இரவின் இருட்டில் நிலவின் ஒளியில்
பனியின் சாரலில் நெஞ்சோடு இருக்கக்
கட்டிய என் கைகளின் நடுவில்
நீயும் உன் நினைவுகளில்
உலவிய நேரங்களும்...
பேருந்தில் பயணிக்கும்
சில மணி நேரங்களில்
இறுக்க மூடிய கண்களுக்குள்
உனை அடக்கி உலகம் மறந்து
மெளனமாய் பேசிய நேரங்கள்.....
கோயிலில் தரிசன வரிசையில்
பல மணிநேரம் நிற்கும் நேரங்களின்
கடவுளின் பெயருக்கு பதிலாய்
உன் பெயரை உச்சரித்த நேரங்கள்..........
கடற்கரையில் அலையின்
ஆவேசமும் மனிதர்களின்
இரைச்சல்களுக்கும் நடுவே
எனக்கு மட்டும் எல்லாமே
நிசப்தமாய் என்
நினைவுகளை நீ மட்டுமே
நிரப்பிய நேரங்களில்..
காதலனும் காதலியும்
காதல் பாட்டு பாட
திரை அரங்கினுள்
கண்கள் மட்டும்
திரையை பார்க்க
மனம் என்னவோ
உன் நினைவுகளில்..
களித்திருக்கும் நேரங்களில்......
என்னின் எத்தனை நேரங்களை
இனிமை ஆக்குகிறாய் நீ.....
என்னுடன் எப்போதும் நீ
இருந்தால் எத்தனையும் அத்தனை
ஆகுமே என்னவனே.....!!!
Bookmarks