கல் அறை பூக்களால்
கல்லறை சேர்ந்தோர்
எத்தனை பேர்
நேசித்தவன் மறுத்ததால்
சுவாசிக்க மறுத்தோர்
எத்தனை பேர்
நேசிக்க மறுத்ததால்
யோசிக்க் மறந்து
சுவாசத்தை நிறுத்தியோர்
எத்தனை பேர்
சாதல் செய்யும்
காதல்
தேவையா மானிடா
நீ சொல்
கல் அறை பூக்களால்
கல்லறை சேர்ந்தோர்
எத்தனை பேர்
நேசித்தவன் மறுத்ததால்
சுவாசிக்க மறுத்தோர்
எத்தனை பேர்
நேசிக்க மறுத்ததால்
யோசிக்க் மறந்து
சுவாசத்தை நிறுத்தியோர்
எத்தனை பேர்
சாதல் செய்யும்
காதல்
தேவையா மானிடா
நீ சொல்
அமரன் கவிச்சமரிலிருந்து நேரே இங்கு வந்ததால் அந்த அவசரம் கவிதையில் தெரிகிறது.
நேசித்தவன் மறுத்ததால்
சுவாசிக்க மறுத்தோர்
எத்தனை பேர்
நேசிக்க மறுத்ததால்
யோசிக்க் மறந்து
சுவாசத்தை நிறுத்தியோர்
எத்தனை பேர்
இரண்டுக்கும் ஒரே அர்த்தமல்லவா வருகிறது.
சாதல் செய்யும்
காதல்
தேவையா மானிடா
நீ சொல்
அழகான அடுக்குச் சொற்கள். ஒரு ரிதத்தோடு படித்தால் சுகமாய் உள்ளது.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நீங்கள் கூறுவது உண்மையெனினும் தவிர்க்கமுடியாததொன்றாக இருக்கிறது. நிஜமான காதலை மறுக்கும் போது ஏற்படுவது இயலாமை. சாதலுக்கு ஒரு அசாத்தியமான துணிவு வேண்டும். அது காதலித்தவர்களுக்கு இலகுவில் வந்துவிடுகிறது.
நிஜக்காதல் தேவை. அதை உணரும் மனிதமும் தேவை. தற்சமயம் காதலை பணத்திற்கும் காமத்திற்கும் பலியாக்கும் கேவலமும் நடந்தேறுகிறது.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
இல்லை சிவா
தடித்து அடையாளப்படுத்தி இருப்பதைக் கவனியுங்கள்.
மறுத்தோர் என்றால் தமது சுவாசத்தை மட்டும் நிறுத்தும் தற்கொலையைக் குறிக்கின்றது.
நிறுத்தியோர் என்றால் அடுத்தவர் மூச்சை நிறுத்துபவரையும் குறிக்கின்றது. காதலிக்க மறுத்தவர்களை கொலை செய்வாரே சிலர் அவர்களையும் குறிக்கின்றது.
முதல் பின்னூட்டத்திற்கு நன்றி சிவா.
ஓ....நீங்கள் அப்படி சொல்கிறீர்களா? வார்த்தைகளுக்குள் பொதிந்திருக்கும் அர்த்தங்கள்தான் எத்தனை. வியக்கிறேன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வார்த்தை பிரயோகத்தில் எந்த தப்புமில்லை அமரன். சரிதான். காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டோர்,காதலிக்க மறுத்ததால் காதலியையோ காதலனையோ கொன்றவர் என்ற இரண்டு அர்த்தங்கள் வருகிறது. அதனால்தான் வியந்தேன். மிக அருமை அமரன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
காதல் செய்வதே
காதல்!
நினைவுகளோடு வாழ்வதும்
காதல்!.
நினைவுகளை வரிகளாக்குவதும்
காதல்!
அந்த வரிகளுக்காய் வாழ்வதும் கூட*
காதல்!
சாதல் செய்வதல்ல
காதல்!
புரிந்து கொள் மானிடா!
Last edited by ஓவியன்; 26-06-2007 at 07:20 PM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அடடா, இந்த சின்னவயதில் என்ன தத்துவமழை.
வியந்தேன் அமர், சொற்களின் கோர்வை அட்டகாசம், அபாரம் அருமை.
அப்பயே சுட்ட தோசையை நோகாமல் அழகாக திருப்பி போட்ட ஓவியன், உங்கள் கவிதையும் பிரமாதம்.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
அடடா இது...தாமரை அண்ணாவின் பாடம் முடிந்ததும் அவசரமாக அள்ளித்தெளித்த கோலம். நன்றி ஓவியன் மற்றும் ஓவியாக்கா. கவிதைப்போடியில் பங்கெடுத்த என் கவிதையின் விமர்சன் எங்கே அக்கா மற்றும் ஓவியன். ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks