ஏமாற்றங்களிலான சரளை நிறைந்த என் பூமியில் மாற்றத்தை விதைத்த முதல் மழைத்துளி நீ பெருமழையாய்ப் பெய்த ப்ரியத்தில் பூமி நனைந்தது தன்னை இழந்தது;கவலை மறந்தது இதமான உரையாடலில் பதமானது பயிர் வளர்க்க ஊடுபயிராய் நுழைந்து பெரும்பயிராய் வளர்ந்த கதிரசைவில் தீண்டும் மென்தென்றல் பரிவு சுமந்த பனித்துளி வார்த்தைகள் உள்நுழையும்போதெல்லாம் உளக்குளிர்ச்சி என்னுள் பசுமை வளர்த்த இயற்கையின் ரூபமே வாடத வாழ்வை வரமாய்த் தா! ஈர இதழ்கள் உறிஞ்சிய சூரியன் சிவந்த ரோஜா.
Bookmarks