Page 3 of 13 FirstFirst 1 2 3 4 5 6 7 ... LastLast
Results 25 to 36 of 147

Thread: ஜாதகம் ஜோசியம் என்பது உன்மையா ?

                  
   
   
  1. #25
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    கைரேகை, ஜாதகம் என்பவை அறிவியல் என்று சொல்கிறீர்கள். அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

    உங்களுக்கு எது வசதியோ அதை செய்யலாம்.



    கைரேகைக்கு ஆதாரமாக விளங்கும் கையில் உள்ள ரேகைகள் எப்படி உண்டாகின்றன தெரியுமா..? ஒரு கரு உண்டாகி, உருவம் பெற்று வளரும் போது சிசுவின் கைகள் மூடிய நிலையில் இருக்கும் அந்த இறுக்கத்தின் விளைவால் அந்த கோடுகள் உருவாகின்றன.
    புதிய கண்டுபிடிப்பு போல் நீங்கள் சொல்வது சிரிப்பு வரவழைக்கிறது. மேலும் நீங்கள் நான் எழுதியதை சரியாக படிக்கவில்லை. சரி வேறு ஒரு முறையில் விளக்குகிறேன்.



    இன்று Artificial Intelligence என்பதை பற்றி உங்கள் விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்.

    மனிதன் தன்னுடயை வாழ்வின் பல சூழ்நிலைகளில் எடுத்த பல்வேறு முடிவுகளை கணினிக்குள் நுழைத்து அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவு எடுக்கும் திறன் அமைக்கிறார்கள்

    இது போலவே Behavioural Analysis. மேலை நாடுகளில் குறிப்பிட்ட நாளில் பிறந்தவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் கொலை செய்பவர்களின் உடலமைப்பு எப்படி இருக்கிறது அவர்களுக்குள் உள்ள ஒற்றுமை என்ன ஒருவேளை ஒரே நேரத்தில் பிறந்த இவர்கள் இவ்வாறு இருக்கிறார்களா என்று பலவகையாக மனிதருள் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை கொண்டு கற்றதை தொகுக்கிறார்கள். நீங்கள் இப்படி நினைத்து பாருங்கள். உங்களுடைய இருதய சிகிச்சை செய்யும் போது இருதயம் வலது பக்கத்தில் இருந்தால் என்னவாகும். ஆக மனிதனின் உடல் அமைப்பு இவ்வாறு தான் இருக்கிறது என்பதை 10 மனிதர்களை பார்த்து கண்டுபிடிக்கிறார்கள். அவ்வாறு கையின் நீளம் அகலம் மற்றும் கைரேகை அமைப்பு வைத்து தொகுத்திருக்கிறார்கள். நேரம் இருந்தால் Cheiro's Palmistry படியுங்கள்.

    தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்தால் படித்து நேரம் வீணடிக்காதீர்கள்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  2. #26
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by இதயம் View Post
    நான் எழுதும் ஆன்மீகப்பகுதியில் கேட்கவேண்டிய கேள்வியை இங்கு கேட்டிருக்கிறீர்கள். இருந்தாலும் பரவாயில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல் அந்த பகுதியில் உள்ள பல திரிகள் வெறும் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டவை. ஆனால், நான் எழுதும் திரி நம்பிக்கையின் அடிப்படை மட்டுமல்ல, அந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் விஞ்ஞான ஆதாரங்களை கொண்டு எழுதிவருகிறேன். அதை மறுக்கும் நண்பர்களுக்கு நான் ஆரோக்கிய அறைகூவல் விட்டிருக்கிறேன். நான் பின்பற்றும் மார்க்கம் எல்லா வகையிலும் நம்பித்தான் ஆக வேண்டிய மார்க்கம் என்பதால் தான் பகுத்தறிவு உள்ளவன் என்று சொல்லிக்கொள்ளும் நான் அந்த மார்க்கத்தை பின்பற்றுகிறேன் என்று சொல்லும் தன்னிலை விளக்கம் அது. அதில் முரண்படும்பட்சத்தில் நீங்கள் அங்கு விவாதிக்க வரலாம். அது மட்டுமல்ல, கேள்வி கேட்பவர் அந்த கேள்வியை கேட்பதற்கு முன் எதிராளியின் கருத்துக்கு உடன்பாடில்லாத கருத்தைப்பற்றிய தெளிவான விளக்கம் அவரிடம் இருக்க வேண்டும். நான் அது பற்றி அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் சொல்ல தெரிந்திருக்க வேண்டும். கேள்வி கேட்பவர்கள் எல்லாம் புத்திசாலிகள் அல்ல, அதற்கான பதில் தெரிந்தவர்கள் மட்டும் தான். தெரிந்துகொள்வதற்காக கேட்கப்படும் கேள்விகள் இதில் சேராது. வாத்தியாரின் கேள்விகளை நான் அந்த கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறேன்.

    உங்கள் இஸ்லாம் பற்றிய கேள்விக்கான இடம் இதுவல்ல என்பதால் உங்கள் கேள்வியை அங்கு இடுங்கள். பிறகு விவாதிப்போம். என் தரப்பு விவாதங்களில் நான் மிகத்தெளிவாக இருக்கிறேன். ஆனால், நீங்கள் கேட்ட இடம் தான் தவறு.
    நான் விடுமுறையில் இருந்தேன். அதனால் கேள்விகள் இடவில்லை. அதற்குள் திரி வளர்ந்துவிட்டது. வாத்தியாரும் பல கேள்விகள் கேட்டுவிட்டார்.

    அடிப்படையில் கடவுள் வந்து ஒருவருக்கு புனிதுநூல் தருவதை பகுத்தறிவு ஏற்காது. அதை நீங்கள் ஏற்கிறீர்கள் என்றால் நீங்கள் தங்கள் மதத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள் என்று அர்த்தம். பகுத்தறிவுள்ள நம்பிக்கை என்பது நகைச்சுவை மட்டுமே. அது சாத்தியமே இல்லை.

    ஒன்று நீங்கள் மத நம்பிக்கை உள்ளவர். அல்லது பகுத்தறிவு உள்ளவர். நல்ல கருத்துக்கள் பல இருப்பதால் இஸ்லாம் பகுத்தறிவுள்ள மதம் என்று ஏற்க இயலாது.

    நீங்கள் எழுப்பியிருக்கும் பல கேள்விகளுக்கு இந்து மதத்தில் பதில்கள் உள்ளன. தெரிந்துக் கொள்ள விருப்பம் இருந்தால் பதில் தருகிறேன். ஆனால் சில இடங்களில் நீங்கள் சமூக பழக்க−வழக்கங்களை மதத்துடன் கலந்து குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள். ஆகையால மதம் அதன் கோட்பாடு சமூகம் அதன் வழக்கம் இதை நன்றாக ஆராய்ந்து வாருங்கள்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  3. #27
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by leomohan View Post
    இதனால் தான் தாங்கள் அறியாமையில் சொல்கிறீர்கள் என்று சொன்னேன். முழுவதும் தெரியாமல் கண்டதையும் கேட்டதையும் வைத்து கருத்து சொல்கிறீர்கள்.
    இவ்வுலகில் எல்லாம் அறிந்தவர்கள் யாரும் இல்லை. எனவே என் கருத்திலும் அறியாமை இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் உங்களிடம் கேள்வி கேட்கிறேன். இல்லாவிட்டால் கேள்விக்கான அவசியம் வந்திருக்காது. உங்களுடைய நவக்கிரகங்கள் பற்றிய விளக்கம் ஆதாரமற்ற, விஞ்ஞானம் கொண்டு விளக்கமுடியாத ஒரு விஷயம் என்றால் அது எனக்கு தேவை இல்லை. மனிதன் தன் வெற்று நம்பிக்கைகளை கொண்டு ஏற்படுத்திய பல மூட பழக்க வழக்கங்கள் உலகில் இருக்கின்றன. அதை தெரிந்து எனக்கோ, மற்றவர்களுக்கோ பயனொன்றும் இருக்கப்போவதில்லை. நான் தான் உலகில் மிக உயர்ந்தவன் என்று நானாக ஒரு சிறு வட்டத்திற்குள் இருந்து கொண்டு சொல்வதற்கு ஈடாகிவிடும். உலகம் மிகப்பெரியது. கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றன. ஆனால், அதற்கான கால அவகாசம் ரொம்ப குறைவு. எனவே மூடநம்பிக்கை, அறியாமை ஆகியவற்றிலிருந்து விலக வேண்டியது மிக, மிக அவசியம்.


    நான் எழுதும் திரியில் இந்து மதம் பற்றி சில கருத்துக்கள் எழுதியிருப்பதாக சொன்னீர்கள். நான் எழுதியது, சரியா தவறா என்று சொல்லவில்லையே..! நேரம் கிடைப்பது என்பது ஒரு சமாளிப்பாகத்தான் தோன்றுகிறது. நேரமில்லாத உங்களுக்கு கேள்விகள் கேட்க நேரம் கிடைக்கிறதே..!! காரணம் கேள்வி கேட்பது சுலபம் என்பதால் தானே..? இனி, கேள்வி கேட்க மட்டுமல்ல, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் போதுமான நேரத்தோடு வாருங்கள். அது வரை காத்திருக்கிறேன்.

    இஸ்லாம் பற்றிய என் திரியை ஊக்கம், உற்சாகம் கொடுத்து அரவணைப்பது, கேள்விகள் கேட்டு என்னை புத்துணர்ச்சி ஏற்படுத்துவது அனைவரும் என் மாற்றுமத நண்பர்கள் தான். அவர்களுக்கு தோன்றாத விஷயம் உங்களுக்கு தோன்றியிருக்கிறது என்றால் அவசியம் நீங்கள் அங்கு வந்து உங்கள் கேள்விகளை கேட்க வேண்டும் என்பது என் அன்பு வேண்டுகோள். வருவீர்களா..?

    நான் உங்களைப்போல் ஆராய்ச்சியெல்லாம் செய்வதில்லை. பகுத்தறிவு சொல்வதை செய்கிறேன். ஆனால், நீங்கள் ஆராய்ச்சி செய்வதால் என்னை விட உங்களுக்கு நிறைய தெரிந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் ஆராய்ச்சி முடிவுகளை உங்களுக்குள்ளேயே புதைத்து கொள்ளாமல் அனைவரும் பயன்பெறும் வழியில் வெளியிடுங்கள். இல்லாவிட்டால் உங்களுடைய ஆராய்ச்சிக்கே அர்த்தமில்லாமல் போய் விடும்.
    அன்புடன்,
    இதயம்

  4. #28
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மோகன் உங்கள் தெளிந்த அறிவு எனக்கு வியப்பளிக்கிறது. மிக அழகான பதில்கள். தான் சொல்லும் கருத்துக்கள்தான் சரியென்று சில பேர் விதண்டாவாதம் செய்வார்கள். அவர்கள் எதையும் முழுமையாக தெரிந்துகொள்ளாமல் அதே சமயம் தனக்கு எல்லாம் தெரியும் என்று தவறாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள். பகுத்தறிவு எதையும் கேள்விகேட்க்காமல் ஒத்துக்கொள்வதில்லை ஆனால் மதம் என்பது கேள்விக்கேட்காமல் ஒத்துக்கொள்ளவேண்டியது. எனவே பகுத்தறிவுள்ள மதம் என்பது இல்லை. தொடருங்கள் உங்கள் வலுவான விளக்கக்கங்களை.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #29
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    பகுத்தறிவு எதையும் கேள்விகேட்க்காமல் ஒத்துக்கொள்வதில்லை ஆனால் மதம் என்பது கேள்விக்கேட்காமல் ஒத்துக்கொள்ளவேண்டியது. எனவே பகுத்தறிவுள்ள மதம் என்பது இல்லை. தொடருங்கள் உங்கள் வலுவான விளக்கக்கங்களை.
    தெரியாத ஊருக்கு முகவரி இல்லாம போய் விட்டு குழம்பி போய், சரியான முகவரிக்கும் போக முடியாமல், புறப்பட்ட இடத்திற்கும் திரும்பி வரமுடியாமல் ஒரு நிலையில் இருந்து கொண்டு "எல்லோரும் இப்படித்தான் போய், இப்படி ஆகியிருப்பார்கள்" என்று சொல்வது போல் உள்ளது உங்கள் கருத்து. எல்லோரும் அப்படி அல்ல. அந்த ஊருக்கு போவதற்கு முன் அதனைப்பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு, தெளிவான முகவரியோடு பகுத்தறிவு கொண்டு சிந்தித்து போகிறவர்களும் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் சொல்வது சரி தான்..! பகுத்தறிவு கொண்டு யோசிக்காமல் ஒத்துக்கொள்வதை தான் மதம் என்று நீங்கள் சொல்வதையும், பகுத்தறிவுள்ள மதம் என்பது இல்லை என்பதையும் நான் முழுவதும் ஒத்துக்கொள்கிறேன். அதனால் தான் இஸ்லாம் தன்னை மதம் என்று சொல்லாமல் மார்க்கம் (வழி) என்று சொல்கிறது. வழி தேடி போகிறவன் பகுத்தறிவில்லாமல் போனால் அவன் நிலை என்னாகும் என்பது தெரியும் தானே..?

    அறிவியல் என்ற பகுதியில் ஜோசியம், ஜாதகம் போன்றவற்றை விவாதிக்க சொன்னதால் தான் நான் இங்கு விவாதிக்கிறேன். இதை நீங்கள் ஆன்மீகப்பகுதியில் இட்டிருந்தால் சும்மா இருந்திருப்பேன். ஆனால், இந்த விவாதத்தில் சம்பந்தமில்லாமல் ஆன்மீகத்தை இழுப்பது சரியில்லை. அதைப்பற்றி விவாதிக்க ஆன்மீக பகுதி என்று ஒன்று இருக்கிறது.

    அறிவியல் பகுதியில் ஜோசியம், ஜாதகம் ஆகியவற்றைப்பற்றி நண்பர் இட்டதும், மோகன் இவற்றை விஞ்ஞானத்திற்கும், இதற்கும் தொடர்பில்லை என்று சொல்வதும் முன்னுப்பின் முரண் என்பதை விட வேறென்ன சொல்ல..?
    அன்புடன்,
    இதயம்

  6. #30
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    இவ்வுலகில் எல்லாம் அறிந்தவர்கள் யாரும் இல்லை. எனவே என் கருத்திலும் அறியாமை இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் உங்களிடம் கேள்வி கேட்கிறேன். இல்லாவிட்டால் கேள்விக்கான அவசியம் வந்திருக்காது. உங்களுடைய நவக்கிரகங்கள் பற்றிய விளக்கம் ஆதாரமற்ற, விஞ்ஞானம் கொண்டு விளக்கமுடியாத ஒரு விஷயம் என்றால் அது எனக்கு தேவை இல்லை.

    நீங்கள் விஞ்ஞானம் என்று சொல்வது வெறும் மேலை நாட்டு புத்தகங்கள் என்றால் அவற்றோடு ஒப்பிடவது வீண். ஏனென்றால் வளர்ந்து நாகரீகம் நம்முடையது. இதைவிட அதிகமாக விஷயங்கள் நம்மிடம் உள்ளது. மேலும் பல விஞ்ஞான கூற்றுகள் அவர்களே ஒப்புக் கொள்ளாமல் அடித்துக் கொள்கின்றனர். பிறகு மாற்றிவிடுகின்றனர். இவ்வாறு நிலையற்ற ஒன்றை ஆதாரமாக எப்படி கொள்வது. அனைத்து விஞ்ஞானிகளும் சேர்ந்து ஒரு மாநாடு அமைக்கிறார்கள் அதில் கிரகம் என்பதற்கான விளக்கம் மாற்றப்படுகிறது. அதனால் ப்ளூட்டோ தன் கிரக அந்தஸ்தை இழக்கிறது. வேடிக்கையாக இல்லை உங்களுக்கு. நாளை அவர்கள் மீண்டும் கூட ஆணுக்கான விளக்கம் மாறிவிட்டது. இனி அவன் பெண் என்றால்?

    விஞ்ஞானம் ஞானம் ஆகாது. அது ஞானம் தேடும் பாதை தான். தவறுகள் நிறைந்த பாதை.


    மனிதன் தன் வெற்று நம்பிக்கைகளை கொண்டு ஏற்படுத்திய பல மூட பழக்க வழக்கங்கள் உலகில் இருக்கின்ற


    மூடநம்பிக்கைகள் கட்டாயம் எதிர்க்கப்படவேண்டும். ஆனால் தனக்கு ஒவ்வாத அனைத்தும் மூடநம்பிக்கை என்பதோ அல்லது பழைமை அனைத்தும் மூடநம்பிக்கை என்பதோ முட்டாள்த்தனம்..


    நான் எழுதும் திரியில் இந்து மதம் பற்றி சில கருத்துக்கள் எழுதியிருப்பதாக சொன்னீர்கள். நான் எழுதியது, சரியா தவறா என்று சொல்லவில்லையே..! நேரம் கிடைப்பது என்பது ஒரு சமாளிப்பாகத்தான் தோன்றுகிறது.

    அவ்வாறு நினைப்பது தங்கள் சுகந்திரம்.

    நேரமில்லாத உங்களுக்கு கேள்விகள் கேட்க நேரம் கிடைக்கிறதே..!!
    காரணம் கேள்வி கேட்பது சுலபம் என்பதால் தானே..? இனி, கேள்வி கேட்க மட்டுமல்ல, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் போதுமான நேரத்தோடு வாருங்கள். அது வரை காத்திருக்கிறேன்.


    நீங்கள் எழுதிய தலைப்புகள் பல பேசி ஓய்ந்தாகிவிட்டது நண்பரே. நீங்கள் புதியவர் என்பதால் அறிந்திருக்க நியாமில்லை. எழுதியதையே மீண்டும் எழுத பொறுமை மட்டுமல்ல நிறைய நேரம் வேண்டும். வேண்டுமானால் நீங்கள் ஞானி கட்டுரைகளின் மூன்று பாகங்களையும் மெய்யுலக அந்தாதியையும் படித்து வாருங்கள் பிறகு பேசலாம்.

    இஸ்லாம் பற்றிய என் திரியை ஊக்கம், உற்சாகம் கொடுத்து அரவணைப்பது, கேள்விகள் கேட்டு என்னை புத்துணர்ச்சி ஏற்படுத்துவது அனைவரும் என் மாற்றுமத நண்பர்கள் தான். அவர்களுக்கு தோன்றாத விஷயம் உங்களுக்கு தோன்றியிருக்கிறது என்றால் அவசியம் நீங்கள் அங்கு வந்து உங்கள் கேள்விகளை கேட்க வேண்டும் என்பது என் அன்பு வேண்டுகோள். வருவீர்களா..?


    அவசியம் வருவேன். கேள்விகளை வைக்கிறேன் நீங்கள் பதில் தேடித்தாருங்கள்

    1. விஞ்ஞான மதம் கடவுள் இருப்பதை எவ்வாறு நிரூபிக்கிறது.

    2. முகமது நபி நிலாவை உடைத்துக் காட்டினார் என்பதை பகுத்தறிவு எவ்வாறு ஏற்கிறது

    3. புனித நூல் அனைத்தும் இறைவன் தந்ததாகவே கொண்டோமானால் கடைசியாக ஒரு வரி தான் தான் கடைசி தூதன் என்று முகமது நபி சேர்த்துக் கொண்டிருந்தார் என்று சொன்னால் அதை எவ்வாறு மறுப்பீர்கள். அவர் சேர்த்துக் கொள்ளவில்லை என்று நீங்கள் சொன்னால் அருகிலிருந்து பார்க்காது ஒன்றை நீங்கள் நம்புகிறீர்கள் என்று பொருள். அவ்வாறு நம்பிக்கை என்று ஒன்று வந்துவிட்டால் − பகுத்தறிவு இல்லை என்று பொருள்.

    நான் உங்களைப்போல் ஆராய்ச்சியெல்லாம் செய்வதில்லை. பகுத்தறிவு சொல்வதை செய்கிறேன். ஆனால், நீங்கள் ஆராய்ச்சி செய்வதால் என்னை விட உங்களுக்கு நிறைய தெரிந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறத


    படிப்பதை எல்லாம் சாண்ட்பாக்ஸ் முறையில் சிந்தித்து பார்க்கிறேன். அவ்வளவே..
    உங்கள் ஆராய்ச்சி முடிவுகளை உங்களுக்குள்ளேயே புதைத்து கொள்ளாமல் அனைவரும் பயன்பெறும் வழியில் வெளியிடுங்கள். இல்லாவிட்டால் உங்களுடைய ஆராய்ச்சிக்கே அர்த்தமில்லாமல் போய் விடும்.

    அவ்வாறு என் உள்ளே ஒளித்து வைத்துக் கொள்ளும் எண்ணம் இல்லை. பலவற்றை இணையத்தில் இட்டுவிட்டேன். தங்களுக்கு நேரம் கிடைத்தால் என் கையொப்பத்தில் இருக்கும் திரியை தட்டி அதில் உள்ளவற்றை படியுங்கள். மீண்டும் எழுதவது என்பது சிரமமான காரியம்.

    நன்றி


    குறிப்பு − நான் அனைத்து மதங்களை ஏற்பவன். மதிப்பவன். மதங்கள் தேவை என்று நினைப்பவன். ஆனால் ஒருவர் தன் மதம் தான் சிறந்தது என்று வாதிடுவதை முட்டாள்த்தனம் என்றும் வீண் வேலை என்று நினைப்பவன். மதங்கள் எந்த சூழ்நிலையில் உருவாகின என்பதை பற்றி என் கருத்தை ஒரு ஞானி கட்டுரையில் இட்டிருக்கிறேன். நேரம் இருந்தால் படியுங்கள்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  7. #31
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by இதயம் View Post
    அறிவியல் என்ற பகுதியில் ஜோசியம், ஜாதகம் போன்றவற்றை விவாதிக்க சொன்னதால் தான் நான் இங்கு விவாதிக்கிறேன். இதை நீங்கள் ஆன்மீகப்பகுதியில் இட்டிருந்தால் சும்மா இருந்திருப்பேன். ஆனால், இந்த விவாதத்தில் சம்பந்தமில்லாமல் ஆன்மீகத்தை இழுப்பது சரியில்லை. அதைப்பற்றி விவாதிக்க ஆன்மீக பகுதி என்று ஒன்று இருக்கிறது.

    அறிவியல் பகுதியில் ஜோசியம், ஜாதகம் ஆகியவற்றைப்பற்றி நண்பர் இட்டதும், மோகன் இவற்றை விஞ்ஞானத்திற்கும், இதற்கும் தொடர்பில்லை என்று சொல்வதும் முன்னுப்பின் முரண் என்பதை விட வேறென்ன சொல்ல..?
    ஜோசியம் சாதகம் கைரேகை − இவை ஆன்மீக தலைப்புகள் அல்ல. இது மதம் சம்பந்தப்பட்டவையும் அல்ல. பல புத்தகங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளதால் இவற்றை இந்து மதம் சம்பந்தப்பட்டது என்று எடுத்துக் கொள்வது சரியல்ல. பிரபல கைரேகை புத்தகங்கள் எழுதியது மேலை நாட்டுக்காரர்களே. ஆகையால் இது விஞ்ஞான பகுதியில் வந்தது சரியே.

    இதயம் அவர்களே தங்களுடைய எழுத்து சாமர்த்தியத்தால் எதையும் முன்னுக்கு பின் முரண் என்றோ எழுதியவர் குழம்பியவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறீர்கள். இங்கு மன்றத்தில் அனைவரும் தெளிவாக இருக்கிறோம். நீங்கள் குழம்பாமல் குழப்பாமல் இருந்தால் சரியே
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  8. #32
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    தலைப்புக்கு பொருத்தமான விவாதங்கள் மட்டும் இந்த திரிக்கு நலமாக இருக்குமே நண்பர்களே!?

    உண்மையில் எனக்கு இந்த ஜோதிடத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை, ஆனால் வீட்டில் எனது தாயார் பூரணமாக நம்புவார். அது அது அவரவர் நம்பிக்கையையும் அனுபவத்தையும் பொறுத்தவிடயம் அதாவது நான் எப்போவாவது அனுபவப் பட நேர்ந்தால் நான் கூட ஜோதிடத்தை நம்பக் கூடும்.

    அத்துடன் நான் அறிந்த வரை ஜோதிடம் இந்தியருக்கோ இந்துக்களுக்கோ மட்டும் உரிய ஒரு துறை அல்ல, பண்டைய கால உரோம, கிரேக்க நாகரீகங்களை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஜோதிடத்தை நம்பி வானவியலை அடிப்படையாகக் கொண்டு ஜோதிடத்தைக் கணித்தார்கள் என்று அறியலாம். அதாவது ஜோதிடம் என்பது கணிதம் விஞ்ஞானம் போல ஒரு துறையாகவே உள்ளது அதாவது யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். யார் வேண்டுமானாலும் யாருக்கும் கணிக்கலாம், இங்கே நம்பிக்கை என்பது கணிக்கப் பட்டவை பலிக்குமா என்பதிலேயே?, அது அவரவரைப் பொறுத்தது, அவரவர் அனுபவத்தைப் பொறுத்தது.
    Last edited by ஓவியன்; 20-06-2007 at 07:33 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #33
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by leomohan View Post
    [B]அவசியம் வருவேன். கேள்விகளை வைக்கிறேன் நீங்கள் பதில் தேடித்தாருங்கள்
    உங்கள் கேள்விகளை அதற்கான திரியில் மட்டுமே கொடுங்கள் மோகன். இந்த கேள்வி இந்த திரிக்கு ஏற்றதல்ல. நீங்கள் அங்கு கொடுப்பதன் மூலம் உங்களைப்போன்றவர்களுக்கும் அது பயனுடையதாக இருக்கும். எனவே அங்கு வந்து உங்கள் கேள்விகளை கேளுங்கள். உங்கள் ஆர்வத்திற்கு நன்றி..!!
    அன்புடன்,
    இதயம்

  10. #34
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதில் பல நன்மைகள் இருகிறது.
    சாதகம்
    இது முக்கியமாக அண் பெண் பொருத்தம் பார்க்க பயன்படுத்த படுகிறது. இதில் உன்மை இருகிறதா, இல்லையா என்ற சர்சைக்கு நான் வரவில்லை.
    ஆனால் ஒரு வரன் பார்கிறோம். அந்த வரன் விட்டில் உள்ள பெருயவர்களுக்கும் பிடிக்க வேண்டும். ஒரு வேலை வரன் பிடிக்காத பட்சத்தில் எப்ப்டி காத்திருக்கும் விட்டில் பெண் அல்லது பையன் பிடிக்கவில்லை என்று கூறுவது. அது சங்கடமாக இருக்கும் அல்லவா?
    ஆகையால் இலைமரை காய் போல சாதகம் ஒத்து வரவில்லை, என்று கூறி விடுவார்கள்.
    மாமன் மகளை கொடு என்று நச்சரித்தால், முடியாது என்று முகத்தில் அடித்தார் போல சொல்வதற்க்கு பதில் இப்ப குருதிசை இல்ல அதனால கட்ட முடியாது நாசுக்காக சொல்வார்கள்.
    95 % மக்கள் இன்று சாதகத்தை இப்படி தான் பயன் படுத்துகிறார்கள்.
    சாதக பொருத்தம் பார்த்து கல்யானம் பன்னுவது என்பது என் தாத்தா அப்பா காலத்தில் இல்லை, அவை இந்த 20 வருடங்களில் வந்ததாக என் அப்பா சொன்னார்.
    என் நன்பன் ஒருவன் தான் தொடங்க போகும் தொழிலுக்கு என்னை பங்குதாரர் ஆகும் படி கோரினான். அவன் ஒரு விடாகொண்டன், விருப்பமில்லை என்றாலும் விடமாட்டான், நச்சிகிட்டே இருப்பான். இப்ப என் சாதகத்தில எனக்கு தொழில் ராசி இல்ல, அதனால தொழில் பன்னினா பனவிரயம் ஆகும் என்று கூறிவிட்டேன். அதிலிருந்து அவன் என்னை நச்சரதே இல்ல.
    குடும்பத்தில் ஏதாவது நலக்கம், சிக்கல், பிரச்சனை என்றால் மனிதர்கள் அதிலிருந்து மீள தங்கள் முயற்ச்சியை செய்வார்கள். அதே சமயம் ஜோசியரிடம் சென்று கேட்டால், முக்காவாசி என்ன சொல்கிறார்கள். இப்ப கொஞ்சம் டைம் சரியல்ல. ஆனால் விரைவில் உங்கள் அனைத்து பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று தான் கூறுகிறார்கள். மனகலக்கம் உள்ளவர்களுக்கு இந்த ஒரு சொல் தான் ஆறுதல்.
    அனைத்து பிரச்சனையும் விதியின் தலையில் சுமத்தி விட்டு ஏதோ பரிகாரம் பன்னி விட்டு, சிறிது நிதானித்து ஊக்கத்துடன் அவனை அடுத்த காரியத்தில் ஈடுபடுவான். ஆகையால் அதை நம்புகிறவனை அவன் வழியில் விட்டு விடுவது நல்லது.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  11. #35
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by leomohan View Post
    நீங்கள் விஞ்ஞானம் என்று சொல்வது வெறும் மேலை நாட்டு புத்தகங்கள் என்றால் அவற்றோடு ஒப்பிடவது வீண். ஏனென்றால் வளர்ந்து நாகரீகம் நம்முடையது. இதைவிட அதிகமாக விஷயங்கள் நம்மிடம் உள்ளது. மேலும் பல விஞ்ஞான கூற்றுகள் அவர்களே ஒப்புக் கொள்ளாமல் அடித்துக் கொள்கின்றனர். பிறகு மாற்றிவிடுகின்றனர்.

    எங்கெல்லாம் திறமைகள் இருக்கிறதோ அதை மதிக்கவேண்டியது ஒரு மனிதனின் கடமை. காரணம், அந்த திறமைகளின் பலன்களை நாம் பல்வேறு வழிகளில் அடையப்போகிறோம். இன்றைய சூழ்நிலையில் இந்தியா பல வகைகளில் முன்னேறியிருந்தாலும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிட்டு கற்பனையில் நினைக்க கூட முடியாத அளவுக்கு தான் இருக்கின்றது. காரணம், இந்தியாவின் ஆராய்ச்சிகள் "கிளி ஜோசியத்தில் ஆரம்பித்து இன்று கம்ப்யூட்டர் ஜோசியம் வரை" போன்ற வழிகளில் தான் இருக்கிறது. நான் கிண்டலுக்காக சொல்லவில்லை. என் நாட்டை நானே கிண்டல் செய்து கொள்ளமாட்டேன். மன ஆதங்கத்தில் எழுதுகிறேன். பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து உண்மை கண்டுபிடிக்கும் உங்களுக்கு இந்த உண்மை தெரியாமல் போனது ஆச்சரியம் தான்.

    விஞ்ஞானம் என்பது பகுத்தறிவின் அடுத்தடுத்த நிலைகள் தான். ஆரம்பத்தில் அவன் பகுத்தறிவால் சக்கரம் தான் செய்ய முடிந்தது, அந்த அறிவு தான் பரிமாணம் அடைந்து இன்று விமானமாக இருக்கிறது. எனவே அதன் முடிவுகளும், உண்மைகளும் காலத்திற்கேற்றார் போல் மாறுவதில் தவறில்லை. என்ன மாறினாலும் விளைவு நன்மை தானே..!! நம்மை விட அறிவில் திறமையில் உயர்ந்தவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பதில் தவறில்லை. யாரோ அனுபவிக்க போகும் வசதிக்காக தன்னை வருத்தி கண்டுபிடிப்புகளை ஏற்படுத்தும் விஞ்ஞானி சிறந்தவரா அல்லது தான் சுகமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜோசியம், ஜாதகம், கைரேகை என்ற பெயரில் பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் பேர்வழி சிறந்தவரா..?

    Quote Originally Posted by leomohan View Post
    நீங்கள் விஞ்ஞானம் என்று சொல்வது வெறும் மேலை நாட்டு புத்தகங்கள் என்றால் அவற்றோடு ஒப்பிடவது வீண்.
    உங்கள் பதிவில் மேற்சொன்ன கருத்தை வெளியிட்ட அதே நீங்கள், இன்னொரு பதிவில்

    Quote Originally Posted by leomohan View Post
    நேரம் இருந்தால் Cheiro's Palmistry படியுங்கள்.
    என்று எழுதி அதே மேலை (அயர்லாந்து) நாட்டவர் எழுதிய கைரேகை சம்பந்தமான புத்தகத்தை என்னை படிக்க சொல்லி எழுதியிருக்கிறீர்கள். அது எப்படி உங்கள் கருத்தை சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்கிறீர்கள்.? இது முரண்பாடாக தெரியவில்லையா..? Cheiro's Palmistry சொல்வது போல் கைரேகை விஞ்ஞானம் என்கிறீர்களா..? அல்லது மேலைநாட்டவர் எழுதுவதெல்லாம் குப்பை என்கிறீர்களா..? முதலில் நீங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள்..!!

    Quote Originally Posted by leomohan View Post
    ஜோசியம் சாதகம் கைரேகை − இவை ஆன்மீக தலைப்புகள் அல்ல. இது மதம் சம்பந்தப்பட்டவையும் அல்ல. பல புத்தகங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளதால் இவற்றை இந்து மதம் சம்பந்தப்பட்டது என்று எடுத்துக் கொள்வது சரியல்ல. பிரபல கைரேகை புத்தகங்கள் எழுதியது மேலை நாட்டுக்காரர்களே. ஆகையால் இது விஞ்ஞான பகுதியில் வந்தது சரியே.

    அறிவிலிகள் எல்லா நாடுகளிலும் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். அதில் மேலை நாடு மட்டும் விதிவிலக்கா என்ன..? மேலை நாட்டவர் எழுதுபவை எல்லாம் வீண் என்றுவிட்டு பிறகு மீண்டும் அவர்கள் எழுதியதெல்லாம் விஞ்ஞானம் தான் என்கிறீர்கள்..!! சரியாக குழம்பிப்போய் இருக்கிறீர்கள். இந்த திரியில் ஆன்மீகத்தை நீங்கள் தான் இஸ்லாம் சம்பந்தமான கேள்வியை சம்பந்தமே இல்லாமல் கொண்டு வந்தீர்கள். அதனால் தான் நான் அப்படி சொன்னேன். ஆனால், இந்த திரிக்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு உண்டு போல் ஒரு எண்ணம் எனக்கு உள்ளது காரணம். இந்த தொழில் செய்பவர்கள், இதை ஊக்குவிப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் துறவிகளாக, சாமியார்களாக இருக்கிறார்கள். ஜாதகம் கணிப்பது கூட ஆன்மீகவாதியைப்போன்ற ஒருவர் தான் செய்கிறார். அப்படியா..? அது மட்டுமல்ல இதைச்செய்பவர்களும், பயன்படுத்துபவர்களும் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், புத்த, சீக்கியர்கள் யாரும் கிடையாது. அப்படியென்றால் இது ஒரு குறிப்பிட்ட மதத்தோடு தொடர்புடையது போல் தெரியவில்லை..? இந்த காரணம் கூட நீங்கள் ஜாதகத்தை, ஜோசியத்தை, கைரேகையை கண்மூடித்தனமாக ஆதரிக்க காரணமாக இருக்கலாம். ஆனால், அனைவரும் உங்களைப்போல் இல்லை. மக்கள் நிறைய மாறிவிட்டார்கள். கிளி ஜோசியம், கைரேகை, ஜோதிட தொழில்காரர்கள் பிழைப்பு மிகவும் கஷ்ட ஜீவனத்தில் இருக்கிறது. முதல் இரண்டு தொழில்கள் ஏறக்குறைய அழிந்து விட்டது என்றே சொல்லலாம். ஜோதிட தொழில் அழியாமல் இருக்க காரணம் அது திருமணம், அரசியல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    ஏறக்குறைய எல்லா திருமணங்களும் ஜாதகம் பார்த்து, ஏகப்பட்ட பொருத்தங்கள் பார்த்து தான் செய்யப்படுகின்றன. இருந்தும் தம்பதியருக்குள் சண்டை, சச்சரவு, விவாகரத்து ஆகியவை ஏன்.? தம்பதிகள் இருவருக்குமிடையே உள்ள புரிதல் செய்ய வேண்டியதை இந்த வித்தைகள் எப்படி செய்ய முடியும்..? மகிழ்ச்சியாக இணைந்து வாழ தேவை மனப்பொருத்தம் தான், மணப்பொருத்தம் அல்ல..!!
    அன்புடன்,
    இதயம்

  12. #36
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    ஜாபர் நீங்கள் பேச்சு சாதுர்யம் மற்றும் எழுத்து சாதுர்யம் படைத்தவர். அது கடவுள் உங்களுக்கு கொடுத்த வரமாக இருக்கலாம். ஆனால் அதை அரசியல் செய்ய பயன்படுத்தாதீர்கள்.

    சுற்றி வளைத்து பேசுவதில் எந்த பயனும் இல்லை. நீங்கள் இந்த வாதத்தில் வென்று விட்டால் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் மூத்த உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறேன்.

    உண்மையாக விஷயம் தெரிய ஆர்வம் இருந்தால் வாருங்கள். பேசலாம்.

    1. நான் உங்கள் விஞ்ஞானம், உங்கள் விஞ்ஞானி என்று கூறுவது, நீங்கள் reference ஆக கொள்ளும் விஞ்ஞான கூற்றுகளை. ஜெர்மானிய விஞ்ஞானி சொல்வதை அமெரிக்க விஞ்ஞானி ஏற்றுக் கொள்ளாவிட்டால் எந்த விஞ்ஞானி சொல்வதை சரி என்பீர்கள்.


    2. மேலை நாடு பகுத்தறிவில் சிறந்தது என்றும் விஞ்ஞானா ரீதியாக மேம்பட்டது என்றும் நீங்கள் சொன்னதால் தான் Cheiro's Palmistry படிக்க சொன்னேன்.

    3. மேலை நாட்டவர் எது செய்தாலும் சரி, நாம் எது செய்தாலும் மட்டம் என்று பேசுவதை தவிருங்கள்.

    4. ஜோசியம், கைரேகை இவை அனைத்தும் கணித முறைப்படி ஒற்றுமைகளை தேடிக் குவித்து 9 முறை நடந்தால் 10வது முறையும் நடக்கலாம் என்ற probability கணிப்பே. எல்லாமே கணிக்கப்பட்டுவிட்டால் human error இருக்காது. அப்படி மனித பிழை சதவீதம் இல்லாவிட்டால் நாம் செய்வதெல்லாம் வெற்றியடையும். ராக்கெட் விட்டவுடன் சரியாக பறக்கும். கடலில் விழாது. ஆக எங்கெல்லாம் பிழை இருக்கிறது என்று வாதிடுவது வீண்.

    நீங்கள் என்னை குழப்ப முயல்வது வீண் வேலை. நீங்கள் அவற்றை விஞ்ஞானமாக ஏற்காவிட்டால் சந்தோஷம். ஏற்றுக் கொண்டாலும் சந்தோஷம்.

    வணக்கம்
    Last edited by leomohan; 20-06-2007 at 12:46 PM.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

Page 3 of 13 FirstFirst 1 2 3 4 5 6 7 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •