சரியான விடை.
பாராட்டு.
Type: Posts; User: குணமதி; Keyword(s):
சரியான விடை.
பாராட்டு.
வருக, வருக!
அடுத்தது -
32. திருவே விடையளிக்க வாராய்!
தூய்மையுறத் துடைத்துவைத்தால் தோன்றும் நன்கு
தூங்கிருளின் வண்ணத்தில் துலக்க மாக!
தோய்ந்தறிவு புகட்டஇதைப் பயன்ப டுத்தின்
தூய்மைகுன்றி வெண்சங்கின்...
மின்வெட்டால் இப்படியும் ஒரு விளைவு!
புதுப்பா எழுதுவது போல் கொச்சை வழக்கில் மரபுப்பா எழுதுவது விரும்பத் தக்கதன்று.
இனி அடுத்தது -
இருள்சேர் வினைநீக்கி இன்பம் விளைப்போம்
மருள்நீக்கி மாண்புறு வோம்.
பச்சைக்கிளி - சரியான விடை.
பாராட்டு.
வாருங்கள் வந்திங்கே வக்கணையாய் வண்டமிழில்
தாருங்கள் தக்க கருத்து.
அடுத்தது -
31. உரைத்திடுவாய், உவகை சேர்ப்பாய்!
பச்சைநிற உடலுண்டு பாம்பு இல்லை!
பவழஇதழ் வாயுண்டு நடிகை இல்லை!
இச்சையுடன் சிறையிடுவர் திருடன் இல்லை!
இனிதுரைக்கும் கூறுமொழி மழலை இல்லை!
பாலகனைக் கொன்றசெயற் பார்த்துமச் சிங்களர்க்கே
ஆலவட்டம் அன்பழைப்பா கூறு!
வருக, வருக!
புலமை பலபெரினும் புன்மையிலா நெஞ்சம்
நிலவல் பெரிதாம் நினை.
வருக, வருக!
அறிதற் கரிய தறிந்தவஞ் ஞான்றே
அறியாமை காண லுறும்.
அறிக அறிதக்க மற்றவை வாழ்வில்
அறியாமை கேடில்லை யாம்.
அருமை! நெற்பயிர் - சரியான விடை.
பாராட்டு.
விடையை நெருங்கியிருக்கிறீர்கள்.
முதன்மையான உணவுப்பொருள் தான்!
கண்டுபிடியுங்கள்!!
வருக, வருக!
இருவர் உலகில் இருப்பதிலை எல்லா
அரும்உணர்வும் ஒன்றி அறி.
அடுத்தது -
30. எதுவென்றே உரைக்க வாராய்!
அடிகாட்டில் இருக்குமது வெட்டி விட்ட
அடையாள மாகவுள மரமு மன்று!
நடுமாட்டில் என்றிடலாம் நாட்டில் ஏழை
நனியமைக்கும் சிறுகுடிசைக் குதவும் ஈதே!
துடிப்பும் இளமையும் தூங்கா உணர்வும்
விடியல் அளிக்கும் விளம்பு
ஈறுதொடங்கி (அந்தாதி)ப் பாடல் எழுதும்போது, கடைசி எழுத்தையோ, கடைசி எழுத்துக்களையோ, கடைசிச் சீரையோ (சொல்லையோ) கடைசிச் சீர்களையோ, கடைசி அடியையோ தொடக்கமாக வைத்து அடுத்த பாடலை இயற்ற வேண்டும்.
வருகவே...