இது என் காதல் கதை.
தளிர்கள் மேல்
மெல்ல ஊர்ந்து
நாணிய ஒரு பனித்துளியின்
சுபாவத்தை
உதிரத்தாலேயே மூட்டுனாய்
நான் சலித்த சிரிப்புகளை
இதயங்கள் போட்டு
துலக்கிவிட்டு
சிந்திய பார்வையை
கண்துடிப்பில் பொறுத்திவிட்டாய்
அகப்பட்ட இடத்திலெல்லாம்
காதலை வளர்த்தி
என் கூந்தலில் தொங்கி
மெலிந்துபோகும் பூக்களை
புன்னகைக்க வைத்தாய்
கண்களுக்குள் மண்டியிட்டு
கருவிழியோடு சண்டையிட்டு
நாள் முழுவதும் எனக்குள்
கனவுகளைக்
கெடுத்துவிட்டாய்
மெத்த பார்வையால்
கபடமாடி, ஒரு இதழின்
நெஞ்சைப் பிடுங்கினாய்
ஏனென்றுகூட கேள்வி எழுப்பாமல்
உன்னுள் நுழைந்து
மலர்கிறேன்
ஒரு பூவின் பிரசவம் போல.
Bookmarks