Page 1 of 13 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 147

Thread: ஜாதகம் ஜோசியம் என்பது உன்மையா ?

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    20 Apr 2006
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0

    ஜாதகம் ஜோசியம் என்பது உன்மையா ?

    எனக்கு ஜாதகம் ஜோசியம் என்பதில் நம்பிக்கை கிடையாது. எனது குடும்பத்திற்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. நான் எப்போது பிரச்சனை என்று சொன்னலும் என் அம்மா உனக்கு அச்டமத்து சனி நடக்கிறது என்று சொல்கிறார்கள் என்னால் நம்ப முடிய வில்லை. நடக்கும் பல விசயங்கள் அவ்வாறே உள்ளது. எனக்கு ஜக்கி வாசுதெவ் அவர்கள் சொல்லும் கோட்பாடு மிகவும் பிடிக்கும். உடம்பை நன்றாக வைத்தால் 20% வாழ்க்கை வசப்படும். மனது நன்றாக வைத்தால் 40 % ( மொத்தம் 60%) வாழ்க்கை வசப்படும். உயிர் சக்தி கையாள தெரிந்தால் 100% வாழ்க்கை வசப்படும்.
    மன்றத்தினரின் கருத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன்.

    இப்படிக்கு..
    பாலா.ரா

  2. #2
    Banned
    Join Date
    10 Jun 2007
    Posts
    31
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    ஜாதகம் என்பது புத்தகத்துக்கு முன்னால் இருக்கும் இன்டெx போன்றது என நினைக்கிறேன்.உள்ளே பார்த்தால் விரிவாக பார்க்கும்போது தலைப்புக்கு எதிர்மறை நடப்புகளையும் உள்ளடக்கியிருக்கும்.

    இருப்பினும் ஜாதகத்தாலோ ஜோசியத்தாலோ கடவுளாலோ எதையும் மாற்றமுடியாது.கடந்தவை விடுத்து நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் நம்முடைய முயற்சியால் நிச்சயம் மாற்றமுடியும்.இதை சரித்திரக்காலத்திலிருந்து பலபேர் மாற்றி இருக்கின்றனர்.

    எனவே ஜாதகத்தின் அமைப்பு பார்த்து முயறிப்பதையோ முயற்சிக்காமையோ தவிர்த்து நம் யோசனைப்படி அதாவது அனுபவசாலிகளிடமும் கல்வியறிவு பெற்றவர்களிடமும் ஆலோசித்து அக்டில் உங்களுக்கு எவ்வளவு சாத்தியப்படுகிறதோ அதை செய்யுங்கள்.நிச்சயம் வெற்றி.

    ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் கடவுள் பெயரைச்சொல்லி ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பன்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    உங்கள் கருத்து சரியானதே, ஜாதகத்திலும் ஜோசியத்திலும் வாஸ்து இவற்றில் நம்பிக்கை வைக்க வேண்டாம். மூட நம்பிக்கைகளையும் விட்டொழியுங்கள்.
    உங்கள் விதி உங்கள் கையில் தான் இருகிறது. உங்கள் ஆரோக்கியம், உழைப்பு, திறமை, உங்களுக்கு கிடைக்கும் உதவிகள் இவற்றின் மூலம் மட்டும் நீங்கள் முன்னேற முடியும். உங்களூக்கு உண்டான பாதையை நீங்கள் தான் நிற்னயிக்க வேண்டும்.

    ஆனால் நம்புகிறவர்களை திருத்த முயற்கிக்காதீர்கள். அது வீன் வேலை. தேவை இல்லாத குழப்பத்தை தான் கொண்டு வரும். வீட்டில் நம்பினால் அவர்கள் அப்படியே செயல்படட்டும். அதை திருத்துகிறேன் என்று அவர்களுடன் சண்டை போட வேண்டம்.

    உங்கள் வாரிசுகள் சாதகம் ஜோசியம் இவற்றை நம்பாத வகையில் உருவாக்குங்கள்.

    ஜாதகத்தை தான் நம்ப வேண்டாம், ஆனால் நான் பக்தியை நம்ப வேண்டாம் என்று கூறவில்லை. அதே சமயம் தமிழ் கலாசாரத்தையும் விட வேண்டாம்.
    வியாபரம், திருமனம், வீடு புன்னியாச்சனை போண்ற சில நல்ல காரியம் செய்யுபோது தமிழில் நல்ல நாள் (முகூர்த்த நாள்) பார்த்து தொடங்குங்கள். நம்பிக்கை என்ற அடிபடையில் சொல்லவில்லை, அது நமக்கு நாமே ஏற்படுத்தி கொண்ட ஒரு சடங்குகள். அதில் தவறில்லையே.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    நம் மன்றம் இனி வரும் வழித்தோன்றல்களுக்கு ஒரு ஆரோக்கியமான பாதையை, எதிர்காலத்தை அமைத்து கொண்டிருக்கிறது என்பதற்கு வாத்தியார் உள்ளிட்ட அனைத்து நண்பர்களின் கருத்துக்களே சாட்சி..!
    அன்புடன்,
    இதயம்

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் ஜோய்ஸ்'s Avatar
    Join Date
    10 Apr 2007
    Location
    மதுரை.
    Posts
    357
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    0
    Uploads
    0
    வாத்தியார் கருத்தே என் கருத்தும்,ஆகையினால் மறுபடியும் அதையே நான் திரும்ப எழுத வேண்டாம் என நினைக்கிறேன்.
    ஜாதகம் எல்லாம் சும்மா.தன்னம்பிக்கையை வளருங்கள்.

  6. #6
    புதியவர்
    Join Date
    10 Apr 2007
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    ஜோதிடம் என்பது உண்மை. அதுவும் அறிவியல் பூர்வமான உண்மை. ஜாதகத்தில் பணம் காசியை தேட வேண்டாம். கிடைக்காது. மூன்று காலங்களையும் ஒவ்வொருவரின் ஜாதகத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இருட்டான இடங்களில் விளக்கு இருந்தால் எப்படி பயன்படுமோ அப்படியே ஜோதிடமும். பாவ புண்ணியங்களை அடிப்படையாக கொண்டதே இந்து மதம். அப்படியே ஜாதகமும். ஒரு நல்ல ஜோதிடரால் உங்களின் ஜாதகத்தை கையில் கொண்டு உங்கள் வாழ்க்கையை புட்டு புட்டு வைக்க முடியும். அதற்க்கு முதலில் தவறில்லாத பிறந்தநேரம்,பிறந்த தேதி, பிறந்த ஊர் தெரிய வேண்டும்.நல்ல நேரம் வந்தால் மட்டுமே நல்ல கருத்துக்கள் கண்ணில் படும். நன்றி.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by joys View Post
    ஜாதகம் எல்லாம் சும்மா.தன்னம்பிக்கையை வளருங்கள்.
    Quote Originally Posted by zha View Post
    ஜோதிடம் என்பது உண்மை. அதுவும் அறிவியல் பூர்வமான உண்மை.

    நம்பினா முழுசா நம்பி ஜோசியத்துக்கு பின்னாலேயே போகனும்
    நம்பிக்கை இல்லினா அது பத்தி நினைக்கவே கூடாது,

    ஆனால் அரைகுரையாக இருக்க கூடாது. ஜோசிகாரன் கிட்ட போயி ஒரு வேல இவன் சொல்லரது தப்பா இருக்குமோனு குழப்ப கூடாது.
    ஜோசியம் பாக்க மாட்டேன் வீராப்ப சொல்லிட்டு வந்து ஏதாவது பன்னிட்டு, அப்புறம் ஏதாவது நமக்க்கு ஆகிவிடுமோ பயந்து கொண்டிருக்க கூடாது
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    நம் மன்றத்தில் யார் என்ன கருத்துவேண்டுமானாலும் அடுத்தவர்களை புண்படுத்தாத வகையில் சொல்லலாம் என்பதால் இது போன்ற கருத்துக்களையெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நவீன கம்ப்யூட்டர் யுகத்திலும் ஜாதகம், ஜோசியம் ஆகியவற்றை நம்புகிறவர்கள் இருக்கிறார்கள் என்பதை விட அறிவார்ந்த நண்பர்கள் கூடும் நம் மன்றத்திலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை நம்ப கஷ்டமாகத்தான் இருக்கிறது. மூட நம்பிக்கைகளும், அறிவுக்கு பொருந்தாத விஷயங்களை வரிந்து கொண்டு செய்வதும் நமக்கு ஒன்றும் புதிதல்லவே..ஆறறிவு மனிதனின் எதிர்காலத்தை ஒன்றிரண்டறிவு கிளிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் அறிவுஜூவிகள் அல்லவா நாம்..! நடக்கட்டும்.. நடக்கட்டும்.!!

    நம்முடைய ஜாதக, ஜோசியங்கள் ஒரு வகையான கலை மட்டுமே. மனிதனின் பலவீனங்களை தெரிந்து வைத்துக்கொண்டு அவனை பல வகைகளிலும் திருப்திபடுத்தி அவனிடமிருந்து பொருள் பெற்று சம்பாதிக்க உண்டான தொழில் தான் ஜோசியம். சரியாகச்சொல்லவேண்டும் என்றால் இது ஒரு தெள்ளத்தெளிவான ஏமாற்றுக்கலை. ஆனால், பல ஏமாற்று வித்தைகளை நாம் கலைகள் என்று நினைத்துக்கொண்டிருப்பதால் இதுவும் கலையின் வடிவம் பெற்று, இன்று அவை மூலம் சொல்பவை எல்லாம் உண்மை என்பது போல் ஒரு தோற்றம் ஏற்பட்டுப்போனது காலத்தின் கோலம் தான். நாம் எதிர்காலத்தை நினைத்து அச்சத்தில் எத்தனை வழிகளிலெல்லாம் அதை சரி செய்ய முயல்கிறோம். ஜோசியத்தில் எலி, கிளி, தேவாங்கு, குடுகுடுப்பை, கீரி, பாம்பு என்று எதை விட்டு வைத்தோம்.? ஜாதகத்திற்காக கட்டம் கட்டி, கட்டை எறிந்து, சோழிகளை உருட்டி, கிரங்கங்களின் நிலைகளை கணக்கிட்டு என்று நம் கற்பனைக்கு அளவில்லாமல் போய்விட்டது.

    ஜாதக நம்பிக்கையை தகர்க்க ஒரு விஷயம் சொன்னால் போதும். பகுத்தறிவு உள்ளவர்கள் நிச்சயம் ஜாதகம், ஜோசியம் போன்றவற்றை நம்பமாட்டார்கள். நவக்கிரங்கள் எனப்படும் 9 கிரகங்களின் நிலைகளையும், அவற்றின் பயணத்தையும் வைத்து தான் ஜாதகங்களை சில அறிவு ஜூவிகள் கணித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், சமீபத்திய கண்டுபிடிப்பில் ஒன்பது கிரகங்களில் ஒன்றான ப்ளூட்டோ என்ற கோள் அல்லது கிரகத்திற்கு கிரகங்களுக்கான அடிப்படை தகுதிகள் இல்லாததால் அது கிரகங்கள் பிரிவில் சேராது. எனவே, இனி சூரிய குடும்பத்தில் மொத்தம் 8 கிரகங்கள் தான் என்று சொல்லி ஜோதிடம் என்ற ஏமாற்று தொழிலுக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால் இதுவரை நம்பிய நம்பிக்கைகள், எடுத்த முடிவுகள் எல்லாம் தவறா..? இனியுமா கிரகங்களை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்..? நம்புங்கள்.. நம்புங்கள்.. அப்போது தானே உங்களை ஏமாற்றி பிழைக்க என்றே காத்துக்கொண்டிருக்கும் வழிப்பறி கொள்ளையர்களுக்கு வாழ வழி கிடைக்கும்...!!
    அன்புடன்,
    இதயம்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by இதயம் View Post
    ஜாதக நம்பிக்கையை தகர்க்க ஒரு விஷயம் சொன்னால் போதும். பகுத்தறிவு உள்ளவர்கள் நிச்சயம் ஜாதகம், ஜோசியம் போன்றவற்றை நம்பமாட்டார்கள். நவக்கிரங்கள் எனப்படும் 9 கிரகங்களின் நிலைகளையும், அவற்றின் பயணத்தையும் வைத்து தான் ஜாதகங்களை சில அறிவு ஜூவிகள் கணித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், சமீபத்திய கண்டுபிடிப்பில் ஒன்பது கிரகங்களில் ஒன்றான ப்ளூட்டோ என்ற கோள் அல்லது கிரகத்திற்கு கிரகங்களுக்கான அடிப்படை தகுதிகள் இல்லாததால் அது கிரகங்கள் பிரிவில் சேராது. எனவே, இனி சூரிய குடும்பத்தில் மொத்தம் 8 கிரகங்கள் தான் என்று சொல்லி ஜோதிடம் என்ற ஏமாற்று தொழிலுக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால் இதுவரை நம்பிய நம்பிக்கைகள், எடுத்த முடிவுகள் எல்லாம் தவறா..? இனியுமா கிரகங்களை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்..? நம்புங்கள்.. நம்புங்கள்.. அப்போது தானே உங்களை ஏமாற்றி பிழைக்க என்றே காத்துக்கொண்டிருக்கும் வழிப்பறி கொள்ளையர்களுக்கு வாழ வழி கிடைக்கும்...!!

    இது உங்கள் அறியாமையை காட்டுகிறது நண்பரே. நவ கிரகங்களில் ப்ளூட்டோ இல்லவே இல்லை.

    மேலும் நேற்று வரை விஞ்ஞானிகள் சொன்ன 9 கிரகங்கள் என்று நம்பிவந்தீர்கள் இன்று அவர்கள் இல்லை என்றதும் இல்லை என்கிறீர்கள். இப்படி நிலையில்லாது ஒரு விஷயத்தை எப்படி ஆதாரமாக எடுத்துக் கொள்வது.

    9 கிரகங்கள் என்று விஞ்ஞான பாடத்தில் படித்த நாம் முட்டாளாகிவிட்டோம் நம் பிள்ளைகள் சரி − அப்படித்தானே.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    நான் உங்களை 10 மணிக்கு நான் சந்திக்க வருகிறேன். நீங்களும் அதை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் 10 மணிக்கு சரியாக வராவிட்டால் ஒரு லட்சம் எனக்கு தரவேண்டும் என்று சொன்னால் நீங்கள் ஏற்ப்பீர்களா?

    சரி எப்படியோ ஒரு லட்சம் தோற்காமல் இருக்க நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து 6 மணிக்கு கிளம்புகிறீர்கள். வழியில் traffic jam, பிறகு ஒரு விபத்து, பிறகு உங்கள் வண்டி தகராறு செய்கிறது, பிறகு ஒருவருடன் சண்டை, அவர் உங்களை அடிக்க உங்களை மருத்துமனையில் சேர்க்கிறார்கள். அப்போது 10 மணி கடந்துவிடுகிறது. நீங்கள் தோற்றுவிடுகிறீர்கள்.

    ஒரு காரியம் செய்ய external factors பல ஒத்து வந்தால் தான் நடக்கும். இதன் இடையில் உள்ள இடைவெளி தான் இறைவன், விதி, ஜாதகம், ஜோசியம் அனைத்தும் வருகிறது.

    ஜாதகம், ஜோசியம் இவை அனைத்தும் ஒரு வகையான விஞ்ஞான படிப்புகள். கணிதத்தில் permutation and combination என்பார்கள். உதாரணமாக

    A, B, C என்று மூன்று காரணிகள் இருந்தால் அதனுடைய impact ஒரு காரியத்தை நிகழ்த்த பல வழிகள் உண்டாக்கிவிடுகிறது.

    ஜாதகம் - ஒரு கூறிப்பிட்ட நேரத்தில் பிறந்தவர்கள் இவ்வாறு இருப்பார்கள் என்று கணிப்பது.
    கைரேகை - ஒரு கூறிப்பிட்ட அமைப்பை கொண்டவர்கள் இவ்வாறு இருப்பார்கள் என்று கணிப்பது.

    இவை அனைத்தும் science.

    அதை வைத்து இன்று விஷயம் தெரியாமல் காசு செய்பவர்கள் இருக்கிறார்கள். அது போன்ற உளறல் ஜோசியர்கள் சொல்லி தவறாகும் விஷயங்களால் அந்த விஞ்ஞானம் தவறாவதில்லை.

    எல்லாவற்றையும் மக்கள் தமக்கு சாதகமாக்கி காசு செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள், செய்வார்கள்.

    நாளை இத்தனை மணிக்கு தான் இறப்பேன் என்று தமக்கே கணிப்புகள் சொன்னவர்களை பார்த்திருக்கிறேன். அதனால் எல்லாவற்றையும் பொதுப்படுத்தவேண்டாம்.

    சொல்பவர்கள் - தவறானவர்கள். சரியாக கற்காதவர்கள்
    நம்புபவர்கள் - முட்டாள்கள்
    சரியாக சொல்பவர்கள் - காசுக்காக மட்டும் செய்ய மாட்டார்கள். சொல்லவரும் மாட்டார்கள். சொன்னால் தவறாகவும் ஆகாது. அதை விஞ்ஞானமாக கற்றவர்கள் அல்லது குரு மூலம் கற்றவர்கள்.

    இப்போது இதை மனோதத்துவ ரீதியில் அணுகினால், இவ்வாறாக பல ஆயிரம் விஷயங்கள் மனிதனின் கட்டுபாட்டிற்கு அப்பால் இருப்பதால் தான் அவன் இது போன்ற விஷயங்களில் ஆறுதலும் அமைதியும் தேடுகிறான். பணத்தை இழப்பதன் மூலம் ஞானமும் பெறுகிறான் :-)

    ஒரு கேள்வி- நீங்கள் இஸ்லாம் மார்க்கம் பற்றி எழுதிவருகிறீர்கள். நல்ல விஷயம். வாழ்த்துகள்.

    கண்ணுக் தெரியாத கடவுள் வருவதும் அவர் ஒரு தேவதூதன் மூலம் புனித நூலை தருவதும் அதை முற்றிலும் படிப்பறிவில்லாதவர் கேட்டு சொல்வதும் நம்புவது பகுத்தறிவுக்கு எவ்வாறு சரியாக படுகிறது சொல்லுங்கள். இது நம்பிக்கை. இதில் பகுத்தறிவு வர சாத்தியமில்லை. இஸ்லாம் இளமையான மதம். பல விஞ்ஞான வெற்றிகளுக்கு பிறகு ஏற்பட்ட மதம். அதனால் அதில் விஞ்ஞான கருத்துகள் இருப்பது வியப்பில்லை. ஆனால் கடவுள் தான் இதனை சொன்னார் என்பதை எவ்வாறு ஏற்பது. பகுத்தறிவு ஏற்கவில்லையே

    குறிப்பு - இதை உங்கள் மனம் புண்பட சொல்லிவில்லை.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    வாஸ்துக்காக பணம் செலவு செய்பவர்கள் − முட்டாள்கள்
    கட்டிய வீட்டை இடிப்பவர்கள் − வீணர்கள்
    வாஸ்து வைத்து பணம் செய்பவர்கள் − தண்டிக்க படவேண்டியவர்கள்.

    ஆனால் வாஸ்து என்பது விஞ்ஞானம்

    மனிதனின் வெளியேற்றங்கள் உயிரை கொல்பவை. இதை நாம் பலமுறை செய்தி தாட்களில் படித்திருக்கிறோம். தொட்டியை சுத்தம் செய்ய செல்பவர்கள் இறந்துவிடுவதுண்டு. அத்தனை விஷம்.

    அதுபோல நீங்கள் ஒரு இரவு முழுவதும் பல் விளக்காமல் இருந்தால் காலையில் உங்கள் உமிழ் நீர் விஷமாகிவிடுகிறது.

    காற்றோட்டம் சரியாக இல்லாத இடத்தில் ஒரு நாள் முழுவதும் இருந்தால் உடல் நிலை பாதிக்க்படும்.

    வெளிச்சம் இல்லாத அறையில் இருந்தால் கண் பாதிக்கப்படுகிறது. தலைவலி போன்ற பல்வேறு பிரச்சனைகள் வரும்.

    இதனால் காற்று, வெளிச்சம், மற்றும் பொதுவான அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்வதே வாஸ்து விஞ்ஞானம்.

    மலம் கழிக்கும் இடம் அடுப்பறையிலிருந்து எத்தனை தூரத்தில் இருக்க வேண்டும். வீட்டின் வாசல் எந்த பக்கம் பார்க்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

    முன்னோர்களை முட்டாளாக நினைப்பது இப்போதைய fashion.

    குறிப்பு - உங்களுக்கு புரியும் வகையில் சொல்கிறேன் இதயம் அவர்களே. எப்படி நீங்கள் பயங்கரவாதம் செய்யும் அனைத்து இஸ்லாமிய தீவிரவாதிகளும் நிஜமான இஸ்லாமியராக இருக்க முடியாது என்று சொல்கிறீர்களோ அதுபோலவே வாஸ்து சொல்பவர்கள் எல்லாம் வாஸ்து விஞ்ஞானம் கற்றவர்கள் இல்லை. எப்படி தீவிரவாதிகளால் இஸ்லாமுக்கு கெட்ட பெயரோ அதுபோலவே பொய் வாஸ்து கலைஞர்களால் வாஸ்துவுக்கு கெட்ட பெயர்.

    இணையத்தில் வாஸ்து தகவல்கள் உள்ளன. யாருக்கும் காசு கொடுத்து ஏமாற வேண்டாம் நண்பர்களே.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    இன்னும் தென்மாவட்டங்களில் இருப்பவர்களிடம் கேட்டால் பழைய வீட்டின் அமைப்பு எப்படி இருக்கும் என்று சொல்வார்கள்.

    எந்த வீட்டிலும் மின்சாரம் இருக்காது. ஆனால் முற்றம் என்று வீட்டின் நடுவே ஒரு பெரிய இடைவெளி மூலம் நாள் முழுவதும் வெளிச்சம் இருக்கும்.

    பின்கட்டு என்பார்கள். வீட்டின் பின்னால் வெகு தூரத்தில் இருக்கும். நேராக சென்று கிணற்றடியில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு மேலும் சிறிது தூரம் சென்று திறந்தவெளியில் மலம் கழிப்பார்கள்.

    வீட்டின் அடுப்பறையில் எந்த துர்நாற்றமும் அடிக்காது.

    இரவு முழுவதும் மனித எச்சங்கள் நன்றாக காய்ந்து toxic வாயுக்கள் போன பிறகு அதை மறுநாள் வண்டியில் எடுத்து செல்வார்கள்.

    ஆனால் இன்று வீட்டிற்கு நடுவில் தான் மலம் கழிக்கும் இடம். இரண்டு பேர் தொடர்ந்து சென்று வந்தால் மூன்றாவதாக செல்பவர் மூக்கை மூடிக்கொண்டு தான் போகவேண்டும்.

    அதனால் மலம் கழிக்கும் இடம், ஹால், அடுப்பறை, தூங்கும் இடம் எந்த இடத்தில் இருக்க வேண்டும், வெளிச்சம் எவ்வாறு வந்தால் நல்லது. காலையில் காற்று எந்த பகுதியிலிருந்து வரவேண்டும் மாலையில் காற்று எந்த பகுதியில் இருந்து வரவேண்டும் இவ்வாறெல்லாம் பார்த்து வீடு கட்டுவது நமக்கும் நம் பிள்ளைகளுக்கு நல்ல ஆரோக்யமான வாழ்வை கொடுக்கும்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

Page 1 of 13 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •