நன்றி dellas
Type: Posts; User: vasikaran.g; Keyword(s):
நன்றி dellas
எச்சில் ஒழுக
புத்தகத்தை புரட்டியது
குட்டிக் குழந்தை !
அச்சில் இருந்த
கலைமகள் அகமகிழ்ந்தாள் ,
அடுத்த கணம்
மழலையின் நாக்கிற்கு
குடி பெயர்ந்தாள் !
பூனை பொம்மையை
முத்தம் கொடுத்து
எச்சில் செய்தது
குழந்தை ...
நாய்க்குட்டிக்கு வருத்தம் !
வாலை ஆட்டி
சத்தம் செய்தது
தனக்கும் வேண்டுமென்று !
இன்னும் கனவு காண்போம் ...
என்கவிதைக்கு கருத்து சொன்ன மற்ற நண்பர்களுக்கும் நன்றி
நன்றி நண்பரே
குடைக்குள் குழந்தை !
மழைக்கு வருத்தம் :
முத்தம் கொடுக்க முடியவில்லையே :
முகத்தைப் பார்க்கமுடியவில்லையே என்று .
குடைக்கோ மகிழ்ச்சி :
மொத்தமும் தன்னோடு என்பதால்..
யுத்தம் தொடர்கிறது ...
...
அரிது ! அரிது!
இவை எல்லாம்
காண்பது அரிது !
இமைக்காத மனிதன் ,
இளைக்காத நிலவு
களிக்காத உறவு !
சலியாத மனது
இனிக்காத மழலை
நன்றி கீதம் .. உங்கள் கருத்து சரியானதே .
நன்றி திரு ஜெய் . ஒரு சந்தேகம் . ஏன் பேடி என்ற பதத்தைப் பயன்படுத்தக்கூடாது ? சற்று விளக்குங்களேன் ..
கண்ணே ! அழகுப் பெண்ணே !
கோடிப் பூக்களுடன்
தெருக்கோடியில் நான் !
நாடி வரும்போதேல்லாம்
ஓடி ஒளிகிறாய்
பேடி போல !
தேடி வரும் போதெல்லாம் ,
நாடி நரம்புகள் அதில் ஓடும்
உதிர அரும்புகள்...
உன்னதம் தெரியாதவர்கள் சொன்னதுதான் தவறு . மார்கழி !
இவள்
நம் ஊர்வழி
தேர்வழி
போகும் போதெலாம்
நமக்கு புண்ணியம் தானே !
புரந்தரனும் உடன் உலா வருவதாலே !
பொங்கல் இனிக்கிறது கவிதையில் ...
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..
அமெரிக்காவின் அழிச்சாட்டியம் தாங்கமுடியாமல் நயாகராவும் மௌனமானதோ ...
உங்கள் கற்பனை கவிக்கிறது .
பெரியகுளத்து செல்வி பெரிய இடத்து செல்வி ..
பூமிப் பந்தில்
பெத்தலஹெம் என்ற சந்தில்
ஒரு ஆட்டுமந்தை !
அதில் பிறந்தது
ஒரு புதிய சிந்தை !
முந்தை பழமைகளை
கந்தை நினைவுகளை
உந்தித்தள்ளி துள்ளி எழுந்தது
ஒரு நல்லப் பிள்ளை !
சரியானது .
உங்கள் கருத்துரைக்கு நன்றி
நன்றி கீதம் அவர்களே , ஜெகதீசன் அவர்களே ...
சொத்தை என்ற பதம் தான் சரியான பொருள் தருவது .. சொத்து என்பது முதற்கண் பொருளைத்தான் குறிக்கும் . சொத்தை என்றுதான் எழுத எண்ணினேன் .வடதமிழகத்தின் விவசாய மக்கள்...
சொத்து !
இதன் மேல் பலருக்கு பித்து !
சேர்த்தவன் போய் சேர்ந்தபிறகு
பிரிப்பது உறவை மட்டுமல்ல !
உயிரையும் தான் !
சொத்து ! கெட்டுப் போன
இதன் மேல் கெட்டுப் போகும்
உடலுக்கும்...
தீபாவளி ..!
தீயாய் வளி !
தீராத வலி
நீல நீள மகளுக்கு !
கரு மேக பெரு மகளின்
இரு மாத கற்பம்
சிறு பொழுதில் கலைந்திட
வரும் வழியில்
பல நூறு நீர்த்துளிகள் !
கரும்புகைப் புளி
மரவட்டை
மனதை தொட்டது !
இரன்டு வரி! இதய வலி !
அருமை..!
பைலின் புயல் ...!
வயலின் வாசிக்க ,
வயலுக்கெல்லாம் வலியில்
விழிகள் வலிக்க ,
நீர் தொண்டைக்குழிகளை நிறைக்க ,
இறைவனை உதவிக்கு விளிக்க,
சூரியனோ காரியமின்றி
ஓர் அகத்தில் ,ஒளிந்திருக்க, ...
பாலச்சந்தரனுடன் பல பாலகன்களை
பரலோகம் அனுப்பி
பிறலோகம் ஆள் என்று
சொல்லாமல் சொல்லும்
நரலோக முரண்கள் நிறைந்த
அரக்கர்கள் பூமியில்
பிறர் வாழ இயலுமா ?
உணவைக் கொடுத்து
உயிரை எடுத்த