அக்னி, நெஞ்சுக்குள் நெருப்பு.. இயலாமையால் கண்ணீர். வேதனையில் மனம் விம்முகிறது. எமது சகோதரன் பட்ட பாட்டை எண்ணி. காலத்தின் கோலங்களில் மனிதன் வாழ்வு ...தூண்டிலில் சிக்கிய மீன்...
:- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்
=> எனது பிளாக் - வாழ்க்கையினூடே
http://thangavelmanickadevar.blogspot.com/
அது சரி... எங்கே அடுத்த எபிஸோட்?
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
Last edited by அக்னி; 07-07-2007 at 03:50 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அன்புள்ள அக்னி
ஏனோ அவசரகதியில் இத்தொடரை வாசிக்க விரும்பவில்லை..
இன்று நேரம் அமைந்து முழுக்க வாசித்தேன் ..
இதயம் அவர்களின் பின்னூட்டங்கள் காணும்போதெலாம் நானே எழுதியதைப்போல் ஓர் உணர்வு..
கத்திரிக்காயில் உப்பிடச் சொன்னதைக் கேட்ட உட்கோபம்..ஆற்றாமை..
குளிரில் வாட்டி, நடந்தால் வழுக்கவைக்கும் பனியின் மேல் காதல்
இரு வாரங்களுக்கு மேல் அடைபட்டு வெளியில் சென்ற புத்துணர்வு
பலத்த ஆயத்தம் செய்து வெளிவரும் பகீரதப்பிரயத்தனம்..
சொந்த மண்ணை ஒவ்வொரு கணமும் ஒப்பிட்டு குமுறும் மனம்..
குடலை உண்டு கறியை சிலருக்கு தந்த குணம்
வெட்டவெளியே குளிர்சாதனமாக்கிய சாதுர்யம்
கொழுப்பே எண்ணெய், பனியனே புட்டு அவிக்க துணை..
இடையிடையே இனிப்பான பழங்களும் 'பழச்சாறும்..'
இது ஒரு சமூகப்பொறுப்புள்ள ஆவணம்
பட்டவர்கள், படப்போகிறவர்கள் அனைவருக்கும் பாடம்..
என் பாராட்டுகள் இச்சீரிய பணிக்கு..
நேர்மையும் எழுத்து வன்மையும் மெருகேற்றும் இத்தொடருக்கு என் தொடர் ஊக்கங்கள்..
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
நன்றி அண்ணா!
சில வேலைப்பளுக்களால், மனம் ஒன்றித்து தொடரமுடியவில்லை.
விரைவில் அவற்றைத் தீர்த்துவிட்டு தொடர்ந்தும் எழுதி முடிப்பேன்.
எனது நீண்ட நாள் கனவு, எனது 2 வருட பயண அனுபவத்தைப் பதிவாக்க வேண்டும் என்பது...
மன்றத்தில் எனக்குக் கிடைத்த களம் எனது கனவை நனவாக்குகின்றது...
Last edited by அக்னி; 07-07-2007 at 05:36 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
Last edited by அக்னி; 26-07-2007 at 09:31 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
ஆமாம் அக்னி.
ரஷ்யா எல்லாம் கடந்தா சென்றீர்கள்.
ரஷ்யா... லஞ்சம் கொடுத்தால் எதையும் செய்யலாம். ஆனால் கொடுமை என்னவென்றால்! ரஷ்ய மொழியில் லஞ்சம் என்ற ஒரு சொல்லே கிடையாதென்பது.
அதெற்கெல்லாம் புனிதப்பெயர் "பதாரக்" அப்படீன்னா "பரிசு" என்று பொருள்.
வாயை அசைக்காது கதைப்பார்க்கள். சொல்லின் ஆரம்பம் எது முடிவெது என்று அறிய முடியாது.
அப்படியானால் நீங்கள் குளிர்காலத்தில் சென்றிருக்கிறீர்கள். விடிவதற்கு 7 மணி தாண்டியிருக்குமே. 3 மணிக்கேல்லாம் இருள் சூழத்தொடங்கியிருக்குமே?
உண்மையிலேயே இது ஒருவகைச் சிறைதான்.
இந்த இடத்தில் முன்னனுபவம் கொண்டோரை நினைத்து நம்மை நாமே சமாதானப்படுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
உணவையும் மட்டுப்படுத்தி குளிர்காலத்தில் உண்பதென்பது கொடுமையிலும் கொடுமை
அக்னி.
யாரப்பா அந்த தியாகி. எங்களுக்கு சொல்லிவைக்கலாம் அல்லவா?
நாமும் முகவர்களை தேடி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டால் அவரை தவித்துக்கொள்ளலாமல்லவா?
தர்ம அடியா அக்னி?
அவரை அறைந்துவிடவேண்டும் என்று பாய்ந்து செல்ல, என்னுடன் இருந்தவர்கள் என்னை இழுத்துப்பிடித்து தடுத்துவிட்டார்கள். ஜேர்மனியிலிருந்து வந்திருந்த அண்ணா, திடகாத்திரமானவர். அவருக்கும் அடக்கமாட்டாத ஆத்திரம். அவர் கையை முறுக்கிக் கொண்டு செல்ல, நானும் என்னை பிடித்திருந்தவர்களிடமிருந்து விடுவித்துக் கொண்டு அவருடன் இணைந்து, அடிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கில் சென்றேன். நிலைமையின் தீவிரம் உணர்ந்து இடையில் புகுந்த துணைமுகவர், எம்மை எச்சரித்து, தடுத்து, அந்தச் சிறுவனை வெளியே வாகனத்தில் சென்று காத்திருக்குமாறு கூற, அவரும் உடனடியாக வெளியே சென்று விட்டார். முகவரும் எமக்குரிய உணவுப் பொதிகளை வைத்துவிட்டு, சென்றுவருவதாகக் கூறிச் சென்றுவிட்டார்.
காய்ந்து போன வயிறு உணவை நாட, சமைத்து உண்டுவிட்டு, பொழுதை வழமைபோலவே சீட்டு விளையாட்டில் கழித்துக்கொண்டிருந்தோம்.
நடுநிசி தாண்டியிருந்தது. சில வாகனங்கள் வந்து நிற்கும் சத்தங்கள் கேட்டது. பிரதான முகவர்கள் உள்ளே வந்தார்கள். வந்து நடந்த பிரச்சினை, மற்றும் பயணவிபரங்கள் அனைத்தையும் பற்றி மழுப்பலாகவே நீண்ட நேரமாகக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். மதுவும், சிகரெட்டும் இட்டு வசப்படுத்தும் கலை, மிக நன்றாகவே அவர்களுக்குக் கைவந்திருந்தது. மிகவிரைவில் பயண ஒழுங்குகள் சரிவரும் என்று கூறிவிட்டு, என்னையும், இன்னும் இருவரையும் புறப்படச்சொன்னார்கள். இங்கு தொலைபேசி வசதி இல்லை ஆகையால், தொலைபேசி வசதிக்காக இன்னுமொரு வீட்டிற்குக் அழைத்துச் செல்வதாகவும், பின்னர், சில நாட்களின் பின் இங்கு மீண்டும் அழைத்துவந்து விடுவார்கள் என்றும் கூறினார்கள். பழகியவர்களைப் பிரிவது, மனதிற்குக் கடினமானதொன்றே. ஆனாலும் எங்களது குறிக்கோளை அடைய மனதில் ஆசாபாசங்களுக்கு இடம் தருதல் தகுந்ததல்ல என்பது புரிந்தே இருந்ததால், புறப்பட்டோம்.
ஒரு வாகனம் எங்கள் மூவரையும், ஒரு துணைமுகவரையும் சுமந்தபடி இன்னுமொரு வீடு நோக்கிச் சென்றது. அந்த வீடு ஒரு தொடர்மாடிக் கட்டிடத்தில், மூன்றாவது மாடியில் அமைந்திருந்தது. உள்ளே நாம் வருவதாக செல்லிடப்பேசியில், துணைமுகவர் தெரிவித்திருந்ததால், நாம் வாசல் சென்றதுமே, காத்திருந்த அந்த வீட்டிற்குரிய பொறுப்பாளரான பயணி கதவைத் திறந்துவிட உள்நுழைந்தோம். கதவை மூடியபின்னர்தான் மின்விளக்குகளை ஒளிர விட்டனர். பார்த்ததும் ஏங்கிவிட்டேன். வீடு முழுவதும் காணும் இடமெல்லாம், பயணிகள் படுத்திருந்தனர். கால் வைத்து போவதற்கே கடினமாக இருந்தது. ஏறத்தாழ 25 பயணிகள் அந்த வீட்டில் இருந்ததை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
சிறிதாக இருந்த இடத்தில் எமது பயணப் பைகளைத் தலையணையாக்கிப் படுத்துறங்கினோம். விடியும்வரை நித்திரை வரவில்லை எனக்கு. சிறியகுழுவாக 12 பேருடன் தொடங்கிய பயணம், இன்று ஒரு வீட்டுக்குள் 25 பேருக்கும் மேற்பட்டோருடன் முடங்கிக் கிடக்கின்றதே. எதிர்காலம் எப்படியாகும் என்ற பயத்துடன், கண்களை இறுக்க மூடியபடி, படுத்திருந்தேன். விடியும் வேளையில் ஒவ்வொருவராக எழுந்து, காலைக்கடன்களை முடிக்க சென்றார்கள்.
பலர் இன்னமும் எழும்பாமலே படுத்திருந்தனர். அங்கு சமைப்பதற்கு, முறைபோட்டு, தினமும் குறிப்பிட்ட அளவானோர் சமையலில் ஈடுபடுவார்களாம். அன்றைய தினத்திற்குரியவர்கள், அனைவருக்கும் தேநீர் வைத்துத் தந்துவிட்டு, சமையலைத் தொடங்கிவிட்டார்கள்.
அப்போது, அந்த வீட்டிற்குப் பொறுப்பானவர் வந்து எம்மோடு கதைக்கத் தொடங்கினார். அவரும் முகவர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவராம். அவரது கதையில், தான் தான் எல்லாமே செய்து முடிப்பது போன்ற தொனி தென்பட்டது.
நான் சிறிது தலைமுடி வளர்த்திருந்தேன். வெளிநாடு செல்வதற்காக, பிரத்தியோகமாக, நாகரீகமாக ஒரு முடிதிருத்துமிடத்தில், வெட்டியபின்னர்தான் பயணம் செய்திருந்தேன். ஆனாலும் வந்து நீண்ட நாட்களாகிவிட்டதால், எனது தலைமுடி, கொஞ்சம் அதிகமாகவே வளர்ந்திருந்தது. என்னைப் பார்த்த வீட்டின் பொறுப்பாளர், முடியை வெட்ட வேண்டும் என்றார். நான் ஏன் என்றேன். இல்லாவிட்டால் எனக்குத்தான் சிரமம் என்றார். நான் பரவாயில்லை என்று சொல்லிவிட்டேன். இவர் யார் என்னை முடி வெட்ட சொல்ல என்று மனதினுள்ளே கோபம் வேறு. ஆனால், சூழலுக்கேற்ப பொறுமையும் கொஞ்சம் எனக்கு வந்திருந்தது. அவரும் வற்புறுத்தவில்லை. அப்போதுதான் சுற்றுமுற்றும் பார்த்தேன். கூடுதலாக அனைவருமே, மிகவும் கட்டையாகவே முடி வைத்திருந்தனர். உரையாடியதில், அனைவருமே வந்து சில மாதங்களாகிவிட்டதை தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அவர்களும் கூறினார்கள், குளிப்பதற்குரிய, சலவைப்பொருட்கள் மிகவும் குறைவாக வருவதாலும், நீண்ட நாட்கள் இருக்கவேண்டிய சூழ்நிலை இருப்பதாலும், இவ்வளவு முடியை வைத்திருந்தால் எனக்கே சிரமம் என்று தெளிவுபடுத்தினார்கள்.
ஆக, இறுதியாக எனது முடியை ஒட்ட வெட்டி விடுவதென்ற முடிவுக்கு வந்தேன். சிறிய வயதில் என் தலைமுடியை கொஞ்சம் கட்டையாக வெட்டிவிட்டார்கள் என்பதற்காக, பாடசாலைக்குப் போகமாட்டேன் என்று அடம்பிடித்தது, மனதில் நிழலாட, வெட்டப்பட்டு விழுந்த முடிகள் என்னை பார்த்து எள்ளி நகையாடின. முதன் முறையாக ஒட்ட முடி வெட்டப்பட்ட எனது தலையைப் பார்த்த போது, சிறைத்தண்டனை பெற்ற கைதிகள் போன்றவர்களே நாமும் என்ற, எண்ணம் மேலோங்கியது. ஒரு வழியாக என்னை நானே தேற்றிக்கொண்டேன்.
அப்போது அங்கேயிருந்த செல்லிடப்பேசி ஒலித்தது. உடனே, எல்லோரும் பொறுப்பாளரைப் பார்க்க, பொறுப்பாளர் அதற்குப் பதிலளித்தார்.
பின்னர், அங்கிருந்தவரில் ஒருவரை நோக்கி...
தொடர்ச்சி...
Last edited by அக்னி; 23-02-2008 at 12:08 AM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
நண்பர்களே, சில கால வேலைப்பளுவினால் தொடராமல் விட்ட பசுமை நாடிய பயணங்கள் மீண்டும் தனது பயணத்தைத் தொடரும்...
சிறிய சம்பவங்களையும் விபரிப்பதற்கான காரணம் வயது, பால் வேறுபாடின்றி, ஒவ்வொருவரும் கொண்ட தாக்கங்களை, நான் பெற்ற அனுபவங்களினூடாக வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே.
தொடர்ந்தும் வாசித்து, புலம்பெயர் பயணத்தின் கடுமையான தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
நன்றி!
Last edited by அக்னி; 13-09-2007 at 12:29 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks