பெற்றவளின் புலம்பல்......
'அடிப் பாவி.........
பொத்தி பொத்தி வளர்த்தேனே...
பெத்தவயிறு எறிய,
பித்துபிடிக்கவச்சிட்டியே....
பத்துமாதம் மடியில் சுமந்தவளை
பாரம் என நினைத்து,
என்னை இடையில் இறக்கிவிட்டு,
இடையில் வந்தவனோடு ஒடிய
பாவி மகளே.....
பெத்தவயிறு எறியுதடி,
ஊர்கூடி சிரிக்குதடி!
பெற்றவனின் புலம்பல்.....
அஞ்சுமாதத்தில்
பிஞ்சு கால்களால் நெஞ்சை
எட்டி எட்டி உதைத்தாய்;
கொஞ்சும்மொழி பேசினாய்...
நெஞ்ச வலியெள்ளாம் மறந்தேன்,
சூரியனை முந்திக்கொண்டு
பிஞ்சு வயதில்
பள்ளிக்கு ஓடினாய்....
பார்த்து பார்த்து பூரித்தேன்!
இன்று.......
இருபது வயதில்,
வழியில் வந்தவனோடு ஓடினாய்!
வெட்கட்தின் உச்சிசூட்டில்
வெந்ததடி பாவி என் மனம்!!
ஓடியவளின் புலம்பல்.....
'பத்துமாதம் சுமந்தாய்....
பொத்தி பொத்தி வளர்த்தாய்....
பாசத்தைமட்டும் ஏன் பதுக்கிவைத்தாய்?
நெஞ்சில் சுமந்து வளர்த்தாய்....
நெஞ்சில் இருந்ததை அறிந்தாயா?
வீட்டை காடாக்கி,
தணிக்கை செய்யாத வார்தைளால்
உள்ளத்தை இரணமாக்கினாய்...
மரணப்படுக்கையில் கிடந்த உணர்வுகளை
வழியில் வந்தவன் மட்டும் அறிந்தான்!
காதலைக்காட்டி தாலியைக் கட்டினான்...
ஊரைக்கூட்டி ஒப்பாரிவைக்கும் நீ,
என்னை கேட்டாயா?'.
(இந்த புலம்பல்களில்....நியாயமானது எது?)
Bookmarks