இந்த மன்றத்தில்தான் முதன் முதலில் தமிழ் எழுதிப்பழகினேன்.
கவிதைகளும் கூட. நாவலுக்கான முதல் முயற்சி ஆரம்பமானதும் இங்குதான்.
நிறைய விமர்சணங்கள், சண்டைகள்..
எல்லாம் இன்று நினைக்கையில்.. உதட்டோரம்...
Type: Posts; User: rambal; Keyword(s):
இந்த மன்றத்தில்தான் முதன் முதலில் தமிழ் எழுதிப்பழகினேன்.
கவிதைகளும் கூட. நாவலுக்கான முதல் முயற்சி ஆரம்பமானதும் இங்குதான்.
நிறைய விமர்சணங்கள், சண்டைகள்..
எல்லாம் இன்று நினைக்கையில்.. உதட்டோரம்...
பிரபஞ்சம் பற்றிய ஐந்தடுக்குக் கவிதை..
நீர்ப்பரப்பின் மேல் விழும்
மழைத்துளி ஏற்படுத்திய
வட்டங்களாய்
உணர்ந்திருக்கிறேன்
சமயங்களிலேனும்..
அணைக்காமல் எரிந்த
சிகரெட்டை வந்தணைக்கும்
அவரவர்க்கு தோன்றும் பசி கவிதையாயிருப்பின்
தாராளமாகத் தொடரலாம்..
பசி..
தனித்த உலகில்
பசித்த மிருகமாய்
அலைகிறேன்..
வளைவு நெளிவுகளில்
பசலையாய் படரும்
பசி வேறு விதமாய்..
அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு,
நலம்தானே?
நான் அவ்வப்பொழுது வந்து போய்க் கொண்டிருந்தாலும் பெரிதாகப் பங்கெடுக்கவில்லை. நேரமின்மை மற்றும் படித்தல். நல்ல படைப்புகளைத் தேடித் தேடிப் படித்தும் பார்த்தும்...
அகாலம் கடந்த காலத்தில்
பயணிக்கும் பொழுது
ஒரு துகளாய்
எதிர்ப்படுகிறாய்.
காலம் கடந்த எனது
பயணத்தில்
குறுக்கிடும் நீ
ஒரு முடிவிலி..
அது என்னவோ காதல் பற்றி
எழுதும் போது மட்டும் மனம்
உள்ளக் கிளர்ச்சியில் தவிக்கிறது..
காலம் அகாலம் சூன்யம் முடிவிலி
கடந்து சிந்திக்கிறது...
வாழ்த்துக்கள் நண்பன்..
நிழல்கள்...
ஒரு வார்த்தையை விதவிதமாக பொருள் உணர முடியும் என்பதற்கு இந்தக் கவிதைத்தொகுப்பு சான்று..
நண்பனின் ஆழ்ந்த ஆளுமையைக் காண மீண்டும் அமைந்த வாய்ப்பு இது.. தொடருங்கள் நண்பன்...
தரைகீழ்த் தாவரத்தின் காற்றுக் காதலி பற்றிய நான்கடுக்குக் கவிதை..
நானொரு தரைகீழ்த் தாவரம்..
எனது வேர் மண்டலங்கள்
உன்னைச் சுகிக்கத் தேடுகின்றன..
உன் மீதான மோகத்தை
என் வேர் முடிச்சுக்களில்...
நான் ஒன்று நினைத்து ஆரம்பிக்க
நண்பன் அதைத் தொடர..
மன்மதன் வேறுவிதமாய் ஆரம்பிக்க..
பாரதியும் கிடைத்த சந்தர்ப்பத்தில் தொடர..
மகிழ்ச்சியாகயிருக்கிறது....
விமர்சணங்களுக்குப் பதிலாக கவிதையாவே...
மரம் அனுப்பும் கவிதை..
மரம் உதிர்த்த
இலைகள் மண்ணை
நோக்கி வருகின்றன..
எனக்கான கவிதைகள்
ஏதேனும் அதில்
எழுதப்பட்டிருக்கலாம்
எனும் எதிர்பார்ப்போடு
இல்லோன் இன்பம் காமுற்றாங்கு
அரிது வேட்டனையால் நெஞ்சே - காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியாதோயே..
-பரணர், குறுந்தொகை
தலைவனுக்கு இடம் குறித்து நேரம் குறித்து வரச்சொல்லிவிட்டு...
கடைசிக் கவிதை அருமை...
சொற்கள் கட்டுவது மாய பிம்பம்.. காதலி காட்டுவது அன்பின் சொரூபம்.. பாராட்டுக்கள்..
1. ஒரு இயக்கம் என்பது அதன் கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறது.
அந்தக் கொள்கை அமுல்படுத்தப்படும் வரைதான் அந்தக் கொள்கைகளும் அதைப் பற்றிச் சிந்தித்த
சிந்தனாவாதிக்கும் சொந்தம். அதன் பிறகு அதை...
அன்பான நண்பர்களுக்கு,
மன்றம் வளரவில்லை எனும் வாதம் தவறு..
தேங்கிய நிலை என்றும் சொல்லலாம்..
தொழில் நுட்ப அடிப்படையில் பார்த்தால் மன்றம் இன்றைய நுட்பத்திற்கு மாறி இருக்கிறது..
மன்ற...
அன்பு மன்மதன்,
நீங்கள் செய்தது சரிதான் என்று சொல்லியிருக்கிறேன்..
ப்ரியனைப் பற்றி சொல்லும் போது கவிஞர்களின் மன நிலையைப் பற்றிப் பேச வேண்டியதகிவிட்டது..
அதனால்தான் என்னை முன்கோபி என்று கூட...
ஆணிவேர்கள் இங்கு நீண்டிருக்க கிளைகளை எங்கு பரப்பினாலும் வேரின் தீண்டுதலும் தேடுதலும் நீர் மட்டுமே...
எழுத வாருங்கள்... பழைய கணக்குகளில் நிறைய இருக்கிறது படித்துப் பார்க்க...
இருந்தாலும்...
தீராப்பசி.. (தீபங்கள் பேசும் கவிதைத் தொகுப்பு குறித்து )
ஒரு வீதி நாடகக் கலைஞனைக் கொன்றீர்கள்
சில வருடங்களுக்கு முன்பு.
ஒரு புலனாய்வுப் பத்திரிக்கையாளனைக் கொன்றீர்கள்
சில மாதங்களுக்கு முன்பு....
என்னை விசாரித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள் பல...
நேசமுடன்..
மன்றம் மட்டில்லா வளர்ச்சியடைந்திருப்பது கண்டு பெருமகிழ்வு கொள்கிறேன்.
காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு மன்றம் புதுப் பொலிவுடன் இருக்கிறது.
அவ்வப்பொழுது இந்த மாற்றங்களைக் கண்டு...
தேவாலயங்களில்
நிலவும் பேரமைதியில்
உறைந்து கிடக்கும் சொற்கள்
கொண்டு
எழுதுதல் சாத்தியமா?
அம்மன் கோவிலில்
உச்சி கால வேளையில் முழங்கும்
முரசுவில் இருந்து தெறிக்கும் சொற்கள்
கொண்டுதான்
ஆதியிலே ஒரு சொல் இருந்தது..
அது தேவனிடத்திலிருந்தது..
அச்சொல் கை நழுவி
கீழே விழுந்தது..
விழுந்தது பலவாகி
பிரிந்து சென்றது..
பலரிடம் கலந்து சென்றது..