Originally Posted by
இதயம்
நீங்கள் எழுதியிருக்கும் பயண அனுபவத்தில் வெளிநாட்டு வேலையை பெற கொடுக்க வேண்டிய விலை, உங்கள் தவிப்பு, எதிர்பார்ப்பு, அவநம்பிக்கை, கனவு எல்லாம் தெரிகிறது. வேலை தேடி தாயகத்தை விட்டு செல்லும் மனிதர்கள் ஒரு பயணிகளைப்போல் இல்லாமல் பணயக்கைதிகளைப்போல் ஆனதை உங்கள் அனுபவம் தெளிவாக சொல்கிறது. இந்த அனுபவங்கள் ஏற்கனவே அது போன்ற கசப்பான அனுபவங்களை பெற்றுவிட்ட நண்பர்கள் அறிந்து கொள்வதோடு மட்டும் இல்லாமல், இனி வெளிநாடு வரத்துடிக்கும் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். அப்போது தன் இது போன்ற சூழ்நிலைகளை, கஷ்டங்களை தவிர்க்கவும், சமாளிக்கவும் அவர்களுக்கு ஏதுவாக இருக்கும். எனவே இதை படிக்கும் நண்பர்கள் இந்த அனுபவங்களை தங்களோடு முடித்துக் கொள்ளாமல் மற்ற நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பது என் வேண்டுகோள்.
ஒரு அனுபவக்கட்டுரையை திருப்பங்கள் நிறைந்த நாவல் போல் எழுதும் அக்னி அவர்களின் அபார எழுத்து திறமைக்கு என் பாராட்டுக்கள்..!
Bookmarks