அக்னி இந்த திரியை இப்பொழுது தான் பார்த்தேன், இன்னும் படிக்கவில்லை. படித்தவுடன் விமர்சனம் எழுதுகிறேன்.
அக்னி இந்த திரியை இப்பொழுது தான் பார்த்தேன், இன்னும் படிக்கவில்லை. படித்தவுடன் விமர்சனம் எழுதுகிறேன்.
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
தல இப்பத்தான் இதைக் கண்டு பிடிச்சன் எல்லாவற்றையும் வாசிக்கனுல்ல
வாசிச்சிட்டு வாறன்
அப்படியே... அதை முடிச்சிட்டு இந்தப்பக்கமும் உன் பார்வையைத் திருப்பு அக்னி.
(தொடர்கதை முடித்துவிட்ட நிம்மதியில்)
பழிவாங்கும் படலத்தில்
செல்வா..
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
தல, அப்புறம் என்ன ஆச்சு? ஒரு வருஷம் ஆச்சு.. கதைய காணல.. போலீஸ் வந்துட்டாங்களா?
தொடருங்கள்...
இன்று தான் இந்தத் திரி கண்ணில் பட்டது.
பசுமையை நாடிய பயணம் பாதை மாறி பாலைவனத்தில் அல்லவா கொண்டு விட்டு விட்டது. உங்களது இந்த வேதனைக் கதையினை ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன்.
சொந்த அனுபவங்களைப் படிக்கையில் ஒரு மர்ம நாவலைப் படிப்பது போல் இருந்தது.
வீட்டில் வேளா வேளைக்கு வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டு சுகமாக இருந்து விட்டுச் வெளிநாட்டில் சிறைபட்டுச் சாப்பாட்டுக்குக் கூட பிச்சைக்காரர் போல் இருக்க வேண்டிய நிலை வரின் எவ்வளவு கஷ்டம்? அதுவும் கத்தரிக்காயை உப்புப் போட்டு அவித்துச் சாப்பிடு என்று சொல்ல அந்த ஆளுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்?
அம்மாவுடன் தொலைபேசியில் பேச வாய்ப்புக் கிடைத்த போது அம்மாவைக் கஷ்டப்படுத்த விரும்பாமல் உண்மைகளை மறைத்து ஜலதோஷம் என்று சமாளித்த பொறுப்பு மிக்க பிள்ளையாக நடந்து கொண்ட விதம் மனதை மிகவும் நெகிழச் செய்து விட்டது.
பணத்தாசை பிடித்த முகவர்களின் பெயர்களைக் கூடக் கூறாமல் கட்டுரை எழுதியதில் கயவர்களைக் கூட மன்னிக்கும் உங்கள் பெருந்தன்மை தெரிகிறது.
மனதை மிகவும் பாரமாக்கிய கட்டுரை. தொடர்ந்து எழுதுங்கள்.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நன்றியுடன்,
கலையரசி.
நடுநிசியை ஊடுருவி வந்த சத்தம், செவிப்பறை தாக்கப், பயத்தில் வந்தும் வராத நித்திரை முற்றிலும் விட்டகல, சத்தமற்றுப் பரபரப்பானது வீடு முழுமையும். கதவுக் கண்காணிப்புத் துவாரத்தினூடாக எட்டிப் பார்த்த வீட்டிற்குப் பொறுப்பானவர், ‘ட்ரைவர் வந்திருக்கின்றார்’ என்று சொல்ல நிம்மதிப் பெருமூச்சுக்கள் சற்றே நிசப்தம் கலைத்தன.
திறந்த கதவினூடாக நுழைந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த, நமது முகவர்களிடம் பணியாற்றிய சாரதி ஒருவரிடமிருந்து,
‘பி.....த்’ (சிவா.ஜி புரிந்து கொள்வார், மற்றவர்கள் அது ஒரு கெட்ட வார்த்தை எனத் தெரிந்துகொள்க...) ‘தவாய்’ ‘விஸ்திரி’ (விரைவாக என அர்த்தப்படும்) என்ற வார்த்தைகள் மெல்லிய அதிகாரத்தோடு தெறித்தன...
ஒலித்த அலைபேசியில் முகவர் அனைவரையும் வேறு வீடுகளுக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக வீட்டின் பொறுப்பாளரிடம் தெரிவிக்க, அவர் அதனை நம்மிடம் தெரிவித்தார். அந்த நெருக்கடி நிலையிலும் தன்னோடு முண்டியவர்களை வசதி குறைந்த வீடுகளுக்கு அனுப்பி வைத்துப் பழிவாங்கவும் அவர் தவறவில்லை. ஓர் சக பயணி அற்ப சுகத்துக்காக முகவர்களை அண்டித் தன்நிலை மறந்து தன்னைப்போன்ற பயணிகளிடம் எதேச்சாதிகாரம் காட்டும் இழிநிலை மனதைப் பிசைய, அந்த வீட்டிற்கு வந்து பழகிய ஓர் சிலருடன் நானும் வீட்டின் வாசல் தாண்டிப் போனேன்
கீழே மூன்று மகிழுந்துகள் காத்திருக்க, நான்கு நான்கு பேராக மகிழுந்துகளில் ஏறி அமர்ந்த பின்னர், இன்னும் இருவர் மூவர் மகிழுந்துகளிற் திணிக்கப்பட்டனர். வெளியே பார்க்க முடியாதவாறு நசுங்கிப் பிதுங்கிய நிலையில் நாமிருக்கச் பனியிற் சறுக்கிச் சறுக்கி சற்று நேரம் ஓடி ஓய்ந்தது மகிழுந்து. ஒருவாறு திணிக்கப்பட்டவர்கள் இழுத்தெடுக்கப்பட, ஏறி அமர்ந்திருந்த நாம் ஒவ்வொருவராக இறங்கினோம். நான் முன்னர் இருந்த தனிவீட்டிற்குத்தான் வந்திருந்தோம். மனதில் சற்று மகிழ்ச்சி.
வெண்பனி வெளிச்சத்தோடு குளிரும் சேர்ந்துதர சுத்தமான காற்றை ஆழ உள்ளிழுதேன்.
என்னுடன் தாயகத்திலிருந்து வந்தவர்கள் நினைவில் வர, ஓடிச்சென்றேன். ஓர் சிலரைத் தவிர மற்றவர்கள் இருந்தனர். கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டோம். அன்றிரவு ‘வொட்காப் பார்ட்டி’ வைத்துவேறு கொண்டாடினோம். என்னுடன் வந்தவர்களில் ஒருவர் அந்த வீட்டிற்குப் பொறுப்பாளராகப் பதவியுயர்வு செய்யப்பட்டிருந்தார். என்னுடன் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லாதபோதும், மற்றவர்களோடு முரண்படும் மனிதராகக் குறுகிய காலத்தில் மாறிவிட்டிருந்தார். உணவில்லாமல் நம்முடன் இருந்தவர், முகவர் கட்டளைக்கேற்ப, உணவை அளந்து பங்கிடும் அளவிற்கு இருந்தது அவரில் மாற்றம்.
இவையெல்லாம் நிகழ்ந்தபோதும் பயணம் பற்றி மட்டும் எதுவுமே நிகழவில்லை. எப்போது நம்மை ஏற்றுவார்கள் என்ற எண்ணமும் பேச்சும் எப்போதும் சுழன்றுவரும். அலைபேசித் தொடர்பிருந்ததால், வீட்டாருடன் கதைக்கும்போதெல்லாம், நமது முகவர்களுக்கு அழுத்தம் கொடுக்கச் சொல்லுவோம். என்னதான் அழுத்தம் கொடுத்தாலும், அசைய மறுத்து அந்தப் புள்ளியிலேயே அழுந்தி நின்றது நம் பயணம்.
இடைக்கிடையில், கிர்கிஸ்தானில் பிரதான முகவராகச் செயற்பட்டவர், தனது பரிவாரம் சூழ வந்து செல்வார்.
ஒரு நாள்,
‘புதுசா ஒரு ரூட் ஒண்ணு இருக்கு, அடுத்த கிழமை பத்துப்பேர் போறாங்க’
என்ற செய்தியோடு வந்தார் அவர்.
நமக்கோ மகிழ்ச்சி. இனிப் பயணம் விரைவாக அமையும் என்ற நம்பிக்கை துளிர்த்தது.
வொட்காப் போத்தல்கள் தாராளமாய் உடைக்கப்பட்டன. இரண்டு மூன்று ரவுண்டுகள் முடிந்தபின்னர்,
அவர் தொடர்ந்தார்...
‘ஆனா, என்ன பிரச்சினை என்றால், இந்த ரூட்டுக்குச் செலவு அதிகம். உங்கட ஏஜென்சிக்காரங்க பேசின காசுக்கு மேல தரமாட்டாங்களாம். அதால, இந்தப் புதுரூட்டில போறவங்க 500$ எனக்குத் தரணும்’
என்றார்.
எனக்குப் போதை இறங்கிவிட்டது. நான்தான் வெளிநாட்டில் யாரையும் நம்பி வரவில்லையே...
ஆனால், மற்றவர்களோடு நானும் தருகின்றேன் எனத் தலையை ஆட்டிவைத்தேன்...
எல்லாம் முடிந்ததும் அந்த முகவர் என்னையும் இன்னும் இருவரையும்
‘வெளிக்கிடுங்க’ என்றார்...
தொடரும்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
இந்த முறையாவது ஏமாற்றாமல் பயணத்தை விரைவாக அமைத்துக் கொடுப்பார்களா எனக் கவலை கொள்ளச் செய்கிறது உங்கள் பதிவு. விரைவில் தொடருங்கள்.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நன்றியுடன்,
கலையரசி.
யாரையும் தெரியாத வேற்றுநாட்டில்...முகவரின் பிரதிநிதியை மட்டுமே நம்பி...பயணம் என்று என அறியாத நிலையில், சட்டத்துக்கும் பயந்து வாழ்ந்த அந்த நாட்களை உங்கள் எழுத்தில் காணும்போது...பெரும் சங்கடம் தோன்றுகிறது அக்னி.
கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போதே....அரசியல் செய்பவர்களும் உங்களுக்கிடையில் இருந்திருக்கிறார்கள். சாப்பாட்டுக்கு இல்லாதவர்....சாப்பாடு அளிப்பவராக மாறியதைப் பார்த்தால் எனக்கு சிறையில் இருக்கும் கன்விக்டட் வார்டன்கள் என்பவர்களை நினைவு படுத்துகிறது.
அந்த 500 டாலர்களும்...முகவருக்கா...இல்லை இந்த இடைத்தரகருக்கா....யா...நிஷ்நாயோ....
ரொம்ப நாளைக்குப் பிறகு பயணங்கள் தொடர்கிறது...தொடருங்கள். உங்கள் இலக்கையடையும்வரைக் கூடவே வருகிறோம்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அங்கும் “டாலரி”ன் ஆதிக்கம்தானா..!?
உடனிருந்தோரும் உள்ளம் உடைக்கும் காரியத்தில் ஈடுபட்டனரா..? ஹும்...
சூழ்ந்திருக்கும் இருள் நீங்க வேண்டுமென்ற வேண்டுதல் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லைதான்.
தொடருங்கள்.
நன்றி உறவுகளே...
இப்பயண காலத்திற்தான் (2000-2002) யூரோ அறிமுகமானது என நினைக்கின்றேன்.
அதனால், அப்போதெல்லாம் யூ.எஸ். டொலரிற்தான் பணப்பரிவர்த்தனை எல்லாமே...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
என் 'காத்திருப்பு' கவிதைக்கான உங்கள் பின்னூட்டம் கண்டபோதே மனம் கனத்தது. முழு விவரங்களையும் அறிய நேர்கையில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
எத்தனை இடையூறுகள், துயரங்கள், எதிர்காலத்தைப் பற்றிய கேள்விக்குறிகள்! படிக்கப் படிக்க உங்கள் அனைவரின் கையறுந்த நிலை கண்முன் விரிகிறது. உங்கள் அனுபவங்கள் அடுத்தவர்க்குப் பாடமாகட்டும். தொடருங்கள் உங்கள் பயண நினைவுகளை.
முதல் பதிவு படித்து விட்டேன் அக்னி சார்.
மீதியையும் நேரம் கிடைக்கும் போது படித்து புரிந்து கொள்கிறேன். நீங்க அப்பப்போ மீதியை தொடரலாமே...
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks