மஞ்சள் அழகா....!
மாதுளம் பூவழகா...!
கொஞ்சல் அழகா...... கோபுரம் தானழகா....!
வஞ்சி அழகா.... வாய்வெடித்த பூவழகா....!
குஞ்சம் அழகா... கூந்தல் மலரழகா....!
இல்லை பஞ்சமில்லா மஞ்சம் அழகா.....!
மிஞ்சும் அழகு மெருகூட்டும் அழகெதென்றால்....
வெள்ளை நெஞ்சம் அழகு....!
நெடுநாட் காதலித்தும் அஞ்சுதற்கு அஞ்சுகின்ற
வஞ்சமில்லா நெஞ்சமே அழகென்பேன் யான.....!.
சாதம் இடுகின்ற சந்தனக்கையழகா....!
அவள் பாதம் படுகின்ற பக்குவப் புல்லழகா....!
நாதம் கொடுக்கின்ற நங்கை குரலழகா....!
பாதம் நோகாமல் பக்குவமாய் நடை நடந்து....
தோதாய் வளர்ந்திருக்கும்
கார்குழலை வாரிவிட்டு.....
கோதிப்பூ முடித்து காதலாள் காத்திருந்தால்
என்ன அழகு மின்னும் அழகு......!
Bookmarks