மன்ற உறவுகளுக்கு நன்றி
Type: Posts; User: sathyamani; Keyword(s):
மன்ற உறவுகளுக்கு நன்றி
என்னுள்ளே உறைந்து
போயிருக்கும்
உன் நினைவுகளை
கிளறிப்பார்க்கையில் என்
கண்ணில் ததும்பும் கண்ணீரே
என் பேனாவின் மை .....
குடைக்குள் ஒளிந்து கொண்டாய்
உன்னை தொடமுடியாத
சோகத்தில் மண்ணில் விழுந்து
புரள்கிறது மழை
என்னதான் உறவு
உன்னைத்தவிர வேறு
எதைப்பற்றியும் எழுத மறுக்கும்
என் பேனாவிற்கும் உனக்கும் .....
நிலவு தேய்வதும் இல்லை
வளர்வதுமில்லை அது
அவ்வவ்போது ஒளிந்து விளையாடுகிறது
உனது அன்பை போல .......
என்ன பெயர் வைக்கலாம் உங்கள் குலதெய்வமா எங்கள் குலதெய்வமா போராட்டம் ..எனக்கும் மனைவிக்கும் ....மாதங்கி என கொஞ்சிக்கொண்டு இருந்தால் மூத்தவள்..யாரென கேட்டேன் என் பிரண்டோட பாப்பா என்றாள்...
வானம் தரையில் தெரிந்த நாளது
நினைவு சிறகுகளில் சிக்கெடுத்து கொண்டது மனம்
மங்கலாக ஏதோ படர்கிறது
நிலவின் ஒளியை ஒத்ததாய் மனதில்
பள்ளங்களின் ஆழம் தெரியாமல்
யோசிக்கும் பாதங்களோடு எதையோ தேடுகிறேன்...
மழையின் சாரலோடு
உன் நினைவுகளில் நனைந்தபடி
வாகனத்தில் சென்ற கருஞ்சாலைகளில்
சிதறிகிடக்கிறது வண்ணங்களில்
காதலின் சிறு சிறு புன்னகைகள்
பிரிவு வலிதான் என்றாலும் சுகமானது
தேவதைகள் வாழ்ந்த வீடாம்
காற்று சொல்லி போனது
அதன் வாசமும் உன் அருகாமையை அழைத்து வந்தது
நீ உதறிபோன சிரிப்பின் ஒலியும் சிதறிகிடந்தது
அள்ளமுடியாது தெரியும் எல்லாம் உன் சாயல்
சுவாசிக்கிறேன் காற்றை...
உன் மந்தகாசபுன்னகையாய் விழுந்தது இன்று மழை
கொஞ்சம் கொஞ்சமாக இதயம் நனைத்தது
மழையில் நனைந்த ஈரக்காலங்கள் தான் எத்தனை அழகு
என்னை போன்று மழையை சாளரங்கள் வழியே ரசிப்பவள் இல்லை நீ
நீ மழையோடு...
தோழரின் கவிதை அருமை ...பகிர்ந்து கொள்வோம் இன்னும் உணர்வுகளை
நான் தான் பாதிக்கபட்டவன் என நினைத்தால் எனக்கு ஏகப்பட்ட தோழர்கள் நம் மன்றத்தில் அனைவரின் கவிதைகளும் அருமை
நன்றி தோழர்
காற்றின் பக்கங்களில் எதிரொலிக்கிறது என் குரல்
பாறைகளில் பட்டும் படாமலும் செல்லும் தண்ணீராய்
வா காத்திருக்கிறேன் கடலாய்
சங்கமிப்போம் மீ ண்டும் பிரிவதற்கு
மீண்டும் பிரிந்து...
எனக்கு கடந்த காலமெல்லாம்
நினைவில்லை
நீ கடந்து போனகாலத்தை தவிர
பிரிகின்ற நொடியில் பிரியாமாய் சொன்னாய்
யாரையாவது மணந்து கொள் என
மரண தீர்ப்பு எழுதிவிட்டு
மனம் திருந்தி வாழச்சொல்லும் நீதிபதியாய்
உன்னுடன்
பேசாத நாட்கள்
எல்லாம்
தனியே பேசி
சிரிக்கின்றேன் அது தானே...காதல்..வாழ்த்துகள்
மெலிதாய் என் இடையுரசி
நீ நடந்துவந்த நடைபயணங்கள்
நெருக்கமாய் என் தோள் சாய்ந்து
நீ துயில் கொண்ட* பேருந்து பயணம்
இறுக்கமாய் என் கரம் பற்றி
நீ வலம் வந்த ஆலயபிரகாரம்
ஓர் மழைக்கால குளிரில்
16 செல்வங்களும் பெற்று வாழா வாழ்த்துகள்
:icon_rollout:வருக சாஜித்... தங்களின் வரவு நல்வரவாகட்டும்.
வருக..... பிராங்க்லின்.
எப்போதாவது பெய்யும் மழை துளி
வாசலில் நீ இட்ட கோலத்தை லேசாய்
சிதைத்துவிட்டு போகும்
மழை மீது எனக்கு கோபம் தான்
இருப்பினும் மழை எனக்கு பிடிக்கும்
அவள்
எங்கயோ கேட்கின்ற கெட்டி மேளம்
காற்றில் மிதந்து வரும் அட்சதை மஞ்சளின்
மகரந்த துகள்...
காதுகளை பிளக்கும் திருமண வீட்டில்
இனிய தோழர்களூக்கு, என் பெயர் மணிகண்டன் கவிதைகளுக்காக நான் சத்யா என்ற என் தோழியின் பெயரில் எழுதுகிறேன்..
இனிய தோழர்களூக்கு, என் பெயர் மணிகண்டன் கவிதைகளுக்காக நான் சத்யா என்ற என் தோழியின் பெயரில் எழுதுகிறேன்..
உறக்கம் தொலைத்து யோசித்து
இரவை தொலைத்து எழுதி
நான் ஆசையாய் கோர்த்த வார்த்தைகள் எல்லாம்
காயங்களாகவே சிதறிக்கிடக்கிறது
உன் அமிலம் தடவிய வார்த்தையில்
அதெப்படி பூப்போன்ற இதழ்களில்
பொத்தி...