மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 உலக அகிம்சை தினம் : ஐ.நா அறிவிப்பு.............
மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஐ உலக அகிம்சை தினமாக ஐ.நா., சபை அறிவித்துள்ளது. கடந்த சில வருடங்களாகவே இந்தியா காந்தியின் பிறந்த தினத்தை உலக அகிம்சை தினமாக அறிவிக்க ஐ.நா., வை வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் ஐ.நா., வின் 142 உறுப்பு நாடுகள் இக்கோரிக்கையே முன்மொழிந்தது. இதனையடுத்து உலக அகிம்சை தினமாக அக்டோபர் 2 ஐ ஐ.நா., அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
Bookmarks