Page 4 of 13 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast
Results 37 to 48 of 147

Thread: ஜாதகம் ஜோசியம் என்பது உன்மையா ?

                  
   
   
  1. #37
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by இதயம் View Post
    அது மட்டுமல்ல இதைச்செய்பவர்களும், பயன்படுத்துபவர்களும் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், புத்த, சீக்கியர்கள் யாரும் கிடையாது. அப்படியென்றால் இது ஒரு குறிப்பிட்ட மதத்தோடு தொடர்புடையது போல் தெரியவில்லை..? ..!!
    மீண்டும் உங்கள் அறியாமை. வெளிநாட்டு செய்திதாட்களை பாருங்கள். கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் எல்லாவிதமான கணிப்பு முறைகள் உள்ளன. டாரெட் சிஸ்டம், விட்ச்கிரஃப்ட் இன்னும பல முறைகள்.

    விஷயம் தெரியாமல் பேசுவதை நிறுத்த முயற்சி செய்யுங்களேன்.

    நம்மை விட இன்னும் பிற்போக்கு பழக்கங்கள் மேலை நாட்டவரிடம் உள்ளது. மூடநம்பிக்கைகள் மலிந்து கிடைக்கின்றன. நேரம் கிடைக்கும் போது அமெரிக்க தொலைகாட்சிகளையும் அமெரிக்க செய்திதாட்களை இணையத்திலும் படியுங்கள்.

    ஆங்கிலேயர்கள் ஒரு கிராமத்தையே விட்ச்கிராஃப்ட் செய்ததால் எரித்திருகிறார்கள்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  2. #38
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by இதயம் View Post
    இந்த தொழில் செய்பவர்கள், இதை ஊக்குவிப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் துறவிகளாக, சாமியார்களாக இருக்கிறார்கள். ஜாதகம் கணிப்பது கூட ஆன்மீகவாதியைப்போன்ற ஒருவர் தான் செய்கிறார்.
    ஆண்மீகவாதி துறவி இவர்கள் முற்றும் துறந்தவர்கள், அவர்கள் நிச்சயம் இந்த தொழிலுக்கு வருவதில்லை.
    இந்த தொழிலுக்கும் ஆண்மீகவாதிகளுக்கும் சுத்தமாக சம்மந்தம் இல்லை.
    அது போல இந்த தொழிலுக்கும் குறிபிட்ட சாதியினருக்கும் கூட சம்மந்தம் இல்லை.
    முன்பு பிராமர்கள் தான் ஜோசியராக இருந்தனர். ஆனால் இன்று பல சாதி மக்கள் ஜோசியராக இருகின்றனர்.
    ஏன் தாழ்ந்த சாதி பிரிவினரும் கூட பிரபலமான ஜோசியராக இருகின்றனர்.


    Quote Originally Posted by இதயம் View Post
    பயன்படுத்துபவர்களும் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், புத்த,
    சீக்கியர்கள் யாரும் கிடையாது. அப்படியென்றால் இது ஒரு குறிப்பிட்ட மதத்தோடு தொடர்புடையது போல் தெரியவில்லை..?
    சந்தேகமே இல்லை இது முழுக்க முழுக்க இந்து மதம் சம்மந்தமுடையதுதான். ஆனால் ஆண்மீக தலைப்பின் கீழ் வராது.
    கல்வி ,அறிவியல் தலைப்பின் கீழும் வர கூடாது. பொது விவாதம் அலசல்கள் கீழ் வரலாம் என்பது என் கருத்து

    Quote Originally Posted by இதயம் View Post
    ஏறக்குறைய எல்லா திருமணங்களும் ஜாதகம் பார்த்து, ஏகப்பட்ட பொருத்தங்கள் பார்த்து தான் செய்யப்படுகின்றன. இருந்தும் தம்பதியருக்குள் சண்டை, சச்சரவு, விவாகரத்து ஆகியவை ஏன்.?
    கருத்து பரிமாற்றம் என்பது குடுபத்தில் வருவது சகஜம். ஊடல் இல்லாத கூடல் இன்பமாக இருக்காது.
    சாதகம் பார்காமல் செய்த திருமனம் மட்டும் சச்சரவு இல்லாம இருகிறதா?
    வீட்டுவீடு வாசல்படி. என் தங்கை எங்கள் உறவினர் ஒருவரையே காதலித்து விட்டால். இரு வீட்டிலும் எதிர்பு இல்லை.
    ஆனால் இருவீட்டாருக்கு பயம் ஜாதகத்தை தூக்கி பிரபல ஜோசியரிடம் ஆலோசனை கேட்டனர்.
    அந்த ஜோசியகாரனும் இந்த சாதகம் அவ்வளவாக பொருந்தாது என்று கூறினான்.
    ஆனால் இருவரும் காதலிகிறார்கள் என்ற விவரத்தை ஜோசியரிடம் கூறினார் என் தங்கை மாமனார்.
    அவர்களை எப்படி சொல்லி புரியவைக்க வில்லை என்றும் கூறினார்.
    அதுக்கு அந்த ஜோசியர் சொன்னதை அப்படியே சொல்கிறேன்?
    "ஐயா, பழக்கமே இல்லாத அண் பெண்னுக்கு தான் சாதக பொருத்தம் பார்க்க வேண்டும்,
    ஆனால் காதலிப்பவர்களின் சாதக பொருத்தம் பார்க்க தேவை இல்லை.
    மனபொருத்தம் ஏற்பட்டுவிட்டால், மற்ற பொருத்தங்கள் பின்னாளில் தானாக வந்து சேரும்,
    ஆகையால தாரளமாக அவர்களுக்கு தடை சொல்லாமல் திருமணம் செய்து வையுங்கள்" என்று அறிவுரை கூறினார்.
    அதன் படியே என் தங்கைக்கு திருமனம் செய்து வைத்தோம்.
    Last edited by lolluvathiyar; 20-06-2007 at 12:53 PM.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  3. #39
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by leomohan View Post
    ஜாபர் நீங்கள் பேச்சு சாதுர்யம் மற்றும் எழுத்து சாதுர்யம் படைத்தவர். அது கடவுள் உங்களுக்கு கொடுத்த வரமாக இருக்கலாம். ஆனால் அதை அரசியல் செய்ய பயன்படுத்தாதீர்கள்.
    அன்பு மோகன்....எனக்கு பேச்சு சாதுர்யம், எழுத்து சாதுர்யம் இருப்பதாக சொன்னதற்காக உங்களுக்கு நன்றிகள். அது நிச்சயம் கடவுளின் வரம் தான். பேச்சு, எழுத்தும் ஆகியவை மூளை என்ற எஜமானனின் வெளிப்பாடுகள் தான். அங்கு தான் பகுத்தறிவு பட்டறையும் வேலை செய்கிறது. ஆக கூடி, எனக்கு பகுத்தறிவு இருக்கிறது என்று மறைமுகமாக சொல்லிவிட்டீர்கள். நீங்கள் சொன்னது போல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் மூட நம்பிக்கைகள், மோசடி வித்தைகள் எனக்கு தீமைகளாக தெரிகிறது.!!

    சுற்றி வளைத்து பேசுவது எனக்கு தெரியாத கலை. அதை நீங்கள் என் பதிவுகளை படித்தாலே புரிந்து கொள்வீர்கள். என்னைப்பொருத்தவரை நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் உள்ளதை உள்ளபடி சொல்வது என் வழக்கம். அதற்கு முன் ஜாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை வரவிடமாட்டேன்.



    Quote Originally Posted by leomohan View Post
    1. நான் உங்கள் விஞ்ஞானம், உங்கள் விஞ்ஞானி என்று கூறுவது, நீங்கள் reference ஆக கொள்ளும் விஞ்ஞான கூற்றுகளை. ஜெர்மானிய விஞ்ஞானி சொல்வதை அமெரிக்க விஞ்ஞானி ஏற்றுக் கொள்ளாவிட்டால் எந்த விஞ்ஞானி சொல்வதை சரி என்பீர்கள்.

    1. எந்த விஞ்ஞானி சொல்வதையும் ஏற்றுக்கொள்வது உண்மையாகாது. தான் சொல்வதை தன் கண்டுபிடிப்பின் மூலம் உலகத்திற்கு நிரூபித்து காட்ட வேண்டும். அதை உலகுக்கு தெரிவிக்க ஊடகம் இருக்கிறது. எனவே அந்த குழப்பம் எனக்கு இல்லை.


    Quote Originally Posted by leomohan View Post
    2. மேலை நாடு பகுத்தறிவில் சிறந்தது என்றும் விஞ்ஞானா ரீதியாக மேம்பட்டது என்றும் நீங்கள் சொன்னதால் தான் Cheiro's Palmistry படிக்க சொன்னேன்.
    2. உங்கள் வாதங்களை உங்களின் சிந்தனையை அடிப்படையாக கொண்டு எடுத்துவைக்கிறீர்களா..? அல்லது எதிராளியின் கருத்தின் அடிப்படையிலா..? ரொம்பவே குழம்பி, மற்றவர்களையும் குழப்ப முயற்சிக்கிறீர்கள்.

    Quote Originally Posted by leomohan View Post
    3. மேலை நாட்டவர் எது செய்தாலும் சரி, நாம் எது செய்தாலும் மட்டம் என்று பேசுவதை தவிருங்கள்.
    3. உங்களைக்காட்டிலும் எனக்கு தேசபக்தி அதிகம். அதற்காக இல்லாததை இருப்பதாக சொல்ல என் தேசபக்தியை நான் பயன்படுத்த விரும்பவில்லை. அது என் தேசத்தை இழிவுபடுத்துவதற்கு சமம். என் தேசத்தில் பெருமைப்பட்டுக்கொள்ள பல விஷயங்கள் உண்டு. ஆனால், நாம் விவாதித்தவற்றில் என் தேசம் குறையுடன் இருப்பதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். காரணம், அது உண்மை.!


    Quote Originally Posted by leomohan View Post
    4. ஜோசியம், கைரேகை இவை அனைத்தும் கணித முறைப்படி ஒற்றுமைகளை தேடிக் குவித்து 9 முறை நடந்தால் 10வது முறையும் நடக்கலாம் என்ற probability கணிப்பை. எல்லாமே கணிக்கப்பட்டுவிட்டால் human error இருக்காது. அப்படி மனித பிழை சதவீதம் இல்லாவிட்டால் நாம் செய்வதெல்லாம் வெற்றியடையும். ராக்கெட் விட்டவுடன் சரியாக பறக்கும். கடலில் விழாது. ஆக எங்கெல்லாம் பிழை இருக்கிறது என்று வாதிடுவது வீண்.
    4. உங்களுடைய கருத்துப்படியே நீங்கள் சொன்ன அனைத்தும் 10-வது முறையும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று probability கணிப்பை சொல்வது தான் என்பதில் நான் உடன்படுகிறேன். ஆனால், அதை 99.99% உறுதித்தன்மையுள்ள விஞ்ஞானத்துடன் ஒப்பிட்டது மிகப்பெரிய முரண்பாடு. விஞ்ஞானம் கொடுத்த சுவிட்ச் போட்டால் லைட் எரிவது 99.99% வாய்ப்புள்ள ஒரு நிலையை 0.001% வாய்ப்பிற்கும் குறைவாக உள்ள ஜோசிய, ஜாதகத்தோடு ஒப்பிடுவது யாராலும் ஏற்க முடியாது. இதில் விஞ்ஞானத்தின் பகுதியான 00.01% என்பது மனித குறைபாடு.

    நீங்கள் விஞ்ஞானமற்ற விஞ்ஞானத்தில் மிகத்தெளிவாக இருக்கும் போது நானல்ல, யாரும் உங்களை குழப்பமுடியாது. கவலைப்படாதீர்கள். ஒரு விவாதத்திற்காக தான் இத்தனை சொற்போர். மற்றபடி உங்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை.



    Quote Originally Posted by leomohan View Post
    நீங்கள் இந்த வாதத்தில் வென்று விட்டால் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் மூத்த உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறேன்.
    வெற்றி, தோல்வி என்ற பேச்சுக்கு இடமில்லை. நம் திறமைகளுக்கு இடையேயான போட்டி இதுவென்றால் நம் இருவருக்குள் ஒருவர் வெற்றி பெற வாய்ப்புண்டு. அந்த விளையாட்டல்ல அது. என் தேசத்தை செல்லாக அரித்துக்கொண்டிருக்கும் தீமைகளை பற்றிய என்னுடைய குமுறல் இவை. நன்மை தீமைகள் எது என்று விரைவில் விளங்கும். அது வரை பொறுத்திருப்போம். நன்றி..!
    Last edited by இதயம்; 20-06-2007 at 01:11 PM.
    அன்புடன்,
    இதயம்

  4. #40
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    சந்தேகமே இல்லை இது முழுக்க முழுக்க இந்து மதம் சம்மந்தமுடையதுதான்.
    இப்படி மோகனை கவிழ்த்துவிட்டீர்களே வாத்தியார்..!
    அன்புடன்,
    இதயம்

  5. #41
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by leomohan View Post
    நேரம் கிடைக்கும் போது அமெரிக்க தொலைகாட்சிகளையும் அமெரிக்க செய்திதாட்களை இணையத்திலும் படியுங்கள்.
    நீங்கள் இந்தியாவில் நடப்பவற்றை அதே தொலைக்காட்சி, பத்திரிக்கை மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்.

    நீங்கள் சொல்வது உண்மையாகவே இருந்தால் கூட என்னிடமே குறை இருக்கும் போது நான் எப்படி அமெரிக்ககாரனை திருந்த சொல்வேன்.? முதலில் என் வீட்டை சுத்தம் செய்து கொள்கிறேன். பிறகு தெருவுக்கு வருகிறேன். இது தான் என் கொள்கை.

    நான் அடுத்தவர்களை குறை கூறும் முன் என்னை பார்க்கிறேன்.!!!
    அன்புடன்,
    இதயம்

  6. #42
    இளம் புயல் பண்பட்டவர் ஜோய்ஸ்'s Avatar
    Join Date
    10 Apr 2007
    Location
    மதுரை.
    Posts
    357
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    0
    Uploads
    0
    இப்படி புத்திக்கூர்மையுள்ல பலர் ஒன்று கூடி விவாதிப்பது மிகவும் அருமை.பங்கெடுத்த அணைவருக்கும் பாராட்டுக்கள்.
    சப்ஷ் சரியான போட்டிதான்.
    (நமக்கு ஜாதகமாவது வெங்காயமாவது எல்லாம் மூட நம்பிக்கை)

  7. #43
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    இதயம் அவர்களே இந்த திரியில் இதுவே என் கடைசி பதிவு.

    இதுவரையில் எந்த திரியிலும் உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொன்னவர்களை குழம்பி போயிருக்கிறீர்கள் என்று முடிவு கட்டிவிட்டீர்கள். இது ஆரோக்யமானது இல்லை.

    நான் சொல்ல வந்ததை புல்லட் லிஸ்டில் சொல்லிவிடுகிறேன். நீங்கள் ஏற்பதும் ஏற்காததும் உங்கள் இஷ்டம். மேலும் வாதம் செய்து நேரம் வீணடிக்க விரும்பவில்லை.

    1. நம் நாடு பண்பாடு கலாச்சாரம் அறிவியல் மருத்துவம் இலக்கியம் இவற்றில் மற்ற நாடுகளை விடவும் அல்லது சிறந்து நாடுகளுக்கு இணையாகவும் உள்ளது.

    2. சரியான முறையில் டாக்குமென்டேஷன் செய்யாததாலும் பல முறை படையெடுப்புகளினாலும் பொக்கிஷங்கள் அழிந்து போய்விட்டன.

    3. சாதகம், கைரேகை கட்ட அமைப்பு-வாஸ்து போன்று இன்னும் பல கணிப்பு பாடங்கள் முறையாக மக்கள் கற்று பிராக்டிஸ் செய்து வந்தனர்.

    4. இன்று அவற்றை வைத்து காசு செய்பவர்கள் மாத்திரம் வியாபாரிகளே. அவர்களிடம் ஏமாறுபவர்கள் முட்டாள்களே. அவ்வாறு ஏமாற்றுவதும் மருத்துவதுறையிலும் நடக்கிறது. அதாவது தான் கற்ற வித்தையை மக்களுக்கு பயன்படுத்த காசு வாங்கி பணம் சம்பாதிக்கும் எண்ணம் மக்களிடையே பெருமளவு பெருகிவிட்டது.

    5. மூட நம்பிக்கை என்று எடுத்துக் கொண்டால் இறைவனை நம்புவதும், அவனுக்காக நாம் செய்யும் பிராத்தனை முறைகளும் எல்லாமே மூட நம்பிக்கை தான். ஆக ஒருவன் ஜோசியன் சொன்னான் என்று சொந்த பிள்ளையை பலி கொடுத்தால் அவன் முட்டாளே.

    6. மேலை நாட்டு விஞ்ஞானம் பழக்கத்தில் உள்ளது. செல்போன் காதுக்கு தீங்கு என்று ஒரு சாராரும் தீங்கு இல்லை என்று இன்னொரு சாராரும் சொல்கிறார்கள். இதுபோல காபி உடலுக்கு கெடுதி, இல்லை நல்லது என்று சுமார் 10 முறை தீர்ப்பு மாறி மாறி வந்துவிட்டது.

    7. Astrology, Numerology, Palmistry போன்ற ஆங்கில வார்த்தைகள் மேலை நாட்டவரும் இதை கற்கிறார்கள் என்பதற்கு சான்று.

    8. பலி கொடுப்பது, வேண்டாதவர்களுக்கு சூன்யம் வைப்பது, செத்தவர்களை பிழைக்க வைப்பது, கூட்டு பிராத்தனை, எதிர்காலத்தை கணிப்பது, ஆவிகளுடன் பேசுவது இது போன்றவை உலகம் முழுக்க நடக்கின்றன. நடந்துக் கொண்டிருக்கும்.

    9. இவை அனைத்திற்கும் காரணம் மனிதனுக்கும் அவனை சுற்றி நிகழும் விஷயங்களில் அவனுடைய கட்டுபாடு முற்றிலும் இல்லாததே காரணம்.

    10. மத நம்பிக்கை பகுத்தறிவாகாது. நீங்கள் மதத்தை நம்பினாலே நீங்கள் பகுத்தறிவாதி இல்லை என்று ஆகிறது. காரணம் மதத்தில் பல மிராக்ள்ஸ் உண்டு. மனிதன் இறைவனிடம் கட்டுபட இறைவன் ஒருவன் மேலே இருந்து ஆட்டிபடைப்பது போன்று கூற்றுகள் உருவாகிறது.

    கடைசி முறையாக சொல்கிறேன், சற்று அலுத்துபோய்விட்டேன்.

    1. நீங்கள் ஜோசியம் படித்து வாருங்கள். அதை வைத்து சில கணிப்புகள் செய்து பாருங்கள். பிறகு அது உபயோகமற்றது என்ற முடிவுக்கு வாருங்கள். காசுக்காக வெட்டி வேலை செய்யும் ஜோசியர்கள் போலி மருத்துவர்களுக்கு சமம். அதை வைத்து மருத்துவம் போலி என்றால் சிரிப்பார்கள்.

    2. நீங்கள் ஜோசியம் சாதகம் கைரேகை போலி என்று நம்பும் பட்சத்தில் உங்களால் முடிந்த வரையில் மக்களுக்கு அதை பரப்புங்கள். இந்த மன்றத்தில் அனைவரும் சுயமாக சிந்திக்கும் எண்ணம் கொண்டவர்கள். இங்கு ஒருவருக்கு ஒருவர் கருத்து சொல்லி மாற்றுவது கடினம்

    3. வாத்தியார் சில கருத்துக்கள் என்னுடம் ஒன்றி போகிறார் என்பதால் அவர் சொல்லும் விஷயங்களில் எனக்கு மாற்று கருத்து இல்லாமல் இருக்கும் என்று நீங்கள் முடிவுக்கு வருவது வேடிக்கை.

    4. எல்லா கருத்திலும் ஒன்றோ அல்லது மேற்பட்ட பார்வைகள் பாயின்ட் ஆப் வ்யூ இருக்கும். அது சகஜம்.

    இனியும் நீங்கள் ஜோசியம் பாமிஸ்டிரி போன்ற புத்தகங்களை படிக்காமல் அதை பற்றி நுனிப்புல் மேய்ந்தால் பதில் அளிக்க நான் தயாராக இல்லை.

    ஒரு வாரம் எடுத்துக் கொண்டாலும் படித்துவிட்டு வாருங்கள், பிறகு அவர்கள் எதை கொண்டு கணிக்க முயல்கிறார்கள் என்ற பன்டமென்டல் கருத்தையாவது அறிவீர்கள். இப்போது அந்த அடிப்படை கல்வி கூட இல்லை தங்களிடம்.

    நன்றி.

    வணக்கம்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  8. #44
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    ஐயா மோகன் அவர்களே..! உங்களுடைய பதிவுகளில் என் கருத்துக்களை பலவீனப்படுத்தும் எதிர்க்கருத்துக்களை விட தனிமனித சாடல் தான் அதிகம் தெரிகிறது. உதாரணத்திற்கு அமெரிக்காவை பாருங்கள், அந்த புத்தகம் படியுங்கள், அடிப்படை கல்வி இல்லை இப்படி பல. எனக்கு ஏற்படும் கெட்ட நிகழ்வுகளை புரிந்து அதன் வழி போகாமல் என்னை காத்துக்கொள்ள உங்களைப்போன்ற அதிபுத்திசாலித்தனம் தேவையில்லை என்றே தோன்றுகிறது.

    சில நேரங்களில் அதிபுத்திசாலித்தனம் கூட அர்த்தமற்றுபோய் விடுகிறது. அதற்கு உதாரணமாக உங்களைக்கூட சொல்ல முடியும். எனவே இத்துடன் இந்த திரியின் உங்களுடனான பதிவை நிறுத்திக்கொள்வதே சரி என்று படுகிறது. உங்கள் மேல் வருத்தத்தில் இல்லை. என் கருத்தை உங்களிடம் சொல்வதில் பயனில்லை என்பதால். உங்கள் கருத்து சரியில்லை என்று என்னிடம் நீங்கள் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் உங்கள் அடிமனதில் அந்த எண்ணம் உங்களுக்கு எழுந்தாலும் அது என் கருத்துக்கு கிடைத்த வெற்றியே..!! நம்மில் பலர் இங்கு விவாதிக்காவிட்டாலும் நம் விவாதத்தை மிக உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அவர்கள் முடிவு செய்வார்கள் எது சரி என்று..! உங்களுக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம். நீங்கள் புத்தகத்தை படித்தவர். நான் வாழ்க்கையை படித்தவன்.

    நன்றி..!!
    அன்புடன்,
    இதயம்

  9. #45
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by இதயம் View Post
    உங்கள் கருத்து சரியில்லை என்று என்னிடம் நீங்கள் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் உங்கள் அடிமனதில் அந்த எண்ணம் உங்களுக்கு எழுந்தாலும் அது என் கருத்துக்கு கிடைத்த வெற்றியே..!!


    ஆஹா. உங்கள் வாத திறமையை மெச்சி இந்தாருங்கள் ஒரு நூறு ரூபாய். வாழ்த்துக்கள்.

    குறிப்பு - அடிப்படை கல்வி இல்லை என்று சொன்னது ஜோசியத்தில் மட்டுமே.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  10. #46
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by leomohan View Post
    ஆஹா. உங்கள் வாத திறமையை மெச்சி இந்தாருங்கள் ஒரு நூறு ரூபாய். வாழ்த்துக்கள்.

    குறிப்பு - அடிப்படை கல்வி இல்லை என்று சொன்னது ஜோசியத்தில் மட்டுமே.
    உங்கள் பரிசை நான் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன். நன்றி..!

    அன்புடன்,
    இதயம்

  11. #47
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by leomohan View Post
    1. நீங்கள் ஜோசியம் படித்து வாருங்கள். அதை வைத்து சில கணிப்புகள் செய்து பாருங்கள்.
    போலி ஜோசிகார*ர்க*ள் நிரைந்திருக்கும் இந்த* கால*த்தில் ஜோசிய*ம் சொல்லித*ருப*வ*ரும் போலியாக* இருக்கும் வாய்ப்பு இருகிற*த*ல்ல*வா?
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  12. #48
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    போலி ஜோசிகார*ர்க*ள் நிரைந்திருக்கும் இந்த* கால*த்தில் ஜோசிய*ம் சொல்லித*ருப*வ*ரும் போலியாக* இருக்கும் வாய்ப்பு இருகிற*த*ல்ல*வா?

    விருப்பம் இருந்தால் பல மூலங்களை தருகிறேன்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

Page 4 of 13 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •