சுட்டவனுக்குத் தருகிறேன் சில்லென்ற நீர் என்றிருந்தால் இன்னாவென்ற எண்ணம் எழுந்திருக்கவாய்ப்பில்லை. சுட்டவனாய் இருந்தாலும்... என்று உம் சேர்க்கும்போது அப்படித் தோன்றுகிறது.
Type: Posts; User: கீதம்; Keyword(s):
சுட்டவனுக்குத் தருகிறேன் சில்லென்ற நீர் என்றிருந்தால் இன்னாவென்ற எண்ணம் எழுந்திருக்கவாய்ப்பில்லை. சுட்டவனாய் இருந்தாலும்... என்று உம் சேர்க்கும்போது அப்படித் தோன்றுகிறது.
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு
களிமண்ணுக்கும் யார் கற்றுத்தந்தார் குறள்?
ஐயா, காலம் மாறிக்கொண்டே வருகிறது. இப்போது பெண்ணும் பெண்ணும் கைப்பிடித்து சிநேகமாய்ப் பேசினாலும் ஆணும் ஆணும் தோளில் கைபோட்டு தோழமையோடு நடந்தாலும் அதையும் மாற்றுக்கண்ணோட்டத்தோடு பார்க்கும் நிலை...
நன்றி ஜெய்.
நன்றி டெல்லாஸ்.
காதல் கொண்ட பெண்மனத்தின் தயக்கங்களையும் தடுமாற்றங்களையும் ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் மிக அழகாகச் சொல்லிப்போகின்றன கவி வரிகள். பாராட்டுகள் சபீக்ஷனா.
அன்பும் புரிதலுமான மனைவி வாய்த்திருப்பது வாழ்க்கையின்பம்!
அவ்வன்பையும் புரிதலையும் உணர்ந்து வாழ்த்தும் கணவன் வாய்த்திருப்பது இருமடங்கு இன்பம்!
ஆத்மார்த்தமான வாழ்த்துகள் இருவருக்கும்.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். விவசாயி என்ற அடையாளத்துடன் அறிமுகம் செய்துகொண்ட தங்களுக்கு இனிய வரவேற்புகள்.
வாரமும் வரமான தாரமும் சோபித்த கவிதை சொக்கவைக்கும் அழகு. பாராட்டுகள் ஐயா.
அருமையானதொரு பாடல் பெற்ற இட்டலி பாக்கியசாலி. அந்த அருமையான இட்டலி கிடைக்கப்பெற்றவர் அதிபாக்கியசாலி. பாராட்டுகள் ஐயா.
பெரிய தாயாரின் பிரிவால் விளைந்த துயரத்தை கவிமலர்ச்சரமாகக் கட்டி அவருக்கு காணிக்கையாக்கியமை மனம் நெகிழ்த்துகிறது.
பெரியன்னையிடத்தில் நீங்கள் கொண்ட பாசமும் அவர் உங்கள் பால் கொண்ட பரிவும்...
நல்வரவு சபீக்ஷனா. பதிந்தவுடனேயே உங்கள் படைப்புகளை வாசித்து எவரும் விமர்சிக்கவோ பாராட்டவோ இல்லையென்ற வருத்தம் வேண்டாம். மன்ற உறவுகள் பலருக்கும் தற்சமயம் வெவ்வேறு பணிச்சுமையினால் மன்றவருகையில் தொய்வு...
நல்வரவு. ஜெய் குறிப்பிட்டுள்ளது போல் முதலில் மன்றவிதிகளை வாசித்தறிந்த பிறகு பதிவிடுங்கள்.
வணக்கம் ஜெய். மீள்வருகை கண்டு மகிழ்ச்சி.
இந்த இறுதி வரிகளை
என்றிருந்தால் நன்றாய் இருக்கும் என்று எண்ணுகிறேன் ..
நன்றாய் இருக்கிறது ..தொடரட்டும் ...[/QUOTE]
ஜெய், கும்பகோணத்துப்பிள்ளைக்கு சொன்ன அதே பதிலைத்தான் இங்கும் தர...
பெண்ணுக்கு மதிப்பு தரும் சமூகத்தில் பெண்ணாய்ப் பிறப்பது வரமே. பெண்ணுக்கு எதிரான கொடுமைகளைப் பார்க்கும்போதுதான் மனம் பதறுகிறது.
ஆண்டவனிடம் தாங்கள் வைக்கும் கோரிக்கை அகமகிழச் செய்கிறது....