Results 1 to 8 of 8

Thread: முக்கோண புலம்பல்களின் நியாயங்கள்!

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர் டாக்டர் அண்ணாதுரை's Avatar
    Join Date
    30 Jan 2007
    Posts
    64
    Post Thanks / Like
    iCash Credits
    8,981
    Downloads
    0
    Uploads
    0

    முக்கோண புலம்பல்களின் நியாயங்கள்!

    பெற்றவளின் புலம்பல்......

    'அடிப் பாவி.........
    பொத்தி பொத்தி வளர்த்தேனே...
    பெத்தவயிறு எறிய,
    பித்துபிடிக்கவச்சிட்டியே....
    பத்துமாதம் மடியில் சுமந்தவளை
    பாரம் என நினைத்து,
    என்னை இடையில் இறக்கிவிட்டு,
    இடையில் வந்தவனோடு ஒடிய
    பாவி மகளே.....
    பெத்தவயிறு எறியுதடி,
    ஊர்கூடி சிரிக்குதடி!

    பெற்றவனின் புலம்பல்.....

    அஞ்சுமாதத்தில்
    பிஞ்சு கால்களால் நெஞ்சை
    எட்டி எட்டி உதைத்தாய்;
    கொஞ்சும்மொழி பேசினாய்...
    நெஞ்ச வலியெள்ளாம் மறந்தேன்,
    சூரியனை முந்திக்கொண்டு
    பிஞ்சு வயதில்
    பள்ளிக்கு ஓடினாய்....
    பார்த்து பார்த்து பூரித்தேன்!
    இன்று.......
    இருபது வயதில்,
    வழியில் வந்தவனோடு ஓடினாய்!
    வெட்கட்தின் உச்சிசூட்டில்
    வெந்ததடி பாவி என் மனம்!!

    ஓடியவளின் புலம்பல்.....

    'பத்துமாதம் சுமந்தாய்....
    பொத்தி பொத்தி வளர்த்தாய்....
    பாசத்தைமட்டும் ஏன் பதுக்கிவைத்தாய்?
    நெஞ்சில் சுமந்து வளர்த்தாய்....
    நெஞ்சில் இருந்ததை அறிந்தாயா?
    வீட்டை காடாக்கி,
    தணிக்கை செய்யாத வார்தைளால்
    உள்ளத்தை இரணமாக்கினாய்...
    மரணப்படுக்கையில் கிடந்த உணர்வுகளை
    வழியில் வந்தவன் மட்டும் அறிந்தான்!
    காதலைக்காட்டி தாலியைக் கட்டினான்...
    ஊரைக்கூட்டி ஒப்பாரிவைக்கும் நீ,
    என்னை கேட்டாயா?'.

    (இந்த புலம்பல்களில்....நியாயமானது எது?)
    Last edited by டாக்டர் அண்ணாதுரை; 11-06-2007 at 10:06 AM.
    நான் செய்யாவிடில் யார் செய்வது?
    இன்றே செய்யாவிடில் என்று செய்வது?


  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    கருத்துக்களும் சிந்தனைகளும், அந்த அந்த சட்டத்தின் நிலையிலிருந்தே எழும். அவர் தம் கருத்துக்களை பூரணமாக அறிந்து தெளிய வேண்டின் அவர்களது சட்டத்திலேயே நின்று பார்க்கவேண்டும்.

    அவ்வாறு இங்கே மூன்று வெவ்வேறு சட்டத்திலே ஒரு விடயம் சொல்லப்பட்டிருக்கிறது....

    அருமை அண்ணா!

    பி.கு - இங்கே இதுவரை நண்பர்கள் எவரும் பின்னூட்டமிடாதது ஏனோ?

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    புதியவர்
    Join Date
    17 Apr 2007
    Posts
    14
    Post Thanks / Like
    iCash Credits
    8,955
    Downloads
    0
    Uploads
    0
    ஒவ்வொருவரின் உள்ள புலம்பல்களையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள் வளர்க உமது படைப்பு

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    புலம்பல்கள்.. கண்ணீர் அலம்பல்கள்.

    நேரடியான கவிதை.. எங்கும் நடக்கும் கவிதை.. அதோடு இப்போது எனது பார்வையில் புலம்பலின் சிறந்தது எது?

    ஓடியவள் நினைப்பது என்ன?


    'பத்துமாதம் சுமந்தாய்....
    பொத்தி பொத்தி வளர்த்தாய்....


    இதிலிருந்து தெரிவது என்னவென்றால் தாய் மிக பாசமாகத்தான் வளர்த்தியிருக்கிறாள்... பொத்தி பொத்தி வளர்த்தலுக்கு அதுதானே அர்த்தம்.. அது புரியாமலா ஓடிவிட்டாள் மகள்?

    [I]பாசத்தைமட்டும் ஏன் பதுக்கிவைத்தாய்?
    நெஞ்சில் சுமந்து வளர்த்தாய்....
    நெஞ்சில் இருந்ததை அறிந்தாயா?[/ஈ]
    பாசம் சிலருக்கு கிடைப்பதில்லை... காரணம் வெளிக்காட்டலின் தயக்கம் தான். நெஞ்சில் சுமந்து வளர்த்திருப்பதாகக் கூறுவதால் அப்பனுக்கு நிச்சயம் பாசமிருந்திருக்கும்... ஆனால் நெஞ்சில் இருந்ததை அறிவது இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களுக்கு சிரமமாக இருக்கிறது. அதேசமயம் அதைச் சொல்வதற்கும் மகள்கள் கஷ்டப்படுகிறார்கள்


    வீட்டை காடாக்கி,
    தணிக்கை செய்யாத வார்தைளால்
    உள்ளத்தை இரணமாக்கினாய்.


    ..
    என்ன தவறு செய்தீர்கள் மகள்?? ஒரு தாய் அல்லது தகப்பன் திட்டுவார்கள் என்றால் தேவையில்லாத காரணமாக இருக்க முடியாது... தகாத வார்த்தைகளால் திட்டுவது கிராமத்துப் புறத்தில் மிகுந்து இருக்கும்... நகரத்தார் ரொம்ப கேவலமாக திட்டுவார்கள் என்பது தனிக்கதை


    மரணப்படுக்கையில் கிடந்த உணர்வுகளை
    வழியில் வந்தவன் மட்டும் அறிந்தான்!
    காதலைக்காட்டி தாலியைக் கட்டினான்...
    ஊரைக்கூட்டி ஒப்பாரிவைக்கும் நீ,
    என்னை கேட்டாயா?'.


    சில பெற்றோர்களுக்கு சாதிப்பிரச்சனைகள் இருக்கின்றன.. ஊரோடு ஒத்துவாழ் என்று கொள்கையோடு இருப்பவர்கள் இவர்கள்.. அதோடு உணர்வுகளை சொல்லி அழும் அளவிற்கு அவர்கள் நிலை இருந்திருக்காது. ஊரைக்கூட்டி ஏன் ஒப்பாரி வைக்கவேண்டும்/???? ஆதங்கம் தான்.. மானம் போய்விட்டதே என்று நினைப்பது..

    சிலர் சாதிமுறைகளால் மானம் போய்விட்டதாக எண்ணூவார்கள். எது எப்படியோ இருபது வயதுவரை வாழவைத்த பெற்றோர்களை மறப்பது துர்லபம். தவறான காரியம்.. செய்யக் கூடாது...

    ஊரைவிட்டு ஓடிப் போய் காதலித்து கலியாணம் செய்வது தவறான விஷயம்

    ஓடிப்போவோர்
    முதலில் செய்கிற காரியம்
    உள்ளம் திகட்ட
    உயிர் அதிரப் புணர்வதுதான்..

    −−மகுடேசுவரன்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    Quote Originally Posted by Anand View Post
    பெற்றவளின் புலம்பல்......

    'அடிப் பாவி.........
    பொத்தி பொத்தி வளர்த்தேனே...
    பெத்தவயிறு எறிய,
    பித்துபிடிக்கவச்சிட்டியே....
    பத்துமாதம் மடியில் சுமந்தவளை
    பாரம் என நினைத்து,
    என்னை இடையில் இறக்கிவிட்டு,
    இடையில் வந்தவனோடு ஒடிய
    பாவி மகளே.....
    பெத்தவயிறு எறியுதடி,
    ஊர்கூடி சிரிக்குதடி!

    (இந்த புலம்பல்களில்....நியாயமானது எது?)



    இதில் அனைவ*ரின் புல*ம்ப*லுமே நியாய*மான*துதான் அதில் குறிப்பிட்டு எதை சொல்வ*து என்று தெரிய*வில்லை
    Last edited by ஆதவா; 18-06-2007 at 09:15 AM. Reason: அதிகப்படியான மேற்கோள்
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    மிக வித்தியாசமாய் சிந்தித்து அவரவர் பார்வையில் உலவ விட்டிருக்கிறீர்கள் கவிதையை... யாருடையதும் நியாயம் என்று கற்பிக்கமுடியாது.... நியாயமில்லை என்றும் கூட.........
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    மூன்று புலம்பல்களும் முரண்பட்டவை.
    காரணம் பெற்றோர் மிகவும் பாசமாக வளர்த்துள்ளமை

    '''அடிப் பாவி.........
    பொத்தி பொத்தி வளர்த்தேனே...
    பெத்தவயிறு எறிய,
    பித்துபிடிக்கவச்சிட்டியே....''

    இந்த வரிகளில் தெரிரிகிறது....

    ''அஞ்சுமாதத்தில்
    பிஞ்சு கால்களால் நெஞ்சை
    எட்டி எட்டி உதைத்தாய்;
    கொஞ்சும்மொழி பேசினாய்...
    நெஞ்ச வலியெள்ளாம் மறந்தேன்,
    சூரியனை முந்திக்கொண்டு
    பிஞ்சு வயதில்
    பள்ளிக்கு ஓடினாய்....
    பார்த்து பார்த்து பூரித்தேன்!''


    இதனை மகளும் மறுக்கவில்லை.

    ''
    'பத்துமாதம் சுமந்தாய்....
    பொத்தி பொத்தி வளர்த்தாய்....''

    பின் என்ன தான் பிரச்சினை?
    புரிந்துகொள்ளாமை!
    தம் மகளின் மனம் புரிந்துகொள்ளாத பெற்றோர்.
    பெற்றோரின் உள்ளக்கிடக்கையை உணராத மகள்!


    அவரவர் நியாயங்கள்!!!!


    மகள் அவர்களுக்குப் புரியவைத்திருக்கலாம்.
    புரியவைக்க முயன்று தோற்று இருக்கலாம்.

    எனவே இந்த புலம்பல்களை ஒப்புமை படுத்துவதே தவறென்பேன்.
    மொத்தத்தில் இது ஒரு புதுமையான கவிதை எனலாம்!
    பாராட்டுக்கள் ஆனந்த்!
    Last edited by கலைவேந்தன்; 18-06-2007 at 09:22 AM.

  8. #8
    இளையவர் பண்பட்டவர் டாக்டர் அண்ணாதுரை's Avatar
    Join Date
    30 Jan 2007
    Posts
    64
    Post Thanks / Like
    iCash Credits
    8,981
    Downloads
    0
    Uploads
    0
    கருத்துகளை வர்ணமாக்கிய அனைவருக்கும் நன்றி. அவரவர் பார்வையில் அவர்கள் செய்வது நியாயமாகப் படுகிறது. அதை நியாப்படுத்துவதும் அவர்களது உரிமையாகப் படுகிறது. இருப்பினும் எது சரியான செயல் என்பது நம் அனைவருக்குக்குமே தெரிந்த ஒன்றுதானே.

    தெரிந்தே செய்யும் தவறு.....பாசத்தை மறுப்பதும் மறைப்பதும். தண்டனை தாமதித்தே வரும்!!!
    மீண்டும் மன்றம் வந்த இன்பம்...இனிக்கிறது.
    நான் செய்யாவிடில் யார் செய்வது?
    இன்றே செய்யாவிடில் என்று செய்வது?


Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •