Page 3 of 8 FirstFirst 1 2 3 4 5 6 7 ... LastLast
Results 25 to 36 of 96

Thread: பசுமை நாடிய பயணங்கள்..! (14)

                  
   
   
  1. #25
    இளம் புயல் பண்பட்டவர் gayathri.jagannathan's Avatar
    Join Date
    13 Dec 2006
    Location
    Bangalore
    Posts
    273
    Post Thanks / Like
    iCash Credits
    8,995
    Downloads
    9
    Uploads
    0
    உலகின் எல்லா இடங்களிலும் இன்பம் துன்பம் இரண்டுமே உண்டு...
    நமது தாய் நாட்டில் இருக்கும் போது நமக்கு கிடைக்கும் சுதந்திரம், பாதுகாப்பு உணர்ச்சி, வேறு எங்கு போனாலும் கிடைப்பதில்லை...

    இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற ஒரு சொல் வழக்கு இருப்பது எல்லோருக்குமே தெரியும்...

    அந்த அக்கரைப் பச்சையை நோக்கிய பயணத்தில் இடர்பாடுகள், மனதைப் பிசைகின்றன....

    இனியெப்போதும் தங்களுக்கு நலமே சிறக்க வாழ்த்துக்கள் அக்னி....
    தமிழபிமானி
    ஜெ.காயத்ரி.

  2. #26
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by பென்ஸ் View Post

    நீர் வாழ்க்கையில் நன்றாக வருவீர்....
    உங்கள் வாழ்த்து என்னை நிறைக்கிறது.... நன்றி பென்ஸ் அவர்களே...

    Quote Originally Posted by பாரதி View Post
    எத்தனை வேதனைகள் நிரம்பிய, எதிர்பார்ப்புகள் கூடிய பயணம்! வாழ்க்கையின் இன்னொரு முகத்தை வெட்ட வெளிச்சமாக்கும் உங்கள் எழுத்துக்கள் எதிர்கால சந்ததிக்கு படமாக, பாடமாக அமையட்டும். தொடருங்கள் நண்பரே.
    நிச்சயமாகத் தொடருவேன். நன்றி பாரதி அவர்களே....

    Quote Originally Posted by gayathri.jagannathan View Post
    அந்த அக்கரைப் பச்சையை நோக்கிய பயணத்தில் இடர்பாடுகள், மனதைப் பிசைகின்றன....

    இனியெப்போதும் தங்களுக்கு நலமே சிறக்க வாழ்த்துக்கள் அக்னி....
    அக்கரைப் பச்சை திரை போட்டுவிடுகின்றது மனங்களை...
    தொடரும் பதிவுகளில் இணைந்திடுங்கள்...
    அந்த துன்பங்களும் பயணங்களும்,
    எனக்கு பொறுமையை, துணிவை, அனுபவங்களை தந்து,
    என்னை மனிதனாகப் புடம் போட்டது...
    நன்றி காயத்திரி அவர்களே...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #27
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0

    பசுமை நாடிய பயணங்கள்..! (5)

    Quote Originally Posted by அக்னி View Post
    வெளியே மீண்டும் இருள் சூழ்ந்த அந்த சமயத்தில்..,
    வெளியே ஒரு சத்தம், வரவர நெருங்கியது. இனம்புரியாத பயத்துடன், மூச்சின் சத்தமும் வெளியே கேட்டுவிடுமோ என்ற அச்சத்தில் கதவைப் பார்த்தபடி அனைவரும் நின்றிருந்தோம். எமது வீட்டுக் கதவு திறந்தது. எமது முகவர்கள் உள்ளே வந்தார்கள். எம்மில் இருவரை வெளியே வருமாறு சொல்ல, இருவர் சென்றார்கள். மீண்டும் உள்ளே ஒரு மூட்டையுடன் நுழைந்து வைத்துவிட்டு மீண்டும் மீண்டும் சென்று சில மூட்டைகளை சுமந்து வந்தார்கள்.

    முகவர்கள் சொன்னார்கள்... உணவுப் பொருட்கள் என்று. சமைத்துச் சாப்பிடுமாறு சொன்னார்கள். மேலும் தொலைபேசி மூன்று தடவைகள் அடித்து நின்று மீண்டும் ஒலித்தால், அழைப்புக்குப் பதிலளிக்குமாறு கூறிவிட்டு, மீண்டும் அடுத்த நாள் வருவதாகச் சொல்லிச் சென்றார்கள்.

    அவர்கள் சென்றதும் மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தோம். மா, அரிசி, கத்தரிக்காய், கோவா, கரட், வெங்காயம் என்று ஒவ்வொன்றும் மூடையாக இருந்தது. அத்தோடு எண்ணை, சிறிய மிளகாய்த்தூள் போத்தல், உள்ளி போன்ற இதர பொருட்கள் வேறொரு பையிலும் இருந்தது. அவற்றோடு, சிகரெட், சீட்டுக்கட்டு என்பவற்றையும் கொண்டு வந்து தந்திருந்தார்கள்.

    இவற்றின் தொகை பசியையும் மீறி நாம் நிற்க வேண்டிய கால அளவை அச்சப்படுத்தியது. நாளை எமது பயணம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவுடன். எல்லோருமாகச் சேர்ந்து சமைக்கத் தொடங்கினோம். பலருக்குச் சமையல் பழக்கமற்ற போதிலும், தெரிந்த சிலரும் எம்முடன் இருந்ததால், அவர்கள் சமைக்க, நாம் உதவி செய்தோம். ஒரு வழியாக, சோறு சமைத்து உண்டுவிட்டு, சீட்டுக்கட்டை எடுத்து விளையாடினோம். விளையாடத் தெரியாதவரும், விருப்பமில்லாதவரும் அருகே இருந்து கதைத்துக் கொண்டிருந்தனர்.

    ஒரு வழியாக அன்றைய தினமும், முடிந்து அடுத்த நாளும் வீட்டினுள்ளேயே அடைந்து கிடந்து (வேறு என்ன செய்வது?) காலத்தை ஓட்டினோம். இரவானதும், தொலைபேசி ஒலித்து நின்று மீண்டும் ஒலித்தது. எம்மில் ஒரு நண்பர் எடுத்துக் கதைத்தார். மேலும் சிலர் வருவார்கள் என்றும், அவர்களுக்கும் சேர்த்து உணவு தயாரிக்குமாறும் சொன்னார்கள். அன்று இரவும் சோற்றையே சமைத்தோம். வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை.

    இதற்கிடையே ஒரு ஜன்னல் இடைவெளியூடாக வெளிப்படலையைப் பார்க்ககூடியதாக சிறிய இடைவெளியை ஏற்படுத்தி இருந்தோம்.

    நடுநிசி அளவில், வாகனச் சத்தம் கேட்டது. எமது படலையின் முன்னால் நின்றதும், நாம் முன் வாசலைச் நோக்கிச் சென்று எதிர்பார்த்துக் காத்திருந்தோம். கதவு திறந்தது, புதிதாக நான்கைந்து நபர்கள் வந்தார்கள். ஆனால், அவர்கள் பயணிகள் மாதிரித் தெரியவில்லை. எல்லோரும் உள்ளே வந்ததும் கதவைமூடி விட்டு அனைவரையும் வரவேற்பறைக்கு செல்லுமாறு கூறினார்கள். நாமும் போய் அமர்ந்தோம். அதிலொருவர் கதைக்கத் தொடங்கினார். அவர்தான் அந்த நாட்டில் பயணிகளுக்கான பயண ஏற்பாடுகளைச் செய்யும் முக்கிய முகவர். எல்லோருடைய பெயர்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதன்பின் சொன்னார், தற்போது பயண வழிகள் பிரச்சினைக்குரியதாக இருப்பதால், சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்றார். எவ்வளவு காலம் என்று கேட்டதற்கு அவர் சொன்னார், மூன்று மாதங்களுக்கு மேலாக 90 பேருக்கு மேல், பயணிக்க முடியாமல் இந்த நாட்டில் தங்கியுள்ளார்கள். நீங்கள் இப்போதுதானே வந்தீர்கள், பொறுத்திருங்கள் என்று கூறுவது போலக் கட்டளையிட்டார். ஒரு நண்பர், அப்படிக் காலம் எடுக்குமானால், தன்னை தாயகத்திற்குத் திருப்பி அனுப்புமாறு கூற, முகவர் சொன்னார், இங்கு வந்தால், திரும்பச் செல்ல முடியாது, குழப்பம் செய்தால் உணவும் வராது, ஆதலால் அமைதியாக அனுப்பும்வரை இருங்கள் என்றார்.

    அப்போதுதான் முகவர்களின் சுயரூபம் வெளியே தெரியத் தொடங்கியது. அவர் தனது செல்லிடப்பேசியில், எங்கோ தொடர்பெடுத்து, ஒரு சிலர் பெயரைக் குறிப்பிட்டு, இந்த வீட்டிற்கு அழைத்து வரச் சொன்னார்.

    சிறிது நேரத்தில் நால்வரை ஒரு துணைமுகவர் அழைத்து வந்தார். அவர்களையும் எம்முடன் தங்குமாறு கூறிவிட்டு, எல்லா முகவர்களும் புறப்படத் தயாரானார்கள். அப்போது நான் சொன்னேன் வீட்டிற்கு (தாயகத்திற்கு) உரையாட வேண்டுமென்று. நாளை அதற்குரிய ஒழுங்குகளைச் செய்வதாகக் கூறிவிட்டு, வந்தவர்களில் ஒருவரை எல்லோருக்கும் பொறுப்பாக இருக்கும்படியும், தொலைபேசிக்கு அவரை மட்டுமே பதிலளிக்கும்படியும் கூறிவிட்டுச் சென்றுவிட, எம்மத்தியில் கனத்த அமைதி சிறிது நேரத்திற்கு நிலவியது.

    அப்போது, புதிதாய் வந்தவர்கள் எம்மை நெருங்கி வந்தார்கள்....

    தொடர்ச்சி...
    Last edited by அக்னி; 21-02-2008 at 07:31 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #28
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    என்ன இது அக்னி?

    நான் முன்னே கூறியபடி உமது பசுமை நாடிய பயணங்கள் இப்போது திகில் கதையாகவே மாறிப் பயமுறுத்துகிறதே?.

    இப்போது பலத்காரம் வேறு ஆரம்பிக்கிறது போலுள்ளது. பயமுறுத்தும் உங்களது அனுபவங்கள் புலம் பெயரும் எங்கள் உறவுகளுக்கு ஒரு ந*ல்ல படிப்பினையாக இருந்தால் அதுவே உங்களுக்குக் கிடைக்கும் வெற்றி!.

    வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள் அக்னி!.
    Last edited by ஓவியன்; 22-06-2007 at 08:54 PM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #29
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    என்ன இது அக்னி?

    நான் முன்னே கூறியபடி உமது பசுமை நாடிய பயணங்கள் இப்போது திகில் கதையாகவே மாறிப் பயமுறுத்துகிறதே?. இப்போது பலத்காரம் வேறு ஆரம்பிக்கிறது போலுள்ளது. பயமுறுத்தும் உங்களது அனுபவங்கள் புலம் பெயரும் எங்கள் உறவுகளுக்கு ஒரு வல்ல படிப்பினையாக இருந்தால் அதுவே உங்களுக்குக் கிடைக்கும் வெற்றி!.

    வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள் அக்னி!.
    திகில் கதையல்ல நண்பா... திகில் நிகழ்வுகள் இனித்தான் அரங்கேறப் போகின்றன...
    தொடர்ந்தும் இணைந்திருங்கள்...
    நன்றி!

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  6. #30
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0

    பசுமை நாடிய பயணங்கள்..! (6)

    Quote Originally Posted by அக்னி View Post
    அப்போது, புதிதாய் வந்தவர்கள் எம்மை நெருங்கி வந்தார்கள்....
    வந்து எம்முடன் கதைக்கத் தொடங்கினார்கள். அவர்கள் வந்து மூன்று மாதங்களாகின்றதாம். இதுவரை எந்தவித பயண ஏற்பாடுகளும் நடைபெறவில்லையாம். காத்திருந்து காத்திருந்து, முகவர்களுடன் தர்க்கித்து களைத்து விட்டார்களாம். மற்றவர்களுடன் இருந்தால், சிலவேளைகளில் மற்றவர்களையும் தூண்டி விடலாம் என்பதாலேயே புதிதாய் வந்த எம்முடன் மாற்றிவிட்டுள்ளார்களாம் என்றார்கள். பின்னர், எல்லாருமாகச் சாப்பிட்டு விட்டு, படுப்போம் என்று தயாராக, அவர்கள் எங்கோ புறப்படத் தயாரானார்கள். இரவில் கடைகள் திறந்திருக்குமாம். தாம் இருவர் போய், சில பொருட்கள் வாங்கி வரப்போவதாக அவர்கள் கூற, நாம் வெளியே போக திறப்பு இல்லை என்றோம். அதற்கு அவர்கள் ஜன்னலூடாக இறங்கலாம் என்றார்கள்.

    ஜன்னல், பெரியதானாலும் அதில் திறக்கக் கூடிய பாகம் மிகச்சிறியது. ஒரு மிகச் சாதாரணமான உடலுடையவர்களே அதனூடு நுழைய முடியும். தாம் வைத்திருந்த சிறிய கத்தியால், அதனைக் கழற்றிவிட்டு அதனூடு இருவர் நுழைந்து வெளியே போய்விட்டார்கள். எனது உடம்பும் போக கூடியது என்றாலும் பயத்தில் நான் மறுத்துவிட்டேன். அவர்கள் வெளியே சென்று சிறிது நேரத்தில் திரும்ப வரும்போது, வொட்கா எனப்படும் ரஷ்யாவின் புகழ்பெற்ற மதுவகை உட்பட, பலவித குடிபானங்கள், சிகரெட், முட்டை, தகரத்திலடைக்கப்பட்ட மீன், பிஸ்கெட் எனப் பலதையும் வாங்கி வந்திருந்தார்கள்.

    அவற்றை ஜன்னலூடாக தந்துவிட்டு, வெளியே இருந்த திராட்சைப் பழங்கள் மற்றும் வேறுவித பழங்களை ஒரு பை முழுவதும் நிறைய பறித்தபின், வீட்டினுள்ளே வந்தார்கள். இவர்கள் வருவதற்கிடையே, மற்ற இருவரும், வீட்டினுள்ளே இருந்த தளத்தின் பலகை ஒன்றைக் கழற்றி இருந்தார்கள். கூடுதலான நில வீடுகளில் தளம் பலகையால் ஆனதாகவே இருக்கும் என்று கூறினார்கள். கழற்றிய இடைவெளியினூடு புகுந்து பார்த்தோம். உள்ளே விசாலமாக இருந்தது. சில வீடுகளில், பெரிய நிலவறையும் இருக்கும் என்றார்கள். குளிர் காலங்களில் உணவைச் சேமித்து வைக்க பயன்படுத்துவார்களாம் ரஷ்யர்கள். சரி ஏன் பலகையைக் கழற்றுகின்றார்கள் என்று கேட்க வாங்கி வந்த பொருட்களை முகவர்கள் பார்வையில் படாமல் ஒளிப்பதற்காக என்று கூறினார்கள்.

    பின்னர் மதுவருந்த அழைத்தார்கள். எம்மில் மதுவருந்த விரும்பியவர்கள் மதுவருந்தியபடி, சீட்டு விளையாடியபடி, சிகரெட் புகைத்தபடி, அல்லது எதையாவது உண்டபடி இரவைப் போக்கினோம். பழங்கள் மிக இனிமையாக இருந்தன, பழச்சாறும்தான் (வொட்கா). விடியும் வேளையில் உறங்க விளைந்தோம். எல்லோரும் படுத்துறங்கிவிட்டார்கள்.

    எனக்குள் ஆயிரம் நினைவுகள் மோதின. எல்லோரும் இஷ்டத்துக்குப் பணத்தைக் கொடுத்து பலதையும் வாங்குகின்றார்கள். அவர்கள் உறவுகள் வெளிநாடுகளில் இருப்பதால், தேவையான பணத்தை அவர்களி அனுப்பி வைப்பார்களாம். ஆனால், எனக்கோ வெளிநாட்டில் யாருமில்லை. தாயகத்தில் பணம் கொடுத்து, கையில் சிறிதளவு பணத்துடன் ஏறிவந்தவன். என்ன செய்வது என்று சிந்தனை தலையை அழுத்தியது. மற்றவர்கள் முன்னிலையில் எனது கவலைகளைக் காட்டி அனுதாபம் தேடிக்கொள்ள விரும்பாத மனது, தனிமையில் நினைவுகளின் பாரம் தாங்க முடியாமல் அழுந்தியது. அத்துடன், பயணம் செல்லும்போது சிறிதளவு பணத்தை ஒளித்து வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கதைத்திருந்தார்கள். ஏனென்றால், பயணத்தின்போது, காவல்துறை பிடித்தால், பணம் (அமெரிக்க டொலர்) தான் அவர்களின், முக்கிய தேடுபொருளாக இருக்குமாம். அப்போது என்னிடம் விமான நிலையத்தில் செலவு செய்தது போக, கிட்டத்தட்ட 100$ களே இருந்தது. அதில் 50$ ஐ ஒளித்து வைப்போம் என்று சிந்தித்தபடியே எப்போது உறங்கினேன் என்பது தெரியாமல் உறங்கிவிட்டேன்.

    அடுத்த நாள், உணவாக பிட்டு அவிப்போம் என்று புதியதாய் வந்தவர்கள் சொன்னார்கள். அவிப்பதற்குரிய பாத்திரங்கள் இல்லாமல் எப்படி அவிப்பது என்று கேட்க, உள்ளே அணியும் பெனியன் புதிதாய் இருக்கிறதா என்று கேட்டார்கள். ஒருவர் தரவே, ஒரு வாய் அகன்றபெரிய பாத்திரத்தில் நீரூற்றி அதில் அந்த பெனியனைக் கட்டி, குழைத்த மாவை அதிலிட்டு அவித்தோம். தேங்காய்ப்பூ இல்லாத பிட்டானாலும், பசியும், சோற்றை மட்டுமே உண்ட நாக்கும் அந்தப் பிட்டில் சுவை கண்டது. புதிய முறைமைகள் புகுத்தப்பட்டது, சமையலிலும், வாழ்க்கையிலும்.

    இவ்வாறாக, அனேகமாக அனைவரும் மதியவேளை எழுந்து, இரவில் விழித்து காலம் ஓடியது. தொலைபேசி ஒழுங்கு செய்து தருவதாகக் கூறியவர்களைக் காணோம். கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆகிவிட்டது. வீட்டாருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. முகவர்கள் கதைக்கும்போது கேட்டால், நாளை ஒழுங்கு செய்கின்றோம் என்ற பேச்சில் வழுவாத நாண(ந)யம் கொண்டவர்கள் என்பது எமக்குத் தெரிந்திருந்தாலும், ஏக்கம் அவர்களின் ஏமாற்றுத்தனத்தைக்கூட நம்பச் செய்தது.

    இப்படி நாட்கள் கடந்து செல்கையில், ஒரு நாள் அதிகாலை ஆழ்ந்த உறக்கத்திலிருந்த எம்மை, ஒருவர் உலுக்கி எழுப்பினார்...

    தொடர்ச்சி...
    Last edited by அக்னி; 21-02-2008 at 07:32 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #31
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அப்பப்பா அக்னி!, புதிதாக வந்தவர்கள் உங்களை என்ன செய்யப் போகிறார்களோ என்று யோசித்துக் கொண்டிருக்கு அவர்களும் உங்களைப் போன்றவர்கள் என்பது திருப்பு முனையாக அமந்தது, அது உமது எழுத்தாற்றலுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

    தவிர தொடரும் உங்கள் தவிப்பு பதை பதைக்க வைக்கிறது, தொடர்ந்து எதிர்பார்கிறேன் உங்கள் பசுமை நாடிய பயணங்களை.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #32
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    நீங்கள் எழுதியிருக்கும் பயண அனுபவத்தில் வெளிநாட்டு வேலையை பெற கொடுக்க வேண்டிய விலை, உங்கள் தவிப்பு, எதிர்பார்ப்பு, அவநம்பிக்கை, கனவு எல்லாம் தெரிகிறது. வேலை தேடி தாயகத்தை விட்டு செல்லும் மனிதர்கள் ஒரு பயணிகளைப்போல் இல்லாமல் பணயக்கைதிகளைப்போல் ஆனதை உங்கள் அனுபவம் தெளிவாக சொல்கிறது. இந்த அனுபவங்கள் ஏற்கனவே அது போன்ற கசப்பான அனுபவங்களை பெற்றுவிட்ட நண்பர்கள் அறிந்து கொள்வதோடு மட்டும் இல்லாமல், இனி வெளிநாடு வரத்துடிக்கும் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். அப்போது தன் இது போன்ற சூழ்நிலைகளை, கஷ்டங்களை தவிர்க்கவும், சமாளிக்கவும் அவர்களுக்கு ஏதுவாக இருக்கும். எனவே இதை படிக்கும் நண்பர்கள் இந்த அனுபவங்களை தங்களோடு முடித்துக் கொள்ளாமல் மற்ற நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பது என் வேண்டுகோள்.

    ஒரு அனுபவக்கட்டுரையை திருப்பங்கள் நிறைந்த நாவல் போல் எழுதும் அக்னி அவர்களின் அபார எழுத்து திறமைக்கு என் பாராட்டுக்கள்..!
    அன்புடன்,
    இதயம்

  9. #33
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by இதயம் View Post
    நீங்கள் எழுதியிருக்கும் பயண அனுபவத்தில் வெளிநாட்டு வேலையை பெற கொடுக்க வேண்டிய விலை, உங்கள் தவிப்பு, எதிர்பார்ப்பு, அவநம்பிக்கை, கனவு எல்லாம் தெரிகிறது. வேலை தேடி தாயகத்தை விட்டு செல்லும் மனிதர்கள் ஒரு பயணிகளைப்போல் இல்லாமல் பணயக்கைதிகளைப்போல் ஆனதை உங்கள் அனுபவம் தெளிவாக சொல்கிறது. இந்த அனுபவங்கள் ஏற்கனவே அது போன்ற கசப்பான அனுபவங்களை பெற்றுவிட்ட நண்பர்கள் அறிந்து கொள்வதோடு மட்டும் இல்லாமல், இனி வெளிநாடு வரத்துடிக்கும் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். அப்போது தன் இது போன்ற சூழ்நிலைகளை, கஷ்டங்களை தவிர்க்கவும், சமாளிக்கவும் அவர்களுக்கு ஏதுவாக இருக்கும். எனவே இதை படிக்கும் நண்பர்கள் இந்த அனுபவங்களை தங்களோடு முடித்துக் கொள்ளாமல் மற்ற நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பது என் வேண்டுகோள்.

    ஒரு அனுபவக்கட்டுரையை திருப்பங்கள் நிறைந்த நாவல் போல் எழுதும் அக்னி அவர்களின் அபார எழுத்து திறமைக்கு என் பாராட்டுக்கள்..!
    உண்மைதான் அண்ணா!

    தாயகத்திலிருக்கும் பல உறவுகளுக்கு புலம் பெயர்ந்து நம்மவர் அனுப்பும் பணம் மட்டும் தான் தெரிகிறது அதற்காக அவர்கள் பட்ட பட்டுக் கொண்டிருக்கின்ற அவலங்கள் தெரியவில்லை, அது எல்லோருக்கும் தெரிய இந்த அக்னியின் தொடர் உதவும், அதற்கு நீங்கள் கூறிய மாதிரி நாங்களும் உதவ வேண்டும்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #34
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    நன்றி ஓவியன், நன்றி இதயம்...
    எனது பயண அனுபவத்தை நான் எழுத வேண்டும் என்ற எண்ணம், நான் ஐரோப்பா வந்தவுடன் தோன்றியிருந்தாலும், சந்தர்ப்பங்களும் தகுந்த களமும் கிடைக்கவில்லை. தமிழ் மன்றம் வந்ததும் இங்கு எனது கனவு நிறைவேறலாம் என்று எண்ணினேன். அதற்கு ஆதவன் அவர்களும் ஊக்குவித்தார்கள். முதற் பகுதியில் பெற்றுக் கொண்ட வரவேற்பு, சுருக்கமாக பதிந்து போகும் எண்ணத்தை, விரிவாக எழுதத் தூண்டியது. அதற்கு, இந்தக் பதிவை கண்டு சென்றவர்களின் ஊக்குவிப்புத்தான் காரணம்.
    உங்களின் ஊக்குவிப்பில், நான் தொடருவேன்...
    ஒரு நாள், இரு நாள் பயணமல்ல...
    கிட்டத்தட்ட இரு வருடங்கள் தொடர்ந்த பயணம்...
    அந்த அனுபவங்கள்... நிச்சயமாக முடிந்தளவுக்கு என்னால் பதியப்படும். தொடர்ந்தும் இணைந்திருங்கள்...
    நன்றி!

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #35
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0

    பசுமை நாடிய பயணங்கள்..! (7)

    Quote Originally Posted by அக்னி View Post
    இப்படி நாட்கள் கடந்து செல்கையில், ஒரு நாள் அதிகாலை ஆழ்ந்த உறக்கத்திலிருந்த எம்மை, ஒருவர் உலுக்கி எழுப்பினார்...
    ஒக்ரோபர் மாத நடுப்பகுதியில் துயில் கொண்டிருந்த எங்களை "எழும்புங்கோடா" என்ற குரல் திடுக்கிட வைத்து எழுப்பியது எங்கள் அனைவரையும். எழுப்பியவர், முன்னர் ஜேர்மனியில் வசித்தவர். திருமணம் செய்து, அவரது மனைவி மகவை வயிற்றில் தாங்கியிருந்த வேளையில், ஜேர்மன் அரசினால் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டு, பிறந்த மகனையும், மனைவியையும் சேர்வதற்காக மீண்டும் பயணம் மேற்கொள்பவர்.

    என்னவோ ஏதோவென்று பதைத்து எழும்பிய நம்மை, சாளரத்தோரம் நின்றபடி அழைத்தார் அந்த அண்ணா. விரைந்த எம்மை வெளியே பார்க்கப் பணித்தார். பார்த்ததும் அசைவை இழந்து விட்டோம். வெளியே முழுவதும் வெள்ளை மழை பொழிந்திருந்தது. பனி படர்ந்த நிலமகள் எங்களில் அநேகமானோருக்கு புதிது. சாளரத்தினூடாக கையைவிட்டு வருடிப் பார்த்தேன். அளைந்தேன். குளிர்மை உடலெங்கும் சில்லிட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளையாக, மென்மையாக படர்ந்திருந்த பனி, அப்போதும் பூவாகத் தூவிக் கொண்டிருந்தது. ஆனால், சுதந்திரமாக பார்க்க, அனுபவிக்க முடியவில்லை. எமது வீட்டின் கட்டுகளை அறுக்க முடியாமல், மனதில் ஒருவித கிளுகிளுப்பான உணர்வுடன், அன்றைய பொழுதை பனி பற்றிய கதைகளிலேயே வியப்புடன் கழித்தோம். ஆனால், அழகுதான் ஆபத்தின் உறைவிடம் என்பது, எமக்குத் தெரியவில்லை. இதே பனியும் குளிரும் எமது வாழ்வில் தரப்போகும் அனுபவங்களை நாம் அப்போது உணரவில்லை. மனம் மகிழ்ச்சியில் திளைக்க, சாளரத்தினூடாக கையில் பட்ட பனித்துகள்களை அள்ளி ஒருவர்மீது ஒருவர் எறிந்து விளையாடிக் கொண்டிருந்தோம்.

    பனிப்படலம் தந்த ஆசை அன்று என்னையும் வெளியே சென்று பார்க்க வேண்டும் என்ற முடிவை எடுக்கவைத்தது. இரவானதும், ஒரு சிலருடன் நானும் வெளியேறி நாம் இருந்த தெருவைச் சுற்றி வந்தோம். மனதில் பயமாய் இருந்தாலும், பனியின் அழகில் மெய்மறந்து திரிந்தேன். ஒருநாள் முழுவதும் கொட்டியதால் நிறைந்திருந்த பனியினுள் கால்கள் புதைய நடந்து திரிந்து விட்டு, திறந்திருந்த ஒரு கடையில், (பெட்டிக்கடைகள் வரிசையாக பல இருந்தன. அநேகமான உணவுப்பொருட்களை வாங்கக் கூடியதாக இருந்தது) சில பல பொருட்களை, குடிவகைகளை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். ஏறத்தாழ 15 நாட்களின் பின் வெளியே சென்று வந்தது மனதுக்குள் ஒரு உற்சாகமாக இருந்தது.

    வழமை போலவே, அன்றைய இரவும் எமது விழிப்பு இருந்தது. அப்போது ஒருவர் ஒரு திறப்பை எடுத்து வந்தார். எங்கோ ஒரு மூலையில் இருந்ததாக கூறி முன் கதவைத் திறக்க முனைந்தார். ஏதோ ஒரு சிறிய வித்தியாசத்தில் உள்ளே நுழைந்தாலும் திறக்க மறுத்தது. பல தடவைகள் முயன்றபின், நாளை பகலில் ஏதாவது செய்வோம் என்ற எண்ணத்தில் விலத்தி போகும்போது, அருகிலிருந்த அடுத்த வெளிக்கதவில் (இரு கதவுகள் என முன்னரே குறிப்பிட்டுள்ளேன்) தற்செயலாக முயற்சிக்க அது திறந்து கொண்டது. எமக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. உடனேயே பாதணிகளையும், மேலணியும் அணிந்து கொண்டு சத்தம் போடாமல், வெளியே சென்றோம். எமது பாத அடையாளங்கள் பனியில் தெரிந்ததால், முகவர்கள் நாம் வெளியே சென்றதை தெரிந்துவிடுவார்கள் என்பதால், ஒருவர் காலடி மீது காலடி வைத்து, வீட்டின் பின்னே சென்றோம். பின்பக்கம் நீளமான வளவாக இருந்தது. அங்கே சத்தம் போடாமல், அக்கம் பக்கம் கவனித்தபடி பனியின் குளிர்மையையும், அது கொட்டும் சுகத்தையும் அனுபவித்தபின் திரும்பிவரும் போது பார்த்தால், எமது பாத அடையாளங்கள் பனியால் மூடப்பட்டிருந்தன. உடம்பில் சிறியதாக குளிரேற அனைவரும் உள்ளே வந்து, வெப்பமாக்கியின் வெப்பத்தை சற்று உயர்த்திவைத்துவிட்டு உறங்கினோம்.

    அடுத்த நாள் பார்த்தால், பனி விழுவது நின்று விழுந்த பனி கரையத் தொடங்கியிருந்தது. குளிர் கடுமையாக இருந்தது. ஜேர்மனியில் இருந்து வந்திருந்த அண்ணா கூறினார்; பனி விழும்போது குளிர் தெரியாது என்றும், பனி கரையும்போது குளிர் கடுமையாக இருக்கும் என்றும், அப்போது, நிலம் நடக்கமுடியாதபடி வழுக்கும் என்றும் கூறியிருந்தார். அடுத்த இரவு, வெளியே செல்ல முயற்சித்து, பனியில் நடக்கமுடியாமல் வழுக்கவே உடனேயே வீட்டிற்குள் திரும்பிவிட்டோம். (விண்வெளியில் நடப்பதற்கு கடுமையாக திட்டம்போட்டு நடப்பார்களே அது போலவேதான் இருந்தது எமது வீட்டிற்கு வெளியே செல்லும் நிகழ்வுகளும். ஏனென்றால், முகவர்கள் வருவார்களோ என்று கண்காணிக்க ஒருவர், அக்கம்பக்கம் கண்காணிக்க ஒருவர் என்று எமது திட்டமிடல்கள் ஏராளம்) நாம் கடும் குளிருக்கென்று கொண்டு வந்த உடைகள், பாதணிகள் யாவும் பயனற்றவை என்று புரிந்தது. எமக்கு முன்னரே வந்திருந்த நண்பர்களிடமிருந்து, அவர்களுக்குத் தெரிந்த ருஷ்கி வார்த்தைகள், மற்றும் எண்கள் முதலியவற்றை எவ்வாறு சொல்வது என்று கேட்டுத் தெரிந்து கொண்டோம். வாய்வழியாக ஒரு மொழி முன்னர் வந்த பயணிகளிடமிருந்தும் கடத்தப்பட்டு, எம்மிடமும் பரவியது.

    அன்றைய தினம் பிற்பகலில், அன்று எமக்கு இறைச்சி அனுப்பிவைப்பதாக முகவர் ஒருவர் தொலைபேசியில் தெரிவித்தார். எமது முகவர்களுக்கு சாரதி வேலை செய்யும் அந்த நாட்டவர் ஒருவர், ஒரு பொதியைக் கொண்டு வந்து தந்தார். இதற்கிடையில், அவர்கள் எமக்குத் தந்திருந்த பெரும்பாலான உணவுகள் முடியும் தறுவாயில் இருந்ததால், ஒரு பேப்பரில் குறித்து, முகவரிடம் கொடுக்குமாறு கூறினோம். அந்த சாரதியும் சென்றபின்னர், நாம் அந்த இறைச்சிப் பொதியைப் பிரித்துப் பார்த்தோம். நீண்ட நாட்களின் பின் இறைச்சி உண்ணப்போகின்றோம் என்ற அவாவில் (அவா என்று சொல்வதற்காக நான் வெட்கப்படவில்லை. நாக்குக் காய்ந்து போன நிலையில் ஆசை என்பதை விட அவா என்பதே பொருத்தமானதாகும்) இறைச்சிப் பொதியைப் பார்த்தால், ஒரு சிறிய இறைச்சித் துண்டுடன் அதிகளவான கொழுப்பும், சுத்தம் செய்யப்படாத குடல்களும் இருந்தன. ஏமாற்றாமாக இருந்தாலும் ஒரு மாற்றமாக வந்த அந்த பொதி எமக்கு சுவையாகத்தான் இருந்தது உணவில். குடலை சுத்தம் செய்து மூன்று தடவைகள் நன்றாக அவித்துப் பின்னரே சமைக்க முடிந்தது. ஆனாலும், அதுவாவது கிடைத்ததே என்ற சந்தோஷத்தில் கொழுப்பு, குடல்கள் உண்ண விரும்பாதவர்களுக்கு இறைச்சியை அதிகமாகக் கொடுத்து, எல்லோருமாக பங்கிட்டு உண்டபின், ஏலவே எடுத்து வைத்திருந்த ஒரு பகுதியை ஒரு பையிலிட்டு, ஒரு சாளரத்தினூடாக வெளியே தொங்கவிட்டோம் அடுத்தநாள் உணவுக்காக. வெளியேதான் குளிசாதனப்பெட்டியாக சூழல் இருக்கிறதே. அதனால், பழுதடையாது இருப்பதற்காக அவ்வாறு செய்தோம்.

    இவ்வாறு மேலும் இரு நாட்கள் சென்றநிலையில், உணவுப்பொருட்கள் முடியும் நிலைக்கு வந்திருந்தது. அதைத் தெரிவித்தும் எமக்கு இன்னமும் அனுப்பப்படவில்லை. அத்துடன் அவர்களாகத் தொடர்பு கொண்டால்தான் கதைக்க முடியும் என்ற நிலையும் இருந்ததால், இருந்த உணவுப் பண்டங்களை மிக சிக்கனமாக பயன்படுத்தினோம். ஏற்கனவே, ஒரு நாளில் இரு தடவைகள் மட்டுமே உண்ணுங்கள் என்று முகவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். நாமும் நாவையும், வயிற்றையும் அடக்கி இரு தடவைகள் மட்டுமே உண்டு வந்தோம். அதுவும் அடுத்தடுத்த நாட்களில் இன்னமும் சிக்கனமாகிப் போனது.

    இப்படியாக நிலைமை இறுக்கமான நிலையில்,

    தொடர்ச்சி...
    Last edited by அக்னி; 21-02-2008 at 07:32 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  12. #36
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0

    பசுமை நாடிய பயணங்கள்..! (8)

    Quote Originally Posted by அக்னி View Post
    இப்படியாக நிலைமை இறுக்கமான நிலையில்,
    உணவுப் பொருட்களில்,அரிசி, மா முழுவதும் தீர்ந்து விட்டது. எண்ணையோ முழுவதும் முடிந்து போனது. நாம் கள்ளமாக வாங்கியும் போதவில்லை. கையிருப்பில் காசும் பயணத்திற்காக, அவசர நிலைமைகளுக்காக ஒதுக்கி வைத்ததைத் தவிர வேறில்லை. கொஞ்ச கத்தரிக்காய் மட்டும் இருந்தது. உணவுப் பொருட்கள் வரும் என்று காத்திருந்து வராத நிலையில், பகலிலேயே வெளியே இருவர் சென்று அரிசி வாங்கி வந்தார்கள். உணவு வர, எத்தனை நாட்கள் எடுக்குமோ என்ற அச்சத்தில், அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சி, கத்தரிக்காயை, இறைச்சி என்ற போர்வையில் வந்த கொழுப்பில் கறிசமைத்து, மேலும் இரு நாட்களை ஓட்டினோம். இரு நாட்களின் பின் தொலைபேசி ஒலித்தது.

    ஆவலுடன் ஓடிச்சென்று தூக்கினார் அந்த வீட்டிற்கு முகவரால் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர். உணவுப் பொருட்கள் தீர்ந்துவிட்டது. கத்தரிக்காய் மட்டுமே உள்ளது என்று அவர் கூற மறுமுனை ஏதோ சொல்லிவிட்டுப் அழைப்பை நிறுத்திவிட்டது. சோர்ந்து போனது அவரது முகம். என்ன சொன்னார்கள் என்று கேட்க, அவர் சொன்னார், என்ன தெரியுமா? கத்தரிக்காயை அவித்து உப்புடன் உண்ணச் சொன்னார்களாம். பசியினால் ஏற்பட்ட களைப்பையும் மீறி மனதில் ஆயிரம் வலிகள் சுள்ளிட்டது. யாருமே பிச்சைக்காரர்களில்லை. தாயகத்தில் ஓரளவேனும் வசதியாய் இருந்தவர்களே. உணவுக்காக இந்தளவு சிக்கனம் பிடித்தது அனைவருக்கும் புது கடுமையான அனுபவமே.

    இதிலும் கொடுமை என்னவென்றால் இந்த பதிலைக் கூறியவரும் ஒரு பயணியே. சிறியவயதுடையவர். ஆனால், அவர்கள் வசதியான பயணிகள். அவர்கள் சொந்தங்கள் முகவர்களுக்கு அடிக்கடி காசு அனுப்பிவைப்பதனால் இந்தப் பாகுபாடு. ஆனால், உணவுக்காக பிறிதாக செலவழிக்க வேண்டும் என்று எந்த முகவருமே, பயண ஆரம்பத்தில் கூறியதில்லை. ஆனால், அவர்கள் பணம் காய்க்கும் பயணிகள் என்பதால் இந்த வேறுபாடு. அந்த நாட்டிற்கான முகவரிடம் சலுகைகளைப் பெறுவதற்காக, இப்படியானவர்கள் சிலர் சாதாரண பயணிகளை தகாத சொற்களாலும் வைவார்கள். வயது குறைந்த இவரும் பயணிகள் மட்டத்தில் பெரிதாகப் பேசப்படுபவராம் என்றார்கள் எம்முடன் இணைந்து கொண்ட நண்பர்கள். முகவர்களும் இப்படியான பயணிகளால் ஆதாயம் வருவதால் அவர்களை வெளியில் அழைத்துச் செல்வதும், தேவையான சகலவற்றையும் வழங்குவதும், மற்ற வீடுகளுக்கு பொறுப்பாக விடுவதும், வீடுகளுக்கான பொருள் விநியோகத்தின்போது அனுப்பிவைப்பதுமாக அற்பசுகம் காட்டி, பலரைத் தமது கைகளுக்குள் செல்லப்ப்யணிகளாக ஆக்கி வைத்திருந்தார்கள். ஆனால், இந்த குறுநில மன்னர்களுக்கு புரியவில்லை, தாங்கள் செல்லாத செல்லப்பயணிகள் என்பது. ஆனால், சாதாரணமான நாங்கள், எல்லா வகையிலும் செல்லாப் பயணிகள் ஆகிவிட்டோம்.

    தாயகத்தில் நாங்கள் அனுபவித்த செல்வாக்குகள், எம்மை யாரும் சீண்டிப்போனால், தட்டிக் கேட்ட பலம், எல்லாவற்றிற்கும் மேலாக உணவு கேட்டபோது எமக்குக் கிடைத்த பதில் என்பன பலருக்கும் வேதனையான, காட்டமுடியாத கோபத்தை தந்திருந்தது.

    தாயகத்தில், இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் என்று இரு பிரதேசங்கள் உண்டு. நான் சிறுவயது முதலே இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்தபடியால், இராணுவத்தினரின் கட்டுப்பாடுகள், அன்றைய நாட்களில் எனக்குத் தாக்கம் தந்ததில்லை (இன்று நிலைமை தலைகீழ், தமிழர்கள் எல்லோரும் பிரச்சினைகளைச் சந்திக்கறார்கள், சொல்லொணாத் துயரம் அனுபவிக்கிறார்கள்). ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்பவர்கள், வெளிநாட்டுப் பயணங்கள், கல்வி, தொழில், மருத்துவம் என்ற இன்னோரன்ன தேவைகளுக்காக வரும்போது இராணுவத்தினரால் பல்வேறு நெருக்குதல்களை சந்திப்பார்கள். அதனால், அவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்யுமட்டும், வெளியே தேவையற்று நடமாடுவதில்லை. அதன் தாக்கத்தின் காரணமாக, நாடு விட்டு வெளிவந்தும், இப்படியான நிலையிலும் அநேகமானோர் எதிப்புத் தெரிவிப்பதே இல்லை. ஏனென்றால், எதிர்த்தால், தண்டனையாக பயணங்கள் நடைபெறும்போது, எதிர்ப்பவர்களை இறுதியாகவே தெரிவுசெய்வார்கள் முகவர்கள். அல்லது உணவுக்கட்டுப்பாடு, வசதியற்ற வீடுகளுக்கான மாற்றம் என்பற்றையும் எதிர்கொள்ள நேரிடும். இதனைச் "சாட்டர்" என்று பயண வட்டாரத்தில் சொல்வதுண்டு. அதனால், அனைத்தையும் பொறுத்துக் கொள்வார்கள்.

    என்னுடன் இருந்தவர்களில் நான் மட்டுமே இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வளர்ந்தவன் (ஜேர்மனியில் இருந்து திரும்பி வந்த அண்ணாவைத் தவிர). அதனால், மற்றவர்கள் காக்கும் பொறுமை எனக்கு வரவில்லை. தவிர, எனது முகவர், எனது நகரத்தைச் சேர்ந்தவர். எனது உறவுகள், நண்பர்களிடம் எனது நிலை தெரியவந்தால், அவரைத் துவைத்தெடுத்து விடுவார்கள். அத்தோடு எனது முன்கோபம், யாரிடமும் பின்விளைவு யோசிக்காமல் சண்டை போடுதல், கைநீட்டுதல் என்பனவும், எனக்கு அளவுகடந்த கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.

    கொந்தளித்துக் கொண்டிருந்த வேளையில், தொலைபேசி ஒலிக்க, நான் எமது வீட்டுப் பொறுப்பாளரைத் தள்ளிவிட்டு தொலைபேசியைத் தூக்கினேன். எதிர்முனையில், முகவர்களிலொருவர். நான் சொன்னேன், உணவு முடிந்து விட்டது. உணவு போடமுடியாவிட்டால் வெளியே போய் வாங்கப்போகின்றேன் அல்லது காவல்துறையினரிடம் சென்று சரணடைந்து தாயகம் திரும்பப் போகின்றேன் என்று நான் எகிற, மறுமுனையிலிருந்து முகவர், உங்களுக்கு உணவு அனுப்பிவைத்திருக்கின்றோம், அதைச் சொல்லத்தான் தொலைபேசி எடுத்தோம் என்றார். நான் உடனே சொன்னேன் தாயகத்திற்கு தொலைபேசி அழைப்பு வேண்டும் என்று. நாளை கட்டாயம் வருவதாகக் கூறி அவர் இணைப்பைத் துண்டிக்கவும், வீட்டின் முன்னே வாகனம் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது. ஜன்னலூடு பார்க்க, சாரதியோடு ஒரு துணைமுகவரும், அவருடன் இன்னுமொரு சிறியவரும் பொருட்களைக் சுமந்து வீடு நோக்கி வந்தார்கள்.

    அவர்கள் வீட்டை நெருங்கி வரவும், பின்னதாக வந்து எம்முடன் இணைந்த நண்பர்களில் ஒருவர் சொன்னார், வந்து கொண்டிருக்கும் சிறியவரின் பெயரைக் குறிப்பிட்டு இவர்தான் எம்மைக் கத்தரிக்காய் அவித்து உண்ணச்சொன்னவர் என்று. அவர் வேறு சமயங்களில் உள்ளியையும் (வெள்ளைப்பூண்டு) சுட்டு உண்ணச்சொன்னவராம். முகவரின் அனுக்கிரகம் அவருக்கு இருந்ததால், வயதுமீறி, அனைவரையும் மரியாதையின்றி கெட்டவார்த்தைகளினால் வைதாலும், எல்லோருமே பொறுத்துக்கொண்டார்கள். எல்லாமே முகவர்களின் வழிநடத்தலே. உணவு கேட்டவனுக்கு கல்லைப்போட்டு உண் என்று சொன்னதைப்போல, உணவு கேட்க மனிதாபிமானமில்லாமல் பதில் சொன்ன அந்தச் சிறுவனைக் கண்டதும் என்னால் கோபத்தை அடக்கமுடியவில்லை. (பதினேழு வயதே தொடங்கவில்லையாம் அவருக்கு. என்னைவிட நான்கு வயது குறைந்தவரானாலும், மிகவும் மெலிந்த தேகம் கொண்ட ஒரு வாடியவர்)

    அவர்கள் வீட்டின் கதவைத் திறந்து பொருட்களோடு உள்ளே நுழைய, கோபத்தில் என்னை மறந்த நான்...

    தொடர்ச்சி...
    Last edited by அக்னி; 21-02-2008 at 07:33 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 3 of 8 FirstFirst 1 2 3 4 5 6 7 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •