நான் மும்பையில் பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலயத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த சமயம்.
அங்குள்ள அணுசக்திநகரில் வசித்த தமிழர்களெல்லாம்
இணைந்து கலைமன்றம் ஒன்றை நடத்தி வந்தோம்.
அதில் எங்கள் நாடகக்குழுவும் அடங்கும். திரு வெங்கட்
என்பவர் எங்கள் நாடக இயக்குனராக இருந்தார்.
துறையில் பணிபுரியும் மற்ற நன்பர்கள்தான் நடிகர்கள்.
எத்தனையோ நாடகங்களை மேடையேற்றியிருக்கிறோம். அப்படிபட்ட ஒரு சமயத்தில்
நடந்த சம்பவம் இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.
எங்கள் குழுவில் திரு.சுந்தரம் என்பவர் இருந்தார்.கலகலப்பானவர்.
பொதுவாக எல்லா நாடகங்களிலும் நகைச்சுவை வேடங்களையே ஏற்று நடிப்பார்.
ஒரு நாடகத்தில் அவரின் தந்தையைக் கொன்றவரை சுட்டுக்கொல்கிறதைப்போல
காட்சியமைப்பு. பொதுவாக இந்த மாதிரி காட்சிகளுக்காக துப்பாக்கி சத்தத்துக்கு
கார் பேட்டரியை short செய்தால் உண்டாகும் சத்தத்தை பயண்படுத்துவார்கள்.
இந்த காட்சிக்கும் அப்படியே ஏற்பாடு செய்து ஒரு ஆளையும் திரைக்குப்பின்னால்
உட்காரவைத்துவிட்டார்கள்.இவர் பேசும் வசனத்தில் கடைசியாக ஒரு வசனத்தை
கேட்ச் டயலாக்-காக அந்த ஆளிடம் கொடுத்திருந்தார்கள்.அதாவது அந்த
குறிப்பிட்ட வசனம் பேசி முடித்ததும் இவர் இரண்டு வொயரையும் இணைத்து
சத்தம் உண்டாக்கவேண்டும். சாகப்போகிறவர் சட்டைப்பையில் சிகப்பு வண்ண
சாயம், அடித்தால் உடையக்கூடிய வகையில் ஒரு பாக்கெட்டாக கட்டி
வைக்கப்பட்டிருக்கும். துப்பாக்கி சத்தம் வந்ததும் அவர் ஓங்கி மார்பில் அடித்துக்கொண்டால்
சிகப்புச்சாயம் ரத்தமாக வெளிவரும். இதுதான் ஏற்பாடு. காட்சியும் ஆரம்பித்துவிட்டது.
சுந்தரம் தன் தந்தையைக்கொன்றவனைப்பார்த்து வீராவேசமான வசனத்தைப் பேசிவிட்டு
துப்பாக்கியை எடுத்து நீட்டுகிறார்,இறக்கப்போகிறவரும் தயாராக இருக்கிறார்....
சத்தம் வரவில்லை. சத்தம் வந்தால்தான் அவர் சாக முடியும். இரண்டு விணாடிகள் முழித்துவிட்டு
அந்த பேட்டரிக்காரனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுக்க நினைத்து மீண்டும் கோபாவேசமாக
அதே வசனத்தை பேசி விட்டு துப்பாக்கியை நீட்டுகிறார். சத்தம்....ஊஹூஹும். சுந்தரம் டென்ஷன்
ஆகிவிட்டார்.சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு,அந்த காட்சிக்காக அங்கு மேடையில் வைத்திருந்த
பழம் நறுக்கும் கத்தி கண்ணில் பட்டதும்,துப்பாக்கியை பையில் வைத்துவிட்டு,கத்தியை எடுத்துக்கொண்டார்.
கத்தியால் குத்த சத்தம் தேவையில்லை. அதனால் அந்த வில்லனைப்பார்த்து,\\\'உன்னை துப்பாக்கியால்
சுட்டால் உடனே செத்துவிடுவாய் அதனால் உன்னை துடிக்கத்துடிக்க கத்தியால் குத்தி சாகடிப்பேன்
என்று சொல்லிக்கொண்டே கத்தியை ஒங்கினார்.............\"டுமீல்\"....... நீண்ட நேரமாய் சத்தத்திற்காக
முயற்சித்துகொண்டிருந்தவன் ஒருவழியாய் சத்தத்தை உண்டாக்கியேவிட்டான்.நாடகம் பார்த்துக்
கொண்டிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்ல.கொஞ்சநேரத்தில் புரிந்துகொண்டு...ஒரே சிரிப்புதான்.
சீரியஸான காட்சி சிரிப்பாய் சிரித்தது. ஒருவழியாய் திரையை மூடிவிட்டு அந்த பேட்டரிக்காரனை
துரத்திக்கொண்டு சுந்தரம் ஓட அவர்கள் பின்னால் நாங்கள் ஓட...அன்று அந்த காட்சி சொதப்பினாலும்
எல்லோரும் ஒரே ஜாலி மூடில் வீடு திரும்பினோம்.
Bookmarks