மிக மிக நன்றி..சிவா அவர்களே. எனது காலம் கடந்த பதில் பின்னுட்டத்திற்கு மன்னிக்கவும்.
Type: Posts; User: Dr.சுந்தரராஜ் தயாளன்; Keyword(s):
மிக மிக நன்றி..சிவா அவர்களே. எனது காலம் கடந்த பதில் பின்னுட்டத்திற்கு மன்னிக்கவும்.
மிகவும் நன்றி...கலை. காலம் கடந்த பதிலுக்காக மன்னிக்கவும்.
படிக்காமலேயே வாழ்த்துகள் சொன்ன தீபா அவர்களுக்கு மிக்க நன்றி!!!
மிகவும் நன்றி வசிகரன்.
அழகிய பின்னுட்டம் தந்ததற்கு மிக்க நன்றிகள் சுகந்தப்ரீதன். பொதுவாக, இரண்டு அடிகள் இருப்பது குறள் வெண்பா என்றும், மூன்று அடிகள் வருவது சிந்தியல் வெண்பா என்றும், நான்கு அடிகள் வருவது அளவியல் வெண்பா...
மிகவும் நன்றி கலைவேந்தன்...கடைசி வரி வலியக் கொணர்ந்தது என்பதில் ஐயமில்லை. கடிகாரமும் கடல் அலைகளையும் காணுங்கள் என்றால் சரியான விளக்கமாக இருக்கும்.
தருமென்று பார்த்தால் தருமோநற்ப் பீலி
வருமென்றால் வாராநல் வாழ்வு
உப்பின்றி ஊணினை உண்பதற்கு ஒவ்வாதே
சப்பென்ற தாக்கம்...சலிப்பு
மன்னிக்கவும், நீண்ட நாட்கள் வர இயலவில்லை. விவிலியத்தில் உள்ள ஒரு வசனத்தை மனதில் வைத்து இதை எழுதினேன். எனக்கும் இதில் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. அவசரத்தில் எழுதிவிட்டு சென்றுவிட்டேன். சரி இப்போது...
உப்புக்கல் கொண்டொருவன் ஓர்சிற்பம் செய்ததனை
தப்பாய்த் தரைமீது வைத்து
மிகவும் நன்றி ஜெகதீசன் ஐயா...அழகான சாற்றுக்கவி தந்தீர் நேரிசை வெண்பாவில்... இதுபோன்ற பின்னுட்டங்கள் என்னை மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை.
வீணாகச் செல்வத்தை வீண்விரயம் செய்கின்றார்
காணாத காட்சிகளைக் கண்டு
தருக்/கி/எழு = நிரை/நேர்/நிரை = புளிமாங்கனி (கிஎ...என வராது என்பது என் கருத்து ஐயா )
தருக்/கியெ/ழு = நிரை/நிரை/நேர் = கருவிளங்காய் , எனவே தருக்கியெழு என்று இருந்தால் சரி எனப்படுகிறது ஐயா
தாழ்ந்ததோ போதும் தருக்கி--- எந்நாளும்
வீழ்ந்தே கிடப்பதோ வீண்
உகரம் குறைந்து ஒலிப்பதால் இவ்வாறு செய்வதே சரி என்று தோன்றுகிறது ஐயா
கனிச்சீர் வந்துள்ளதே, ஜெகதீசன் ஐயா..சரி செய்யுங்கள் ?
வாவென்று வந்தோரை வாழ்த்தினோம் வந்தனமாய்
தாவென்றார் தந்தோம்நாம் தாழ்ந்து
நிச்சயம் தமிழ் பிழைக்கும் நண்பரே. மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று சொன்னவரை / கனவுகண்டவர்களை எல்லாம் அது பொய்ப்பிக்கும். வருகைக்கு நன்றி
மிகவும் நன்றி ஜானகி அவர்களே :)
மிக நன்றி சிவா.ஜி அவர்களே. இதுபோன்ற பின்னுட்டங்கள் என்னை மேலும், மேலும் எழுதத்தூண்டுகிறது. எனது உடல்நலம் இப்போது ஓரளவுக்கு பரவாயில்லை. அலுவலகத்தில் வேலைப்பளு கூடுதலாகியுள்ளது:)
நல்லறம் செய்திடுக நல்லதுவே ஆயினும்
இல்லறத்தை நன்றாய் இயக்கு
தாராளமாக, கலைவேந்தன் அவர்களே...நானும் உங்களை சந்திக்க ஆவலுடன் உள்ளேன். அடுத்தமுறை ஊருக்கு வரும்போது சொல்லுங்கள் அதற்குத் தகுந்தார்ப் போல் ஏற்பாடு செய்யலாம்.:)
மிகவும் நன்றி கலைவேந்தன் அவர்களே...உண்மையில் உங்களின் முன்பு நான் ஒன்றுமில்லை...சாதாரணம்தான்.
எள்ளிநகைப் பார்கள் எனவெண்ணி மன்றத்தில்
தள்ளிநிற் கின்றேன்நான் தாழ்ந்து