நான் உன்னை நினைத்திருந்தேன்.....
நான் உன்னை ரோஜாச் செடியென
நினைத்திருந்தேன் - ஆனால்
நீ அதில் முள் உள்ளதென
காட்டி(குத்தி) விட்டாய்..
நான் உன்னை தென்றலென
நினைத்திருந்தேன் - ஆனால்
நீ அதில் புயல் உள்ளதென
வீசி விட்டாய்....
நான் உன்னை பூமாதேவியென
நினைத்திருந்தேன் - ஆனால்
நீ அதில் பூகம்பம் உள்ளதென
வெடித்து விட்டாய்.....
நான் உன்னை நதியென
நினைத்திருந்தேன் - ஆனால்
நீ அதில் வெள்ளம் உள்ளதென
அழித்து விட்டாய்....
நான் உன்னை நானாகவே
நினைத்திருந்தேன் - ஆனால்
நீ நான் யாரோ நீ யாரோ என
காட்டி விட்டாய்...
என்றும் அன்புடன் பர்ஹான்