உணர்ந்து அதற்க்கு ஏற்றாற்போல் வார்த்தைகளையடக்கி வாக்கியங்களை உருவாக்கி பேசுவதை விட மேலானது எதுவுமில்லை.

    பேசுவதற்க்குத் தேவையானவை-

    1. யார் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றறிவது.
    2. நம்மிடமுள்ள அனுவபமும் அறிவும் அதற்க்கு பொருந்துமா என்றறிவது. பொருந்தாவிட்டால் பேசவே பேசாதீர்கள்.
    3. சரியான கருத்தை வடிவமைப்பது.
    4. சரியான சொற்களைத் தேர்ந்தெடுப்பது. - இது மிக முக்கியம். தேவைக்கு குறைவான-அதிகமான சொற்கள் சந்தேகங்களை உண்டு பண்ணும். அதிகமான சொற்கள் பிரச்சனைகளுக்கு அழைப்பு.
    5. சொற்களை வாக்கியங்களை இனிமையாக பேசுவது.

    திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
    பொருளும் அதனினூஉங்கும் இல்.

    கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  11. #23
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    மிக அருமை அனுபவக்குறள்கள்...
    படம்போல தெளிவாகத் தெரிகிறது வாசிக்கையிலேயே... உண்ர்கின்றேன் மனதில்...
    எளிய விளக்கங்கள், சுவையாக, இன்னும் குறள்களில் தொடர, வாழ்த்துகின்றேன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  12. #24
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    மிக அருமை மீனாகுமார் அவர்களே..

    மேலாண்மை வகுப்புகளில் வரும் தொடர்பாற்றல், பேரம் பேசும் ஆற்றல் இவற்றுடனும், அன்றாட வாழ்வியல் அனுபவங்களுடனும் குறளைச் சட்டென பொருத்திப்பார்க்க உதவும் உங்கள் சரளாமன எழுத்து நடை அருமை!

    உங்கள் ரசிகனாக்கிவிட்டீர்கள்.. தொடருங்கள்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Page 2 of 11 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •