-
பாழடைந்த மண்டபம்.
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது..
இரண்டாம் ஆண்டு இறுதிப் பகுதி..
எங்கள் மூகாம்பிகைக் கல்லூரியின் வளாகத்தில் ஒரு மண்டபம் உண்டு.. நான்கு பக்கமும் திறந்த அந்த மண்டபத்தின் முன் ஒரு கல்வெட்டும் உண்டு.
மண்டபத்தின் எதிரே சிறிது தூரம் சென்றால் ஒரு குளம் உண்டு. கரைகள் கருங்கற்களால் கட்டப்பட்ட ஒரு சதுரக் குளம். அதில் நீர் நின்று பார்த்ததில்லை. ஆனால் கரைகளிம் கற்களின் மத்தியில் காலியிடங்கள் உண்டு.. நீர் வரும்பாதை போல.
நான், கோபி, செல்வராஜ் சுந்தர் ஆகிய நான்கு பேர். காலையில் வயல்வெளிகளுக்கு மத்தியில் உள்ள பெரிய கிணற்றில் குளித்து விட்டு ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருப்போம்.
ஒருநாள் மாலை மண்டபத்தின் அருகே உள்ள ஒற்றையடிப் பாதையில் நடந்து கொண்டிருந்தோம். அங்கே ஒரு தாத்தா ஆடு மாடுகளைப் மேய்த்துக் கொண்டிருந்தார்.
சும்மா அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது மண்டபத்தைப் பற்றியும் விசாரித்தோம். இந்தப் பகுதியில் தங்கப் புதையல் இருப்பதாகவும், அதன் ரகசியம் கல்வெட்டில் இருப்பதாகவும் சொன்னார். அந்தப் புதையலை எடுக்க வேண்டுமானால் சூல் கொண்ட ஏழு எருமைகளையும் ஏழு பெண்களையும் பலிதந்தால் புதையல் ரகசியம் தெரியும் என்றும் கதை சொன்னார். சரி கல்வெட்டைப் படித்துப் பார்ப்படு என்று முடிவு செய்தோம்.
அப்போது மாலை ஆறு மணி இருக்கும். மண்டபத்திற்கு சகல் பந்தோபஸ்துகளுடன் சென்றோம்.கால்களில் கட்டையான பெரிய ஷூ, நல்ல திக்கான பேண்ட், கைகளில் உருட்டுக் கட்டைகள், கத்தி என தடபுடல்தான்,
மெல்ல இருட்டிக் கொண்டிருந்தது. மெல்ல கல்வெட்டின் அருகில் செல்ல புதரில் இருந்து சீறி வந்தது பாம்பு.
பாம்பை அடித்துக் கொன்று விட்டு, கல்வெட்டை தடவித் தடவி படிக்க முயற்சி செய்தோம். ஒன்றும் புரியவில்லை.
கடைசி வரிக்கு முத வரியில் பள்ளத்துப்பட்டி என்ற ஒரு வார்த்தை மட்டும் புரிய நிமிர்ந்தோம்
சரசர வென ஒரு மின்னல் வெட்டியது. அது மண்டபத்தின் உச்சிக்கும் குளக்கரையின் அருகே இருந்த ஒரு மரத்துக்கும் இணைப்பு தந்தாற் போலத் தெரிய
மரத்தடியில் ஒரு பெரிய சமாதி பளீரெனத் தெரிந்தது...
---------------------------------------------------------------
தொடரும்
-
எல்லோரும் தொடரும் போட்டே காக்க வைக்கின்றீர்களே...
விறுவிறுப்பாக திகில் கதை போல் போகின்றது. உண்மைச்சம்பவம் தானே... புதையல் தானே...
-
அருமை செல்வன் அண்ணா தொடருங்கள் ரோம்ப காக்க வைக்காதிங்க
-
என்ன செல்வரே இந்த நடுராத்திரியில இப்படி பயமுருத்துகிறீர்கள். ஆனலும் கதை நல்லாவே இருக்கு.
-
பாழடைந்த மண்டபம், எழுதியவர் தாமரை செல்வன் என்று கண்டதும்.
ஹி ஹி ஹி ஹி முதலில் இப்படிதான் சிரித்தேன்.
படித்ததும் நெஞ்சு பக் பக் என்று அடிகிறது, அய்ய்க்கோ பயமா இருக்கே, பேய் கதையா?? சரி நல்லாதான் போகுது, பார்ப்போம் கடைசியிலே என்னாதான் கிடைக்குதுனு. (புதயல சொன்னேன்பா)
இந்த பெங்களூர் கேங்கே இப்படிதான், தொடரும் என்ற வார்த்தையை குத்தகைக்கு எடுத்த மாதிறி புசுக்கு புசுக்குனு போட்டு வைப்பார்கள்.
அசத்தலான ஆரம்பம். :sport-smiley-014: :sport-smiley-014:
-
மிகவும் எதிர்பார்ப்புக்களைத்தூவி விட்டு சென்றுள்ளார் தாமரைச்செல்வன்.
அடுத்த பாகம் எப்போது?
எதிர்பார்ப்புக்களுடன்
ஜாவா
-
ஆகா...இதென்ன தொடர்கதையா...அடுத்து என்னாச்சு....அதச் சொல்லுங்க...
-
இதிலும் பார்க்க தொலைக்காட்ச்சி தொடரில் வெள்ளிக்கிழமைகளில் போடப்படும் தொடரும் பரவாயில்ல.
சீக்கிரம் தொடருங்கக.
-
இப்படி பாதியில் நிறுத்தினால் எப்படி. சுவாரசியமாக விஷயம் போகும்பொழுது தொடரும். இப்படியே எல்லோரும் இருந்தால் எப்படி.
ஆனால் பாம்பை கொன்றது தப்பு. அது உங்களை ஒன்றும் செய்திருக்காது.
நன்றி வணக்கம்
ஆரென்
-
கதையா நெசமா. பயங்கரமா இருக்கு அப்பு
-
இதுவரை இந்தச் சமாதியைக் கவனித்ததில்லையே.. மெதுவாய் சமாதியை பார்த்து நடந்தோம். சமாதியை நெருங்கும் போது மண்டபத்தின் பக்கம் யாரோ சிரிக்கும் சத்தம்.
திரும்ப பயம். இருந்தும் நாலுபேர் உள்ள தைரியத்தில் திரும்பிப் பார்த்தோம்.. ஒன்றும் தெரியவில்லை. மழை பெய்ய ஆரம்பித்தது..
விடுதியை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தோம்.
மறுநாள் மாலை, மீண்டும் புறப்பட்டோம். இம்முறை பள்ளத்துப்பட்டியை நோக்கி,
பள்ளத்துப்பட்டி மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். கோபி ஒரு முறை அங்கே சென்றிருப்பதாகச் சொன்னான்.. (எல்லாம் கல்லூரியைக் கட்டிக் கொண்டிருக்கும் சித்தாள் கூட்டத்தில் இருந்த ஒரு அழகியைத் தொடர்ந்துதான்)
பள்ளத்துப்பட்டி எல்லை வரை உருட்டுக் கட்டைகள் சகிதம் சென்றவர்கள் அங்கு ஒரு மரத்தின் மேல் கட்டைகளைப் பதுக்கினோம். (எனக்கு பாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்திற்கு முன்னால ஆயுதங்களைப் பதுக்கியது நெனப்புக்கு வந்துச்சு போங்க). ஊருக்குள் மெல்லச் சுற்றி வந்தோம்.. ஊர் கோடியில அந்த அற்புதம் இருந்தது.
ஒரு பெரிய கல். பாறை. 30 அடி உயரம் இருக்கும். அந்தப் பாறையை சுற்றி, குளம் மாதிரி தண்ணி தேங்கி இருந்திச்சி. பச்சை குளத்திற்கு மத்தியில பிரௌன் கல். அதனோட உச்சியில கிரீடம் வச்ச மாதிரி ஒரு சின்னக் கோயில்.
கோயிலுக்குப் போக அரையடிப் பாதை மாதிரி குளத்துக்கு மத்தியில எடம் இருந்துச்சு. (ஒத்தையடிப் பாதைதான், பாதி தண்ணிக்குள்ள இருந்திச்சு)
மலை மேல (!) மெல்ல ஏறினோம். குளுகுளுன்னு நல்லா காத்து வீசுச்சு. சுத்தி முத்தி பாத்தா, பள்ளத்துப் பட்டி முழுசா கண்ணுக்குத் தெரிஞ்சது ஒண்ணும் வித்தியாசமா இல்லை. கோயில்ல பார்த்தா...
அட நம்ம ராகவருக்குப் பிடிச்ச முருகர் கோவில். இந்த மாதிரி ரம்மியமான சூழல்ல ஒரு கோவில் இருக்கறத எதிபார்க்கவே இல்லை. காலையில பூசை நடந்திருக்கும் போல. எல்லோரும் கும்பிட்டுகிட்டு வந்தோம்
மெல்ல இருட்ட ஆரம்பிச்சது. கோயிலை விட்டு திரும்ப மனமில்லாம திரும்பினோம்.
எங்க ஆயுதக் குவியில் இருந்த மரத்துக்கு வந்தா, சர சரன்னு சருகுகளில் ஒரு சத்தம். பாத்தா இரண்டடி நீளத்துக்கு ஒரு பச்சைப்பாம்பு, ஊறுதா இல்லை பறக்குதான்னே புரியலை. அப்புடி ஒரு வேகம். அதன் தலை எலை மாதிரி இருக்க உடல் பச்சையாய். பச்சைப்பாம்பை பார்ப்பது இதுதான் மொத தடவை.
ஆயுதங்களை எடுத்துகிட்டு ஆஸ்டல் வந்தோம். இன்னிக்கும் சமாதியை ஆராய முடியலை.
மூணாவது நாள் காலை.
வழக்கம் போல குளிக்கறதுக்கு பெரிய கிணத்துக்குப் போனோம். (இது 52 அடி விட்டமுள்ள ஒரு பெரிய வட்டக் கிணறு. இதிலதான் நான் நீச்சல் கத்துகிட்டது, தினம் 25, 30 ரவுண்ட் நீச்சல் அடிப்போம்.)
நாங்க மூணு பேரும் குளிச்சு முடிச்சு படியில உக்காந்துகிட்டு கதை பேசிகிட்டு இருக்கோம், கோபி இன்னும் குளிச்சிகிட்டு இருக்கான். திடீர்னு பொத்துன்னு ஒரு சத்தம்.
பாத்தா ஒரு பாம்பு கிணத்தில விழுந்திருக்கு, அது அப்படியே சுவரை ஒட்டின மாதிரியே மேலேற முயற்சி செய்ய, கோபி கோபி.. பாம்பு ஜாக்கிரதைன்னு கத்தினோம்.
கோபியை பாம்பு கவனித்ததோ என்னவோ, அதன் ஆயுசு கோபியின் கையால் முடிய வேண்டுமென விதி இருக்கும் போல அவன் படியேறிய நேரம் அதுவும் படி அருகில் வந்துடுச்சி.
எங்கள் ஆயுதங்களுக்கு வேலை வந்துடுச்சி. பாம்பு அடிக்கப்பட்ட போதுதான் அது தண்ணிப் பாம்பு இல்லை, நல்லப் பாம்புன்னுத் தெரிஞ்சது.
அன்னிக்குச் சாயங்காலம் மறுபடியும் பள்ளத்துப்பட்டிக்குப் போனோம்.
முருகன் இம்முறை இன்னும் கொஞ்சம் ஃபிரெஷ்ஸா இருந்தார், அப்பதான் பூசாரி பூசையை முடிச்சுகிட்டு கிளம்பிகிட்டு இருந்தார்.
எங்களைப் பார்த்ததும் பூசாரிக்கு என்ன தோணிச்சோ தெரியலை, கோயிலுக்குள்ள போயி தீபாரதனக் காட்டி விபூதி கொடுத்தார். அப்போ முருகனின் பரம பக்தனா இருந்த எனக்கு சந்தோஷம்.. அப்புறம் பூசாரிகிட்ட கீரனூர் போக வேற ஷார்ட் கட் இருக்கான்னு கேட்க, அதோ அந்தக் கண்மாயோரம் இருக்கிற ஒத்தையடிப் பாதை வழியாப் போனா கொஞ்ச தூரத்தில மெயின் ரோடு வந்துரும். அங்கிருந்து கீரனூர் 1 கிலோமீட்டர்னு சொன்னாரு.. முருகனேதான் சொன்னாருன்னு நெனைக்கிறேன்.. பதுக்கிய ஆயுதங்களை எடுத்துகிட்டு அந்த கண்மாயோரம் நடந்தோம்.அப்பதான் அதைப் பார்த்தோம்..
ஒரு பாழடைஞ்ச வீடு. கட்டி 300 நானூறு வருஷமாவது ஆகியிருக்கனும். சுத்தமா புதர்களுக்கு மத்தியில் மறைஞ்சிருந்த குட்டிச் சுவர்கள்.. மனித வாசனையே இல்லாம..
செல்வராஜ் வேர்க்கத் தொடங்கியிருந்தான்.. ஏதோ ஒரு அமானுஷயம் படக்கென கண்விழித்து எங்களை முறைப்பது போல முகெலும்பில் ஒரு ஜிளீர்.
-
ஓ..! இன்னும் ஒரு சந்திரமுகியா..? வடிவேல் நிலைல தான் நான் இப்போ...