Page 2 of 8 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast
Results 13 to 24 of 96

Thread: பசுமை நாடிய பயணங்கள்..! (14)

                  
   
   
  1. #13
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0

    பசுமை நாடிய பயணங்கள்..! (3)

    Quote Originally Posted by அக்னி View Post
    அங்கே எம்மை வரவேற்றது...
    ஒரு குரல். தமிழ்க்குரல். எப்படித் தெரிந்தது என்று நினைக்கின்றீர்கள்..?
    மோசமான ஒரு கெட்ட வார்த்தை சொல்லி வாங்கோ என்று வரவேற்றது அந்தக்குரல். போகப் போகத்தான் புரிந்தது, கெட்டவார்த்தைப் பிரயோகங்கள், வயது வித்தியாசமின்றி, அனைவரிடமிருந்தும், அனைவருக்கும் செல்லும் என்று...

    கண்ணில் மின்னும் கனவுகளில், தூக்கம் தொலைந்து போயிருக்க, இருள் கவ்விய மாடிப்படிகளில் சத்தம் போடாது இருவர் மூவராக அழைத்துச் சென்று, ஒரு வீட்டுக்குள் அழைத்து வந்தார் அந்தத் தமிழர். அவர் அந்த நாட்டில், பணியாற்றும், எம்போன்றபயணிகளின், பயண முகவர்களில் ஒருவர். வீட்டினுள் மேலும் ஒரு சிலர், கட்டில்களிலும், வரவேற்பறை இருக்கையிலும் நித்திரையில் இருந்தார்கள். அதிகாலை நேரமாகையாலும், குளிரில் நனைந்த புதியவர்கள் நாம் ஆகையாலும் சுடச்சுடத் தேனீர் தந்து, புகைபிடிப்போருக்கு சிகரெட்டும் தந்து உபசரித்தார்கள். எல்லோரும் எமது நாட்டவரே... தமிழரே...

    ஆகா! இதுவல்லோ வெளிநாட்டு வாழ்க்கை என்ற எண்ணம் மனதில் கூத்தாடியது. நித்திரை வராததால், நிலத்தில் அமர்ந்தபடி அடுத்து எங்கே அனுப்புவார்கள், எப்போது அனுப்புவார்கள் என்று, வந்தவர்கள் நாம் எமக்குள்ளேயே கதைத்தபடி, விடியலுக்காகக் காத்திருந்தோம். ஆனால், ஆறு மணி தாண்டியும் இலகுவில் விடிய மறுத்தது, நாம் அனுபவிக்கவிருந்த கருமை நாட்களைச் சுட்டிக்காட்டியது என்பதை, இப்போதுதான் உணரமுடிகிறது.

    எம்மை அழைத்து வந்தவரும், நித்திரை செய்து எழுந்துவிட்டார். மற்றும், அனைவரும் எழுந்துவிட்டனர். ஒவ்வொருவராகச் சென்று காலைக்கடன்களை முடித்து வந்ததும், அங்கிருந்தவர்கள் எங்களது தாயக முகவர்களைப்பற்றி விசாரித்துக் குறித்துக் கொண்டார்கள். அவர்கள் அனைவருமே உப முகவர்களும், முகவர்களும் என்பதை பின்நாட்களில் அறிந்து கொண்டோம்.

    அன்றைய தினம், அவர்களே சமைத்துத் தந்தார்கள். உண்டோம். ஏதோ ஒரு வித்தியாசம் சுவையில் ஒன்றிக்க விடவில்லை. தாயகத்தில், தேங்காய்ப்பால் விட்டு சமைப்பது வழக்கம். இங்கு தேங்காய் இல்லை என்பதால், பசுப்பால் அதுவும் பெட்டியில் அடைக்கப்பட்ட பால் பாவிப்பார்களாம். அதுதான் அந்த வித்தியாசம். ஆனால், எங்கள் ஐரோப்பியக் கனவு அனைத்தையும் சகிக்க வைத்தது. கூடவே அம்மாவின் சமையல் ருசி தேடி நாக்கும் அடங்கிப்போனது.

    அடுத்து மிக முக்கியமாக மீண்டும் நடை பழகினோம். அதாவது கீழ் வீட்டில் இருப்பவர்களுக்குச் சத்தம் கேட்கக் கூடாது என்று பூனை போல் நடக்கக் கற்றுத் தந்தார்கள். பேச்சின் சத்தம் குறைக்கச் சொன்னார்கள். எல்லாம், தாராளமான கெட்ட வார்த்தைகளில் சகஜமாக கதைக்கப்பட்டது. முதலில் அருவருப்பாக இருந்தது, பின்னர் பழக்கமாகிப்போனது.

    எம்மை எல்லாம் ஒரு வீட்டில் தங்க வைக்கப் போவதாகவும், அனுப்பிவைக்கும் ஏற்பாடுகள் சரிவந்ததும் அனுப்பி வைப்பார்கள் என்றும் சொல்லிவிட்டு, ஏறத்தாழ நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பல வீடுகளிலும் மூன்று மாதங்களுக்கு மேலாகக் கூட பயணிக்கத் தருணம் பார்த்துக் காத்திருக்கின்றார்கள் என்று சொன்னதும், விரைவான ஐரோப்பியக் கனவு சிதைந்துபோனது. இத்தனைக்கும் அடுத்த பயணத்திற்குத் தயாராக நாங்கள் உடை மாற்றாது காத்திருந்தோம்.

    ஆழம் அப்போதுதான் உணர்வில் கொஞ்சம் பட்டது. என்ன செய்வது? ஆழம் பார்க்காமல் காலை வைத்தபின், அதுவும் திக்குத்தெரியாத, மொழிபுரியாத இடத்தில் வைத்தபின் எப்படி எடுப்பது? ஆட்டுவார் கைப்பொம்மையாக ஆடத் தொடங்கினோம். எமது கடவுப்புத்தகங்களை எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டபின், இரவாகும் வரை காத்திருந்தார்கள். இரவானதும், இரு கார்களில் எம்மை ஏற்றி ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். மொத்தமாக நாம் 12 பேர். ஒரே தடவையில் இரு கார்களிலும் ஏற்றி, நடுநிசியில் கார்கள் விரைந்தன. இரு கார்களிலும் முகவர்களும் ஒவ்வொருவராக வந்தார்கள். நகரத்தினுள்ளேயே ஆளரவமற்ற இடம் ஒன்றை அடைந்து கார்கள் நின்றன. முகவர்கள் இறங்கி, (அவர்கள் ருஷ்கி உரையாடக்கூடியவர்களாய் இருந்தார்கள்) சுற்றுமுற்றும் பார்த்தபின், எம்மை நோக்கி வந்தார்கள். எம்மை சத்தம் போடாமல் இறங்கி வரப் பணித்து அழைத்துச் சென்றார்கள்.

    நாம் சென்றது ஒரு தனிவீட்டை நோக்கி...

    தொடர்ச்சி...
    Last edited by அக்னி; 25-01-2009 at 12:35 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    முன்னரே இவ்வாறான கொடுமைகளை எங்கள் புலம் பெயரும் சகோதர சகோதரிகள் அனுபவிக்கின்றனர் என்று பல்வேறு கதைகளூடு கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் அவற்றை உங்கள் வரிகளில் காணும் போது என்னவோ ஒரு இனம் புரியாத வலி நெஞ்சத்திலே....
    Quote Originally Posted by அக்னி View Post
    எங்கள் ஐரோப்பியக் கனவு அனைத்தையும் சகிக்க வைத்தது
    இந்த ஒரு சகிப்புத்தன்மையாலேயே இந்த கரடு முரடான பாதைகளிலெல்லாம் நம்மவர்கள் பயணித்தார்கள் என்பது உண்மையே!!.

    அக்னி!!

    நிகழ்வுகள் மகிழ்சி தரக் கூடியன அல்லவென்றாலும் மனதைவிட்டகலாதவை, அவற்றைச் செதுக்கும் உங்கள்ள் வார்த்தைப் பிரயோகங்கள் அழகு!.

    பராட்டுகிறேன் மனமகிழ்ந்து!
    Last edited by ஓவியன்; 17-06-2007 at 08:29 PM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    பராட்டுகிறேன் மனமகிழ்ந்து!
    நன்றி ஓவியன்...
    தொடர்ந்தும் வாசித்துக் கருத்துக்களைத் தாருங்கள்...
    அடுத்த பதிவை நாளை இடுவேன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    உலகின் எந்த மூலைக்கு போனாலும் தாயகம் கொடுக்கும் சந்தோஷம், சுதந்திரம் வேறு எங்கும் கிடைக்காது. உலகின் எத்தனையோ உயர்தர ஐந்து நட்சத்திர விடுதிகள் இருந்தாலும் அம்மா செய்து கொடுக்கும் எளிய உணவின் சுவைக்கு ஈடாகாது. பயண அனுபவங்களை சுவைபட எழுதுவது என்பது ஒருவகையான கலை. அதுவும் உங்கள் பயண அனுபவம் அழகான நடையுடன், இனி என்ன நடக்குமோ ஆர்வத்துடன் செல்கிறது.

    கடந்த காலத்தில் நடந்து முடிந்துவிட்ட சம்பவங்கள் தான் என்றாலும் அப்போது நீங்கள் பட்ட வேதனைகளுக்கும், வருத்தங்களுக்கும் இப்போது வடிகாலாக எங்களுடைய ஆறுதல் பதிவுகள் இருக்கும்.வாழ்வாதாரத்திற்காக ஒவ்வொரு மனிதனும் தன் தாயகத்தை விட்டு இடம்பெயரும் போது இது போன்ற கசப்பான நிகழ்வுகளை தவிர்க்கமுடிவதில்லை. அந்த அனுபவங்களும் வாழ்க்கையில் நமக்கு படிப்பினையை தருகின்றன என்பதால் அவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டியதும் அவசியம். எதிர்நீச்சல் இல்லாத வாழ்க்கையில் சுவை ஏது..?

    உங்களுடைய அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள். படிக்க மிக ஆர்வமாயிருக்கிறேன்.
    அன்புடன்,
    இதயம்

  5. #17
    புதியவர் சிதம்பரம்'s Avatar
    Join Date
    04 Dec 2005
    Location
    உடுமலைப்பேட்டை
    Posts
    18
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    1
    Uploads
    0
    அருமை. தொடருங்கள
    இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்று விடும்
    அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்

  6. #18
    புதியவர்
    Join Date
    23 Apr 2007
    Posts
    10
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    அன்பின் நண்பா தொடருங்கள் உங்கள் அனுபவத்தை.அடடா மிகவும் கடினமான பாதை.........

  7. #19
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    புலம்பெயருதல் என்பது எத்தனை வலிதரும் என்று உங்கள் கட்டுரையில் காண முடிகிறது. சுகவாசியாய் வாழ்ந்துவிட்டு,அம்மா சமையல்,அண்ணன் தங்கை பாசம்,சொந்த ஊரின் சுவையான வாழ்க்கை எல்லாவற்றையும் பின் தள்ளிவிட்டு, வேருடன் பிடுங்கிய செடியாய் வேறிடம் போய் வாழ்வதென்பது எத்தனை வேதனை. சோகத்தையும் சுவையாய் சொல்லும் உங்கள் எழுத்துக்கள் அருமை அக்னி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    நன்றி நண்பர்களே..!

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #21
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0

    பசுமை நாடிய பயணங்கள்..! (4)

    Quote Originally Posted by அக்னி View Post
    நாம் சென்றது ஒரு தனிவீட்டை நோக்கி...
    ஆளரவம் அற்ற நேரம். ஆனால், வீடுகள் செறிந்த இடம். தனித்தனியான வீடுகள். எங்கும் இருள் கவிந்து இருந்தது. எம்முடன் வந்த தமிழ் முகவர்கள், எங்களை அழைத்துச் சென்று, ஒரு வீட்டின் கதவைத் திறந்தார்கள். வீடு தெருவிலிருந்து 20 அடிகள் தள்ளி இருந்தது. கதவைத் திறந்ததுதும் உள்ளே உடனேயே இன்னுமொரு கதவும் இருந்தது. குளிர் அதிகமான நாடு என்பதால், தனி வீடுகள் இவ்வாறுதான் இருக்குமாம் என்று சொன்னார்கள் எமது பாதுகாவலர்கள்.

    ஒரு வழியாக உள்ளே போனதும், கதவுகளை மூடியபின் மின்விளக்குகளை ஏற்றினார்கள். உள்ளே சில தளவாடங்களுடன் வெறுமை மிக அதிகமாக இருந்தது. எம்மிடம் நாளை வருவதாகவும், வெளியே தாங்களே பூட்டி விட்டுப் போவதாகவும் சத்தமின்றி இருக்கும்படியும் கூறிவிட்டு, எமது பாதுகாவலர்கள், எம்மை வீட்டுச்சிறையில் வைத்துவிட்டு வெளியேறினார்கள்.

    ஒரு பூட்டப்பட்ட வீட்டினுள்ளே திறக்கப்பட்டது எமது வெளிநாட்டுப் பயணத்தின் தாமதம். இது தெரியாமல், வீட்டைச் சுற்றிப் பார்த்தோம். ஒரு அடுப்பு இருந்தது. (எரிவாயு அடுப்பு, 4 அடுப்புகள் கொண்டது) தேநீர் போடுவதற்குரிய பொருட்களை அப்போதுதான் கூடவே கொண்டு வந்து தந்திருந்தார்கள். (கூடவே பாணும். பாண் என்றால் Bread). சில கோப்பைகளும், மேலும் பாத்திரங்கள் சிலவும் இருந்தன. தாயகத்தை விட்டு நீண்ட நாட்கள் புறப்படுவதற்கேற்ற உடைகளுடனேயே இருந்ததால், ஆசுவாசப்படுத்திக் கொள்வோம் என்று, உடை மாற்றி விட்டு, முகம் கழுவ சென்று தண்ணீரைத் திறந்தால், ஜில் என்று சிலிர்த்தது முழு உடம்பும். எமது நாட்டில், குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் நீர் குழாயினூடாக வந்து கொண்டிருந்தது. பக்கத்திலேயே இன்னுமொரு குழாய்க்கான (சுடுநீர்) திருகி இருந்தது. திருகிப் பார்த்தும் தண்ணீர் தண்மையான நீராகவே இருந்தது. (தண்ணீரின் அர்த்தம் அன்றுதான் புரிந்தது). எனவே, முகத்தை நனைத்துவிட்டு, வர, எங்கள் பன்னிருவரில் ஒருவர் தேநீர் ஊற்றி தர குடித்துவிட்டு, எமது மாளிகையை சுற்றிப் பார்த்தோம். மிதமான குளிரின் ஆரம்ப நாட்களான போதும், எம்மால் தாங்கமுடியாத குளிர். ஆனால், வீட்டில் வெப்பமாக்கிகள் வேலை செய்தபடியால், கதகதப்பாக இருந்தது.

    தொலைபேசி இருந்தது. காதில் வைத்துப் பார்த்தால் சத்தம் கேட்டது. ஆனால் பழைய காலத்துத் தொலைபேசி ஆகையால், இலக்கத்தை அழுத்தும் வசதி இருக்கவில்லை. சுழற்றும் வசதி தான் இருந்தது. ஆனால், சுழற்றும் அந்த வட்டம் கழட்டப்பட்டிருந்தது. ஏனென்றால், மேலும் பல வீடுகளில் அடைபட்டிருக்கும் எம்போன்றவர்கள் அடிக்கடி இடம் மாற்றப்படும்போது, தொடர்பு கொண்டு அரட்டை அடிப்பதுண்டாம். வெளியில் வீணாக தொடர்பு கொள்ளக்கூடாது என்பதால், எமது பாதுகாவலர்கள் கழற்றிவிடுவதுண்டாம். பின்நாட்களில் அறிந்துகொண்டோம்.

    ஜன்னல்கள் அனைத்தும் காகித மட்டை கொண்டு மூடப்பட்டிருந்தது. இரவில் வெளிச்சம் செல்வதைத் தடுப்பதற்காகவே இந்த ஏற்பாடாம். இப்படியாக பாதுகாக்கப்பட்ட (?) வீடு. ஒரு வழியாக பின்னிரவு தாண்டும் வேளையில், கண்ணுறங்கத் தயாரானோம். படுப்பதற்கு எந்தவிதமான படுக்கைகளோ அல்லது விரிப்புக்களோ இல்லாத நிலையில், எம்முடன் நாம் கொண்டு வந்திருந்த சாறத்தை (லுங்கி என நினைக்கின்றேன்) விரித்துவிட்டு, படுத்து உறங்கினோம்.

    எழும்பிப் பார்த்தால், இருட்டாகவே இருந்தது. ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால், வெளிச்சத்தின் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. எழும்பி ஒரு வழியாக குளிர் நீரில், காலைக்கடன்களை (மதியம் தாண்டிவிட்டது) விறைப்புடன் முடித்து, முதல்நாள் கூடவே கொண்டு வந்திருந்த பிரெட்டை, வெறும் தேநீருடன் உண்டு முடித்து விட்டு, ஊர்க்கதை பேசி, அமர்ந்திருந்தோம்...

    இடையே சிறிதாக மறைவை விலக்கி வெளியே நோட்டம் விட்டோம். வீட்டின் சுவர் முழுவதும், முந்திரிகை படர்ந்து, கனிகள் குலைகுலையாக தொங்கின. நாவூற, அதை கட்டுப்படுத்த முடியாமல், ஜன்னலைத் திறந்து, பறிப்போம் என்றால், ஜன்னல் முழுவதுமாக சுவருடன் பொருந்தியிருந்தது. மேலே ஒரு சிறு சதுரம் மட்டுமே திறக்க முடிந்தது. அடுத்தடுத்து இரு தடித்த கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருந்தன. (குளிர் வருவதைத் தடுக்க). அந்த சிறிய ஜன்னல் திறப்பினூடாக, ஓரிரண்டு முந்திரிக் குலைகளை வெற்றிகரமாகப் பறித்து, பகிர்ந்து உண்டோம்.

    இரவும் மீண்டும் வந்தது. ஆனால், வருவதாகச் சொல்லிச் சென்றோரைக் காணவில்லை. முதற்பயணம் ஆகையால், எனக்கு மனதில் பயம் பிடித்துக் கொண்ட்து. ஆனால், வந்த உறவுகளில் சிலர், முன் அனுபவம் கொண்டவர்கள். அவர்கள் வேறு நாடுகளூடாகப் பயணம் செய்ய முயன்று, பிடிபட்டு, நாடு திருப்பப்பட்டு, இவ்வழியாக முயற்சிப்பவர்கள். அவர்கள் தைரியம் தர, சிறிது பயம் களைந்து காத்திருந்தோம். பசிக்கத் தொடங்கிவிட்டது. தேநீர் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.

    வெளியே மீண்டும் இருள் சூழ்ந்த அந்த சமயத்தில்..,

    தொடர்ச்சி...
    Last edited by அக்னி; 21-02-2008 at 07:30 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  10. #22
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அக்னி உங்கள் பசுமை நாடிய பயணம் இப்போது ஒரு திகில் கதையைப் படிப்பது போன்று ஒரு அனுபத்தைத் தரத் தொடங்கியிருக்கிறது, ஊர் பேர் தெரியா தேசத்திலே கிட்டத்தட்ட வீட்டுச் சிறையில் உண்ண, அருந்த உருப்படியாக ஒன்றுமேயின்றி நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது.

    எப்படித் தான் சமாளித்தீரோ?

    ஆனால் அக்னி, புலம் பெயரும் நம்மவர்கள் இப்படி இன்ன பிற அல்லலுற்று சிறுகச் சிறுக சேமித்து அனுப்பும் அவர் தம் உழைப்பின் வெகுமதி கூடப் பிறந்தவளின் திருமணத்திற்கும், பெற்றவர்களின் மருத்துவச் செலவிற்கும் தம்பிமார் தம்மைப் போல் அல்லல் படாது படிக்கவும் உதவுகிறதே என்று எண்ணும் போது கிடைக்கும் திருப்தியை அளவிட வார்த்தைகளே இல்லையே. அத்துடன் அப்படி தன் உறவுகளைப் பேணும் அந்த ஒருவனோ ஒருத்தியோ கோயில் கட்டிக் கும்பிடப் பட வேண்டியவரன்றோ!.

    உமது அனுபவத்தை உம் அழகு வரிகளில் செதுக்கி எம்முன்னே படைத்துக் கொண்டிருப்பதற்கு மீண்டுமொரு முறை நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும் நண்பரே.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #23
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    சுடுகிறது அக்னி எழுத்துகள்...
    அனுபவங்களை கேட்க்கும் போது வேறு எவருக்கும் வரகூடாதே என்று ஒரு முறை நினைத்து கொண்டேன். எடுத்துகள் சொல்லும் விதம் இன்ன்னும் மனதை பதைக்கவைக்கிறது....

    எத்துனை துன்பங்கள் தாண்டி...
    பாதையில் எத்தனை முட்க்கள்
    எல்லாம் தாங்கி எங்களுடன் சிரித்த முகத்துடனும், கண்ணியத்துடனும்...

    நீர் வாழ்க்கையில் நன்றாக வருவீர்....
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  12. #24
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    எத்தனை வேதனைகள் நிரம்பிய, எதிர்பார்ப்புகள் கூடிய பயணம்! வாழ்க்கையின் இன்னொரு முகத்தை வெட்ட வெளிச்சமாக்கும் உங்கள் எழுத்துக்கள் எதிர்கால சந்ததிக்கு படமாக, பாடமாக அமையட்டும். தொடருங்கள் நண்பரே.

Page 2 of 8 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •