-
என் கவிதைகள்
காலை மலர்ந்தாலும்
கனவுகள் இன்னும்
கலையவில்லை
மலர்களை காணும் போது
குழந்தைகளின் சிரிப்பை
காண்பதாய் கனவு
பட்டாம்பூச்சிகள் இங்குமங்கும்
பறக்கும் போது
தனஞ்சயனின் நாட்டியம்
காணும் கனவு
குயில்களின் குரலோசை
கேட்கும் போது
ஹரிஹரனின் காதல் பாடல்கள்
கேட்கும் கனவு
வெப்ப சலனம் காரணமாய்
மழை பெய்யும்
அறிவிப்பை கேட்டதும்
முதல் மழையின் சிலிர்க்கும் குளிரில்
நனைவதாய் கனவு
மென் தென்றல் தவழும் போது
ஆசை நாயகியின்
ஆடை வருடும் கனவு
வண்ண வண்ணமாய்
எத்தனை கனவுகள்
மாறி மாறி வந்தாலும்
மாறாமல் வருவதென்னவோ
அன்புத் தோழியின் முகம்
முதல் முறை காணும்
கனவு தானே ,,,!?
-
-
Quote:
Originally Posted by
dellas
ஆமா ..சரிதான்.
மிக்க நன்றி சகோ