நடக்க முயன்று
வீழ்ந்ததும்...
எழுந்து நடந்த நீ
வாழ முயன்று
வீழ்ந்ததும்...
மாழ நினைக்கிறாயே..
வளர்ந்தது....
நீ மட்டும்தானா....?
Printable View
நடக்க முயன்று
வீழ்ந்ததும்...
எழுந்து நடந்த நீ
வாழ முயன்று
வீழ்ந்ததும்...
மாழ நினைக்கிறாயே..
வளர்ந்தது....
நீ மட்டும்தானா....?
வளர்ந்தாலும்
கவுந்தது ஏற்க்கமுடியாதே...
வளர்ந்திருந்தால்...எற்கமுடியுமே....
தோல்விக்கு மரணம் முடிவெடிப்பது கீழ்தரம்
முயற்சி என்றும் மேல் தரம் அருமை அமரன்
வளர்ந்தாலும்
இழக்கும் போது
சிறுத்துவிடுகிறோமே...
வளர்ந்தது மதியென்றாலும்
அவசரத்தில் கதியில்லாமல்
போய்விடுமே...
முற்றைய மரம்தான் காற்றுக்கு
முறிந்துவிடும்..
வளர்ந்த மனமோ சோதனையை
விழுங்கிவிடும்..
மனவளர்ச்சி வலியுறுத்தும்
மன்றக்கவி அமரனுக்கு பாராட்டுகள்!
கவிதையைப்படித்துக் கருத்துக்கூறிய அன்புரசிகன்,மனோஜ் இருவருக்கும் நன்றிகள்..
நல்ல தத்துவக்கவிதை சூப்பர் கருத்து.
நடக்க முயன்று
வீழ்ந்த போது
என்னைத் தாங்க
ஒர் கை அன்னை
வடிவில் அன்று...
வாழ முயன்றும்
வீழ்ந்த போது
என்னைத் தாங்கிய
அந்தக் கையை
இன்று மண் தாங்கிக்
கொண்டிருக்கின்றது...
வீழ்ந்து வீழ்ந்து
வாழ்க்கையே வீழ்ச்சியாகி
எழும்ப முயற்சித்து கரம்
நீட்டினேன் உதவும் கரமே
என்னை கீழே வீழ்த்தும்
என்று அறியாமல்...
எறும்பு போன்று
சுறுசுறுப்பான கைகளையே
எனக்கு துணையாக கொண்டு
முயற்சிக்கின்றேன் என்றாவது
என் முயற்சி திருவினையாகும்
என்று...
அமரா!
கொஞ்சம் சாப்பிட்டாலும் அமுதம் சிரஞ்சீவி மருந்து தானே!, அவ்வாறே சில வரிகளாயினும் நிறைவான தத்துவம் சொல்லி நிற்கின்றது உங்கள் கவிதை!.
அத்துடன் கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகளையும் என் மனதில் ஞாபகமூட்டியது, பாராட்டுக்கள் அமரன்!.
"சுடும் வரைக்கும் நெருப்பு!
சுற்றும் வரைக்கும் பூமி!
போராடும் வரைக்கும் மனிதன்!
நீ மனிதன்!."
- வைரமுத்து!.
மனதில் உரமூட்டும் கவிதை அமரன்.
பாராட்டுக்கள்