இயற்கையினை நண்பனாக்கி
ஓடிப்பிடித்து விளையாடிய*
இனிய ஞாபகங்கள்
கண்களில் கண்ணீரோடு
கனவாக கரைந்தோடுகின்றது
இன்றைய நவீனயுகத்தினிலே...!
Type: Posts; User: இனியவள்; Keyword(s):
இயற்கையினை நண்பனாக்கி
ஓடிப்பிடித்து விளையாடிய*
இனிய ஞாபகங்கள்
கண்களில் கண்ணீரோடு
கனவாக கரைந்தோடுகின்றது
இன்றைய நவீனயுகத்தினிலே...!
கவலைகளை புன்னகைகொண்டு
எதிர்கொள்வதே பக்குவம்
பக்குவமடைந்த்தவனின்
மிகச்சிறந்த ஆயுதம்
புன்னகை மற்றும் மெளனம்..
~~ **நன்றி
கடந்திட்ட காலம்
கனவென தோன்றிட
பின்னோக்கிடும்
நினைவுச் சிதறல்களில்
சிக்கித் தவிக்கின்றது
என் இதயம்...!
நினைவுகளில் நிஜங்களைத்
தொலைத்து - நிழலினைத்
தொடர்கின்றேன் நிஜமென
ஆஹா அமர், அதனால் தான் பல பேர் தேடிட்டே இருக்காங்களா ?
தேடுவதில் பிரச்சனை இல்லை ஆனால் அடி முடியை தேடின கதையா போயிடுமோ எண்டு தான் யோசனையாய் இருக்கு பார்ப்பம்
என்னுள் கரைந்திட்ட
உன்னைத்
தேடித்...
நன்றி அமர்..
நீங்கள் சொல்வதும் சரி தான்..!
எனக்குள் உன்னை
தேடித் தேடி
என்னை நானோ
தொலைத்து விட்டேன்..!
நிலவின் குளிர்மை
ஆயிரம் நட்சத்திரங்கள்
சேர்ந்தாலும் கிடைக்காது
அதனால் தான் என்னவோ
மனம் அங்கு அலைபாய்கின்றது..!
உன் நினைவுகளை
குடையாக்கி - என்னைச்
சுடும் வெறுமையை
கடந்து போகின்றேன்
எங்கேனும் நிரந்தரமாய்
இழைப்பாறிட...!
நேரத்தின் பிடியினில்
அகப்பட்டிட்ட விட்டில்
பூச்சிகள் நாங்கள்...!
கல்லெறி கண்டு
கலங்கிய விழிகளில்
ஆயிரமாயிரம் விடையறியா
கேள்விகளை கண்டுகொள்ள
யாருமில்லை...!
அழகிய வரிகள் ஓவ்வொன்றிலும்
கடலையாய் ஆர்ப்பாரித்திடும்
ஒருவித வலி கலந்த
ஏக்கம்.
பணத்தைத் தேடி
உறவை, பாசத்தை விட்டு
கடலோடி செல்லும்
அனைவரையும் ஆக்ரமித்திடும்
ஒருவித ஏக்கம் கலந்த வலி
உங்கள்...
நன்றி ஓவியன்...!
நிச்சயமாக, காலம் அதற்கு மருந்தாகக்கூடும்..நன்றி ஆதவா...!
கவி வரிகள் அருமை அமரன்.. நன்றி
நிதர்சனமான உண்மை ஆரேன்.. ஆனால் கைகூடியதோ கூடவில்லையோ அது நினைவுகளின் கனத்தை பொருத்தது. சிலருகு சில நினைவுகள் முட்களாய் குத்துவதை விட தென்றலாய் இதயத்தை வருடிச் செல்வதுமுண்டு..!
வழிவிட்டது விதியென
விதி மீது பழியிட்டு
தரை மீது தலைவைத்து
கண்ணீரைக் கரைப்பதில்
கரைந்திடாது கயவர்கள்
கல்மனம்.!
காத்திருக்கிறேன் என
கண்ணீர் மல்க
செவ்விதழ் கூப்பி
முத்தமிட்டென்னை வழியனுப்பிய
ஆருயிர்க் குழந்தைக்காய்
உடலை உரசிச் செல்லும்
சன்னங்களுக்கிடையே
உயிரைத் தேக்கி
காத்திருக்கிறேன்
விடியலை...
தொடர்ந்தும் வாழ்வேன்
உன்னால் நான்
சுமந்திடும் நம்
குழந்தைக்காய்...!
சிரித்த நிமிடங்கள்
ரசித்த தருணங்கள்
கனவுகளை ஊடுருவி
உயிரினைத் தழுவிய
நினைவலைகள் அனைத்தும்
இன்று - அனு அனுவாய்
உயிரைத் துழைத்தெடுக்கும்
உயிர் கொள்ளியாய்
தொடர்ந்து வருவேன்
என்றென்றும் உன்னை
நிழலாயல்ல நினைவாய்..!
நன்றி அமரன், நான் மிக்க நலம்.. தாங்கள் நலம் தானே ?
நிற்கின்றேன் உன்
முன்னாள் என்
கனவுகளை உன்
கனவுகளோடு சங்கமித்து
ஈருயிர் கொண்டு
ஓருயிர் சுமக்க..!
எங்கு தொடங்கி எங்கு முடிப்பதென தெரியவில்லை இருந்தாலும்.. இக் கவி படித்த போது மனதில் ஓடிய எண்ணங்களின் தொடர்ச்சி
கடந்து போன காலங்களில்
கலையாத உன் நினைவுகளால்
செல்லரித்துப் போனது
என் வாழ்வும்..!
சிரிக்க மறந்தவர்களுக்கு
சிறந்த மருந்து இக் கவி,,
கவியை ரசித்தேன்
இழையோடும் சிறு புன்னகையோடு,,
வாழ்த்துக்கள் வசீகரன்..!