சுய பரிசோதனை...
இனிக்கின்ற துரோகம்
முகத்தில் அடித்தும்
வலிக்கவில்லை..
காரி உமிழ்ந்த எச்சில்
முகம் பட்டும்
கசக்கவில்லை..
முகமூடி கழற்றி
சொரூபம்
காட்டிய போதும்..
ஆடை கழற்றி
நிர்வாணம் காண்பித்து
மதி மயக்கிய போதும்...
இப்படியான
பல அதிர்வுகளை
ஏற்படுத்தி விட்டுப் போனாலும்...
அசை போட கிடைத்த
அர்த்தமுள்ள சிலாகிப்பாகவே
மாறிப் போயின...
Bookmarks