காதலனின் கோணந் தாண்டிக்
காதலியின் கோணந் தாண்டிக்
காமக் கோணலை விட்டுக்
காதலின் கோணத்தில் நின்றுக்
காணும் நோக்கைப் பெற்றால்
காதில் தேங்கும் முழக்கம்
போதுமே காதல் மட்டும்!!!!!!!!!!!
காதலனின் கோணந் தாண்டிக்
காதலியின் கோணந் தாண்டிக்
காமக் கோணலை விட்டுக்
காதலின் கோணத்தில் நின்றுக்
காணும் நோக்கைப் பெற்றால்
காதில் தேங்கும் முழக்கம்
போதுமே காதல் மட்டும்!!!!!!!!!!!
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
"காலையிலே தலைவலியும்
மாலையிலே உடல்வலியும்
காலந்தோறும் குடும்பச்சுமையை
இருதோளில் சுமந்தவன் எனக்கு
கடமைகள் ஊராளம்..
கவலைகள் தாராளம்..
குடும்பத்துத்தடையுடைத்து
இன்னுமொரு படியேற தவி தவிக்கும்
பரிதாப இளைஞன் எனக்கு
போதாதே காதல் மட்டும்........."
நல்ல கவிதை நாகரா...
பாராட்டுக்கள்
வாழ்க்கை என்பதும்
ஒரு புதுக்கவிதைதான்..
என்ன ஒரு புதுமை..
நம்மால் விளங்கவே முடியாத
புதிர்க்கவிதை
www.shiblypoems.blogspot.com
இங்கே சொடுக்கவும்..
http://www.tamilmantram.com/vb/showt...172#post373172
உமது கோணத்தில்
அருமையானதோர் பின்னூட்டக் கவி!
தலை வலிக்கும்
உடல் வலிக்கும்
கவலைகளே காரணம்!
கவலைகள் தாண்டக்
கடமைகள் ஆற்றக்
குதிக்கும் உற்சாகம்!
மெய்ஞ்ஞானப் படிகளேறக்
குடும்பம் தடையல்ல!
இளைஞனும்
பரிதாபப் பொருளல்ல!
நவயுக விடியலாய்
நீ எழுவதற்கு
உன்னையே நீ காதலிக்கும்
காதல் மட்டும் போதுமே!
யாவரையும் காதல்(அன்பு) செய்ய
அதுவுனக்கு எப்போதும் உதவுமே!
உம் பாராட்டுக்கு நன்றி, பின்னூட்டக் கவிக்கு நன்றியும் வாழ்த்துக்களும். கவலைகளின் கோணந் தாண்டிக் கடமைகள் ஆற்ற உமக்குள் வாழும் "அன்பே சிவம்" உதவட்டும்!
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
வாழ்க்கை என்பதும்
ஒரு புதுக்கவிதைதான்..
என்ன ஒரு புதுமை..
நம்மால் விளங்கவே முடியாத
புதிர்க்கவிதை
www.shiblypoems.blogspot.com
இங்கே சொடுக்கவும்..
http://www.tamilmantram.com/vb/showt...172#post373172
மேலே ஊட்டுகிறான் அன்பை!
அன்பின் ஊற்றைக்
கீழே போட்டுத்தாக்குகிறான்!
வன்பெனும் கூற்றை
உதைத்தே ஓட்டுகிறான்!
என்னை மாற்றி
மேலே ஏற்றுகிறான்!
உச்சி தாண்டிய
மேம்பாலம் காட்டுகிறான்!
பாலந் திறந்தே
பாரில்
பாலாய் அன்பைக் கொட்டுகிறான்!
யார் நீ என்றே கேட்டால் அறைகிறான்
செவிப்பறைகள் அதிர
அன்பே சிவம்!
என் மர மண்டையில் உறைக்கிறது
வள்ளலவன் உபதேசம்
போதுமே காதல் மட்டும்!!!!!!!!!!!
உம் புரிந்துணர்வுகளுக்கு நன்றி ஷிப்லி.
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks