அக்கினி புலம்பெயர்ந்து வாழும் அழேக இலங்கை நண்பர்கள் கடந்து வந்தபாதை இது. பல நண்பர்கள் சொல்லக்கேட்டிருக்கின்றேன். இப்போது உங்கள் பதிவு மூலம் இன்னும் ஆழமாக உணர முடிகின்றது. உங்கள் இரண்டு வருட பயணத்தை தொடர்ந்து தாருங்கள்.
அன்புடன்
அக்கினி புலம்பெயர்ந்து வாழும் அழேக இலங்கை நண்பர்கள் கடந்து வந்தபாதை இது. பல நண்பர்கள் சொல்லக்கேட்டிருக்கின்றேன். இப்போது உங்கள் பதிவு மூலம் இன்னும் ஆழமாக உணர முடிகின்றது. உங்கள் இரண்டு வருட பயணத்தை தொடர்ந்து தாருங்கள்.
அன்புடன்
Last edited by அக்னி; 28-06-2007 at 07:42 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
இன்றுதான் முழுக்கதைகளையும் வாசித்தேன். பொறுமை இல்லை. அந்த பாதகனை என்ன செய்தீர்கள்?
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
Last edited by அக்னி; 30-06-2007 at 12:53 AM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அக்னி!
ஒருவேளை உணவிற்காய்!, மன்றாட வேண்டிய நிலையில் இருப்பது மனிதராய் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் என்றுமே வரக் கூடாத ஒன்று!
சுடுகிறது வரிகள்!
தொடருங்கள் நண்பா! − கைகொடுக்கக் காத்திருக்கிறேன்.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
உங்களுடைய அனுபவம் மிக சுவையாக இருக்கிறது என்றால் நீங்கள் பட்ட கஷ்டத்தை பார்த்து ஏளனம் செய்தது போலாகிவிடும். விறுவிறுப்பாக இருக்கிறது என்றால் பொய்யாக புனையப்பட்ட கதையை குறித்தது போலாகிவிடும். படித்து மனம் கஷ்டப்பட்டது என்றால் எழுதி நீங்கள் அடுத்தவர்களை கஷ்டப்படுத்திவிட்டீர்கள் என்றாகிவிடும். நல்லபடிப்பினை என்றால் நீங்கள் ஏமாந்ததாகிவிடும். ஆனால், நான் சொன்ன அனைத்து உணர்வுகளும் உங்கள் அனுபவத்தில் இருக்கிறது. நமக்கு நடந்த ஒரு கெட்ட அனுபவத்தை பொய் கலக்காமல் எழுத வேண்டுமென்றால் நம்மை பாதிக்கும் நிறைய விஷயங்களை அனுசரித்துக்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு நேர்மை ரொம்ப அவசியப்படும். அந்த நேர்மை உங்கள் எழுத்துக்களிலேயே மின்னுகிறது. பாவம், ரொம்ப தான் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள். உங்களோடு ஒப்பிடும் போது நான் பட்ட ரயில் அனுபவம் எவ்வளவோ பரவாயில்லை. உங்களின் பகிர்தலால் அந்த பாரத்தை எங்களிடம் பகிர்ந்ததால் அதை இறக்கி வைத்த நிம்மதி. எங்களுக்கு அதை பகிர்ந்து, உங்கள் சோகத்தை பங்கிடுவதிலும், இது போல் இனி நடக்காதிருக்க ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையும் கிடைக்கிறது. தொடரட்டும் உங்கள் நல்ல பணி..!
இந்த அனுபவத்தை நீங்கள் கதைகள் பகுதியில் இட்டதில் உடன்பாடில்லை. காரணம், பொய்யான சம்பவங்களை கொண்டு புனையப்பட்ட கற்பனைக்கதையல்ல. ஒரு இளைஞன் எதிர்கால கனவுகளுடன் அந்நிய தேசம் போய் பசி, ஏக்கம், தூக்கம், பொருள், நம்பிக்கை, கனவு தொலைத்து கஷ்டப்பட்ட அனுபவம். இந்த அனுபவம் எங்களுக்கு நிறைய நீதி சொல்கிறது. எனவே இதற்கு சரியான இடம் "நீதிக் கதைகள், சுவையான சம்பவங்கள்" என்பது என் தாழ்மையான கருத்து. நன்றி அக்னி..!
அன்புடன்,
இதயம்
நன்றி இதயம்!
உங்களின் தீர்க்கமான பார்வைக்கு..,
உண்மையிலேயே, அன்று அனுபவித்த துன்பங்களை, நினைத்துப் பார்த்தால்,
இன்று சுவையான சம்பவங்களாக, சிரிப்பைத்தான் தருவதுண்டு.
ஆனாலும் ஆழம் அறியாமல் மோகம் கொண்டு வெளிநாடு தேடி ஓடுவோருக்கு,
எனது அனுபவங்கள் சிறு படிப்பினையாகவேனும் இருக்க வேண்டும் என்ற
எண்ணத்திலேயே மன்றத்திலே இந்த பயணத்தை ஆரம்பித்தேன்.
உங்களின் பரிந்துரைக்கேற்ப, மேற்பார்வையாளர்களின் துணையோடு,
திரியை இடம் மாற்றி விடுகின்றேன்...
Last edited by அக்னி; 01-07-2007 at 09:28 AM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
மனம் கணக்கிறது நன்பரே, புலம்பெயரும் ஒவ்வொருவரும் கவணிக்க வேண்டிய தொடர்.
பகிர்ந்துகொன்டமைக்கு நன்றி அக்னி
தொடரட்டும் இந்த தொடர்
அன்புடன்
மாக்ஸ்மேன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks