Page 2 of 13 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast
Results 13 to 24 of 147

Thread: ஜாதகம் ஜோசியம் என்பது உன்மையா ?

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    சரியாக சொன்னீர்கள் இதயம், ஆனால் திடமாக நம்பும் மக்களை தாக்குவது வீன்.

    Quote Originally Posted by இதயம் View Post
    இந்த நவீன கம்ப்யூட்டர் யுகத்திலும் ஜாதகம், ஜோசியம் ஆகியவற்றை நம்புகிறவர்கள் இருக்கிறார்கள்
    ஏதாவது ஒன்றை நம்பி அதன் மூலம் உற்சாக பெற்று முன்னேறினால் அதில் தவறில்லை.
    அதுவே, அவனை தொய்வு ஏற்படுத்தினால் தான் தவறு.


    ஆறறிவு மனிதனின் எதிர்காலத்தை ஒன்றிரண்டறிவு கிளிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் அறிவுஜூவிகள் அல்லவா நாம்.
    கோளாரே அந்த ஆறாவத் அறிவுதானே, அது சிலரை வாழ வைத்து சிலரை அழிக்கும் அறிவு அல்லவா.
    ஒருவேலை கிளிக்கு தன்னை விட அறிவு அதிகம் என்று நினைத்திருப்பானோ என்னவோ
    (ஆறு அறிவு அரைகுரையாக இருப்பதால் கிளிக்கு அந்த இரண்டு அறிவாவது ஒழுங்கா இருக்கே)


    மனிதனின் பலவீனங்களை தெரிந்து வைத்துக்கொண்டு அவனை பல வகைகளிலும் திருப்திபடுத்தி அவனிடமிருந்து பொருள் பெற்று சம்பாதிக்க உண்டான தொழில் தான் ஜோசியம்.
    திருப்தி அடைந்தால் பரவாயில்லையே. மனுசன் அப்படியும் திருப்திபட மாட்டானுங்கோ.

    சரியாகச்சொல்லவேண்டும் என்றால் இது ஒரு தெள்ளத்தெளிவான ஏமாற்றுக்கலை.
    திருட்டு, அரசியல் தொழுலுக்கு இது மோசமில்லையே. பாவம் ஏதோ சொல்லி பிளைக்கிறான், பிளைக்கட்டுமே

    ஜோசியத்தில் எலி, கிளி, தேவாங்கு, குடுகுடுப்பை, கீரி, பாம்பு என்று எதை விட்டு வைத்தோம்.?
    இதயம் நம் குழந்தைகளுக்கு அப்படியாவது இந்த விலங்குகளை பக்கத்தில் காட்டு குசிபடுத்தலாமே.
    வேற எங்க போரது இந்த ஜந்துகளை பாக்க.
    நான் கிளி ஜோசியர் வந்தால் வீட்டுக்கு அழைத்து அவர்கள் சொல்வதை நம்ப மாட்டேன். எல்லாரும் அவனுக்கு 5 ரூபா கொடுப்பார்கள்
    ஆனா நான் பத்து ரூபா தருவேன். அவன் அந்த கிளியையும் எலியையும் குழந்தைகள் கையில் தருவான். குழந்தைகள் கிளிக்கும் எலிக்கும் அரிசி தருவார்கள்.
    அவை சாப்பிடுவதை பார்க்கும் அழகே தனி. அன்னிக்கு அவர்கள் கொள்ளை சந்தோசம் அடைவார்கள்


    ப்ளூட்டோ என்ற கோள் அல்லது கிரகத்திற்கு கிரகங்களுக்கான அடிப்படை தகுதிகள் இல்லாததால் அது கிரகங்கள் பிரிவில் சேராது.
    இனியுமா கிரகங்களை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்..?

    சீன நவகிரங்களில் தான் புளோட்டொ இருகிறது. இந்திய நவகிரகங்களில் புளோட்டோ கிடையாது.
    புளோட்டோ சைன்ஸ் படி தான் கிரகம், ஜோசியபடி அவை நவ கிரகங்களில் முன்னமே இல்லை. அது தெரியுமா.
    நம் பூமியும் கூட கிரங்களின் என்னிக்கையில் வராது. அவை நாம் இருக்கும் கிரகம்

    கிரகங்கள் 7 தான் + 1 சூரியன் + 1 சந்திரன் (நிலா) சேர்ந்து நவ கிரங்கள்.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    அருமை வாத்தியாரே. நீங்கள் ஒரு தகவல் சுரங்கம். வாழ்த்துகள்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    வாத்தியாரே! ஒரு வேண்டுகோள்... நீங்கள் எல்லா பதிவுகளிலும் மேற்கோளுக்குள்ளேயே பதில் எழுதிவிடுகிறீர்கள்>.. குழப்பமாய் இருக்கிறது... எனக்கு.... மேற்கோளை எடுத்துவிட்டு எழுதலாமே!!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    ஜாதகம் சகுனம் எல்லாம் ஒரு போதை மாதிரி.
    நம்பியோர் நல்லது நடந்தால் அதை அன்று எது நல்ல விடயம் நடந்ததோ அவற்றுடன் சேர்த்து பார்ப்பர்.
    அதேபோல்,
    தீயது நடந்தால் அன்று கண்ட தீயனவற்றுடன் பிணைத்துப் பார்ப்பர்.

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    ஏதாவது ஒன்றை நம்பி அதன் மூலம் உற்சாக பெற்று முன்னேறினால் அதில் தவறில்லை.
    அதுவே, அவனை தொய்வு ஏற்படுத்தினால் தான் தவறு.

    பிரச்சினையே அது தானே வாத்தியார்..? ஜாதகத்தினாலும், ஜோசியத்தினாலும் அந்த தொழிலைச்செய்பவனைத்தவிர வேறு யாருக்கும் பயனில்லை. அவன் சொன்னதாக நடந்ததெல்லாம் காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை தான்.



    Quote Originally Posted by lolluvathiyar View Post
    ஆறு அறிவு அரைகுரையாக இருப்பதால் கிளிக்கு அந்த இரண்டு அறிவாவது ஒழுங்கா இருக்கே
    உண்மை தான். ஆறறிவு இருப்பதாக பெருமைப்பட்டுக்கொண்டு வெறும் ஐந்தறிவை மட்டும் உபயோகப்படுத்தும் படித்த, நாகரீகம் கற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நம்மைப்போன்றவர்களுடன் ஒப்பிடும் போது கிளி மேல் தான்.



    [
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    திருப்தி அடைந்தால் பரவாயில்லையே. மனுசன் அப்படியும் திருப்திபட மாட்டானுங்கோ.
    நான் திருப்தி என்று சொன்னது அந்த நேரத்திற்கான தற்காலிக திருப்தி. அவ்வப்போது திருப்தி செய்ய தான் யானை, மாடு, பாம்பு, குரங்கு என்று நிறைய இராம. நாராயணன் விலங்குகள் இருக்கின்றனவே..!



    Quote Originally Posted by lolluvathiyar View Post
    திருட்டு, அரசியல் தொழுலுக்கு இது மோசமில்லையே. பாவம் ஏதோ சொல்லி பிளைக்கிறான், பிளைக்கட்டுமே
    பிழைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், நம்மை ஏமாற்றிப்பிழைக்கக்கூடாது. ஒருவன் பசி என்று வந்தால் அவன் பசி போக்க பணம் கொடுக்க நான் தயார். ஆனால், அதே பசிக்காக அவன் என் பாக்கெட்டிலிருந்து அடித்தால் அவனை சும்மா விட முடியுமா..? கலைகள் பெரும்பாலும் ஆழ்ந்து நோக்கினால் சிறிய பெரிய ஏமாற்றுக்களை உள்ளடக்கியவை. ஆனால், அவர்கள் நம்மை திசைதிருப்பி தந்திரமாக ஏமாற்றுவதை ஒத்துக்கொள்வதால் என்னால் அவர்களை குற்றம் சாட்ட முடியாது. உதா. மேஜிக் கலை. இதில் பெரும்பாலும் தந்திரம் என்ற பெயரில் தான் செய்து நம்மை ஏமாற்றுகிறார்கள். அதை அவர்கள் நம்மில் ஒத்துக்கொள்கிறார்கள். இதில் தவறொன்றும் இல்லை.


    Quote Originally Posted by lolluvathiyar View Post
    இதயம் நம் குழந்தைகளுக்கு அப்படியாவது இந்த விலங்குகளை பக்கத்தில் காட்டு குசிபடுத்தலாமே.
    வேற எங்க போரது இந்த ஜந்துகளை பாக்க.
    நான் கிளி ஜோசியர் வந்தால் வீட்டுக்கு அழைத்து அவர்கள் சொல்வதை நம்ப மாட்டேன். எல்லாரும் அவனுக்கு 5 ரூபா கொடுப்பார்கள்
    ஆனா நான் பத்து ரூபா தருவேன். அவன் அந்த கிளியையும் எலியையும் குழந்தைகள் கையில் தருவான். குழந்தைகள் கிளிக்கும் எலிக்கும் அரிசி தருவார்கள்.
    அவை சாப்பிடுவதை பார்க்கும் அழகே தனி. அன்னிக்கு அவர்கள் கொள்ளை சந்தோசம் அடைவார்கள்
    உண்மை தான்.. விலங்குகள் அறுகிவிட்ட இந்த நிலையில் அவைகளை நம் குழந்தைகளுக்கு காட்ட இது ஒரு சந்தர்ப்பம். நான் கூட கிளி ஜோசியம் போன்றவர்கள் வரும் போது அவர்களை கூப்பிட்டு கிளியை எல்லாம் செய்யச் செய்து, குழந்தைகளுக்கு காட்டி பிறகு ஜோசியக்காரனிடம் இதை நம்பவேண்டிய அவசியமில்லாததன் காரணம் சொல்லி, குழந்தைகளுக்கும் ஒரு சிறிய வகுப்பெடுத்து அதன் பின் ஜோசியக்காரனுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைப்பேன். ஒரு நல்ல குடிமகனின், தந்தையின் கடமையாக இதை நான் நினைக்கிறேன். நாம் இளைய தலைமுறைக்கு தவறான வழிகாட்டுதல் என்பது நமக்கு நாமே தீங்கு செய்து கொள்வது போல்.


    Quote Originally Posted by lolluvathiyar View Post
    சீன நவகிரங்களில் தான் புளோட்டொ இருகிறது. இந்திய நவகிரகங்களில் புளோட்டோ கிடையாது.
    புளோட்டோ சைன்ஸ் படி தான் கிரகம், ஜோசியபடி அவை நவ கிரகங்களில் முன்னமே இல்லை. அது தெரியுமா.
    நம் பூமியும் கூட கிரங்களின் என்னிக்கையில் வராது. அவை நாம் இருக்கும் கிரகம்

    கிரகங்கள் 7 தான் + 1 சூரியன் + 1 சந்திரன் (நிலா) சேர்ந்து நவ கிரங்கள்.
    இதன் மூலம் சீனர்கள் முட்டாள்கள் நாம் அறிவாளிகள் என்று சொல்ல வருகிறீர்கள். கிரகங்களின் பட்டியலில் சூரியனை எப்படி சேர்த்தீர்கள்..? இது தான் கால கெரகம் என்பதா..??!! இதற்கான தெளிவான பதில் மோகனின் பதிவிற்கு நான் கொடுக்கப்போகும் பதிலில் கிடைக்கும்.

    உங்களின் பதிவுகளை படித்தவகையில் நீங்கள் ஒரு நடுநிலைவாதி என்பது புரிகிறது. நாம் ஒரு விஷயம் பற்றி ஆராயும் போது அதில் பல நூறு தீமைகள் இருந்தாலும் அதில் ஒரு மறைமுக நன்மை இருந்தால் கூட அதை முன்னிறுத்தி பேசுகிறீர்கள். இது போன்ற பாசிடிவ் சிந்தனை நல்ல விஷயம் தான். ஆனால், நடுநிலை என்பது வெறும் காரணங்களை மட்டும் வைத்து தீர்மானிக்க வேண்டிய விஷயமல்ல. அதன் விளைவையும் வைத்து தீர்மானிக்க வேண்டியது. உதாரணத்திற்கு ஒரு பெண் ஒருவனால் பலவந்தப்படுத்துகிறான். அப்போது அவளும் அவனை தாக்குகிறாள். இந்த பிரச்சினை உங்கள் தீர்வுக்கு வந்தால் நீங்கள் சொல்லும் தீர்ப்பு "அவளும் தாக்கினாள், அவனும் பலவந்தப்படுத்தினான். அதனால் இருவரும் தவறு செய்ததால் யாருக்கும் தண்டனை இல்லை"என்பதாக இருக்கும். உங்களைப்பொறுத்தவரை இருதரப்பையும் திருப்திபடுத்த வேண்டும் என்பது மட்டும் தான். ஆனால், பெண்ணிற்கு அதன் பின் நடக்கும் விளைவுகள் பற்றி ஏன் யோசிக்கவில்லை. இந்த வழி எல்லா வகைகளிலும் எடுபடாது. சட்டம், நீதி, காவல்துறை, அரசியல் ஆகியவற்றில் இந்த கொள்கை இருந்தால் நாடே சீரழிந்து போகும். நீங்கள் சொல்லிக்கொடுப்பதை தான் உங்கள் மகன் பின்பற்றுவான். நமக்கு அந்த பொறுப்பு இருக்கிறது. உங்கள் மகன் மேற்சொன்ன ஏதேனும் ஒரு துறையில் பதவி வகிக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்..? கொஞ்சம் யோசியுங்கள்.
    Last edited by இதயம்; 20-06-2007 at 05:03 AM.
    அன்புடன்,
    இதயம்

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by இதயம் View Post

    இதன் மூலம் சீனர்கள் முட்டாள்கள் நாம் அறிவாளிகள் என்று சொல்ல வருகிறீர்கள். கிரகங்களின் பட்டியலில் சூரியனை எப்படி சேர்த்தீர்கள்..?
    கிரகங்கள் என்பது இன்று அறிவியல் தமிழில் Planetory Object என்று மாற்றிவிட்டதுக்கு பஞ்சாங்கம் பொருப்பாகாது.
    பஞ்சாங்கம் அடிபடையில் கிரகங்கள் என்பது பூமியிலிருந்து நோக்க படும் Celestial Objects.
    இந்த விளக்கம் என் அறிவுக்கு எட்டி நானாக தந்தது, உன்மை ஜோசியம் தெரிந்த யாராவது விளக்க வேண்டும்.

    சீனர்களை நான் முட்டாள் என்று சொல்லவில்லை, அவர்கள் கிரகங்களின் அவர்கள் விளக்க கூறபட்டிருக்கும்.
    ஆனால் வெஸ்டன் ஜோசியர்கள் ஜோசிய கிரகங்கள் என்பது நாங்கள் தீர்மானிப்பத்து,
    விஞ்ஞானிகள் தீர்மானிப்பது அல்ல என்று கூறுகிறார்கள். இரண்டும் பேரின் நோக்கம் வேறு அல்லவா.

    Quote Originally Posted by இதயம் View Post

    உங்களின் பதிவுகளை படித்தவகையில் நீங்கள் ஒரு நடுநிலைவாதி என்பது புரிகிறது.
    நடுநிலைவாதி என்று கூறவதை விட ஒருவர் உரிமையில் நம்பிக்கையில் மற்றவர் ஆலோசனை கூறலாம் தவறில்லை
    ஆனால் வலுகட்டாயம் பன்ன கூடாது. தலையிட கூடாது. அதை தான் நான் வலியுருத்துகிறேன்.
    நம்பாதவர்கள் தங்கள் வழியில் சொல்லட்டும், நம்புபவர்கள் அவர்கள் வழியில் செல்லட்டும்.
    நான் ஜோசியம் வாஸ்து பார்பதில்லை, ஆனால் விசேசம் நல்லகாரியம் தொடங்கும் போது நல்ல நாளில் தான் தொடங்குவேன்.
    அது என் நம்பிக்கை. மக்களுக்கு விழிப்புனரவு தர முடியாது. கனினி காலத்தில் கனினி ஜோசியம் வந்தது.
    ஏன் ஹிந்துகளுக்கொ, இந்தியர்களின் கலாச்சாரத்திர்க்கு எந்த வித சம்மந்தமில்லாமல் நவின ஜோசியம் வந்து விட்டது.
    அது நுயுமரோலாஜி. எத்தனை பேர் பெயரை கொலை செய்து விட்டார்கள். அவர்களை கேட்டால் அதுக்கும் ஒரு காரனம் தருவார்கள்.
    யாரையும் திருத்த முடியாது என்பது என் என்னம்.




    Quote Originally Posted by இதயம் View Post
    பெண் ஒருவனால் பலவந்தப்படுத்துகிறான். அப்போது அவளும் அவனை தாக்குகிறாள். இந்த பிரச்சினை உங்கள் தீர்வுக்கு வந்தால் நீங்கள் சொல்லும் தீர்ப்பு "அவளும் தாக்கினாள், அவனும் பலவந்தப்படுத்தினான். அதனால் இருவரும் தவறு செய்ததால் யாருக்கும் தண்டனை இல்லை"என்பதாக இருக்கும்.
    நீங்கள் சம்மந்தமில்லாத விசயத்தில் ஒப்பிடுகிறீர்கள். பலவந்தம் உரிமை மீரல் சமாசாரம்.
    ஆனால் ஜோசியம் உரிமை மீரல் விசயம் அல்ல.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  7. #19
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    உண்மைத்தான் சரியாக கணிக்ககூடிய ஜோதிடரிடம்தான் செல்லவேண்டும். அவறால்தான் சரியாக சொல்லமுடியும் மற்றவர்கள் தவறாக கணித்து ஒரு யூகத்தில் சொல்லி உங்களையும் குழப்பிவிடுவாற்கள் .


    ஒர் அளவுக்குத்தான் ஜோதிடம் பார்க்கவேண்டும்
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by leomohan View Post
    இது உங்கள் அறியாமையை காட்டுகிறது நண்பரே. நவ கிரகங்களில் ப்ளூட்டோ இல்லவே இல்லை.
    இது என் அறியாமை அல்ல நண்பரே, உங்களுடையது..! நவக்கிரகங்கள் என்னென்ன என்று நீங்கள் ஒரு பட்டியல் வைத்திருக்கிறீர்கள். அதன் இடப்பெயர்ச்சி மூலம் ஒருவனின் எதிர்காலம், தலைவிதி நிர்ணயிக்கப்படுவதாக மோடி மஸ்தான் பாணியில் சொல்கிறீர்கள். அதை நான் எந்த காலத்திலும் நம்பியதில்லை. காரணம், ஜாதக, ஜோசியங்களால் சீரழிவு நிகழ்ந்தது தான் அதிகம். நான் விஞ்ஞானத்தை நம்புகிறேன். விஞ்ஞானிகள் சொல்வதை நம்புகிறேன். காரணம், அவர்கள் தான் எனக்கு உடை, உணவு, மின்சாரம், நல்ல நீர், வசதிகள் எல்லாம் செய்து கொடுத்தவர்கள். அவர்கள் சொல்வதெல்லாம் எப்போதும் உண்மை கிடையாது. இறைவனே சொல்லிவிட்டான், மனிதன் தவறு செய்பவன் என்று. என்னைப்பொருத்தவரை கடவுள் மட்டுமே முழுமையானவன், சிறந்தவன். மனிதர்கள் முதலில் விமானம், மின்சார போன்ற பல கண்டுபிடிப்புகளை செய்யும் முன்பு அதைப்பற்றி சொன்ன போது இகழ்ந்தார்கள். ஆனால், கண்டுபிடித்து கொடுத்தபிறகு சொகுசாக அவற்றை அனுபவித்தார்கள். உண்மைகளை ஒத்துக்கொள்வதில் மனிதர்கள் இரண்டு வகை.

    1. பகுத்தறிவு கொண்டு சிந்தித்து தன்னலம், தற்பெருமை இல்லாமல் ஒத்துக்கொள்வது.
    2. பகுத்தறிவு கொண்டு சிந்திக்க இயலாத அல்லது அறிவு சொன்னாலும் ஏதோ சில அர்த்தமற்ற காரணங்களுக்காக அதை ஏற்றுக்கொள்ள மறுப்பது.

    உங்கள் கருத்துக்களைக்கொண்டு நீங்கள் கூறிய கருத்துக்கள் எந்த பிரிவில் சேரும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இப்போதெல்லாம் குழம்புபவர்களும், குழப்புபவர்களும் அதிகமாகிவிட்டதால் எந்த ஒரு கருத்தையும் நிரூபிக்க ஆதாரம் தேவைப்படுகிறது. விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் ப்ளூட்டோவை ஒரு கோள் என்றார்கள், இப்போது இல்லை என்கிறார்கள். இரண்டையும் நான் நம்புகிறேன். காரணம், ஒரு விஷயம் பற்றிய கண்டுபிடிப்பு இருவகைப்படும்.

    1. இல்லாததை கண்டுபிடித்தல் (Invention)
    2. இருப்பதை கண்டுபிடித்தல் (Discovery)

    மின்சாரம் என்பது முன்பு இல்லவே இல்லை. சில மூலங்களை பயன்படுத்தி அதை விஞ்ஞானத்தின் சில நிகழ்வுகளுக்கு உள்ளடக்கினால் மின்சாரம் உண்டாகும், அது ஒளிகொடுக்க, இயக்க என்று பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தலாம் என்பதை கண்டுபிடித்தார்கள். அமெரிக்கா பல ஆயிரம் வருஷங்களாக அதே இடத்தில் தான் இருந்தது. ஆனால், அது கொலம்பஸுக்கு சில வருஷங்களுக்கு முன்பு தான் தெரிந்து கண்டுபிடிக்க முடிந்தது. இந்த கோள் விஷயம் இரண்டாவது நிலையில் வரும். இன்னும் சில ஆண்டுகள் கழித்து அந்த 8 கோள்களும் கோள்கள் அல்ல என்று கூட சொல்லலாம். அதையும் நாம் நம்ப வேண்டும். மனிதனின் அறிவு மிக, மிக சிறியது. அது கொஞ்சம் கூடும் போது அவன் சொன்னதையே இல்லை என்று சொல்லும் நிலை ஏற்படும். அவன் முழு அறிவுடன் இருந்தால் கடவுளாகிவிடுவானே.!!

    தற்போதைய கணக்குப்படி மொத்த கோள்கள் 8. அவை

    1.மெர்க்குரி
    2. வீனஸ்
    3. பூமி
    4. மார்ஸ்
    5. ஜூபிடர்
    6. சனி
    7. யுரேனஸ்
    8. நெப்டியூன்

    ஆகியவை தான். அவற்றில் முன்பு இருந்த ப்ளுட்டோ என்ற ஒன்பதாவது கிரகம் நீக்கப்பட்டுவிட்டது. வாத்தியார் சொன்னது போல் சூரியன் இதில் சேராது. காரணம் இந்த எல்லா கோள்களும் சூரியனை மையமாக கொண்டு தான் சுற்றிவருகின்றன. அதனால் தான் இந்த அமைப்பை சூரியக்குடும்பம் என்கிறோம். சூரியன் இவற்றுக்கு தலைவர் மாதிரி. கோள்கள் மந்திரி மாதிரி. ஆனால், அவர் தலைவரை மந்திரியாக்கிவிட்டார்..!! ப்ளூட்டோ நவக்கிரகங்களில் வராது என்று சொன்னீர்கள். சரி.. அப்படியென்றால் அந்த 9 கிரகங்கள் என்ன என்று சொல்லவேண்டியது தானே மோகன்..!! கிரகங்கள் என்ற தமிழ் பதம் விஞ்ஞானம் சொன்ன Planet என்ற வார்த்தையை கொண்டு தான் வந்தது. அப்படியென்றால் நீங்கள் சொல்லும் நவக்கிரகங்களும் விஞ்ஞானம் கண்டுபிடித்துச்சொன்ன 9 கோள்களைக்கொண்டது தான் என்பது என் கருத்து. ஆனால், நீங்களோ விஞ்ஞானம் சொன்ன ப்ளூட்டோ அந்த பட்டியலில் இல்லை என்கிறீர்கள். அப்படியென்றால் இன்னும் ஒன்பது கிரகங்கள் தான் இருக்கின்றன என்று சொல்கிறீர்களா..? அப்படியென்றால் அதன் அடிப்படை என்ன என்று கொஞ்சம் விளக்குவீர்களா..?
    Last edited by இதயம்; 20-06-2007 at 06:03 AM.
    அன்புடன்,
    இதயம்

  9. #21
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    உங்களின் ஒரு கருத்திற்காக நிச்சயம் பாராட்ட வேண்டும். அது ஜோசியம், ஜாதகம் என்ற பெயரில் தில்லுமுல்லு நடக்கிறது என்று ஒத்துக்கொண்டீர்களே..! நீங்கள் சிலர் என்கிறீர்கள், நான் முழுவதும் ஏமாற்று வித்தை என்கிறேன். நீங்கள் சொன்னதை தான் நான் அமோதிக்கிறேன். ஒரு விஷயம் நிகழ்வதில் உள்ள வாய்ப்புகள் யாராலும் நிர்ணயிக்கப்படுவதில்லை. அது அந்த செயல் நடக்கும் நேரம், இடம், சூழ்நிலை ஆகியவை தான் தீர்மானிக்கின்றன. இந்த இடத்தில் தான் ஜோசியமும், ஜாதகமும் தலைகாட்டுகின்றன. மனிதனின் பலவீனத்தை பயன்படுத்திக்கொள்கின்றன. கைரேகை, ஜாதகம் என்பவை அறிவியல் என்று சொல்கிறீர்கள். அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. கைரேகைக்கு ஆதாரமாக விளங்கும் கையில் உள்ள ரேகைகள் எப்படி உண்டாகின்றன தெரியுமா..? ஒரு கரு உண்டாகி, உருவம் பெற்று வளரும் போது சிசுவின் கைகள் மூடிய நிலையில் இருக்கும் அந்த இறுக்கத்தின் விளைவால் அந்த கோடுகள் உருவாகின்றன. சிசுவின் தொடக்க வளர்ச்சி முதல் அதன் பிறப்பு என்று பத்துமாதம் வரை அந்த நிலையிலேயே இருப்பதால் அந்த வரிகள் நமக்கு காலத்துக்கும் நிலைத்துவிடுகின்றன. கால்களில் இது போன்ற மூடிய நிலை இல்லாததால் தான் அங்கு ரேகைகள் இல்லை. இல்லையென்றால் கால்ரேகை பார்க்க என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கும்..!!

    மன திருப்திக்காக மனிதன் செலவு செய்வது என்பது பொதுவான விஷயம் தான். நான் மனம் திருப்தியடை சில நேரங்களில் அடுத்தவர்களின் உதவி தேவைப்படுகிறது. அதன் பிரதிபலனாக நாம் அவர்களுக்கு பொருள் கொடுக்கிறோம். அது மனமுவந்து கொடுப்பது. ஆனால், ஜாதகம், கைரேகை நம்மை ஏமாற்றுவது. அவர்கள் சொல்வது எதுவும் உண்மை இல்லை. எனவே நீங்கள் சொன்னதிற்கும் இதற்கும் அடிப்படையிலேயே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.
    அன்புடன்,
    இதயம்

  10. #22
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    நான் எழுதும் ஆன்மீகப்பகுதியில் கேட்கவேண்டிய கேள்வியை இங்கு கேட்டிருக்கிறீர்கள். இருந்தாலும் பரவாயில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல் அந்த பகுதியில் உள்ள பல திரிகள் வெறும் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டவை. ஆனால், நான் எழுதும் திரி நம்பிக்கையின் அடிப்படை மட்டுமல்ல, அந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் விஞ்ஞான ஆதாரங்களை கொண்டு எழுதிவருகிறேன். அதை மறுக்கும் நண்பர்களுக்கு நான் ஆரோக்கிய அறைகூவல் விட்டிருக்கிறேன். நான் பின்பற்றும் மார்க்கம் எல்லா வகையிலும் நம்பித்தான் ஆக வேண்டிய மார்க்கம் என்பதால் தான் பகுத்தறிவு உள்ளவன் என்று சொல்லிக்கொள்ளும் நான் அந்த மார்க்கத்தை பின்பற்றுகிறேன் என்று சொல்லும் தன்னிலை விளக்கம் அது. அதில் முரண்படும்பட்சத்தில் நீங்கள் அங்கு விவாதிக்க வரலாம். அது மட்டுமல்ல, கேள்வி கேட்பவர் அந்த கேள்வியை கேட்பதற்கு முன் எதிராளியின் கருத்துக்கு உடன்பாடில்லாத கருத்தைப்பற்றிய தெளிவான விளக்கம் அவரிடம் இருக்க வேண்டும். நான் அது பற்றி அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் சொல்ல தெரிந்திருக்க வேண்டும். கேள்வி கேட்பவர்கள் எல்லாம் புத்திசாலிகள் அல்ல, அதற்கான பதில் தெரிந்தவர்கள் மட்டும் தான். தெரிந்துகொள்வதற்காக கேட்கப்படும் கேள்விகள் இதில் சேராது. வாத்தியாரின் கேள்விகளை நான் அந்த கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறேன்.

    உங்கள் இஸ்லாம் பற்றிய கேள்விக்கான இடம் இதுவல்ல என்பதால் உங்கள் கேள்வியை அங்கு இடுங்கள். பிறகு விவாதிப்போம். என் தரப்பு விவாதங்களில் நான் மிகத்தெளிவாக இருக்கிறேன். ஆனால், நீங்கள் கேட்ட இடம் தான் தவறு.
    அன்புடன்,
    இதயம்

  11. #23
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    அடுத்து வாஸ்து. பணம் சம்பாதிக்க தெரிந்த ஒருவனுக்கு, அவன் வசதிக்கு தகுந்தவாறு வீடு கட்டவும் தெரியும். அப்படி தெரியாவிட்டாலும் தெரிந்து கொள்ள அனுபவமுள்ள பல நல்ல மனிதர்கள் சொல்லிக்கொடுக்க இருக்கிறார்கள். ஆனால், வாஸ்து என்ற பெயரில் அவன் வசதியைப்பற்றி கவலைப்படாமல், மனம் போன போக்கில் வாஸ்து பெயரில் செய்து பணத்தை இழந்தவர்களும், நிம்மதி போனவர்களும் தான் அதிகம். ஒருவனுடைய உயர்வு என்பது அவன் எண்ணங்கள், உழைப்பு, படிப்பு, முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றை உள்ளடக்கியது தானே தவிர, ஒரு கழிவறையின் இடமாற்றம் அதை முடிவு செய்துவிடாது. இது போன்ற மூட நம்பிக்கைகள் மக்களை நான் மேற்சொன்னவற்றிலிருந்து விலக வைத்து அவர்கள் வாழ்க்கையை நாசமாக்குமே தவிர, வாழ வழி ஏற்படுத்தாது. தீவிரவாதிகளில் இஸ்லாமிய, இந்து தீவிரவாதிகள் என்று யாரும் கிடையாது. வன்முறையை கையில் எடுப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் தான். அப்படிப்பட்டவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். அவர்களை மத அடையாளம் கொண்டு காண்பது காண்பவர்களின் குறுகிய மனதை தான் காட்டுகிறது. வன்முறை செய்பவன் பிடிபட்டால் அவனுக்கு சட்டத்தில் தண்டனை உண்டு. மூடநம்பிக்கை என்ற பெயரில் மக்கள் மனதில் நஞ்சை விதைத்து அவர்களின் வாழ்க்கையை, நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அவர்களுக்கு இராஜ உபசாரம் அல்லவா கிடைக்கிறது.?

    உங்கள் மனதை புண்படுத்த நான் எதையும் எழுதவில்லை. இந்தியாவின் எதிர்காலம் இளைய தலை முறை கையில் என்பதாலும், அவர்களின் போக்கு மாற வேண்டும் என்பதாலும் சொல்கிறேன்.
    அன்புடன்,
    இதயம்

  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by இதயம் View Post
    அப்படியென்றால் இன்னும் ஒன்பது கிரகங்கள் தான் இருக்கின்றன என்று சொல்கிறீர்களா..? அப்படியென்றால் அதன் அடிப்படை என்ன என்று கொஞ்சம் விளக்குவீர்களா..?
    இதனால் தான் தாங்கள் அறியாமையில் சொல்கிறீர்கள் என்று சொன்னேன். முழுவதும் தெரியாமல் கண்டதையும் கேட்டதையும் வைத்து கருத்து சொல்கிறீர்கள். இதுபோலவே இஸ்லாம் பற்றிய திரியில் இந்து மதத்தை பற்றி சில கருத்துக்கள் கூறியிருக்கிறீர்கள். அதை பற்றி எழுதினால் நேரம் பற்றாது.

    கிரகங்கள் என்பதற்கான அறிவியில் விளக்கத்தை வைத்து நீங்கள் நவகிரங்களை பார்த்தால் உங்களுக்கு ஒன்றும் புரியாது.

    எந்த கிரகங்கள் மனிதனின் வாழ்வில் impact செய்யும் என்பதை பொருத்தே இவை இயற்றப்பட்டுள்ளது.

    conclusive ஆக கருத்துக்களை வைப்பதற்கு முன் நன்கு ஆராய்ச்சி செய்யுங்கள் நண்பரே.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

Page 2 of 13 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •